News Update :
Powered by Blogger.

Monika at NAC

Penulis : karthik on Wednesday 19 October 2011 | 23:16

Wednesday 19 October 2011

 
 
Diwali is the time to purchase gold and most Indians do so as a symbol of worshipping Goddess Lakshmi. This year, the World Gold Council is celebrating India's love and worship for gold in association with NAC Jewellers.
A special event as a part of this celebrations were held at the NAC Jewellers, Chennai recently in which actress Monika, Ananth Padmanabhan, MD, NAC Jewellers, and K. Shivram Kumar, Vice-President, World Gold Council India were present.
Prachi Tiwari, Director � Marketing, World Gold Council India, says, "The World Gold Council aims to drive relevance for gold�across consumer categories and life stages. This festive season, we wanted to remind people about their most treasured Diwali purchase. Most of us would remember a gold purchase, however long ago it was, and it is during Diwali that one reaffirms the important role that gold jewellery plays in strengthening our relationships. It is this insight that drives our core message - this Diwali, don't' just spend, invest !"
comments | | Read More...

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய முதல்வர் ஜெயலலிதா

 
 
 
திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றிலிருந்தும், மிகக் கடுமையான போராட்டம் நடத்திய பின்னரே வெளியில் வந்த முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மட்டும் விடுபட முடியாமல் கடுமையாக திணறி வருகிறார். மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவதாக கூறிய ஜெயலலிதா, தனது முதல்வர் காலத்தின்போது ரூ. 66.65 கோடி அளவுக்கு சொத்துக் குவித்தது எப்படி என்பதுதான் இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
 
1991ம் ஆண்டு ஜூன் முதல் 1996 மே மாதம் வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தார், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. அதிமுக படு தோல்வியைச் சந்தித்தது. முதல்வரான பின்னர் கருணாநிதி கூறுகையில், அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும், ஊழல் செய்தவர்கள் குறித்தும் தீவிரவிசாரணை நடத்தப்படும், தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்துவோம் என்று அறிவித்தார்.
 
அதன்படி திமுக ஆட்சியின்போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பலர் மீது மொத்தம் 48 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஜெயலலிதா மீது மட்டும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அதில் முக்கியமான வழக்குதான் வருமானத்திற்கு புறம்பான வகையில் சொத்துக் குவித்த வழக்கு.
 
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகளில் கலர் டிவி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் 1996ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானார். ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவர் முதலும், கடைசியுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இதில் மட்டுமே.
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் சுருக்கமான விவரம் என்னவென்றால், 1991ம் ஆண்டு முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றதாக கூறியிருந்தார். ஆனால் அவருக்கு ரூ. 66.65 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் குற்றம் சாட்டினர். இதை லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தனிப்படையும் உறுதி செய்தது. இதன் பேரிலேயே ஜெயலலிதா, அவருக்கு உடந்தையாக இருந்ததாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சென்னை 2வது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 
வருமானத்திற்குப் புறம்பான சொத்துக்களாக சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பண்ணை வீடுகள், பங்களாக்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் வாங்கிப் போடப்பட்ட விவசாய நிலங்கள், ஹைதராபாத்தில் உள்ள பண்ணை இல்லம், நீலகிரியில் உள்ள டீ எஸ்டேட், வங்கிகளில் போடப்பட்டிருந்த பணம், நகைகள், நிதி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த முதலீடுகள் ஆகியவை வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
 
ஜெயலலிதா மீது பிசிஏ எனப்படும் அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் ஐபிசி ஆகியவற்றின் கீழ் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 1997ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்குச் சொந்தமான 77 அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 3.21 கோடியாகும். அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,000 ஏக்கர் பாசன நிலங்களையும் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.
 
தனி நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் அடுத்து ஆட்சி மாறியது. திமுக வெளியேறி அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து இந்த வழக்குகளில் ஜெயலலிதா தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே வேறு மாநிலத்திற்கு இவற்றை மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று உச்சநீதிமன்றம் பெங்களூருக்கு இந்த வழக்கை மாற்றியது. அன்று முதல் சொத்துக் குவிப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
 
இந்த வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதா நேரில் ஆஜரானதில்லை. மேலும் தொடர்ந்து வாய்தாக்களை வாங்கி வந்தார். நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற பிரம்ம பிரயத்தனம் செய்து பார்த்தார். பெங்களூரில் தனது பாதுகாப்பு குறித்த சந்தேகங்களைக் கிளப்பினார். இதனால் தனி நீதிமன்றமே தாற்காலிமாக நாளை ஒரு தினத்துக்கு ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
ஆனாலும் நேரில் ஆஜராவதைத் தவிர்க்க உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். காவிரி விவகாரத்தையும் அவர் லேசாக கிளறிப் பார்த்தார். இந் நிலையில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் நாளை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டது.
 
இதனால் தற்போது முதல் முறையாக இந்த வழக்குக்காக நாளை பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.



comments | | Read More...

வெற்றிக்கு வித்திட்ட இளம் வீரர்கள்: கேப்டன் தோனி பாராட்டு

 

புதுடில்லி: ""இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு இமாலய வெற்றியை பதிவு செய்ததற்கு, இளம் வீரர்களின் எழுச்சியே காரணம்," என, இந்திய கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளில் இளம் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இளம் வீரர்களின் எழுச்சி, அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும் என நம்புகிறேன்.
டில்லி போட்டியில் விராத் கோஹ்லியின் பேட்டிங் அருமையாக இருந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் சதம் அடித்தது பாராட்டுக்குரியது. "டாப்-ஆர்டரில்' இவரை போன்ற இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன்மூலம், "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் நெருக்கடி இல்லாமல் ரன் சேர்க்க முடிகிறது. இவரது பேட்டிங் ஸ்டைலில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இதேபோல முக்கியமான நேரத்தில் இவர், பவுலிங்கில் சிறப்பாக பந்துவீசுகிறார். இதனால் எதிரணியின் ரன்வேட்டை தடுக்கப்படுகிறது.
காயத்தில் இருந்து மீண்ட காம்பிர், தனது "பார்மை' தக்க வைத்துக் கொண்டது சிறப்பம்சம். மூன்றாவது வீரராக களமிறங்கி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்த விதம் அருமையாக இருந்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்திய அணி எந்த ஒரு இலக்கையும் எளிதாக "சேஸ்' செய்யும் என நம்புகிறேன்.
பவுலிங்கில், கடந்த இரண்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்கும், இங்கிலாந்து மண்ணில் சோபிக்காததற்கும் தனிப்பட்ட காரணம் எதுவும் கூற முடியாது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் பந்து ஈரமடைந்ததால், பவுலர்களுக்கு சற்று சிரமமாக இருந்தது.
டங்கன் பிளட்சர், சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார். இங்கிலாந்து மண்ணில் வழங்கிய அதே பயிற்சியைதான் தற்போதும் அளிக்கிறார். போட்டியில் வெற்றி பெற சரியாக திட்டமிட்டும், சில நேரங்களில் எடுபடாததால், பயிற்சியாளர் மீது விமர்சனம் எழத்தான் செய்யும். எந்த ஒரு வீரரும், மைதானத்தின் தட்பவெப்பநிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால், பயிற்சி மேற்கொள்வதில் பலனில்லை.
யாதவ் அபாரம்:
ஜாகிர் உள்ளிட்ட அனுபவ வேகங்கள் இல்லாத நிலையில், பிரவீண் குமார் நம்பிக்கை அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவருக்கு, இளம் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிப்பது பாராட்டுக்குரியது. இவர், தனது உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் காயம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்ப முடியும். தொடர்ந்து நிறைய போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் விரைவில் இவர், முன்னணி வேகப்பந்துவீச்சாளராக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு தோனி கூறினார்.

ஹர்பஜனுக்கு "கல்தா'

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய மூன்று ஒருநாள் போட்டிக்கான அணியில் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த இரு போட்டிகளில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட இளம் வீரர்கள் "சுழலில்' அசத்தினர். இதையடுத்து மீதமுள்ள போட்டிகளுக்கான அணியில் அதே வீரர்களே நீடிப்பார்கள் என பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு அறிவித்தது.

உத்தப்பா, யூசுப் தேர்வு

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு "டுவென்டி-20′ போட்டி வரும் 29ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் ராபின் உத்தப்பா, யூசுப் பதான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருமணம் காரணமாக துவக்க வீரர் காம்பிர், "டுவென்டி-20′ போட்டியில் இருந்து விலகியுள்ளார். மற்றபடி ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள், "டுவென்டி-20′ அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.

நான்காவது இடம்

கடந்த இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, ரேங்கிங் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு(115 புள்ளி) முன்னேறியது. இங்கிலாந்து ஐந்தாவது இடத்துக்கு(110 புள்ளி) தள்ளப்பட்டது.
இந்திய அணி மூன்றாவது இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு, இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்ற வேண்டும். அதேவேளையில், தென் ஆப்ரிக்க அணி, முதலிரண்டு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைய வேண்டும். தற்போது, முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா (130 புள்ளி), இலங்கை (119 புள்ளி), தென் ஆப்ரிக்கா (116 புள்ளி ) அணிகள் உள்ளன.

comments | | Read More...

விக்டோரியா என்னும் 11 வயது சிறுமி புரியும் சாகசம்!

 

எத்தனையோ விதமான சாகசன நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி ஒரு நிகழ்வை பார்த்ததுண்டா… உடலினை இறப்பர் போல் வளைந்து இச் சிறுமி புரியும் சாசகம் அரங்கம் முழுவதும் புல்லரிக்க வைக்கின்றது.

அமெரிக்க தொலைக்காட்சியினால் நடாத்தப்படும் 'America's Got Talent' எனும் நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தனது திறமையை காட்டி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

11 வயது நிரம்பிய விக்டோரியா எனும் சிறுமியே இச் சாதனை மேற்கொண்டுள்ளார். சீனாவில் பிறந்த இச் சிறுமி தனது 6வது மாதத்தில் அமெரிக்க பெற்றோரின் தத்துப் பிள்ளையாக அமெரிக்காவிற்கு வந்துள்ளார்.

தனது தாயின் வழிகாட்டலில் தனது திறமையை வளர்த்துக் கொண்ட விக்டோரியாக இன்று உலகமறிந்த சாதனை சிறுமியாக திகழ்கின்றாள்.

comments | | Read More...

‘மாத்தி யோசி”: தி.க. வீரமணி ஜெ.வுக்கு திடீர் ஆதரவு- கருணாநிதிக்கு ‘கொட்டு’!

 

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதி நீர்ப் பங்கீடுபற்றி நாம் போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்று காவிரி நடுவர் மன்றம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதித் தீர்ப்பினை காவிரி நதி நீர் நடுவர் மன்றம் நமக்கு 2007ல் வழங்கியது.

அதன்படி நமக்கு ஆண்டுதோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீர்ப் பங்கீடு, சில, பல ஆண்டுகளில் தவறுவதும், கிருஷ்ண சாகர், கபினி போன்ற அணைகள் நிரம்பி வழியும் போது அணைகளைப் பாதுகாக்க, தண்ணீரைத் திறந்து விடுவதும் அதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்புவதும், அந்த கணக்கினையும் காட்டி, தர வேண்டிய பாக்கி நீரைக் கணக்கிட்டு கர்நாடகம் கூறுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

2007ல் வெளியிட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிடாமல் இருப்பது மிகவும் வியப்பையும், வேதனையையும் நமக்கு அளிக்கிறது. மத்திய அரசு இதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து, கடந்த 4 ஆண்டு காலம் காலதாமதம் செய்துவருவது ஏன் என்று புரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு நாம் சலுகை கேட்கவில்லை. நீதிமன்ற ஆணையை சட்டப்படி அரசிதழில் வெளியிட வேண்டிய கடமையை ஏன் செய்யவில்லை என்றுதான் மத்திய அரசிடம் நமக்குள்ள உரிமையை வற்புறுத்துகிறோம்.

முதல்வர் ஜெயலலிதா இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி வற்புறுத்தியிருப்பதற்கு அரசியல் கட்சி கண்ணோட்டமின்றி தமிழ்நாட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து நம் ஒன்றுபட்ட ஒருமித்தகுரலை எழுப்பிடத் தவறக் கூடாது.

கர்நாடக அரசியலில் ஒரு கட்சியை எதிர்த்து மற்றொரு கட்சி நடத்தினாலும், காவிரி நதி நீர்ப் பிரச்சனை போன்ற அவர்களது மாநிலப் பிரச்சனைகளில் ஒரே அணியில் நின்று குரல் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் மாத்திரம், இதுபோன்ற பொது உரிமைப் பிரச்சனைகளில் ஏன் ஒற்றுமை இல்லை?.

அரசியல் பார்வைகளால் ஒருவரை மற்றொருவர் விமர்சிப்பது- வாதங்கள்- எதிர்வாதங்களுக்கே நமது நேரம் செலவழிக்கப்பட்டு, ஒற்றுமையே காணாமற் போய்விடும் வேதனையான நிலை – இனி மேலாவது இருக்கக்கூடாது.

ஆளுங்கட்சியும் முதல்வரும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவினையும் திரட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர, கடந்த கால குற்றச்சாட்டுகளைப் புதுப்பித்து, பொது எதிரிகள் மகிழும் வண்ணம் நமது நதிகள் உரிமை பறிபோக இடமளிக்காது சிறப்பாக செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அரசு எடுக்கும் நல் முயற்சிகளை திராவிடர் கழகம் வரவேற்று, விரைந்து செயலாக்க துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

comments | | Read More...

கூடங்குளம் மக்கள் அச்சத்தைப் போக்க அப்துல் கலாமிடம் ஆலோசனை கேட்கப்படும்: நாராயணசாமி

 

சென்னை: கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஆலோசனை கேட்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கடிதம் மூலம் விவாதித்து வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக உள்ளார்.

கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கும் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஆர். நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது,

பிரதமர் மன்மோகன் சிங் 3 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்படும்.

அந்த குழுவில் சுற்றுச்சூழல், அணு சக்தி, ஓசோன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பிரபல விஞ்ஞானிகள் இடம்பெறுவார்கள். அவர்களின் பரிந்துரைகள் தவிர கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஆலோசனை கேட்கப்படும் என்றார்.

கலாமை 'பாஜக ஆள்' என்ற ரீதியில்தான் பார்த்து வருகிறது காங்கிரஸ். அவரை எப்போதுமே ஒதுக்கியே வைத்திருப்பது காங்கிரஸின் வழக்கமாகும். இந்த நிலையில் தற்போது கலாமிடம் ஆலோசனை கேட்கப்படும் என்று காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger