News Update :
Powered by Blogger.

எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் தெண்டுல்கருக்கு பாரத ரத்னாவிருது கொடுத்து இருக்கலாம்: அன்னாஹசாரே

Penulis : karthik on Wednesday 2 May 2012 | 23:48

Wednesday 2 May 2012



 பிரபல காந்தியவாதி அன்னாஹசாரே ஊழலை ஒழிக்க வலுவான லோக் ஆயுக்தா சட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். மக்களிடம் லோக் ஆயுக்தா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் மராட்டிய மாநிலத� ��தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அந்த பயணத்துக்கிடையே அவுரங்கா பாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- 

தெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்திருப்பதாக தகவல் வெளியானதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மத்திய அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

தெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் நம்ப முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்தவர். அவரை உரிய முறையில் கவுரவப்படுத்த வேண்டும். பாராளுமன்ற மேல்- சபை எம்.பி. பதவி அவருக்கு தேவை இல்லை. 

தெண்டுல்கருக்கு எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவித்து இருக்கலாம். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். தெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியான போது நான் எந்த அளவுக்கு கு� ��ப்பம் அடைந்தேனோ, அதே மாதிரி ஏராளமானவர்கள் குழம்பி போனார்கள். பதவி கொடுப்பதை விட விருது கொடுப்பதுதான் தெண்டுல்கருக்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.



comments | | Read More...

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு




புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அ� �ிவித்திருந்தது.

அதிமுக மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளராக கார்த்திக் தொண்டமானையும் களமிறக்கி அமைச்சர்கள் படை கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்று சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மே 17-ந் தேதிதான் திமுக நிலை அறிவிக்கப்படும் என்� �ு கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் தேதியை தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் தீர்மானித்திருப்பதால் யார் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என்ற நிலையில் திமுக தேர்த லை புறக்கணிப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களையும் அதிமுக புறக்கணித்திருந்தது. அண்மையில் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக டெபாசிட்டையே பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

ஜீவா நடித்த 'கோ' படத்துக்கு விருது




கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா, கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து கடந்தாண்டு வெளியாடன சூப்பர் ஹிட் படம் 'கோ'. பத்திரிகை துறையில் இருக்கும் ஒருவர் நினைத்தால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாகிரெட்டி அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டிற்க� �ன விருதுகளில் 'கோ' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படப்பிரிவில் 'கோ' தேர்வு செய்யப்பட்டு நாகிரெட்ட� � விருது வழங்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகியோர் ரூ. 1 1/2 லட்சம் காசோலை பெற்றனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் கே.வி.ஆனந்த், கவிஞர் வைரமுத்து பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன், நடிகர் பிரபு, நடிகை நதியா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், வெங்கட்ராமரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.



comments | | Read More...

ஒசாமா கொல்லப்பட்ட இடத்தில் அதிசய நீரூற்று?!?




அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் நரகத்தில் இருந்து டுவிட்டரில் செய்தி மேல் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... எல்லாம் ஒசாமா பெயரில் வெளியிடப்படும் டுவிட்டர்கள்தான்.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகி விட்டது. அவர் கொல்லப்பட்ட உடனேயே பல டுவிட்டர் அக்கௌண்டுகள் அவரது பெயரில் போலியாக துவங்கப்பட்டன. அவற்றில் இருந்து ஒசாமா பேசுவது போன்ற பல தகவல் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

ஒசாமா பெயரில் வலம் வரும் டுவிட்டர் கூத்துகளிலிருந்து சில துளிகள்...

- என் மனைவி ஏபிசி நியூஸிடம் பேசுகிறார். அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கலாமா என்று என்னிடம் அனுமதி கேட்டதைவிட இது அவமதிக்கும் செயலாகும்.

- ஹாட் சாக்கலேட் குடிப்பது ஹராமாகும்.

- நான் இறந்தது போன்று பொய்யான தகவல் பரப்பியுள்ளேன். ஆனால் நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். தற்போது உலகை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யார் கண்டது நான் உங்கள் ஊருக்கு கூட வரலாம். அருகில் உள்ள அல் கொய்தா கிளையைத் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொ ள்ளுங்கள்.

- நான் அல் கொய்தா தலைவராக இருந்தேன். தற்போது உயிருடன் இல்லை. என்னை நரகத்தில் வந்து பார்க்கலாம். நான் தான் தலைசிறந்த தீவிரவாதியாக இருந்தேன். கண்ணாமூச்சி ஆட்டத்தில் நான் தான் பெஸ்ட்.

- நான் இறந்திருக்கலாம் ஆனால் வாழ்க்கை தொடரத் தான் செய்யும். உலகில் 71 சதவீதம் கடல். அதனால் நான் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

- இதென்ன மே 1ல் ஒபாமா சர்பிரைஸ் விசிட்?

இதற்கெல்லாம் மேலாக ஒரு டுபாக்கூர் வெப்சைட் ஒசாமாவின் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதில் ஒசாமா அளித்த பேட்டி வருமாறு,

சொர்க்கத்தில் மட்டன் டிக்கா மசாலா கூட கிடைக்காததால் அங்குள்ளவர்கள் நரகத்திற்கு வர விரும்புகிறார்கள். நரகம் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. இங்கு உள்ள ஸ்டாலின், ஹிட்லர் என� �ு நண்பர்கள்.

நான் பூமியில் இருக்கும்போதே ஸ்டாலினை சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடால்ப் ஹிட்லரும் நல்லவர் தான் ஆனால் கொஞ்சம் வளைந்து கொடுக்காதவர் என்றார்.

பின் லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் அவர் கொல்லப்பட்ட அப்போத்தாபாத் வீட்டிற்கு விசிட் அடித்தனர். மேலும் அந்த இடத்தில் மோட்டார் இன்றி நீரூற்று போல் தண்ணீர் வருகிறது என்றும் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.< /div>

நீரூற்றுக்கு உடைந்த பைப் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டதால் தான் ஊற்று வந்துள்ளது என்று பலர் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர்: லாலு



ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அன்னா ஹசாரே குழுவை தொடர்ந்து பிரபல யோகா குரு பாபா ராம்தேவும் எம்.பிக்களை தாக்கி பேச தொடங்கியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான யாத்திரையை சத்தீஸ்கரில் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் எம்.பிக்களில் பலர் பணத்திற்கு அடிமைகளாக இருப்பதாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், கொள்ளையர்களாகவும், கொலையாளிகளாகவும் இருக்கிறார்கள் என்று கூறினார். 

மேலும், பாராளுமன்றத்தை காப்பாற்ற ஊழல் செய்பவர்களை பாராளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் குறித்தும் தொழிலாளர்கள் குறித்தும் அவர்களுக்கு எந்த கவலையும், அக்கறையும் இல்லை எனவும் குற்றம் சாட்டினார். 

இதற� ��கு பல அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 

பிறரை குறித்து விமர்சிப்பதில் எப்போதும் தனி வழியை பின்பற்றும் அவர் கூறுகையில்: இவ்வாறு பேசுபவர்கள் மன நிலை குலைந்தவர்களாக த்தான் இருப்பர். ராம்தேவும் மனநிலை குலைந்தவரே. அவர் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.





comments | | Read More...

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு




தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கி, மார்ச் 30ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 1,874 மையங்களில், 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். த� ��ித் தேர்வர்களாக 61 ஆயிரத்து 319 பேர் பங்கேற்றனர்.

மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிவடைந்துள்ள நிலையில், இம்மாதம் 22-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. மதிப்பெண்களை கணிணியில் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே 9ம் தேதியே பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன. இம்முறை தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால், பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வும் தாமதாகும் எனத் தெரிகிறது. எனவே கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பும் தாமதமாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




comments | | Read More...

தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கியெடுத்த வழக்கு எண் 18/9!(வீடியோ)





தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படம ெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

வருடத்துக்கொரு படம் என்று கூட இல்லை... தன் மனதில் உள்ள கதைக் கருவுக்கு முழுமையான வடிவம் கிடைக்கும் வரை காத்திருந்து ஆத்மார்த்தமாக படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

அவரது சாமுராய் சரியாகப் போகாவிட்டாலும், காதல் அனைவரையும் உலுக்கியெடுத்தது. அடுத்து அவர் எடுத்த கல்லூரி, மனதைப் பிசைந்தது.

அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாலாஜி சக்திவேல், அடுத்து எடுத்திருக்கும் படம் வழக்கு எண் 18/9.

இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமைதான் வெளியாகிறது என்றாலும், முக்கியப் பிரமுகர்கள், சக இயக்குநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காண்பித்துவிட்டனர் பாலாஜி சக்திவேலும் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமியும்.

படம் பார்த்த அத்தனை இயக்குநர்களும், கண்ணீருடன் வெளியில் வந்து பாலாஜி சக்திவேலைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

படம் பார்த்த இயக்குநர்களில் ஒருவரான ரா பார்த்திபன், "சினிமா மூலம் ஆன்மாவை தொட முடியும் என இரண்டாம் முறையாக, அதிரும்படியாக, என் தூக்கம் கெடுக்கும்படியாக சொல்லி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்திவிட்டார். தயவு செய்து முதல் நாளே அதுவும் முதல் ஆளாய் பாருங்கள ்... ரிக்டர் அளவில் பதிவாகாவிட்டாலும் இதமாய் ஒரு நிலநடுக்கம் இதயத்தில் பதிவாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமி, "இதுவரை நான் எடுத்ததெல்லாம் படமில்லங்க. பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 தான் உண்மையான படம், படைப்பு. அதற்கு தயாரிப்பாளராக இருப்பதன் மூலம் நான் பெரிதாக எதையோ சாதித்த நிறைவுடன் உள்ளேன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த � �ல பத்திரிகையாளர்கள் என்னிடம் பேச முடியாமல் கண்ணீர் விட்டனர். வேறு என்ன சிறப்பு வேண்டும் இந்தப் படத்துக்கு?" என்றார்.







comments | | Read More...

இந்திய எல்லைக்குள் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறல்: பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம்




சீன ராணுவத்தின் அத்துமீறல் குறித்து ராஜ்யசபாவில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

கடந்த மாதம் மார்ச் 16 ம் தேதி ஒரு முறையும் மார்ச் 19 ம் தேதி மற்றொரு முறையும்  சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் ஹிமாச்சல் பிரதேச எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலும் இப்பிரச்சினையை ஹாட் லைன், பிளாக் மீட்டிங், எல்லையோர படையின் கூட்டுக்க� ��ட்டம், மற்றும் இரு தரப்பு அதிகாரிகள் சந்திப்பு போன்ற செயல்கள் மூலம் இதற்கு தீர்வு காணலாம் என தெரிவித்தார்.

மற்றொரு  கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பாதுக்காப்பு துறை அமைச்சர், சீனாவை விட இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்ததாக தெரிவித்தார்.இது உலக அளவில் 10  சதவீதம் � �னவும், 2007-08 ம் ஆண்டில்  இதன் மதிப்பு ரூ. 10166 .08 கோடி, 2009 - 10 ம் ஆண்டில் ரூ. 13411 . 91 கோடி2010 - 11 ஆண்டு சுமார் ரூ. 1 5443 .01 கோடி மதிப்பிலும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றார்.



comments | | Read More...

ஒட்டுமொத்த ஆதீனங்களையும் மிரட்டும் நித்யானந்தா.....!!!




தருமபுர ஆதீனம் உள்ளிட்ட எங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் அனைவர் மீதும் மான நஷ்ட ஈடு கோரி பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள� �� வழக்குத் தொடருவார்கள் என்று நித்தியான்தா கூறியுள்ளார்.

மதுரையில் இன்று நித்தியானந்தாவும், மதுரை ஆதீனமும் சேர்ந்து பேட்டியளித்தனர். நித்தியானந்தாதான் பேசினார். மதுரை ஆதீனம் உடன் அமர்ந்திருந்தார்.

அப்போது நித்தியானந்தா பேசுகையில்,

நாங்கள் இருவருமே (நித்தியானந்தா, மதுரை ஆதினம்) ஆதினகர்த்தர்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கத் தயாராக இருந்தோம். அவர்கள் எங்களைச் சந்திக்கவே நேரம் ஒதுக்கவில்லை. எங்கள� �ச் சந்திக்க அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

எங்களிடம் விளக்கம் பெறாமல், தன்னிச்சையாக அவர்கள் கூட்டம் போட்டு, தீர்மானம் ந� ��றைவேற்றி இவ்வாறு பேட்டி அளித்திருப்பது வருந்தத்தக்கது. இதனால், பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் எங்களிடம் பேசியிருக்க வேண்டும்.

இன்னும் பத்து நாட்களுக்குள், அவர்கள் எங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், அவர்கள் போட்ட தீர்மானத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் பிடுதி பீட பக்தர்கள் மீது அவதூறு பரப்பியதாக, மான நஷ்ட வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறார்� �ள்.

மேலும், தருமபுரம் ஆதினம் முன்பு அமர்ந்து பிடுதி பீட பக்தர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு ஒரு லட்சம் பேர் கையெழுத்து பெற்று மனு கொடுப்போம். மேலும், ஆதினத்துக்கு யார் வருவது என்பது பற்றி சாதி ரீதியாக கருத்து வெளியிட்டு மத துவேஷத்தை வளர்த்திருக்கிறார்கள். இது தவறு. இது தொடர்பாக மத துவேஷத்தை வெளிப்படுத்தும் சட்ட பிரிவின் கீழ் புகார் அளிக்கப்படும் என்றார் நித்தியானந்தா.




comments | | Read More...

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எம்.பி.க்களாக இருக்கின்றனர்: ராம்தேவ்




அன்னா ஹசாரே குழுவினரை தொடர்ந்து குறி� ��்பாக அரவிந்த் கெஜ்ரிவால் எம்.பிக்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.தற்போது ராம் தேவும் எம்.பி.க்களை கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஊழலுக்கு எதிரான யாத்திரையை சத்தீஸ்கரில் தொடங்கி வைத்து பேசும்போது இக்குற்றச்சாட்டை ராம்தேவ் கூறினார். மேலும், விவசாயிகள் குறித்தும் தொழிலாளர்கள் குறித்தும் அவர்களு� �்கு எந்த கவலையும், அன்பும் இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;
 
எம்.பிக்களில் பலர் பணத்திற்கு நண்பர்களாகவும், அடிமையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், கொள்ளையர்களாகவும், கொலையாளர்களாகவும் இருக்கிறார்கள்.
 
அவர்கள் மனித வடிவில் உள்ள சாத்தான்களாக இருக்கின்றனர் என்றார். இருந்தாலும், எம்.பிக்களில் சில நல்லவர்களும் இருப்பதாகவும் அவர்களை தான் மிகவும் மதிப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், பாராளுமன்றத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் ஊழல்வாதிகளை பாராளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ராம்தேவ் தெரிவித்தார்.




comments | | Read More...

துணை ஜனாதிபதி பதவி கிறிஸ்தவருக்கு கிடைக்குமா?




துணை ஜனாதிபதி பதவியை கிறிஸ்தவருக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யாரை நி றுத்தலாம் என்பதில் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் குழப்பம் நிலவுகிறது.

இதற்கிடையே ஜனாதிபதியாக முஸ்லிம் நியமிக்கப்பட்டால் துணை ஜனாதிபதியாக கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள், பிஷப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் 'கிறிஸ்டியன் ஒருங்கிணைந்த அமைப்பு' உருவாக்கப்பட� ��டு அதன் தலைவராக ஜான் டயஸ் செயல்பட்டு வருகிறார்.

இவர் ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி பதவிக்கு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்து இ-மெயில் அனுப்பி உள்ளார்.

அதில், 'வருங்காலத்தில் அரசியலில் எங்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்க முடியாது, எனவே எங்களுக்கு இந்த முறை துணை ஜனாதிபதி கேட்காமல் இருக்க முடியவில்லை. துணை ஜனாதிபதி பதவிக்கு நாங்கள் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. தகுதியான வேட்பாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அரசியல் கட்சிகள் விரும்பினால் தகுதியானவர்கள் பட்டியலை கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவோம்.

தகுதியானவர்கள் பலர் இருந்தும் இதுவரை கிறிஸ்தவர் யாரும் இந்தியாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது இல்லை. அரசியல் சட்டப்படி இதில் மத சாயம் பூச முடியாது. ஆனால் தங்களை புறக்கணிப்பதாக கிறிஸ்தவர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக இந்த உயர்ந்த பதவி தாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

நமது நாட்டில் 70 ஆண்டுகளில் மத, சாதி அடிப்படையில் பல ஜனாதிபதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். உதாரணமாக கே.ஆர்.நாராயணன் பிறப்படுத்தப்பட்ட தலித் என்ற வகையிலும ், பிரதீபா பட்டீல் முதலாவது பெண்மணி என்ற வகையிலும், மத அடிப்படையில் பக்ருதீன் அலி அகமத், ஜாகீர் உ� ��ைன், ஜெயில்சிங், அப்துல்கலாம் ஆகியோர் ஜனாதிபதி பதவி வகித்துள்ளனர்.

இந்த முறை கிறிஸ்தவருக்கு உயர்ந்த பதவி வழங்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். முதல் முறையாக துணை ஜனாதிபதி பதவியாவது கொடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த இ.மெயில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பெயருக்கும் மற்ற அனைத்து அரசியல் கட்சிக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடை� �ே சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அதன் அமைப்பாளர் எம்.ஜி.தேவசகாயம், அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், 'சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸை ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். அரசியல் சட்ட நிபுணரான அவர் எந்த கட்சியையும் சாராத பொதுவானவர், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். 1996 முதல் 2002 வரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்துள்ளார். 2007-ல் பத்மபூஷன் பட்டம் பெற்றவர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட்டு � �லைமை நீதி பதிகளை தேர்வு செய்யும் 5 பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு உயர் அதிகார குழுவில் இடம் பெற்றவர். எனவே கே.டி.தாமஸ் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என்று தேவசகாயம் குறிப்பிட்டுள்ளார்.



comments | | Read More...

அரசாங்கத்தைக் கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் சதி: மகிந்த ராஜபக்சே புலம்பல்




உள்நாட்டு துரோகிகள் உதவியுடன் வெளிநாடுகள் தமது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே புல� ��்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நாட்டின் கொழும்பு, யாழ்ப்பாணம், ஹட்டன், நுவரெலியா உட்பட அனைத்து இடங்களிலும் எந்த ஒரு பீதியும் இல்லாமலேயே மேதினக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதுதான் நாங்கள் பெற்றுக் கொடுத்திருக்கிற சுதந்திரமாகும்.

பயங்கரவாதத்தினால் பல ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்திருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக இங்கு வாழும் அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இன்று மேதினத்தை கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அவர்களது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண நூலகத்� �ை எரித்ததற்காக மன்னிப்பு கேட்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்..

ஏகாதிபத்தியவாதிகள் தற்போது மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கையை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடு இது. இங்கு வாழும் சிலரது சிந்தனை ஐரோப்பாவில் வாழ்வதைப் போல உணர்கின்றனர். அவர்கள்தான் இலங்கையைக் காட்டிக் கொடுக்கின்றனர். � �ங்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சூழ்ச்சிகல் மூலமாக வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் எமது அரசைக் கவிழ்க்க ஒருபோதும் சந்தர்ப்பம் கொடுக்க மாட்டோம் என்றார் மகிந்த ராஜபக்சே.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger