News Update :
Powered by Blogger.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு Post graduate teachers Examination results released in 10 days

Penulis : Tamil on Sunday 15 September 2013 | 17:10

Sunday 15 September 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியாகும் Post graduate teachers Examination results released in 10 days

Tamil NewsYesterday
சென்னை, செப்.16- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்து அதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படும் பணி முடிவடைந்தது. மேலும், கம்ப்யூட்டர்களில் நிபுணத்துவம் வாய்ந்த குழு வரவழைக்கப்பட்டு இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இந்த மதிப்பீடு 3 மணி நேரத்திற்குள் முடிந்து விடும். அதன் பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரிக்க உள்ளது. இந்த தேர்வு முடிவு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலாளர் வசுந்தரா தேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு உள்ளனர். ...
Show commentsOpen link

comments | | Read More...

ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடப்படுகிறது japan last nuclear plant turn off

ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடப்படுகிறது japan last nuclear plant turn off

Tamil NewsToday,

டோக்கியோ, செப்.15- ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் தாக்கத்துக்கு உள்ளான புகுஷிமா அணுமின் உலைகள் இன்னமும் பிரச்சினைகளைத் தந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள். இன்று மாலை மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு நாளைக் காலை முதல் இந்த மின்உலையும் செயலற்ற நிலையில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை. 40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும், ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின்பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின. தற்போதும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும், பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது. புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது. புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும், நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. இந்த முடிவானது, உலகின் மூன்றாவது பொருளாதார சக்தி படைத்த ஜப்பானை இரண்டாவது முறையாக அணுசக்தியின் செயல்பாடு இல்லாத நிலையில் வைக்கிறது. ...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger