News Update :
Powered by Blogger.

தொலைந்து போகும் குழந்தைகளை மொபைல்போன் மூலம் கண்டுபிடிக!

Penulis : karthik on Tuesday 8 May 2012 | 22:06

Tuesday 8 May 2012





பள்ளிக்குச் சென்ற தமது குழந்தைகள் மாலை நேரம் சரியான நேரத்தில் வீடு திரும்பவில்லை என்றால் அந்த நேரம் பெற்றோர்கள் அடையும் துன்பத்திற்கும் பரபரப்பிற்கும் அளவே இருக்காது. அப்படி ப்பட்ட துயராமான தருணத்தை போக்குவதற்காக ஒரு புதிய அப்ளிகேசன் வர இருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா ஜார்ஜியாவில் ஒரு 14 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான். இதை அறிந்த அவனுடையத் தாயார் தனது ஸ்மார்ட்போன் மூலம் பேமிலி ட்ராக்கர் என்ற அப்ளிகேசனைப் பயன்படுத்தி தனது மகன் இருக்கும் இடத்தைக் � ��ண்டுபிடித்து விட்டார். அதன் மூலம் அவர்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி திரும்பியது.
இந்த பேமிலி ட்ராக்கரைப் போல ஏராளமான அப்ளிகேசன்கள் உள்ளன. அதன் மூலம் தொலைந்து போன தங்களது அன்புக்குரியவர்களை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
பேமிலி ட்ராக்கரை உருவாக்கியவரான ராபர்ட� � ப்ரான்சஸ்டி கூறும் போது, இந்த பேமிலி ட்ராக்கர் அப்ளிகேசன் மூலம் நமது தொலைந்து போன உறவினர்களை மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்றி கூறுகிறார். மேலும் இந்த அப்ளிகேசனுக்கு உலக அளவில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பதாகக் கூறுகின்றார்.
 பேமிலி ட்ராக்கர் அப்ளிகேசன் 
செல்லவும் இங்கே.!


இந்த அப்ளிகேசன் மூலம் தொலைந்து போன தங்களது குழந்தைகளின் இடத்தைக் கண்டு பிடிக்க முடியும். அவர்களுக்கு செய்தி அனுப்ப முடியும். அதுபோல் அவர்களின் மொபைல்களுக்கு ரிமோட் மூலம் அலார்மை ஆக்டிவேட் செய்ய முடியும்.
இந்த சேவையை வெப் மூலமாக பயன்படுத்த முடியும். இந்த அப்ளிக� ��சன் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் இயங்கும் வசதி கொண்டவை. மேலும் இந்த பேமிலி ட்ராக்கர் 2 வாரங்களுக்கான டேட்டா பேசையும் கொண்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 2 வாரங்களாக தொலைந்து போன குழைந்தை எங்கே இருந்தது மற்றும் என்ன செய்தது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த அப்ளிகேசன்களில் உள்ள குறைகளைவிட இதில் ஏராளமான நிறைகள் உள்ளன. இந்த அப்ளேகேசனைப் போன்ற கடந்த வருடம் ஜப்பானில் சுனாமி வந்த போது லைப்360 என்ற அப்ளிகேசன் உருவாக்கப்பட்டது. இந்த அப்ளிகேசன் காணாமல் போன பலரையும் இணைத்து வைத்தது.






comments | | Read More...

ஆதீனங்களின் அறையில் கேமரா வைத்தால், எத்தனை பேர் சிக்குவார்கள் தெரியுமா?... நித்தியானந்தா!




என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களே, மற்ற அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கேமராக்களை வைக்க அவர்கள் தயாரா...? நான் வைக்கத் தயார். அப்படிச் செய்தால் எத்தனை ஆதீனங்கள் சிக்குவார்கள் தெரியுமா என்று கேட்டுள்ளார் நித்தியானந்தா.

மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது நித்தியானந்தா பேசுகையில்,

உலகில் இந்து அமைப்பில் மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளனர். இதில் 13 பேர் மட்டுமே எனக ்கு எதிராக உள்ளனர். இந்து அமைப்பினர் என்ற பெயரில் உள்ள கயவர்கள், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னுடைய உருவ பொம்மையையும் சிலர் எரித்து உள்ளனர். நான் `ம்...' என்று சொன்னால் போதும் என் பக்தர்கள் அவர்கள் உருவ பொம்மையை எரிப்பார்கள்.

ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் இந்து சமயத்தினரிடையே விரிசல் ஏற்பட்டு விடும் என்று தான் நான் பொறுமையாக இருக்கிறேன். வருகிற ஜுன் 5-ந் தேதி பெரிய சன்னிதானத்திற்கு கனகாபிஷேகம், பாதபூஜை போன்றவை நடக்கின்றன. இந்த விழாவில் 155 நாடுகளில் உள்ள இந்து அமைப்பினர் கலந்து கொள்கிறார்கள்.

மதுரை ஆதீனத்தின் சொத்து குறித்து தகவல் உரிமை சட்டத்தில் கேட்க முடியாது. ஓராண்டுக்குப்பின் ஆதீனமடத்தின் சொத்துக்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும்.

என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள் அவர்களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரகசிய கேமராக்கள் வைப்பார்களா? நான் அதை வைக்க தயார். அப்போது தெரியும் பாலியல் குற்றச்சாட்டில் யார் சிக்குகிறார்கள் என்று பார்ப்போம். இதை நான் சவாலாகவே கூறுகிறேன் என்றார் அவர்.



comments | | Read More...

ஐபிஎல் போட்டி: புனே வாரியர்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான்




ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 126 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார � �ெற்றிப் பெற்றது. துவக்கம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ஷான் வாட்சன் அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐபிஎல் 5 தொடரின் இன்று புனேயில் நடைபெற்ற போட்டியில் புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் வென்ற புனே வாரியர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து க� �மிறங்கியது. ஆனால் துவக்க முதலே ரன்களை குவிக்க திணறியது.

5 ஓவர்கள் வரை ரன் சேர்ப்பில் மந்தமாக செயல்பட்ட துவக்க வீரரான கேப்டன் கங்குலி 16 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் மைக்கேல் கிளார்க் 16 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார்.

அதன்பிறகு ராபின் உத்தப்பா உடன் ஜோடி சேர்ந்த மஜூம்தார் அடுத்தடுத்து 2 சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அவரது ஆட்டம் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 30 ரன்களை சேர்த்த மஜூம்தார் போல்டானார். பொறுப்பாக ஆடி வந்த ராபின் உத்தப்பா 13 ரன்களில் கேட்ச் கொட� �த்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஆஞ்சிலோ மேத்யூஸ் ஒரிரு ரன்களாக சேர்த்த நிலையில், 11 ரன்கள் எடுத்த நிலையில் ஓவைஸ் ஷாவின் குறி தவறாத த்ரோவில் ரன் அவுட்டானார். மித்துன் 11 ரன்களில் போல்டானார். கடைசி வரை அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்ற ஸ்டீவன் ஸ்மித் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 125 ரன்களில் சுருண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் ஷான் டைட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

126 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் துவக்கத்திலேயே துவக்க வீரர் ரஹானே டக் அவுட்டாகி வெளியேறினார். பொறுப்பாக ஆடி வந்த கேப்டன் ராகுல் டிராவிட் 14 ரன்களில் அவுட்டானார்.

அதன்பிறகு வந்த ஷான் வாட்சன் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த அசோக் மெனாரியா 18 ரன்களில் அவுட்டானார். எளிய இலக்கை விரட்டிய ஷான் வாட்சன் 51 பந்துகளில் 4 சிக்ஸ், 10 பவுண்டரிகள் அடித்து 90 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

ஷான் வாட்சனின் அதிரடி ஆட்டம் மூலம் 16.2 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி இலக்கை எட்டியது.



comments | | Read More...

அப்துல் கலாம்தான் ஜனாதிபதி ஆக வேண்டும்: இணையதளத்தில் பொது மக்கள் ஆதரவு




அடுத்த ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சி ச� �ய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்போவது பிரணாப் முகர்ஜியையா? அல்லது ஹமீது அன்சாரியையா? என்ற கேள்விகள் எழுந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் ரீதியாக பிரணாப் முகர்ஜிக்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் மக்களின் ஆதரவாளராக ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம்தான் உள்ளார். அப்துல் கலாம்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவ� ��த்து வருகின்றனர்.

அப்துல் கலாமுக்கு ஆதரவு திரட்டும் வகையில் 'அப்துல்கலாமே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'. 'ஜனாதிபதியாக அப்துல் கலாம்' என்ற பெயர்களில் சிலர் பேஸ்புக் தொடங்கியுள்ளனர். இந்திய ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் குரல் கொடுப்பது இதுவே முதல்முறை ஆகும்.

பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-

ஜனாதிபதி பதவிக்கான குறைந்தபட்ச தகுதியை நிறைவு செய்யக்கூடிய ஒரே நபர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மட்டுமே என்று சுமித் நக்பால் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமாக படித்தவர், பண்பாளர், பணிவானவர் மற்றும் மக்களின் ஜனாதிபதி என்று பலர் எழுதியுள்ளனர். அப்துல்கலாம் ஒரு மாபெரும் தலைவர். அவர் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்பதால் உலக அரங்கில் இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார் என நாகார்ஜுன் ஷெட்டி என்பவர் சொல்லி இருக்கிறார்.

வெளிநாடு சுற்றுப் பயணத்தில் கூட்டத்தையே தன்னுடன் அழைத்து செல்ல கலாமுக்கு ஒரு குடும்பம் கிடையாது. நில மோசடி செய்யவில்லை. எனவே அவர் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்று தற்கால நிகழ்வுகளை கிண்டல் செய்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இவர்கள் போன்று ஏராளமானோர் அப்துல்கலாம்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்யுமாறு பொது மக்களை கலாம் விசுவாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



comments | | Read More...

ரஜினி - கமல் போன்று கொடுத்த வாக்குறுதியை விஜய் காப்பாற்றுவாரா?




இனி படங்களில் புகைப் பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்ற விஜய் 2007-ல் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற� �வாரா?, என பசுமைத் தாயகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் அருள் விடுத்துள்ள அறிக்கை:

தங்கள் நடிப்பில் வரவிருக்கும் துப்பாக்கி படத்தின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களில் தாங்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் ரசிகர்களாக உள்ள நிலையில், இந்தக் காட்சி அவர்களின் எதிர்காலத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம� �.

2010-ல் 5, 56, 400 பேர் கொடிய புற்று நோய்க்கு பலியாகியுள்ளனர் இந்தியாவில். இவர்களில் 42 � ��தவீத ஆண்கள் மற்றும் 18 சதவீத பெண்களுக்கு புற்று நோய் வரக் காரணம் புகையிலைப் பழக்கமே.

உங்கள் ரசிகர்களிலே கூட எத்தனையோ பேர் உரிய வயதுக்கு முன்பே உயிரிழக்க இந்த புகைப் பழக்கம் காரணமாகிறது.

இப்படிப்பட்ட கொடிய நோய் பரவ நீங்கள் துணை போகலாமா... என்று உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள்.

2007-ல் நீங்கள் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த போது, இனி வரும் படங்களில் புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்தீர்கள். அது அனைத்து நாளிதழ்கள ிலும் வெளியானது.

அதற்கேற்ப, அடுத்தடுத்து வந்த குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம், காவலன் ப� ��ன்ற படங்களில் நீங்கள் புகைப் பிடிக்கவில்லை. இப்போது துப்பாக்கியில் புகைப்பிடிப்பது ஏன்?

இளையதளபதி தனது வாக்குறுதியை மீறலாமா?

நல்ல முன்னுதாரணம் ரஜினி - கமல்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நல்ல முன்னுதாரணங்களாகத் திகழும் திரு ரஜினிகாந்த், திரு கமல்ஹாஸன், திரு சூர்யா ஆகியோரைப் பின்பற்றி புகைக்கும் பழக்கத்தை நீங்களும் கைவிட்டிருந்தீர்கள். இப்போது மீண்டும் புகைக்க காரணம் என்ன?

தயவு செய்து உங்கள் வாக்குறுதியை மீற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்."

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



comments | | Read More...

என்னை துரத்த முடிவு செய்துவிட்டார்கள்: பிரணாப் முகர்ஜி




குடியரசுத் தலைவர் பதவிக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் சிறந்த நபர் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின ்ஹா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடக்கிறது. அதற்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அல்லது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி நிறுத்தும் என்று எதிர்பார� ��க்கப்படுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில்,

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு சிறந்த நபர். அவர் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்களிலேயே சிறப்பாக செயல்படும் ஒரே அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான். அதனால் பிரணாபை தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறோம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த நாட்டுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறோம் என்று ஒரே வாழ்த்து மழையாகப் பொழிந்தார்.

இதைக் கேட்ட பிரணாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மற்றவர்களும் சிரித்தார்கள். பிரணாப் தனது இருக்கையில் இருந்து எழுந்து, ஆக மொத்தம் நிதியமைச்சகத்தில் இருந்து என்னை ந� �க்க முடிவு செய்துவிட்டீர்கள் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

ஹமீது அன்சாரி அல்லது பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்தினால் அவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தெரிவித்ததற்கு நேர்மாறாக யஷ்வந்த் சின்ஹா பிரணாபை புகழ்ந்து தள்ளியுள்ளார் என்பது கு� �ிப்பிடத்தக்கது.



comments | | Read More...

ரூ 20 லட்சம் கடத்தினாரா நயன்தாரா?




நயன்தாராவின் பாங்காக் பயணம் ஏகப்பட்ட வதந்திகளைக் கிளறிவிட்டுள்ளது. இந்தப் பயணம் தொடர்பாக வந்துள்ள மூன்றாவ� �ு வதந்தி இது...

இந்தப் பயணம் சாதாரணமாக நடந்ததல்ல... பல லட்சம் ரூபாய் பணம் கடத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வரும் செய்திகளுக்கு மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லி வருகிறார் நயன்தாரா.

நடிகை நயன்தாரா பாங்காங் சுற்றுப்பயணம் சென்று விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அவருடன் மானேஜர் ராஜேஷ், மேக்கப் மேன் ராஜு ஆகியோரும் வந்தனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நயன்தாராவை மடக்கி விசாரணை நடத்தியதாகவும், அவரது மேனேஜர் ராஜேஷ், மேக்கப்மேன் ராஜு ஆகியோரிடமும் தனித் தனியாக விசாரணை நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. காரணம் நயன் மேனேஜர் எனப்படும் ராஜேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராம். இவரை நயன்தாராவுக்கு பிரபுதேவாதான் மேனேஜராக்கினாராம்.

நயன்தாராவும் ராஜேஷும் பாங்காங் சென்ற போது ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாகவும், எனவேதான் அவர்கள் சென்னை திரும்பிய போது சுங்க அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் கூறப்பட்டது. அந்த ரூ 20 லட்சம் எடுத்துச் சென்றது எதற்காக என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்களாம் அதிகாரிகள்.

இந்த வதந்திக்கும் நயன்தாரா பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் பாங்காக் போய் வந்தது குறித்து வரும் மூன்றாவது வதந்தி இது.

பாங்காங் சென்ற போது ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துச் செல்லவில்லை. அவ்வளவு பெரிய தொகையை விமானத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள். விமான நிலையத்தில் எனக்கு நடந்தது சாதாரணமான பாதுகாப்பு சோதனைதான் என்றால் ஏன் யாரும் நம்ப மறுக்கிறீர்கள். இது உங்களுக்கும் கூட நடக்கலாம்," என்றார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger