News Update :
Powered by Blogger.

விஜய்யின் தந்தைக்கு கடும் நெருக்கடி

Penulis : karthik on Tuesday 4 October 2011 | 09:44

Tuesday 4 October 2011

 
 
 
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஜய்யின் தந்தையும் தற்போதைய பொறுப்புத் தலைவருமான எஸ் ஏ சந்திரசேகரின் அணிக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது கேயார் அணி.
 
கே.ஆர். அணி வேட்பாளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணியில் தலைவராக கேயாரும்,
 
துணைத் தலைவர்களாக சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன், டி.சிவா ஆகியோரும், செயலாளர்களாக கே.முரளிதரன், ஏ.எம்.ரத்னம் ஆகியோரும், பொருளாளராக அன்பாலயா பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.
 
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கமீலா நாசர், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஞானவேல்ராஜா, கே. பாலு, அழகன் தமிழ்மணி, ஆபாவாணன், கே.விஜயகுமார், எம்.கபார், எச்.முரளி, என்.சுபாஷ் சந்திரபோஸ், கே.முருகன், எஸ்.எஸ்.துரைராஜ், ருக்குமாங்கதன், ரவீந்திரன், ஏ.என்.சுந்தரேசன், ராஜேந்திரன், நந்தகோபால், விஜயமுரளி, மன்னன், பி.ஜி.பாலாஜி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
 
தங்கள் அணி வென்றால், "தயாரிப்பு செலவு குறைக்கப்படும், தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், டி.வி., கேபிள் டி.வி.யில் இருந்து ரூ. 10 லட்சம் சிறு முதலீட்டு படங்களுக்கு கிடைக்க வழி செய்யப்படும், தயாரிப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும்," என வாக்குறுதி அளித்துள்ளது கேயார் அணி..



comments | | Read More...

யுவராஜ் சிங் சரியான 'கடலைப் பார்ட்டி'-ப்ரீத்தி ஜிந்தா

 
 
 
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒரு பெரிய 'கடலைப் பார்ட்டி' என்று இந்தி நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
 
நடிகை பிரீத்தி ஜிந்தாவும், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் டேட் செய்தார்கள் என்று ஐபிஎல் போட்டிகளின்போது படு பரபரப்பாக பேசப்பட்டது. இது உண்மையா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகாத விஷயமாகவே உள்ளது.
 
இந்நிலையில் யுவராஜ் சிங் பெரிய 'கடலைப் பார்ட்டி' என்று கூறியுள்ளார் பிரீத்தி. கடந்த 2009-ம் ஆண்டின் ஐபிஎல் சீசனின்போது பிரீத்தியும், யுவராஜும் பார்க்கும்போதெல்லாம் கட்டிப்பிடித்துக் கொண்டனர். அவர்களைப் பற்றி தான் பேச்சாகக் கிடந்தது. ஆனால் பிரீத்தி எங்களுக்குள் எதுவும் இல்லை, இது சும்மா உற்சாகப்படுத்தத்தான் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறி மறுத்தார்.
 
இந்நிலையில் பிரீத்தி நடத்தும் அப் க்ளோஸ் அன்ட் பர்சனல் வித் பிரீத்தி ஜிந்தா என்னும் நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் கலந்து கொண்டார். அப்போது பிரீத்தி யுவராஜைப் பார்த்து, நீங்க 'பெரிய கடலைப் பார்ட்டி' தானே, அதனால் தான் உங்க பெயர் பலருடன் சேர்ந்து அடிபடுகிறது என்று காலை வாரினார் ப்ரீத்தி.
 
அதற்கு யுவி கூறியதாவது, நீங்கள் யார் கூடயோ சுத்த கடைசியில் என்னை பலிகடாவாக்கி விட்டீர்கள். நான் திருமணமாகாதவன் என்பதால் தான் இத்தனை பிரச்சனையும். ஏன் நீங்க மட்டும் என்னவாம்? உங்களையும், பிரெட் லீயையும் சேர்த்து பேச்சு அடிபட்டதே, இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்? என்று பதிலுக்கு பலமாக வாரினார்.
 
என் பணம், புகழுக்காக என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணை நான் மணக்க மாட்டேன். நான் கிரிக்கெட், கிரிக்கெட் என்று பயணம் செய்து கொண்டே இருப்பவன். என்னை புரிந்து கொண்டு நடக்கும் பெண் தான் வேண்டும் என்றும் கூறினார் யுவராஜ்.
 
மொத்தத்தில் ரெண்டு பேரும் 'வறுகடலைப் பார்ட்டி'கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!



comments | | Read More...

துண்டு துண்டாய் பூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்

 
 
 
செத்துப் போன அமெரிக்க செயற்கைக் கோள் சமீபத்தில் பூமியில் வந்து விழுந்ததைத் தொடர்ந்து, இந்த மாத இறுதியில் ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோள் ஒன்று பூமியில் விழவிருக்கிறது. இது கடந்த சில தினங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த நாசா செயற்கைக்கோளை விட ஆபத்தானது என்று வி்ஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பேருந்து சைஸிலான நாசாவின் செயலிழந்த செயற்கைக்கோளான யூஏஆர்எஸ் பூமியில் வந்து விழுந்தது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் இன்னொரு செயற்கைக்கோள் பூமியில் வந்து விழவிருக்கிறது.
 
2.4 டன் எடை கொண்ட ரான்ட்ஜன் செயற்கைக்கோள் அல்லது ரோசாட் எனப்படும் ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோள் கடந்த 1999-ம் ஆண்டு செயல் இழந்தது. அதில் இருந்து கடந்த 12 ஆண்டுகளாக விண்ணில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த செயற்கைக்கோள் பல துண்டுகளாக பூமியில் விழவிருக்கிறது.
 
அதில் சில துண்டுகள் 400 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த துண்டுகளால் பூமியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. காரணம் இந்த செயற்கைக்கோள் துண்டுகள் எங்கு விழும் என்றே விஞ்ஞானிகளால் கணிக்க முடியவில்லை.



comments | | Read More...

ஏ ஆர் முருகதாஸின் ஏழாம் அறிவு... தியேட்டர்கள் அறிவிப்பு

 
 
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படம் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு.
 
முற்றிலும் புதிதான கதை, இதுவரை பார்த்திராத நாடுகளில் படப்பிடிப்பு என கூறப்பட்டு வருவதால், தீபாவளிப் படங்களில் ஏழாம் அறிவுக்கு தனி முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
 
இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் 22 நாட்கள் உள்ள நிலையில், இப்போதே படம் வெளியாகும் அரங்குகளின் பட்டியலை வெளியிட்டு அதிர வைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
 
சென்னை நகரினழ் பிரதான சினிமா அரங்குகளான சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, அபிராமி, பிவிஆர், சங்கம், உதயம், ஏஜிஎஸ் போன்றவற்றில் இந்தப் படம் ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. இவை தவிர, சிங்கிள் ஸ்கிரீன்ஸ் எனப்படும் தனி அரங்குகளிலும் படம் வெளியாகிறது.
 
சூர்யா நடித்த படம் ஒன்று நகரில் இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுதான் முதல் முறை. இந்தப் படத்துடன், உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ட்ரெயிலரும் திரையிடப்படும் என உதயநிதி அறிவித்துள்ளார்.
 
வேலாயுதம், மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களும் தீபாவளி ரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது








comments | | Read More...

வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி! - ஷாரூக் கண்ணீர்

 
 
 
யார் நமக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மனதில் வைக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில் ரஜினிக்கு நிகரில்லை.
 
திரையுலகில் தன்னை வசைபாடியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் அத்தனை பேருக்கும், ஆபத்தான நேரத்தில் கைகொடுத்தவர் இதே ரஜினிதான். அந்தப் பட்டியல் பெரியது.
 
ரஜினி ரோபோ என்ற பெயரில் படம் நடிக்க ஆரம்பித்தபோது, ஷாரூக்கான் அந்த 'ரோபோ' என்ற உச்சரிப்பில் வரும் ஏழு தலைப்புகளை மும்பையில் தன் பெயரில் பதிவு செய்தார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் எப்படி ரோபோ எனும் தலைப்பில் வெளிவரப்போகிறது பார்க்கலாம் என்ற நினைப்பில்.
 
ஆனால் படம் இந்தியில் அதே பெயரில் வெளியானது வேறு விஷயம்.
 
இன்று அதே ஷாரூக்கானுக்காக தனது உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல், வீட்டில் எழுந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு (சௌந்தர்யா தவிர வேறு யாரும் ரஜினியின் இந்தப் பயணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்!), மும்பைக்குப் பயணம் செய்து நடித்துக் கொடுத்து வந்திருக்கிறார் என்றால், அதை என்னவென்று சொல்வீர்கள்!
 
ரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப் போக வைத்துவிட்டது.
 
இதுகுறித்து தனது ட்விட்டரில், "மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார் செட்டுக்குள் வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும் குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அடுத்த நாள், ரஜினி நடித்துக் கொடுத்த காட்சியை தனது எடிட் ஸ்டுடியோவில் போட்டுப் பார்த்து பிரமித்துப் போனாராம் ஷாரூக்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், ""சௌந்தர்யாவுடன் அமர்ந்து எடிட் செய்த ரஜினி சாரின் காட்சிகளைப் பார்த்தேன். ரஜினியின் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது... வாவ்! (Sitting with soundarya & seeing the edit of rajini sir's shoot.he is like a celestial being...the whole office is beaming with happiness.WOW) என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ரஜினி உங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து நடித்துக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்... எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி," என்றார்.
 
 


comments | | Read More...

செக்ஸ், வன்முறை.... 'உயிரின் எடை 21 அயிரி'க்கு 41 வெட்டு!

 
 
 
உயிரின் எடை 41 அயிரி (கிராம்) என்ற படத்துக்கு தணிக்கை குழு 41 இடங்களில் கட் கொடுத்துள்ளது. இந்த வெட்டுக்களோடு படத்தை வெளியிடலாம். இல்லையேல் படத்தை வெளியிடக் கூடாது என்று தணிக்கைக் குழு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.
 
ட்ரீம் வேர்ல்டு தயாரித்துள்ள 'உயிரின் எடை 21 அயிரி' படத்தை, ஏகன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். வினிதா ஹீரோயின்.
 
ஊரே நடுங்கும் தாதா படுத்த படுக்கையாகி கிடக்கும்போது உயிரின் மதிப்பை, அன்பை எப்படி உணர்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளாராம் ஏகன். ஆனால் பச்சையான உடலுறவுக் காட்சிகள் மற்றும் கோரமான வன்முறை காட்சிகள் உள்ளதால் படத்துக்கு இத்தனை கட் கொடுத்துள்ளார்களாம்.
 
ஆனால் இதனை கடுமையாக எதிர்க்கிறார் ஏகன். அவர் கூறுகையில், "தணிக்கைக் குழு இரட்டை நிலையை எடுக்கிறது. இதைவிட மோசமான இந்திப் படங்களை அப்படியே அனுமதிக்கிறார்கள். உதாரணம் ' கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்'. ஆனால் எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள்.
 
பெண்களின் தலைமுடியை பிடித்து இழுக்கும் காட்சிக்கு கூட கட் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் சின்ன தயாரிப்பாளர்கள். எதிர்த்து எதுவும் கேட்க முடியில்லை. படத்தில் சென்சார் வெட்டிய இடங்களை திரையில் கருப்பாக காட்டி அதை ரசிகர்களுக்கு தெரிவிக்க இருக்கிறோம். வரும் 17-ம் தேதி படத்தை வெளியிடப் போகிறோம்," என்றார்.
 
 


comments | | Read More...

என் மகளுக்கு எந்த அரசியல்வாதியும் உதவக் கூடாது- முத்துலட்சுமி வேண்டுகோள்

 
 
எனது மகள் வித்யா ராணிக்கு, எனது கணவர் வீரப்பன் பெயரைச் சொல்லக் கூட தகுதி இல்லை. எனது கணவர் பெயரைச் சொல்லி அவர் யாரிடமும் உதவி கோரக் கூடாது, யாரும் வித்யா ராணிக்கு உதவாதீர்கள் என்று கூறியுள்ளார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.
 
வீரப்பன்-முத்துலட்சுமி தம்பதியின் மூத்த மகள் வித்யாராணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த மரிய தீபக் என்பவரை மணந்தார். பின்னர் குடும்பமும் நடத்தி வந்தார். இதைக் கேள்விப்பட்டு அதிர்ந்த முத்துலட்சுமி தனது மகளை வீட்டோடு சிறை வைத்தார்.
 
இதையடுத்து மரிய தீபக் ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வித்யா ராணியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. அதன்படி வித்யாராணியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், வித்யா ராணி மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி வாழலாம் என்று கூறி விட்டது கோர்ட். இதையடுத்து தனது கணவருடன் போய் விட்டார் வித்யாராணி.
 
இந்த நிலையில் முத்துலட்சுமி இன்று செய்தியாளர்களை சேலத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வீரப்பன் பெயரைச் சொல்லக் கூட வித்யாராணிக்கு அருகதை கிடையாது. அவரது பெயரைச்சொல்லி யாரிடமும் அவர் உதவி கோரக் கூடாது. யாரும் அவருக்கு உதவாதீர்கள். எந்த அரசியல் வாதியும் அவருக்கு உதவக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
எனது மகளுக்கோ, அவரது கணவருக்கோ ஒருவரும் ஒரு உதவியும் செய்யக் கூடாது என்றார் முத்துலட்சுமி.


 


comments | | Read More...

என்ன கொடுமை சார் இது...?

 
 
திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவால் அறிவிக்கப்பட்டவர், நான் போட்டியிடவே விரும்பவில்லை. விருப்பமில்லை என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பிறகு ஏன் அறிவித்தார்கள் என்று கேட்டு காங்கிரஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
 
திருச்சி மேயராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜாதா. இவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர். நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மேயர் வேட்பாளராக சுஜாதா போட்டியிடுவார் என தங்கபாலு தற்போது அறிவித்துள்ளார். ஆனால் சுஜாதா ஏன் எனது பெயரை அறிவித்துள்ளனர் என்று கேட்டு அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. திருச்சியில் உள்ள சில காங்கிரஸ்காரர்கள் திட்டமிட்டு பழிவாங்க வேண்டும் என்பதால், நான் விருப்பம் தெரிவிக்காத போதும், வேண்டுமென்றே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
 
ஏற்கனவே நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டத்தின்போது, அனைவரும் ஏகமனதாக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பில் இருக்கும் உறுப்பினருக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் வேண்டுமென்றே எனது பெயரை இப்போது அறிவித்துள்ளார்கள். இதுகுறித்து தலைமைக்கு தெரியப்படுத்துவேன் என்றார் அவர்.
 
தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று ஏற்கனவே சுஜாதா கட்சியிடம் தெரிவித்தும் கூட அவரை தங்கபாலு வேட்பாளராக அறிவித்தது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
 
தற்போது சுஜாதா வேட்பு மனுத் தாக்கல் செய்வாரா இல்லையா என்ற பெரும் குழப்பத்தில் காங்கிரஸார் உள்ளனர்.



comments | | Read More...

சற்றும் மரியாதை தெரியாத, இல்லாத கட்சி அதிமுக- பிரேமலதா கடும் தாக்கு

 
 
 
கொஞ்சம் கூட மரியாதை இல்லாத கட்சிதான் அதிமுக. அதனால்தான் அந்தக் கூட்டணி வேண்டாம் என்று கூறி பிரிந்து வந்து விட்டோ் என்று அதிமுகவிலிருந்து தேமுதிக விலகி வந்ததற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா.
 
திருச்சி, திருவெறும்பூரில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து பேசினார் பிரேமலதா. அப்போது அதிமுகவை மரியாதை இல்லாத கட்சி என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.
 
பிரேமலதா பேசுகையில்,
 
தற்போது மரியாதை இல்லாத கட்சியுடன் கூட்டணியில் இருக்க வேண்டாம் என்று தான் அதிமுகவை விட்டு பிரிந்து வந்தோம். தேமுதிகவை மதித்த கட்சிகள் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. எனவேதான் அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம்.
 
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு வைத்தோம். அதற்கு காரணம் சேலம் மாநாட்டில் தொண்டர்கள் விரும்பியது தான் என்றார் பிரேமலதா.
 
அதிமுகவிலிருந்து தேமுதிக பிரிந்து வந்த பிறகும் இதுவரை அதிமுகவை விஜயகாந்த் கடுமையாக தாக்கிப் பேசவில்லை. அதேபோல அதிமுக தரப்பிலும் தேமுதிக குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, அதிமுகவை மரியாதை இல்லாத கட்சி என்று கடுமையாக தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுகவினர் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுகவுடன் சேர்ந்ததால் கிடைத்த பலத்தால்தான் இன்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக தேமுதிகவால் அந்தஸ்து பெற முடிந்தது. இல்லாவிட்டால் வாக்குப் பிரிக்கிற கட்சியாகவே இன்று தொடர்ந்திருக்கும் தேமுதிக. அது கூட புரியாமல் பிரேமலதா இப்படிப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று திருச்சி அதிமுக பிரமுகர்கள் கூறியுள்ளனர்.
 
இனி வரும் அதிமுக மேடைகளில் விஜயகாந்த்தைத் தாக்கி அதிமுக பேச்சாளர்கள் பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
 


comments | | Read More...

சில நேரங்களில் சில மனிதர்கள் - 1



நீண்ட நாட்களுக்கு பிறகு ... யதிராஜ்...


மத்தியஸ்தர் :

இரண்டாண்டுகளுக்கு முன், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் மங்களூருக்குப் ப்ரயாணம் செய்து கொண்டிருந்த போது, எனக்கு அருகே இருந்த படுக்கை (Berth) எண் 55 -இல் ஒரு மத்தியதர வயதுடையவர் படுத்திருந்தார். ரயில் பாலக்காடு சந்திப்பை அடைந்த போது மணி இரவு ஒன்பது இருக்கும், பெரும் சந்தடிகளுக்கிடையே ஒரு பெரிய பக்தர்கள் குழாம் ரயிலில் ஏறியது. அவர்களில் ஒருவர், முன்பு குறிப்பிட்ட படுக்கை எண் 55 இல் படுத்திருந்தவரிடம், அது தனக்காக ஒதுக்கப்பட்ட படுக்கை எனவும், அதைத் தனக்கு கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். பிரயாண புக்கிங் ஏஜெண்ட் மூலம் அதற்கான அத்தாட்சியையும் பெற்றிருந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், இரண்டாமவரிடம் அது அவருக்குண்டான படுக்கை அல்ல, ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார், ஆனால் அதை அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. இல்லை அது தமதே என்று இருவரும் வாதாடிக் கொண்டிருந்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் அங்கு வந்து, இரண்டாமவரை அப்புறப் படுத்த முயன்றார். ஆனாலும் பலனில்லை; அவருடன் வந்த மற்ற பிரயாணிகள் அவருக்கு ஆதரவாக வாதாடத் துவங்கவே, ஒரே கூச்சல்; குழப்பம்.

ரயில் பாலக்காட்டைத் தாண்டி, நான்கு ரயில் நிலையங்கள் கடந்த பிறகும் கூட, உச்சஸ்தாயியில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையே திரூர் ரயில் நிலையத்தைக் கடந்தவுடன் ஒருவர் அபாயச் சங்கிலியயப் பிடித்திழுத்து ரயிலையும் நிறுத்தி விட்டார். இவ்வாறான கடும் வாக்குவாதங்களால் யாராலும் தூங்க இயலவில்லை, நேரமும் நள்ளிரவைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

நடப்பவைகளை நான் நோட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், திடீரென, டீனேஜ் பருவத்திலிருந்த ஒரு கல்லூரி மாணவரைப் போன்ற தோற்றமுடைய ஒருவர், மாணவராகத்தான் இருக்க வேண்டுமென்பது எனது அனுமானம், தன்னுடைய படுக்கையிலிருந்து இறங்கி, அதை அந்த இரண்டாமவருக்கு விட்டுக் கொடுக்க முன்வந்தார். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின்னர், அந்த இரண்டாமவர் அதனை ஏற்றுக் கொண்டார்.

என்னுடைய ஆச்சர்யத்தை அதிகப் படுத்தும் விதமாக, அவ்விளைஞர் சற்றும் யோசியாமல், செய்தித் தாளை தரையில் விரித்து அதில் படுத்ததோடல்லாமல், சிறிது நேரத்தில் அமைதியான, ஆழ்ந்த உறக்கத்திற்குள் தொலைந்தே போய்விட்டார். அதற்குப் பின் இதுவரை எதுவுமே நடவாததுபோல் ஒரு அமைதி நிலவியது. நான் 58 வயதாகும் ஒரு தாவரவியல் ஆசிரியர்; இரண்டு தலைமுறை மாணவார்களைக் கையாண்டிருக்கிறேன். பொதுவான அபிப்ராயங்களுக்கு மாறாக, பல சமயங்களில், பெரியவர்களை விடவும், இளைஞர்களே உயர்வான குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.

(மூலம் : ஃப்ரான்ஸிஸ் சேவியர், ஏற்காடு)

 

காலத்தினாற் செய்த உதவி :

1962 ஆம் வருடம், அக்டோபர் மாதம், எனது தந்தையார் திடீரென இறந்த வேளை, எனது பத்தாம் வகுப்பு பள்ளிப் படிப்பைத்தான் முடித்திருந்தேன். இனி கல்லூரிப் படிப்பென்பது கேள்விக்கப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. எனவே அப்போதிருந்த சூழலில், ஒரு குமாஸ்தா உத்யோகத்தைத் தேடிக் கொண்டேன். பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் அதே குமாஸ்தா உத்யோகம். 1971 ஆம் வருடம், என்னுடைய தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்தினர், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே அதிகாரிகளாகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என அறிவித்தனர். அச்சூழலில் எனக்குத் திருமணமாகி இரண்டு குழநநதைகள், மேற்கொண்டு படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்ற நிலையில், எனது உத்யோகம் எனக்கு ஒரு சூன்யமாகத் தெரிந்தது. பட்டப் படிப்பில் சேர்வதற்கும், நான் முதலில் பள்ளி மேநிலை இறுதியாண்டை முடிக்க வேண்டுமே!

பள்ளி மேநிலை முதலாண்டில் சேர்வதற்காக, அலிபூர் ரோடு, தில்லியில் இருக்கும் சிபிஎஸ்சி வழி தொலைதூரக் கல்வி அலுவலகத்திற்கு எனது வெஸ்பா ஸ்கூட்டரில் விரைந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. தபால் மூலமாகத் தொலைதூரக் கல்வியில் பதிவு செய்து கொள்ள அதுவே இறுதி தினம். அந்த அலுவலகத்திலிருந்த அனைத்து விண்ணப்பப் படிவங்களும் விற்றுத் தீர்ந்திருந்தன.

மிகுந்த ஏமாற்றத்துடன், அடுத்து என்ன செய்யலாம் என்று செய்வதறியாது அங்கு குழம்பி நின்று கொண்டிருநநத சமயத்தில், அங்கு வந்த ஒரு முதியவர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அவரிடம் நடந்ததைக் கூறி, நான் இக்கல்வியில் சேர, மேலும் ஒரு கல்வியாண்டு காத்திருக்க வேண்டும் என்ற சோகத்தைக் கூறினேன்.

பரவாயில்லை, உனக்கு உண்மையாகவே இவ்வயதில் மேலும் படிக்க ஆர்வமிருப்பின், என்னுடன் எனது வீட்டிற்கு வா! அங்கு ஒரு காலிப் படிவம் வைத்திருக்கிறேன், என்றார் அவர்.

அச்சமயம் நேரம் மதியம் 12.30. நிரப்பப்பட்ட படிவங்கள் பெறுவது பகல் 2 மணியோடு முடிந்ததுவிடும். அவருடைய வீடோ 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அதுவுமில்லாமல் அறிமுகமில்லாத நபரோடு செல்லவும் ஒருவித தயக்கம்.

எனினும் அச்சூழலில் கிட்டிய ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய வாய்ப்பைக் கைகழுவ மனமின்றி, அவரைப் பில்லியனில் அமர்த்திக் கொண்டு, அந்த நெரிசலான போக்குவரத்தினூடாக மிகவும் துரிதமாகச் சென்று அவர் வீட்டை அடைந்தேன்.

வீட்டை அடைந்ததும், எனக்கு குடிக்க நீர் கொடுத்து என்னை ஆஸ்வாசப் படுத்தினார். பதட்டப் படாமல் இருக்குமாறு கேட்டு கொண்டு, படிவத்தையும், பேனாவையும் கொடுத்து, அங்கேயே நிரப்புமாறும் கேட்டுக் கொண்டார். பிறகு விரைவாகவும், கவனமாகவும் சென்று படிவத்தைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் திரும்பவும் அலுவலகத்தை அடைந்த போது நேரம் சரியாக 1.58. எனக்கு முன்னரே மூவர் வரிசையில் படிவத்தைக் கொடுப்பதற்காகக் காத்திருந்தனர். நல்ல வேளையாக, என் படிவத்திற்குப் பிறகு, எவருடையதும் பெறப்பட மாட்டாது என அங்கிருந்த அதிகாரி அறிவித்தார்.

பிறகு மேநிலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, 1975 ஆம் ஆண்டு தில்லி பல்கலையிடமிருந்து பி ஏ பட்டமும் பெற்றேன். பிறகு நான் ஏங்கிய பதவியுயர்வுகளும் பெற்று, 1997 இல் சீனியர் அசிஸ்டெண்ட் மேனேஜராக ஓய்வு பெற்றேன். இன்றளவும், பெயர் கூடக் கேட்க மறந்த, சரியான சமயத்தில் உதவி செய்த அந்தப் பெரியவருக்கு நான் மிகவு கடமைப்பட்டிருக்கிறேன்.

(மூலம் : கோவிந்த் எஸ்.பட்நாகர், புனே)

நன்றி: ரீடர்ஸ் டைஜிஸ்ட், தமிழில் யதிராஜ்
அடுத்த பாகம் நாளை...
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger