News Update :
Powered by Blogger.

கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு

Penulis : karthik on Thursday 4 October 2012 | 21:19

Thursday 4 October 2012




கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு
மின்சார வாரியத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
 
தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தில் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மூலம் 1,905 மெகாவாட், புனல் மின்நிலையங்கள் மூலம் 370 மெகாவாட், எரிவாயு மின்நிலையங்கள் மூலம் 150 மெகாவாட், தனியார் மின்நிறுவனங்கள் மூலம் 740 மெகாவாட் பெறப்படுகிறது.
 
மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம் மூலம் 850 மெகாவாட், தேசிய அணுமின்கழகம் மூலம் 375 மெகாவாட், நெய்வேலி அனல் மின்நிலையம் மூலம் 850 மெகாவாட், தமிழகம் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதன் மூலம் 5,740 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது.  
 
காற்றாலைகள் மூலம் சராசரியாக 2,400 மெகாவாட் உட்பட 8,140 மெகாவாட் மின்சாரம் தான் தற்போது கிடைக்கிறது. ஆனால் நமக்கு சராசரியாக 12 ஆயிரம் மெகாவாட் தேவைப்படுகிறது. இதனால் 3,860 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்படுகிறது. காற்றாலைகளில் உறுதியாக 3 ஆயிரம் மெகாவாட் வரை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் உள்ளது.
 
காற்று வீசும் காலமும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருப்பதால் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் 10 மணி நேரத்திற்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. 
 
அணைக்கட்டு மற்றும் நீர்நிலைகள் மூலம் கடந்த ஆண்டு ஜுன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பெய்த காலகட்டத்தில் 214 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் ஜுன் முதல் செப்டம்பர் வரை 85 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் 129 கோடி யூனிட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டதன் மூலம் சராசரியாக 60 சதவீதம் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.   மின்பற்றாக்குறைக்கு மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைவு உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழகத்தில் தனிநபர் மின் நுகர்வு 8 சதவிதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 
அதேபோல் தமிழகத்தில் வழக்கமாக அதிகபட்சமாக மின்நுகர்வு நேரம் மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இருந்தது. தற்போது அந்த நேரம் மாற்றப்பட்டு இரவு 11 மணிக்கு மேல் அதிகம் மின்நுகர்வு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் 2,500 மெகாவாட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.  
 
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க 2012-2013-ம் ஆண்டில் தமிழக அரசு 3020 கோடியே 25 லட்சம் ரூபாய் மானிய அளித்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உடனடித் தேவைக்காக தற்போது முன்பணமாக 1,000 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ளது.
 
தென்மேற்கு பருவ மழைக்கும், வடகிழக்கு பருவ மழைக்கும் இடைப்பட்ட இரண்டு முதல் மூன்று வாரத்திற்கு மின்சார நிலைமையை சமாளிக்க அதாவது செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் முதல் இரண்டு வாரங்களுக்கு தேவையான மின்சாரத்தை சமாளிக்க போர்க்கால நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது.  
 
நிலைமையை வெளிமாநிலங்களிலிருந்து 10,300 மில்லியன் யூனிட் வாங்க கடந்த மே மாதம் ஒப்புதல் கேட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஒப்புதல் கோரப்பட்டது. இதனை பரிசீலித்த ஆணையம் 2012 மே மாதத்திலிருந்து வரும் 2013 மே மாதம் வரை 4 ஆயிரம் மில்லியன் யூனிட் வரை மின்சாரம் வாங்க அனுமதி அளித்தது. இதில் 500 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
 
மீதம் உள்ள 3,500 மில்லியன் யூனிட் அதாவது 600 மெகாவாட் மின்சாரத்தை நடப்பு மாதமான 2012 அக்டோபர் மாதத்திலிருந்து 2013 மே மாதம் வரை எட்டு மாதத்திற்கு யூனிட் ரூ.4.13 முதல் ரூ.5 வரை கட்டணத்தில் வாங்கி கொள்ள அனுமதித்துள்ளது. ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
 
இவ்வாறு மின்துறை அதிகாரிகள் கூறினர்.   
 
 
/

comments | | Read More...

ஒசாமாவின் செக்ஸ் அடிமையாக ப்ரீடா பின்டோவா?- கொதிக்கும் ஒரிஜினல் அடிமை!


ஒசாமாவின் செக்ஸ் அடிமையாக ப்ரீடா பின்டோவா?- கொதிக்கும் ஒரிஜினல் அடிமை! ஒசாமாவின் செக்ஸ் அடிமையாக ப்ரீடா பின்டோவா?- கொதிக்கும் ஒரிஜினல் அடிமை!
ஒசாமா பின் லேடனின் செக்ஸ் அடிமையாக நடிக்க ஸ்லம்டாக் மில்லியனேர் புகழ் ப்ரீடா பின்டோவை அணுகியிருக்கிறார்களாம். இது ஒசாமாவின் ஒரிஜினல் செக்ஸ் அடிமையான கோலா பூப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் போல கறுப்பினப் பெண்ணைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவர் கடுப்புடன் கூறியுள்ளார்.

ஒசாமாவுக்கும் தனக்குமான செக்ஸ் தொடர்புகளை டயரி ஆப் தி லாஸ்ட் கேர்ள் எனும் பெயரில் எழுதியிருந்தார் கோலா பூப். விற்பனையில் சக்கைப் போடு போடும் புத்தகம் இது.

இந்தப் புத்தகத்தின் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து ஒசாசா பின்லேடன்ஸ் செக்ஸ் ஸ்லேவ் எனும் தலைப்பில் படம் தயாரிக்க லயன்கேட் ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளது.

இதில் ஒசாமாவின் செக்ஸ் பார்ட்னர் வேடத்தில் நடிக்க நவோமி காம்பெல் அல்லது கெர்ரி வாஷிங்டனை சிபாரிசு செய்திருந்தார் கோலா பூப். காரணம் இவர்களால்தான் தன்னை மாதிரியே ஒரிஜினலாக நடிக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் லயன்கேட் ஸ்டுடியோஸ் இதனை நிராகரித்துவிட்டது. இருவரும் மிகவும் வயதானவர்களாகத் தெரிவதால், ஒசாமாவின் காதலி வேடத்தில் நடிக்க ப்ரீடா பின்டோவை அணுகியுள்ளதாம்.

ஒசாமா வேடத்தில் அட்ரீன் பரோடி நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து கோலா பூப் அளித்துள்ள பேட்டியில், 1996-லிருந்து ஒசாமாவுடனான எனது காதல் தொடர்புகளை தொகுத்து நான் எழுதிய புத்தகத்தை படமாகத் தயாரிக்க லயன்கேட் உள்பட மூன்று நிறுவனங்கள் முன்வந்தன.

கடைசியில் லயன்கேட் தயாரிக்க முடிவானது. ஆனால் எனக்கு அதிர்ச்சி தரும் வகையில், படத்தின் ஹீரோயினாக அதாவது எனது கேரக்டரில் நடிக்க இந்திய நடிகை ப்ரீடா பின்டோவை ஒப்புந்தம் செய்துள்ளனர்.

சாக்லேட் நிறமும், ஆப்ரிக்க ஸ்டைல் முடியும் கொண்டவள் நான். என் வேடத்தில் நடிக்க அந்தப் பெண் எப்படி பொருத்தமாக இருப்பாள் என்று தெரியவில்லை. கறுப்பு நிறத்தவர்கள் மீது மேற்கத்திய மக்களுக்கு உள்ள வெறுப்பையே இது இன்னும் காட்டுவதாக உள்ளது. இது ஒரு அவமானம்தான். அவர்களுக்கு, கறுப்பின பெண்கள் அழகானவர்கள் இல்லை என்ற நினைப்பு.

இளவரசர் சார்லஸ் ஒரு கமீலா பார்க்கரை பிக்கப் பண்ணதையோ, பில் கிளிண்டன் ஒரு மோனிகா லெவின்ஸ்கியை வைத்திருந்ததையோ ஈஸியாக எடுத்துக் கொள்ளும் அவர்களால், பின்லேடன் செக்ஸ் வைத்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்தது என்னைத்தான் என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை (என்னா ஒரு பெருமை!!).

பொதுவாக கறுப்பினப் பெண்களை தடித்த வேலைக்காரிகளைப் போலவோ, விபச்சாரிகளாகவோ, செக்ஸ் அல்லது போதை அடிமைகளாகக் காட்டுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்தப் படம் தயாராவது தெரிந்து, எனது வேடத்தில் நடிக்க நவோமி கேம்பெலின் பிரதிநிதி என்னைத் தொடர்பு கொண்டபோது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் தயாரிப்பாளர்களின் எண்ணம் வேறாக உள்ளது, என்றார்.

இதே கோலா பூப் எழுதியுள்ள இன்னொரு புத்தகமான தி செக்ஸ் பார்ட் ஆப் தி பைபில் படத்தில் ப்ரீடா பின்டோ அல்லது ஜெஸிகா ஆல்பாவை நடிக்க வைக்க முயற்சிக்கிறதாம் இன்னொரு ஹாலிவுட் ஸ்டுடியோ!



/

comments | | Read More...

விகடன் சொன்னது உண்மையா?

Penulis : karthik on Tuesday 2 October 2012 | 17:28

Tuesday 2 October 2012

விகடன் சொன்னது உண்மையா?
ஆனந்த விகடன் 3-10-12 இதழில் விகடன்
டீமின் விகடன் ஜன்னல் பகுதியில் இச்
செய்தி வெளியாகியுள்ளது..
"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..
'தமிழர்கள் ராஜீவ் காந்தியைக்
கொன்றவர்கள்.அவர்கள் மிகவும்
ஆபத்தானவர்கள்/ -ராஜபக்க்ஷேவின் இந்திய
வருகையின் போது பாதுகாப்புக்காக
இருந்த இந்திய
படை வீரர்களுக்கு மத்திய அரசு கூறிய
எச்சரிக்கை வார்த்தைகள் இவை'
இது உண்மையா?
யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்
அறிய இயலுமா?
இது உண்மையாயின்..தமிழக அரசியல்
தலைவர்கள் ஏன் மன்மோகன் சிங் காய்
மாறிவிட்டார்கள் இவ்விஷயத்தில்.
comments | | Read More...

நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Penulis : karthik on Monday 1 October 2012 | 02:48

Monday 1 October 2012



நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

நெல்லை, அக். 1-

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கடையநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 2,28,312 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக வாசு தேவநல்லூர் தொகுதியில் 1,96,968 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கலெக்டர் செல்வராஜ் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கடந்த 5-1-2012 அன்று 21,16,014 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கடந்த 15-9-2012 வரை 9,629 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீதான பரிசீலனையில் 4003 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 5,623 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இது தவிர இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 1,779 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் கிராமசபைகளில் வாக்காளர் பட்டியல் வாசிக்கப்பட்டு சரி பார்க்கப்படும்.

அதில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயரை புதிதாக சேர்க்க வேண்டும். இதற்காக வருகிற 7, 14, 21 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடக்கும் இந்த முகாம்களில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். 1-1-2013 அன்று 18 வயது பூர்த்தி அடைவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு 5-1-2013 அன்று இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும். இவ்வாறு கலெக்டர் செல்வராஜ் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மதிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

comments | | Read More...

சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்



சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர் சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்

'எங்கேயும் காதல்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. விஜய்யுடன் 'வேலாயுதம்', உதயநிதியுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது 'சேட்டை', 'வாலு', 'வேட்டை மன்னன்', 'சிங்கம்-2' படங்களில் நடித்து வருகிறார். 'சேட்டை' படத்துக்காக ஆர்யா ஹன்சிகா ஆடிப்பாடும் டூயட் பாடல் காட்சியோன்று சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.

இதில் நடித்துக்கொண்டிருந்த போது ஹன்சிகாவின் கைப்பை திருட்டு போனது. மர்ம நபர் அந்த பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். பைக்குள் விலை உயர்ந்த ஐ-போன், ஐ-பாட், உயர் ரக மேக்கப் பொருட்கள் சுவிட்சர்லாந்து நாட்டு பிராங்க் (பணம்), அமெரிக்க டாலர் போன்றவை இருந்தன. ஷாப்பிங் செலவுக்காக அவற்றை வைத்து இருந்தார். எல்லாம் பறிபோய்விட்டது.

இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகி கண்கலங்கினார். இந்த திருட்டு குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார். படிப்பிடிப்பு முடிந்து விமானத்தில் இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இந்த திருட்டு நடந்தது.

இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, திருட்டு போன பையில் எனது கம்ப்யூட்டர் சாதன பொருட்கள் இருந்தன. அவற்றில் எனது தனிப்பட்ட படங்கள், சினிமா தொடர்பான ஸ்கிரிப்ட் போன்றவை இருந்தன. அவை தொலைந்ததால் பெரும் அதிர்ச்சியாகியுள்ளேன் என்றார்.

comments | | Read More...

சிம்னி விளக்கு சரிந்து விழுந்ததில் பிளஸ் 1 மாணவி தீயில் கருகி பலி



சிம்னி விளக்கு சரிந்து விழுந்ததில் பிளஸ் 1 மாணவி தீயில் கருகி பலி சிம்னி விளக்கு சரிந்து விழுந்ததில் பிளஸ் 1 மாணவி தீயில் கருகி பலி

கருங்கல், அக். 1-

புதுக்கடையை அடுத்த இனயம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் ஜான்சன். மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி மரிய தங்கம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜாய்ஸ் (வயது 16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் பள்ளி பாடங்களை படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் அவர் சிம்னி விளக்கை பற்றவைத்தார்.

அப்போது விளக்கில் இருந்த மண்எண்ணை ஜாய்ஸ் மீது கொட்டியது. இதில் எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீப்பிடித்துக்கொண்டது. இதை கண்டதும் அவரது தாய் மரிய தங்கம் ஓடி வந்து மகளை கட்டிப்பிடித்தபடி தீயை அணைக்க முயன்றனர். இதில் அவரது உடலிலும் தீப்பற்றியது. இருவரும் உயிருக்கு போராடினர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஜான்சன் 2 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜாய்ஸ் பரிதாபமாக இறந்து போனார். அவரது தாயார் மரிய தங்கம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி மற்றும் மகளை காப்பாற்றச் சென்றதில் ஜான்சனுக்கும் கையில் தீக்காயம் இருந்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

comments | | Read More...

ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிரோடு மீட்டது எப்படி?: தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்புபணி

Penulis : karthik on Sunday 30 September 2012 | 22:50

Sunday 30 September 2012



ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிரோடு மீட்டது எப்படி?: தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்புபணி ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிரோடு மீட்டது எப்படி?: தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்புபணி

ஓசூர், அக். 1-

ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 4 1/2 மணி போராட்டத்துக்கு பின்பு உயிரோடு மீட்கப்பட்டான். தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்பு பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் அகலகோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது மந்தையூர். இந்த பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (30), இவரது மனைவி பத்மா (26), இவர்களுக்கு பூஜா (3 1/2) என்ற பெண் குழந்தையும், 2 1/2 வயதில் குணா என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. இரவு நேரம் என்பதால் அதை மூடாமல் அப்படியே விட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் பத்மா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு விவசாய நிலத்திற்கு துணி துவைக்க சென்றார். அப்போது குழந்தைகள் 2 பேரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். பத்மா துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது மூடாமல் இருந்த 600 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுவன் குணா காலை உள்ளே விட்டு விளையாடு கொண்டு இருந்தான். அப்போது திடீரென அவன் தவறி அந்த குழிக்குள் விழுந்தான். இதைப் பார்த்த பூஜா தனது தாய் பத்மாவிடம் கூறினாள்.

குழிக்குள் விழுந்த சிறுவன் குணா அம்மா... அம்மா... என்று அலறி துடித்தான். இதைப்பார்த்து செய்வதறியாத தவித்த பத்மா கூச்சல் போட்டார். இதையடுத்து தோட்டத்தில் வேலைப்பார்த்து கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியும் மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் தேன்கனிக்கோட்டை தாசில்தார் சித்ராவுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வருவாய் அலுவலர் பால்ராஜ், வி.ஏ.ஓ. மாதேஸ், ஆகியோர் விரைந்து வந்தனர். ஓசூர் சப்-கலெக்டர் பிரவீன் நாயர் உடனடியாக மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் 10 வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

மேலும் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. டாக்டர்களும் தயார் நிலையில் இருந்தனர். மேலும் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் ஆக்சிஜன் செலுத்த ஆக்சிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. தீயணைப்பு துறையினர் ஆழ்துளை கிணற்றில் கயிறு விட்டு பார்த்த போது உள்ளே சிறுவன் 20 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக 2 ஜே.சி.பி. எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டது. காலை 11-30 மணிக்கு ஆழ்துளை கிணற்றின் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. பகல் 1 1/2 மணிக்கு 15 அடி ஆழத்தில் பாறை சிக்கியதால் மேற்கொண்டு தோண்ட முடியவில்லை.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் குழியின் பக்கவாட்டில் குழி தோண்டினர். அப்போது அந்த இடத்தில் இருந்து ஆழ்துளை கிணற்றில் 4 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்தான். இதனால் சிறுவனை மீட்க முடியவில்லை. இதையடுத்து 5 அடி நீள கொக்கி கம்பி மற்றும் நூல்கயிறு கொண்டு வரப்பட்டது. சிறுவனின் சட்டை காலரில் கம்பியை மாட்டி ஒருவர் பிடித்துக் கொள்ள, சிறுவனின் கையில் கயிற்றால் சுருக்கு மாட்டப்பட்டது. அந்த கயிறை மற்றொருவர் பிடித்து கொண்டார். இதையடுத்து தீயணைப்பு வீரர் வெங்கடசாமி என்பவர் துளையின் உள்ளே சென்று சிறுவனை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த டாக்டர் சிறுவன் குணாவுக்கு ஆம்புலன்சில் அவசர சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவனை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுவனை சந்தித்தார். மேலும் அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார். சுமார் 4 1/2 மணி நேரம் நடந்த மீட்புப்பணி மாலை முடிவடைந்தது. சிறுவனை உயிரோட மீட்க தீயணைப்பு துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்தனர். மின்னலாக செயல்பட்ட அவர்களின் மீட்பு நடவடிக்கையை பார்த்து பொதுமக்கள் அவர்களை பாராட்டினர்.

comments | | Read More...

அதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்



அதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்

வாஷிங்டன், அக். 1-
 அமெரிக்க வாழ் இந்தியர்கள், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு காட்டிய ஆதரவை காட்டிலும் இப்போது அதிகமானோர் அக்கட்சிக்கு தங்கள் ஆதரவை காட்டியுள்ளனர்.  ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பராக் ஒபாமாவிற்கே 68 சதவிகிதம் அமெரிக்க இந்தியர்கள் தங்களின் வாக்குகளை அளிப்பார்கள் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 5 சதவிகிதம் இந்தி யர்களே ரிபப்ளிக்கன் கட்சித் தலைவர் ரோம்னியை ஆதரிப்பார்கள் என்றும் அது கூறுகிறது.  குறைந்த எண்ணிக்கையிலான அமெரிக்க இந்தியர்கள் தங்களின் சொத்துக்களை காப்பற்றவே குடியரசு கட்சியின் ஆதரவை நாடுகின்றனர் என்று கூறப்படுகிறது.

comments | | Read More...

அரசியல் அழுக்கு நிறைந்தது; நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை தராது: அன்னா ஹசாரே பேட்டி




அரசியல் அழுக்கு நிறைந்தது; நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை தராது: அன்னா ஹசாரே பேட்டி அரசியல் அழுக்கு நிறைந்தது; நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை தராது: அன்னா ஹசாரே பேட்டி

புதுடெல்லி, அக். 1-

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி பிரபல காந்தியவாதியான அன்னா ஹசாரே போராடி வருகிறார். இனி உண்ணாவிரதம் இருக்க மாட்டேன், ஆனால் எனது போராட்டம் தொடரும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள அன்னா ஹசாரே, அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய போராட்டம் குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்துவதற்காக நேற்று டெல்லி சென்றார்.

அங்கு அவர் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் பாதை என்பது புனிதமான ஒன்றல்ல. அரசியல் என்பது முழுக்க அழுக்குகள் படிந்த ஒன்றாகும். ஆனால் போராட்டப்பாதை என்பது புனிதமானது. நாட்டுக்கு அரசியலால் ஒரு எதிர்காலத்தை வழங்க முடியாது. ஆனால் ஒரு பெரிய இயக்கத்தால் அது முடியும்.

அந்த வகையில்தான் அரசியல் என்பது சரியான இலக்காக இருக்காது என்று நான் கூறினேன். நான் மாற்று சக்தியாக எதையும் அளிக்கவில்லை. மாற்றாக ஒன்றைத் தரவேண்டும் என்று என்னைக் கேட்டபோது, இது நல்ல யோசனைதான், ஆனால் அதற்கு (எப்படி ஒரு மாற்றுசக்தி அமைய வேண்டும் என்பது குறித்து) நான் கேட்கிற 5 அல்லது 6 கேள்விகளுக்கு விடை தேவை என்று கூறினேன். ஆனால் அந்தக் கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை.

(புதிய கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி, பணம் எங்கிருந்து வரும், தேர்தல்களில் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது என்பது உள்ளிட்ட கேள்விகளையே அன்னா ஹசாரே கேட்டார்.).

நான் அரசியலில் குதிக்க வேண்டும் என்று கருதியிருந்தால், அதை நான் முன்பே செய்திருக்க முடியும். நான் ஊராட்சி தேர்தலில்கூட போட்டியிட்டது இல்லை. நான் மாற்று சக்தி பற்றி பேசியபோது, அரசியலை மாற்று சக்தியாக கூறியது கிடையாது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தொண்டர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், மற்றவர்களை இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசுவேன். அரசியல் நமக்கு நல்லதொரு எதிர்காலத்தை வழங்கும் என்றால், பொன் வாத்து என்று கருதப்பட்ட இந்தியா ஏன் பொன்னை அடமானம் வைக்கிற நிலைக்கு வரவேண்டும். அரசியல் மூலமாக இந்த நாடு பிரகாசமான எதிர்காலத்தை அடைய முடியாது.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

தனது குழுவின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலை விட்டுப் பிரிந்து வந்த பின்னர் அன்னா ஹசாரே டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நேட்டோ படை முகாமுக்குள் மோதல்: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி




ஆப்கானிஸ்தானில் மீண்டும் நேட்டோ படை முகாமுக்குள் மோதல்: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி ஆப்கானிஸ்தானில் மீண்டும் நேட்டோ படை முகாமுக்குள் மோதல்: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி

காபூல், அக்.1-

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை குவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பல்வேறு முகாம்களில் இவர்கள் தங்கியிருந்து ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் முகாமுக்குள்ளேயே நேட்டோவுக்கு எதிரான தாக்குதலை நடத்துகிறார்கள். இதில் இதுவரை 52 வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

இதனால் நேட்டோ படையினர் 2 வாரமாக தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைத்தனர். ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு அளித்த பயிற்சியையும் நிறுத்தினர்.

நேற்று முன்தினம் மீண்டும் முகாம் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. அன்றைய தினமே ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதியில் இருக்கும் முகாமில் ஆப்கானிஸ்தான் வீரர் திடீர் தாக்குதல் நடத்தினார். இதில் நேட்டோ வீரர் ஒருவரும், காண்டிராக்டர் ஒருவரும் உயிர் இழந்தார்கள். இது நேட்டோ தளபதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

comments | | Read More...

போடி மலையில் பற்றி எரியும் உயர் ரக மரங்கள்: மரக்கரிக்காக தீவைப்பு



போடி மலையில் பற்றி எரியும் உயர் ரக மரங்கள்: மரக்கரிக்காக தீவைப்பு போடி மலையில் பற்றி எரியும் உயர் ரக மரங்கள்: மரக்கரிக்காக தீவைப்பு

போடி, அக்.1-

தேனி மாவட்டம் போடியை சுற்றி ஏராளமான மலைகள் உள்ளது. இங்குள்ள வடக்குமலை, வடமலை மீனாட்சி அம்மன் மலை, முட்டுக்கோம்பை, உலகுருட்டி மலை, ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சமூக விரோத கும்பல் வைத்த தீ பற்றி எரிந்து வருகிறது.

தற்போது பலமான காற்று வீசி வருவதால் தீ மேலும் பரவி வருகிறது. மலையில் தீபிடிப்பதால் விலை உயர்ந்த மரங்களான தேக்கு, சந்தனம், பலா உள்ளிட்ட அரியவகை மரங்கள் தீயில் கருகி நாசமாகி வருகின்றன.

2 நாட்களாக பற்றி எரியும் தீயை அணைக்க போடி வனத்துறையினர் போராடி வருகின்றனர். மலைகளில் தீ பிடிப்பதால் காட்டு யானைகள், மான்கள், வரை யாடுகள், காட்டு எருமைகள் போன்ற அரியவகை விலங்குகள் இடம்பெயர தொடங்கியுள்ளன.

இதுபோன்று அடிக்கடி சமூகவிரோத கும்பல் போடியை சுற்றி உள்ள மலைப்பகுதிகளில் தீ வைப்பதால் அரியவகை மரங்கள் அழிந்தும், வனவிலங்குகள் இடம் பெயர்ந்தும் வருகின்றன.

தொடர் தீ காரணமாக மலையில் உள்ள மான்கள் அவ்வப்போது ரோட்டோர பகுதிகளுக்கு வருவதால் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.

மர கரிக்கட்டைக்காக சமூகவிரோத கும்பல் மலையில் தீ வைப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து போடி வனத்துறையினர் கூறும்போது, போடி பகுதியில் உள்ள மலைகளில் தீ வைப்பவர்களை பிடிக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மலையில் எரிந்து வரும் தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மர கரிக்கட்டைக்காக தீவைக்கும் கும்பல் திருந்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

comments | | Read More...

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெண் கரடி




குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெண் கரடி குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெண் கரடி

ஊட்டி, அக். 1-

நீலகிரி மாவட்டத்தில் விளங்குகள்-மனிதர்கள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்டங்களுக்குள் புகும் காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள மலைக் காய்கறிகளை நாசப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் காட்டு யானை, கரடி, சிறுத்தைப்புலிகளால் மனித உயிர்களும் பலிவாங்கப்படுகிறது. வன விலங்குகளை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உரிய பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி குடியிருப்பு பகுதிக்குள் பெண் கரடி ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் உள்ள கொய்யா, ஆரஞ்சு, சீத்தா பழங்களை சுவைத்த அந்த கரடி அங்கேயே படுத்து கொண்டது. உடல் நலக்குறைவு காரணமாக அந்த கரடியால் அங்கிருந்து எழுந்து செல்ல முடியவில்லை. அதிகாலையில் கண்விழித்து வெளியே வந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கரடி படுத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த பகுதியில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஊருக்குள் கரடி படுத்திருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டாக்டர் மனோகரன் தலைமையில் விரைந்து வந்து அந்த கரடியை சோதனை செய்தனர். அப்போது அந்த கரடிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதும் அதன் காரணமாகவே அது நடக்கமுடியாமல் படுத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த கரடியை சிம்ஸ் பார்க் அருகே உள்ள வனத்துறை விடுதிக்கு கொண்டு சென்றனர். அஙà ��கு குளுக்கோஸ் ஏற்றபட்டு பால் மற்றும் சத்தான உணவு வழங்கப்பட்டது.

உடல் நலம் தேறிய பின்னர் அந்த கரடி பாதுகாப்பான பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

comments | | Read More...

தாண்டவம் பட நடிகையின் முலைக்காம்பு-உண்மை tamil actress sex



தாண்டவம் பட நடிகையின் முலைக்காம்பு-உண்மை
தாண்டவம் பட நடிகையின் முலைக்காம்பு-உண்மை
மதராச பட்டினம் படத்தில் நடித்த நாயகியின்
முலை காம்பு

Tamil Actress real nipple,actress boobs,Tamil Actress real nipple,actress boobs,Tamil Actress real nipple,actress boobs,Tamil Ac tress real nipple,actress boobs,Tamil Actress real nipple,actress boobs,Tamil Actress real nipple,actress boobs,Tamil Actress real nipple,actress boobs,Tamil Actress real nipple,actress boobs,Tamil Actress real nipple,actress boobs
/

comments | | Read More...

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 01-10-2012



 தாயை பிரிந்து வீட்டில் கரடி குட்டி தஞ்சம்
நீலகிரி மாவட்டம், குன்னூர், காட்டேரியை அடுத்துள்ள பால்கார லைன் பகுதியில் நேற்று முன்
 வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்...
வணக்கம் நண்பர்களே..! இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம்.
 மாற்றான், ஆங்கில படத்தின் 'காப்பி' அல்ல - நடிகர் சூர்யா
சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் நடித்திருக்கும் படம், `மாற்றான்.' இந்த படத்தை
 தனியார் நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி - நிர்வாக அதிகாரி கைது
சென்னையில் ரூ.2 கோடி மோசடி புகாரில் தனியார் கம்பெனி அதிகாரி கைது செய்யப்பட்டார்.சென்னை
 அரசு பஸ் டிரைவர் லாரியை ஏற்றிக்கொலை
ராயக்கோட்டை அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை
 600 அடி ஆழ்துளையில் விழுந்த சிறுவன் மீட்பு
தேன்கனிக்கோட்டை அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 மணி
 தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்
வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24
 தமிழக பஸ்கள் 2 ஆவது நாளாக நிறுத்தம்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி கர்நாடகத்துக்கு தமிழக
 பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை டி20
 சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி காவிரியில் நள்ளிரவில் தண்ணீர் திறப்பு
கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக அரசு நேற்று நள்ளிரவு முதல் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு
 பிரபல நடிகையுடன் உல்லாசம் சீன தலைவர் பதவி பறிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தவர் போ ஷிலாய். செல்வாக்கு
 கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ
கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ பார்க்க இங்கே
 நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?
நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம்
 டெபிட் கார்டுகள் மூலம் ரூ.80 லட்சம் மோசடி: சாப்ட்வேர் நிறுவன பெண் அதிகாரி நண்பர்களுடன் கைது
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும்
 ராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள்
 திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலையில் புரட்டாசி மாத
 தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரம் மழை பெய்யும்
வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது
 அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம சாவு: கடலில் பிணமாக மிதந்தார்
அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள லாங் ஐலாண்டு பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தை
 சீர்திருத்தம் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடிக்கிறார்கள்: மம்தா
சீர்திருத்தம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள் என்று மத்திய அரசை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
 கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் கண்டிஷன்
மணிரத்னம் இயக்கும் படம் 'கடல்'. இதில் கார்த்திக் மகன் கவுதம், ராதாவின் 2வது
 இங்கிலீஷ் விங்கிலீஷ் டீமை பாராட்டிய ரஜினி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்துள்ள படம், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'. அஜீத் கவுரவ
 கவர்ச்சியில் கலக்கும் விஜயலட்சுமி
அகத்தியன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ள "வனயுத்தம்" படம் இன்னும் விரைவில் வெளிவர இருக்கிறது.
 டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்
தீபாவளியையொட்டி `டாஸ்மாக்' மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனசும், 1.67
 தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது கர்நாடக அரசு மீண்டும் உறுதி
காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் பிரதமர் பிறப்பித்த உத்தரவின்படி தமிழகத்திற்கு தினசரி வினாடிக்கு
 ரயில் சரக்கு கட்டணம் நாளை முதல் உயருகிறது
சிமென்ட், எஃகு, நிலக்கரி போன்ற சரக்குகளை ரயில் மூலம் எடுத்துச் செல்லுவதற்கான கட்டணம்
 குழந்தையை விற்று செல்போன் வாங்கிய தாய்
திருச்சி அடுத்துள்ள மணிகண்டம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கிச்சான். இவரது மனைவி பானு.
 இன்று விஏஓ தேர்வு 1,870 இடங்களுக்கு 9.8 லட்சம் பேர் போட்டி
தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இன்று விஏஓ தேர்வு நடக்கிறது. 1,870 இடங்களுக்கு
 டைரக்டர் அமீர் ராஜினாமா வாபஸ்
இயக்குனர் சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்த அமீர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார். 'தாண்டவம்'
 வெற்றிகரமாக பறந்தது இந்தியாவின் ஜிசாட்- 10 செயற்கைகோள்!
இந்தியாவின் அதிக எடை கொண்ட ஜி-சாட் 10 செயற்கைகோள் இன்று  வெற்றிகரமாக விண்ணில்
 தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் ராஜினாமா!
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.சென்னை ராயபுரம் தொகுதியில்

 வார ராசிபலன்: 28-09-2012 முதல் 04-10-2012 வரை
மேஷம்:  Mesam  சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால்
 தோசை மாவு போண்டா
தேவையான பொருட்கள்பச்சரிசி            - 1 கப்உளுத்தம் பருப்பு        -
 கத்தரிக்காய் மசாலா
தேவையான பொருள்கள்சிறிய கத்தரிக்காய்        -150 கிராம்புளித்த தயிர்            
 பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜி
பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜிபக்கோடா தயாரிக்கஉருளைக்கிழங்கு       -4கடலை மாவு           -4

 50-year-old woman raped, murdered in Padappai
A 50-year-old woman was found raped and murdered in a
 Class 11 student gangraped in Haryana, all four accused arrested
In yet another incident of gangrape involving a teenage girl
 Minor girl gangraped at Jharkhand Cong MLA's house in Patna
A minor girl from Uttar Pradesh was allegedly gangraped by
 Missing Indian-American student found dead in US
The death of an Indian American student, whose body was
 5-crore heist in South Delhi: Gunmen steal van loaded with bank money
Gunmen in Delhi forced a van carrying five crores in
 TN assembly Speaker Mr Jayakumar resigns
The Speaker of the Tamil Nadu Legislative Assembly D. Jayakumar
 Boy acquitted of raping stepmom for 2 years
A criminal court in Abu Dhabi acquitted an Emirati boy



www.tamilkurinji.in


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger