News Update :
Powered by Blogger.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா? மத்திய மந்திரி வாசன் பேட்டி

Penulis : karthik on Tuesday 1 May 2012 | 23:18

Tuesday 1 May 2012




திருச்சியில் நடந்த ஐ.என்.டி.யூ.சி மாநில மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள� �� கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு 'தமிழ் ஈழம்' ஒன்றே தீர்வு என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறி இருக்கிறார். மேலும் டெசோ அமைப்பை கருணாநிதி மீண்டும் தொடங்கி இருப்பதால் தி.மு.க-காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படுமா?

பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறு வாழ்வையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் தான் நாங்கள் கவனம� ��க பார்த்து வருகிறோம். அதனால் தான் ஐ.நா. மன்றத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.

மேலும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க் கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியது. அந்த குழுவினர் அதிபர் ராஜபக்சேயை சந்தித்து தமிழர்களுக்கான மறுவாழ்வுகள் தொடர்பான திட்டங்களை கொடுத்து விட்டு வந்து இருக்கிறார்கள்.

கேள்வி:- புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துமா?

பதில்:- தமிழகத்தை பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க அங்கம் வகிக்கிறது. எனவே தமிழக காங்கிரஸ் தலைவர் இதுபற்றி கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளருக்கு அறிக்கை அனுப்புவார். அதன் பின்னர் தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அகில இந்த ிய பொதுச்செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

கேள்வி:- காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில்:- ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. காங்கிரஸ் அரசு, கூட்டணி கட்சி ஆளும் அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு என்றெல்லாம் நாங்கள் பாகுபாடு பார்ப்பது இல்லை. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதும் இல்லை.

கேள்வி:- நெய்வேலி அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?

பதில்:- என்.எல்.சி சுரங்கத் தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறி இருக்கிறார். எனவே இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின்(ஐ.என்.டி.யூ.சி) 25-வது மாநில மாநாடு நேற்று திருச்சி தேவர் ஹாலில் நடந்தது. மாநாட்டுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ஜி. காளன் தலைமை தாங்கினார்.

மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் கல்யாணராமன் வரவேற்று பேசினார். மாநாட்டை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே. வாசன் தொடங்கி வைத்து பேசினார்.

மாநாட்டில் அகில இந்திய ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சஞ்சீவரெட்டி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஷானிமோள் உஸ்மான், கேரளமாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் சந்திரசேகரன் ஆகியோரும் பேசினார்கள்.  



comments | | Read More...

கருணாநிதி தனி ஈழம் கேட்பதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை: வைகோ தாக்கு




திமுக தலைவர் கருணாநிதி தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை என்று மதிமுக பொதுச் � ��ெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்திய அரசின் துணையுடனேயே இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தது. அப்போது முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி தன் கடைமையைச் செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் தனது உயிரை மாயத்துக் கொண்டபோது அவர் ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. � ��ிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உயிருக்கு போராடியபோது அவரை இறங்கக் கூட விடாமல் சென்னை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டதற்கு கருணாநிதியே காரணம்.

இவ்வாறெல்லாம் செய்துவிட்டு தற்போது மட்டும் தமிழ் ஈழம் வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். முப்படைகளைக் கொண்ட தமிழ் ஈழத்தை அப்போதே பிரபாகரன் உருவாக்கியிருந்தார். உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டியது தான் மீதமிருந்தது. அப்போது அதை மத்திய அரசின் துணையோடு அழித� ��துவிட்டு தனி ஈழம் அமைக்கப்போவதாக கருணாநிதி கூறவது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை என்றார்.



comments | | Read More...

லோக்பால் சட்டத்தால் சிறைகள்தான் நிரம்பும்:அப்துல்கலாம் கருத்து




முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம ் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சிறுவர்-சிறுமிகளுடன் நேற்று உரையாடினர். அப்போது அவர் கூறுகையில்,
 
லோக்பால் சட்டம் தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்பும். அதனால் சிறைகள்தான் நிரம்பும். ஆனால் சிறுவர்களாகிய நீங்கள் உங்களது வீடுகளில் இருந்து ஊழலை ஒழிக்க பாடுபடுங்கள் என்று கூறினார்.
 
மேலும் அவர், என் குடும்பத்தில் யாரும் லஞ்சம் வாங்க� �தவாறு பார்த்து கொள்வேன். அதன் மூலம் ஊழலற்ற குடும்பம், ஊழலற்ற நாடு உருவாக பாடுபடுவேன் என்று அவர் சிறுவர்களை அப்போது உறுதி மொழியும் எடுத்து கொள்ள செய்தார்.




comments | | Read More...

திமுக எடுத்த முடிவு: கவலையில் அதிமுகவினர்!




புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மற்ற கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கும் முன்பே அ.தி.மு.க மட்டும் வேலைகளை தொடங்கி பஞ்சபாண்டவர்களாக 5 அமைச்சர்களை அனுப்பி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.


 இந்த நிலையில் தொகுதியை வைத்திருந்த சி.பி.ஐஇடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து தி.மு.க தலைமையும் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை அறிவிக்க உ� ��்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.




 இந்த போட்டியில்லை என்ற அறிவிப்புகள் அ.தி.மு.க வினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத் தியுள்ளது.

 இது பற்றி அ.தி.மு.க வினர் கூறும் போது,   இடைத்தேர்தல் என்றால் பணத்திற்கு பஞ்சமில்லாத களமாக இருக்கும். ஆளும்கட்சியினருக்கு திருவிழா கொண்டாட்டமாக இருக்கும்.

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் பொதுமக்கள் தெரிந்து கொண்டார்கள். அதே போல புதுக்கோட்டை இடைத் தேர்தலும் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று கட்சிகாரர்கள் பெரும் மகிழ்சியில் இருந்தோம்.


 ஆனால் தொகுதியை வைத்திருந்த சி.பி.ஐ யும் நிற்கவில்லை என்ற அறிவித்தவிட்டது. அடுத்து தி.மு.க வும் இதே நிலை எடுத்தால் எங்கள் இடைத்தேர்தல் திருவிழா கொண்டாட்டம் நடக்காது.

இப்பவே பெரிய கனவுகளோடு தேர்தல் களத்திற்கு தயாராகி விட்டோம்.  ஆனால் இனி எங்க கட்சி மேலிடம் கூட பணம் கொடுக்காதே அப்பறம் எப்படி எங்கள் கனவு நிறைவேறும் என்று கவலையுடன் கூறியதுடன். தி.மு.க போட்டிக்கு வந்தால் நிச்சயம் எங்கள் கனவு நிறைவேறும் என்றும் கூறுகின்றனர ்.



comments | | Read More...

யாழ் மேதின ஊர்வலத்தில் தழிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியுடன் சிலர் ( பரபரப்பு காணொளி



யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற எதிரணியினரின் மேதின ஊர்வலத்தில் தழிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியுடன் சிலர் கலந்துகொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.





மேலும் வாசிக்க »

http://girls-tamil.b logspot.com




comments | | Read More...

நித்யானந்தாவுக்கு ஆதீனங்கள் வைத்த ஆப்பு.....




மதுரை ஆதீனம் அருணகிரிந� �த சுவாமிகள் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்துள்ளார். மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம் ஆகும்.
 
இதில் ஆதீனத்தை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. அதனை மீறி மதுரை ஆதீனம் செயல்பட்டது மற்ற ஆதீனங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.  
 
இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சுவாமிக ள் தலைமையில் இன்று மாலை தருமபுரத்தில் உள்ள ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்களைக் கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இதில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உட்பட மேலும் பல்வேறு சுவாமிகள் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தில், நித்தியானந� �தா விவகாரம் பலத்த எதிர்ப்புகளைக் கிளப்பியது. அப்போது பேசிய பலரும், நித்தியானந்தா நியமனத்தை இன்னும் பத்து தினங்களுக்குள் மறுபரிசீலனை செய்து மதுரை ஆதினம் அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லை என்றால், இது தொடர்பாக அனைத்து ஆதீனங்களும் சேர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்வோம். இது தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வலியுறுத்துவோம் என்று இந்தக� � கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



comments | | Read More...

தூங்கிய பெண்ணிடம் கணவர் போல படுத்து உல்லாசம்




சங்கரன்கோவில் அருகே உள்ள திருவே� ��்கடத்தை அடுத்த அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது41). கடந்த 22-ந்தேதி இரவு மாரியப்பனும், ராம லட்சுமியும் அருகருகே படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.
 
அப்போது பின் பக்க கதவு திறந்து இருந்ததால், பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் செல்வராஜ் நைசாக உள்ளே நுழைந்தார். மாரியப்பனின் அருகே படுத்திருந்த ராமலட்சும ியை பார்த்தும் செல்வராஜுக்கு சபலம் ஏற்பட்டது. அவரும் ராமலட்சுமியின் கணவர் போல அருகில் படுத்து ராமலட்சுமியை கட்டி பிடித்து உல்லாசம் அனுபவிக்க தொடங்கினார்.
 
தூக்க கலக்கத்தில் இருந்த ராமலட்சுமி இருட்டில் முகத்தை சரியாக கவனிக்காமல் கணவர் தானே என்று விட்டு விட்டார். திடீர் என்று சினிமா படத்தில் நகைச்சுவை காட்சியில் வருவது போல, அவரத� � கணவர் திரும்பி படுத்து தனது கையை மனைவி மீது போட்டுள்ளார். அப்போது தான் அவரது மனைவி கூடுதலாக ஒரு "கை" எங்கிருந்து வருகிறது என்று பார்த்த போது அருகில் கணவர் படுத்து தூங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது.
 
உடனடியாக ராமலட்சுமி அலறி அடித்து எழுந்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் வெளியே ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து ராமலட்சுமி திர ுவேங்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வராஜை தேடி வருகிறார்கள்.
 



comments | | Read More...

நான் ரசித்த சிரிப்புக்கள் 10



நான் ரசித்த சிரிப்புக்கள் 10


தலைவருக்கு என்ன திடீர்னு தமிழ்மேல பற்று ? செல்போனை கைபேசின்னு தூய தமிழ்ல சொல்லுறாரு?
 செல்லுன்னா அவருக்கு ஜெயில் ஞாபகம் வருதாம்!
                  &n bsp;       வி.சகிதா முருகன்.

திருட்டுப் பணத்தை செலவழிச்சு கபாலி வீடு கட்டறானாமே?
  ஆமா அது அவனோட களவு வீடு!
           &nbs p;              கவின்

அந்த நர்ஸ் என்மேல உயிரையே வச்சிருக்காங்க டாக்டர்!
எப்படி சொல்றீங்க?
ஆபரேஷணுக்கு சம்மதிக்க வேணாம்னு அட்வைஸ் � ��ண்ணினாங்களே!
                            பி,ஜி.பி இசக்கி.

அவர் மனைவியாலே அதிகம் பாதிக்கப்பட்டவர் போலிருக்கு!
எப� �படி சொல்றே?
வாய்ப்பூட்டு கிடைக்குமான்னு கேட்டு வந்திருக்காரே!
                            பெ.பாண்டியன்.
மன்னரை வெயிட் தூக்கக்கூடாதுன்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க!
சரி அதுக்காக வாளுக்கு பதில் இடுப்புல பிளேடு கட்டி தொங்க விட்டா எப்படி?
                               எஸ் பிரேமா.

தலைவருக்கு அடுத்த வருஷம் டாக்டர் பட்டம் தரப்போறாங்களாம்!
அதனால!
இந்தவருஷம் தன்பெயருக்கு முன்னால ஹவுஸ் சர்ஜன்னு போட்டுக்கலாமான்னு கேக்கிறாரு!
                           இளங்கோ

நம்ம மன்னர் வித்தியாசமானவர்னு எதை வச்சி சொல்ற?
போர்க்களத்தில் 'கல்'லைக் கவ்விகிட்டு வந்திருக்கிறாரே!
                                 சண்முகி

என்ன சிஸ்டர் இது! ட்ரீட்மெண்ட் பீஸோட எஜுகேஷன் பீஸ்னு இருநூறு ரூபாய் சேர்த்து போட்டிருக்கீங்க?
 டாக்டர் எம்.பி.பி.எஸ் படிக்கிறார் இல்லையா?
                        வெ.ராஜா ராமன்
தலைவர் போதையில பேசுறார்னு எதை வச்சு சொல்ற?
நாட்கள் எண்ணிக� ��கை குறைவா இருக்குற பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கனும்னு சொல்றாரே!
                           அ. பேச்சியப்பன்.
 
டாக்டர் உங்க முதல் ஆபரேஷன் அனுபவத்தை சொல்லுங்களேன்!
  கொன்னுபுட்டேன்ல!
                      &nb sp;   தீ.அசோகன்.

முன்னாள் மின் துறை அமைச்சருக்கு இப்ப எதுக்கு பாராட்டுவிழா நடத்துறாங்க?
  அவரோட அருமை இப்பத்தானே தெரியுது!
      &n bsp;             கே.சி கோவிந்தராஜன்.

தலைவருக்கு புத்தி பிசகிடுச்சு!
 என்ன நடந்துச்சு!
தேர்தல்ல தோத்த கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் மானியம் தரணும்கிறாரே!
                    அம்பை தேவா.
நன்றி வாரமலர், ஆனந்த விகடன் வார இதழ்கள்!



http://meena-tamilsexstory.blogspot.com




comments | | Read More...

தீராத விளையாட்டு பிள்ளை பிரபு தேவா! சோனாக்ஷி சின்ஹாவுடன் காதலா?



தீராத விளையாட்டு பிள்ளை  பிரபுதேவா!

தமிழ் திரையுலகில் ப்ளே பாயாக வலம் வருகிறார் பிரபுதேவா! டான்ஸ்மாஸ்டராக இருந்த போதே ரம்லத்தை பெற்றோரின் எதிர்ப்பை மீறி கைப்பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார். அதற்குள் காதல் கசந்தது. போக்கிரி படம் மூலம் நயன் தாராவை நட்பு ஏற்படுத்திக் கொண்ட அவர் கல்யாணம் வரை சென்று ரம்லத ்திற்கு விவாகரத்தும் கொடுத்தார்.
     இடையில் அதிலும் சிக்கல்! பிரபு தேவாவின் பிள்ளை பாசம் நயன் தாராவிற்கு பிடிக்காமல் போனதால் பச்சை குத்திக் கொண்டதோடு போதும் என்று கழற்றிவிட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
     இதனிடையில்  ஹன்சிகாவுடன் காதல் என்று கிசு கிசு கிளம்ப � �ந்த குண்டு பெண்ணோ பிரபு தேவா எனது அண்ணா மாதிரி என்று எஸ்கேப் ஆகியது. அதன் பின்னரும் பிரபு தேவா அடங்கவில்லை. த்ரிஷாவுடன் நள்ளிரவு பார்ட்டியில் நடனமாடி பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டார். தீராத விளையாட்டு பிள்ளையாகஇப்போது பாலிவுட்டில் பிரபு தேவா கலக்குகிறார். இவர் இயக்கிய ரவுடிராதோர் என்ற படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹாவிற்கும் இவருக்கும் காதல் என்று புதிய வதந்த ி பரவி உள்ளது.
       அதற்கேற்றார்போல இவருடன்  ஐ.பி.எல் மேட்ச் பார்க்க பெங்களூரு வந்தார் சோனாக்ஷி. அன்று சென்னை- பெங்களூரு மேட்ச் மழையால் கேன்சலாக மீடியாக்களின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பியது. அவ்வளவு நெருக்கமாக இருவரும் காட்சி அளித்தனர்.
   சோனாக்ஷி வேறு யாருமல்ல! சத்ருகன ் சின்ஹாவின் மகள்!  மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர்களை ஒன்றாக காண முடிகிறதாம். மும்பை மீடியாக்கள் கதை கதையாய் கதைக்கின்றன. எதற்கும் ஒரு மச்சம் வேணுமடா சாமி!


தகவல் உதவி!  தட்ஸ் தமிழ்!

தங்கள் வர ுகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


http://meena-tamilsexstory.blogspot.com




comments | | Read More...

மே தின ஹைக்கூக்கள்!



மே தின ஹைக்கூக்கள்!
 
உப்பு கொட்ட கொட்ட
இனிக்கிறது
உழைப்பு!

அழுக்கான சட்டைகள்
இழுக்கல்ல
உழைப்பின் அடையாளம்!

சிந்த சிந்ததான்
செல்வம் சேருகிறது
வியர்வை!

தேயத்தேய
வளர்கிறது வருமானம்< /b>
இயந்திரம்!

உழைப்பாளிகளை
சோம்பேறிகளாக்கியது
சிறப்புத் திரைப்படங்கள்!

சிம்மாசனத்தில்
ஏற்றிவைக்கும்
சிறந்த உழைப்பு!

களைப்பில்லா
உழைப்பு
தந்திடும் இனிப்பு!

உழைப்பவன்பெருமை
உரைக்கும் தினம்
மேதினம்!
 
தங்கள் வருகைக்கு நன்றி கருத்த� ��க்களை பகிரலாமே!




http://meena-tamilsexstory.blogspot.com




comments | | Read More...

ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் 'மிரட்டல்' வந்தது!- பிரசன்னா




கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டனர், நடிகை ஸ்னேகாவும் நடிகர் பிரசன்னாவும். ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்து, விவிஐபிக்களை அழைத்து ஓய்ந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இருவரும் சந்தித்துக் கொண்டது, காதல் வளர்த்தது, பெற்றோரின் சம்மதத்துக்குக் க� �த்திருந்தது, சாதிகளை மீறி திருமணத்துக்கு சம்மதம் வாங்கியது என இத்தனை நாட்களும் மீடியாவில் அரைபட்ட செய்திகள் கேள்விகள், பதில்களாக ஓடிக் கொண்டிருந்தன...

பிரசன்னா, ஸ்னேகா திருமணம் வருகிற 11ம் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள� ��ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது.

தம்பதிகளாகப் போகும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தோம். வாய் நிறைந்த புன்னகையுடன் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தனர் இருவரும்.

அவர்களின் திருமணத் திட்டங்கள், திருமணத்துக்குப் பிந்தைய திட்டங்கள் குறித்து நம்மிடம் கூறியதாவது:

இந்தத் திருமணத்தை பிரசன்னாதான் முதலில் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு நீங்கள் எதுவுமே சொல்லாமல் அமைதி காத்தீர்களே?

ஸ்னேகா: இருவரும் சேர்ந்து அறிவிக்கத் திட்டமிட்டிருந்தோம். அது கொஞ்சம் முன்கூட்டியே வந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு நானே ஒரு பேட்டியில் சொல்லிவிட்டேனே.

உண்மையை சொல்லுங்கள். நீங்கள் எத்தனை வருடங்களாக காதலித்தீர்கள்? அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பிருந்தே காதலா?

பிரசன்னா: அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பு அவரைப் பிடிக்கும். அந்தப் படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்களாகக் காதலித்தோம். எங்கள் 2 பேரின் வீட்டிலும் சம்மதித்தபிறகுதான், காதல் பற்றி வெளியில் சொல்ல ஆரம்பித்தோம்.

பிரசன்னாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

ஸ்னேகா: அவரது உண்மையான காதல். அந்தக் காதலை எப்போதும் ஒரே மாதிரி அவர் கொண்டாடும் விதம். எனக்கு மிகப் பொருத்தமான இணை அவர் என முடிவு செய்த பிறகே காதலை ஒப்புக் கொண்டேன்.

மாமனார் மாமியார் பற்றி...

ஸ்னேகா: அதை கண்டிப்பாக நான் சொல்லியாக வேண்டும். எனக்கு மாமனார்-மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே பிரசன்னாவின் பெற்றோர் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் ஆறு மாத காலம் தனிக்குடித்தனம் இருக்கிறோம். பின்னர் அனைவரும் ‌ஒரே குடும்பத்தில் சேர்ந்து இருப்போம்.

எதிர்காலத் திட்டங்கள்...

ஸ்னேகா: என்ன திட்டம்... ஓ குழந்தைகள் பற்றியா... அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. கொஞ்சம் ரிலாக்ஸ்டாகத்தான் அதை முடிவு செய்வோம். நிறைய கமிட்மென்ட்ஸ் உள்ளன. எல்லாவற்றையும் முடித்த பிறகே குழந்தைகள்.

ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் உங்களுக்கு மிரட்டல் வந்ததாமே...

பிரசன்னா: அட ஆமாங்க. ட்விட்டர் வலைதளத்தில் சிலர் எங்கள் புன்னகை அரசியையா கல்யாணம் செய்ய போகிறாய் என்று மிரட்டினர். ஆனால் அந்த மிரட்டலை நான் புன்னகையோடு வரவேற்கிறேன். அவர்களுக்கு நான் சொல்வது, திருமணத்திற்கு பிறகும் ஸ்னேகாவை புன்னகை அரசியாகவே பார்த்துக் கொள்வ� �ன் என்றார்.

பின்னர், "எல்லாரும் திருமணத்துக்கு தவறாம வந்துடுங்க, வாழ்த்துங்க", என்றனர் இருவரும்.



comments | | Read More...

மனிதர்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு




விண்வெளியில் நட்சத்திர ங்களை போன்று ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவை பூமியை போன்ற அமைப்பும் தோற்றமும் இருப்பதாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி விஞ்ஞானி ஆதித்யா சோப்ரா குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
 
அப்போது பூமியை போன்றுள்ள அந்த கிரகங்கள் மனிதர்கள் வாழ தகுதியுள்ளவையாக இருக்கின்றன. அங்கு த� �ரவ நிலையில் தண்ணீர் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை போன்றவை இருப்பது தெரிய வந்துள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கிரகங்களில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 



comments | | Read More...

சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும். 8



பாகம் 8

வினோத்குமாரின் கேள்வி:
 சூரியனுடன் இனைந்து இயங்கினாலும்,சனி புதன் சேர்ந்து சாதகரின் 7ம் வீட்டில் இருந்தா சாதகருக்கு அலி தன்மையை கொடுக்கும்னு படிச்சு இருக்கேன், இயல்பில் புதன் அலி கிரகம் தானே. அப்படி பார்த்தால் அலி தன்மை திருமண பொருத்தத்தில் தவிர்க்க முடியாத இடம் பெறும் அல்லவா?.

 பதில்:
உண்மையில் சனிக்கிரகமும் அ லிக் கிரகம்தான். இதில் புதன் உப்புக்கு சப்பாணிதான். இதில் ஒரு விஷயம் ஏற்கனவே கூறியுள்ளேன் புதன் எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதன் குணங்களைதான் இதுவும் கொடுக்கும். ஒரு வேளை ஆதலால்தான் இந்த டபுள் இம்பாக்ட் ஆக இருக்கலாம். ஆனாலும் அலித்தன்மையை இந்த ஒரு கட்டத்தின் நிலைமைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கமுடியாது


வினோத்குமாரின் கேள்வி:
ஆட்டத்த ில் மிக முக்கியமான காய்கள் சிப்பாய்கள் .. நான் சிப்பாய்கள் தான் சனியா என கேட்டதற்கு காரணம், மெதுவாக ஆனால் வலுவாக நகரும்.எட்டாம் வீட்டை அடைந்தால் மிக வலுவான மந்திரியாக உருவெடுத்து , எதிராளிக்கு மரணம் தரும் . என்றெல்லம் இருப்பதால்தான். நீங்கள் சனியை யானையாக உருவகப படுத்தியது தவறுதானே?.

 பதில்:
 ஜோதிடத்தைப் பொறுத்த வரை கோச்சாரத்திலும், இலக்கினத்திலும் முக்கி� � பங்காற்றுவது சனிதான். கோச்சாரத்தில் ஏழரைச்சனி என்று பெயர் பெற்றவனை, ஆயுளுக்கு காரணமானவனை, சனியன் என்று அன்றாட வாழ்வில் பெயர் எடுத்தவனை, சதுரங்கத்தில் முக்கியமான ஆளாகக் கருதிச் சேர்க்கவில்லை என்றால் சதுரங்கம் முழுமை அடையாது. ஆகவேதான் சனி சிப்பாய் அல்ல என்றேன். நீங்கள் கூறுவது போல் செஸ்ஸில் சிப்பாய்க்கு அவ்வளவு மதிப்பு கிடையாது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் பொதுவாக � ��ிப்பாய்கள்தான் எளிதாகப் பலி கொடுக்கப் படுகிறார்கள்.

அதுமில்லாமல் சிப்பாய்க்கு எண்மதிப்பு ஒன்றுதான். ஆனால் யானைக்கோ மதிப்பு ஐந்து. தளபதிக்கு(9) அடுத்த மதிப்பு யானைக்குத்தான்(5). ஆகவேதான் ஆயுள்காரகனாகிய சனீஸ்வரனுக்கு யானையின் சிறப்பிடம் வழங்கப் பட்டுள்ளது.. சிப்பாய்க்கு தகுந்த ஆட்கள் இருக்கிறார்கள் பின்னர் விளக்கம் தருகிறேன்.

வினோத்குமாரின் கே� ��்வி: 
சூரியன் ஆண்டுக்கு ஒரு சுற்று என்பதால் ராஜா ஒரு முவ் என்றால் . ராஜா, சிப்பாய், குதிரை தவிர மற்றதெல்லாம் அளவில்லாத முவ் தானே இது எப்படி ?.
பதில்:
சனியின் சுழற்சி காலம் 30 வருடங்கள். இவையெல்லாம் எட்டு கட்டங்களுக்கும் அதிகமாக இருப்பதால் எல்லை வரை செல்கின்றன. செவ்வாய் 4 வருடங்கள் என்பதால் அதன் இயக்கம் நான்கு கட்டங்களுக்குள் அமைந்து விடுகிறது. சுக்கிரனின் சுழற் சிக்காலம் ஒரு வருடமாக இருந்தாலும் அதனுடைய இயக்கம் பிற்காலத்தில் மாற்றப் பட்டிருக்கும்.

கேள்வி: 
உங்கள் கூற்றுப் படி ஜோதிடத்தில் திருமணத்திற்கு காரகன் எது? அது சதுரங்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது.?.

பதில்:
 திருமண பொறுப்பாளன் அல்லது களஸ்திர காரகனான சுக்கிரனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எப்படி திருமணப் பொருத்தம் பார்க்க முடிய� �ம். பையன்கள் யாராவது அழகான பெண்களுடன் பழகுவதைப் பார்த்துவிட்டால் போதும், உனக்கென்னடா சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் என்பார்கள். பெண்கள் சம்பந்தப் பட்ட விஷயம் என்றால் சுக்கிரனுக்குப் பங்குண்டு. சுக்கிரன் தனது ஆட்சி வீடுகளில் ராஜாவுக்கும், மந்திரிக்கும் இடத்திலும், வலத்திலும் (ரிஷபமும், துலாமும்) மதகுருவாக உட்கார்ந்து சண்டையில் உதவியாக இருக்கிறார். சூரிய சந் திரர்களுக்கு அடுத்த இடம் கொடுக்கப் பட்டதில் இருந்து அவரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ளலாம். (புராணங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் யுத்தத்தில் சுக்கிராச்சாரியார் என்பவர் அசுர குருவாக இருந்து அசுரர்களுக்கு துணையாக இருப்பார்..)

கேள்வி: 
அது சரி மற்ற காய்களுக்கும் கிரகங்களுக்கும் எப்படி ஒப்பிடுவீர்கள்?.
பதில்:
புதன் கணக்கி� �் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஏனெனில் அது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், அதனுடைய சுழற்சிக் காலமாகிய 88 நாட்களும், அதனுடைய உருவ அமைப்பும் காரணமாகும் அடிக்கடி அஸ்தங்கத்தில் மாட்டிக் கொள்வதாலும், வக்கிரத்தில் சஞ்சரிப்பதாலும், சமயத்தில் மறைவிடத்தில் (12ஆம் இடம்) வருவதாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது புதன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. இனி யுத்தத்� �ிற்கு தேவையானவர்கள் எல்லாம் சண்டைக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும். அதிலும் ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்தான் சண்டையில் ஜெயிக்க முடியும். ஜாதகத்தில் அந்த மாதிரி பாபர்கள் லிஸ்ட்டில் உள்ளவர்கள் தான் செவ்வாயும், சனியும்.

செவ்வாய்: 
திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்தான் மிக முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. பெண் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். அதுமட்டுமில்லாமல் பெண் ஜாதகத்தில் சூரியனோடு செவ்வாய் ,சனி ஆகியவை எந்தக் கட்டத்திலும் சேர்ந்து இருந்தால், அதற்கு தகுந்த கணவனை தேட வேண்டுமாம். அதாவது அந்த செஸ் போர்டில் ராஜா, குதிரை, யானை இருந்தால் விளையாடும் போது கவனம் தேவை, இல்லாவிட்டால் எளிதில் தோற்று விடுவீர்கள். செவ்வாயின் நிறம் சிவப்பு அதனால் குதிரையாக கற்பிதம் செய்த� �ு நூற்றுக்கு நூறு சரி. அதிலும் அதன் தோஷ இடங்கள் ஆகிய 2,4,7,8,12 என்னும் ஐந்து இடங்கள் குதிரையின் இயக்கத்திற்கு ஒத்து வருகிறது. ஆகவே செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளில் (மேஷ, விருச்சிக) ராஜா, மந்திரி, குரு ஆகியோருக்கு இடமும் வலமும் நின்று யுத்தத்தில் கலந்து கொள்கிறது. அதன் சுழற்சி வருடங்கள் நான்கு, அது போல் அது செல்லும் கட்டங்களும் நான்கு.

வியாழன்: 
வியாழன் திரும� � பொருத்தங்களில் அவ்வளவாக கணக்கில் கொள்ளப் படுவதில்லை. ஏனெனில் அவர் ஒருவகையில் சகலத்துக்கும் பொறுப்பானவராகுகிறார். ஆதலால் திருமணத்தில் அவரது பார்வை மட்டுமே கணக்கிடப் படுகிறது. அதைத்தான் "வியாழ நோக்கம்" என்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு பின் ஏற்படும் குழந்தை பாக்கியத்திற்கு அவர் காரகனாக இருக்கலாம் ஆனால் திருமணம் ஆகிய பொருத்தத்தில் (யுத்தத்தில்) அவருக்கு வே லை இல்லை. அதிலும் இவர் "ரொம்ப நல்லவர்" ஆதலால் இவர் "அதுக்கு சரிப்பட மாட்டார்" ஆதலால் மீனமும், தணுசும் கணக்கில் வரவில்லை. பார்வையோடு சரி.


சனி: 
திருமண பொருத்தம் பார்ப்பதெல்லாம் அ� �்புறம், முதலில் ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் பார்க்க வேண்டிய விஷயம் ஆயுள்.
ஜோதிடர்களே! முதலில் ஜாதகத்தை எடுத்தவுடன் ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள் காரகன் (சனி), ஆயுள் ஸ்தானாதிபதி, லக்னாதிபதி ஆகியோரைப் பார்த்து அதன் பலம் பலவீனத்தை கணித்து மனதில் வைத்து அதன்படி சொல்லுங்கள். அதைப் பார்க்காமல் தான் சிலபேர், ஒரு திரைப்படத்தில் சார்லி பலன் சொல்லி அடி வாங்கியதைப் போல் வாங் குகிறார்கள்.

ஆயுளுக்கு காரகன் (பொறுப்பேற்பவன்) சனிதான். சுபாவத்தில் கெட்டவன். சண்டைக்கு உகந்தவன், பாபி. இவருக்கு மந்தன், காரி, ஈஸ்வரன் என்றெல்லாம் பேருண்டு. வான வெளியில் பெரிய கிரகமாகவும் கடைசி கிரகமாகவும் உள்ளவர். (செஸ் போர்டிலும் கடைசியாக உள்ளது) கரிய நிறத்தவன், உருவத்தில் பெரியவன். இந்த இரண்டு குணாதிசயங்கள் உள்ள ஒரே ஒரு மிருகம் யானைதான். அதனால்தான் சனிக்கு ய ானையை உருவகப் படுத்தி ஆட்டத்தில் நிற்க வைத்து விட்டனர். இதை யாராலும் மறுக்க முடியாது. இவர் சூரிய சந்திரர்களுக்கு இடமும் வலமும் கடைசியில், தனது ஆட்சி (கும்பம், மகரம்) வீடுகளில் அமர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்கிறார்ர்ர். (அவன், இவன் என்று சொல்லி அனாவசியமாக கோபத்தை கிளறக் கூடாது பாருங்கள்). அதனுடைய இயக்கமும் யானையைப் போல் மெதுவாக, ஸ்டெடியாக இருக்கிறது. இரு ஜோதிடக் கட ்டங்களை  கும்பம், மகரம் ஆகிய இரு ராசிகளுக்கும் இடையில் பிரித்து ஒரு நேர் கோட்டில் அமைத்து அப்படியே எதிரெதிர்த் திசையில் நேராக அடுக்கினால் செஸ் போர்டுதான்.


                         


கேள்வி: 
 சூரிய,சந்திரர்களையும் கிரகங்களையும் அதன் ஆட்சி வீடுகளையும் செஸ்ஸில் ராஜா, மந்திரி(க்யூன்), குரு(பிஷப்) நைட்(குதிரை), ரூக் (யானை) ஆகியோருக்கும் அவரது இருப்பிடங்களுக்கும் ஏறத்தாழ சரியாக ஒப்பிட்டு சொல்லிவிட்டீர்கள். இந்த சிப்பாய்களுக்கு எங்கிருந்து, யாரை அழைத்து வந்து ஒப்பிடப் போகிறீர்கள்?.

 பதில்:
அவர்களும் ஜோ திடத்தில் தான் உள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் உபகிரகம் (பான்) என்கிற அமைப்பு உண்டு. அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. ஒரு வேளை வால் நட்சத்திரங்களாக இருக்கலாம். "உபகிரகம்" என்கிற வெறும் வார்த்தை பிரயோகத்தை வைத்துக் கொண்டு விவாதத்திற்கு வராதீர்கள், ஏனென்றால் "உபகிரகம்" என்பது இவர்கள் வசதிக்கு ஏற்படுத்திய வார்த்தை.

சூரியனுக்கு காலன்,
 ச� �்திரனுக்கு பரிவேடன்,
புதனுக்கு அர்த்தப்பிரகரணன்
சுக்கிரனுக்கு இந்திரதணுசு,
செவ்வாய்க்கு தூமன்,
குருவுக்கு எமகண்டன்
சனிக்கு குளிகன்

ஆகியோர்தான் சிப்பாய்கள். அவர்களுக்கு அதிக வலிமை இல்லைதான், ஆனால் அவர்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு சென்றால்தான் வில்லங்கம். மரணத்தையோ மரணத்திற்கு ஒப்பான கண்டத்தையோ கொடுப்பார்கள் என்பது ஜோதிடத்� �ின் பாலபாடம். இந்த சிப்பாய்கள் எதிரியின் கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் அதாவது (எட்டாம் இடத்திற்கு வந்துவிட்டால்) அவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) உண்டு. அது போல் செஸ்ஸில் பான் எட்டாம் இடத்திற்கு சென்றுவிட்டால் மந்திரியின் அதிகாரம் தரப்படும். ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் மாந்தி எனப்படும் குளிகன் அமர்ந்தால் அதுவும் தோஷமாக கருதப்படும்.ஆகவே சிப்பாய்களின் இருப்பிடம� �� நியாயப் படுத்தப் பட்டது.

கேள்வி: 
விளையாட்டின் முடிவிற்கும், திருமணப் பொருத்தத்திற்கும் எப்படி முடிச்சுப் போடுவீர்கள்?.

பதில்:
வெள்ளைக்காய் ஆணாகவும், கறுப்புக்காய் பெண்ணாகவும் உருவகப் படுத்திக் கொண்டு விளையாடும் போது, முதல் நகர்த்தலில் வெள்ளைக்காய்க்கு முன்னுரிமை கொடுத்து விளையாட்டு டிராவில் முடிந்தாலும், வெள்ளைக்காய் ஜெயித்தாலும் இர ு ஜாதங்களும் சேரும் என்பதுதான் முடிவு. வெள்ளைக்காய் தோற்றால் அது பொருந்தாது. அதாவது மனை என்னும் குடும்பத்தில் பெண்ணின் கை ஓங்கியிருந்தால் அது சரியான குடும்ப அமைப்பாக இருக்காது என்பது ஜாதகம் கண்டு பிடித்த காலத்தில் ஏற்பட்ட மரபு. அந்தக் கால சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டால் இதில் ஆணாதிக்கமோ என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி: 
சதுரங்கத்தில் உள்ள க� ��ஸ்லிங்க் (castling) என்பதற்கு ஜோதிட விளக்கம் என்ன?
பதில்:
தர்ம கர்மாதி யோகம் என்பதைப் பற்றி 1665 இல் இயற்றப் பட்ட "ஜாதக அலங்காரம்" கூறுவதைப் பார்ப்போம்.

மாதேகே டன்மயோக வகைகன்ம மன்னனோடு
தாதையுங்கூடி எந்தத் தலத்தினிருந்த போதும்
ஓதிய ஒருவர் வீட்டில் ஒருவர் மாறாயிருந்த
போது மாறாத செல்வம் பொருந்திடும் ராஜயோகம்.

அதாவது 9ஆம் 10 ஆம் அதிபதிகள் இணைந்து எங்கிருந்தாலு ம் அல்லது ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருந்தாலும், அச்சாதகன் குறைவிலாத நல்லவழியில் ஈட்டிய செல்வத்தைப் பெற்று இராஜ யோகத்தோடு வாழ்வான். இதைத்தான் பரிவர்த்தனை யோகம் எனவும் சொல்வர். பரிவர்த்தனை என்றால் (இடத்தை) கொடுத்து வாங்குதல் எனப்படும்.

மேலும்  இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றிக் கொள்வதை பரிவர்த்தனை யோகம் என்பார்கள்.அதாவது 1,2,9,10,11 க்குடையவர்கள் தங்கள் இர� �சி வீடுகளை பரிவர்த்தனை செய்து கொள்வதாகும். உதாரணமாக சூரியனின் ஆட்சி வீட்டில் சனியும், சனியினது ஆட்சி வீட்டில் சூரியனும் இருந்தால் அது பரிவர்த்தனை யோகம் எனப் படும். இதனால் அதிகப் பலம் பெறுவார்கள். யோக ஜாதகம் என்பர். செஸ்ஸில் யோகம் என்பது வெற்றிக்கான வாய்ப்புகளென்றுதான் அர்த்தம். அந்த வகையிலான ஒரு நகர்த்தலாக இருக்கும்.

மேற்க் கூறிய விளக்கங்களால் இந்தியாவின் சதுரங்கம்தான் இன்று உலகெங்கும் விளையாடப் படுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் சதுரங்கத்தின் தோற்றுவாய் ஜோதிடம்தான் என்பதும், அந்த ஜோதிடத்தை உலகிற்கே அளித்தது இந்தியாதான் என்பதும் உறுதி செய்யப் படுகிறது.

தொடர் முற்றும்.

நன்றி.

இரா. சந்திரசேகர்,
பழனி.


http ://mobilesexpicture.blogspot.com




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger