News Update :
Powered by Blogger.

விஷாலுடன் இணையும் ஸ்ருதி கிசுகிசுக்குது கோடம்பாக்கம்.

Penulis : karthik on Sunday 4 March 2012 | 22:45

Sunday 4 March 2012

 

திருவின் சமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். ஜோடி த்‌ரிஷா என்பதால் இந்தப் படம் விஷாலுக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

இதையடுத்து அவர் நடிக்கப் போகும் படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். நடிப்புக்கு பேக்கப் சொன்ன சுந்தர் சி. மசாலா கஃபே படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதையடுத்து விஷாலை அவர் இயக்குவார் என தெ‌ரிகிறது. படப்பிடிப்பு ஏப்ர‌ல் 12 தொடங்கும் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில்.

இந்தப் படத்தின் விசேஷம், ஸ்ருதி. விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி நடிப்பார் என இப்போதே கிசுகிசுக்குது கோடம்பாக்கம்.

comments | | Read More...

தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர்

 


நடிகர் தனுஷ், இந்தியில் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் இளம் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க இருக்கிறார். கொலவெறி பாடல் மூலம் பிரபலமான நடிகர் தனுஷூக்கு இந்தி படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனந்த எல்.ராய் இயக்கும் இப்படத்திற்கு ராஞ்ஜா என்று பெயரிட்டுள்ளனர். காசியை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷூக்கு ஏற்ற நாயகியை தேடி வந்தார் டைரக்டர்.

இந்நிலையில் நடிகர் அனில் கபூரின் மகளும், பாலிவுட்டின் இளம் நாயகியுமான சோனம் கபூர், தனுஷூக்கு ஜோடியாக்க நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய அப்பாவை போல, சோனமும் தென்னிந்திய படவுலகில் தொடர்பு வைத்து கொள்ள விரும்பவதால், அவர் இந்தபடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே 2 இந்தி படங்களில் சோனம் கபூர் நடித்து வருவதால், தனுஷ் படத்துக்கு கால்ஷீட் தருவதில் பிரச்னை எழும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
comments | | Read More...

ப்ரபுதேவா போய் ஜெயம்ரவி- நயன்தாராவின் அடுத்த ரவுண்ட்

 


ஜெயம் ரவியை வைத்து சமுத்திரகனி இயக்கும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

பிரபு தேவாவைத் தி்ருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறி, சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்த நடிகை நயன்தாரா, இப்போது பிரபுதேவாவுடன் டூ விட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து மீண்டும் நடிப்புக் கடலில் குதித்துள்ளார் நயனதாரா.

தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜீத்தின் பில்லா 2 படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போவார் என்று கூறப்படுகின்றது. சிம்பு கூட மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடப்பதாகவும் பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் சமுத்திரகனியின் படத்தில் நயனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. சமுத்திரகனி தற்போது கன்னட படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதை முடித்த பிறகு தமிழில் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதில் ரவிக்கு ஜோடியாக திரையுலகிற்கு மறுபிரவேசம் செய்துள்ள நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

முதன்முறையாக ரவி, நயன்தாரா ஜோடி சேரவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நயன் மீண்டும் நடிக்க வந்ததையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. வெள்ளித்திரையில் மீண்டும் நயனைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

சும்மாவா, ஒரு கோடி வாங்கிய ஒய்யாரமான ஹீரோயினாச்சே, மறுபடியும் நடிக்க வந்தால் விடுவார்களா என்ன…!
comments | | Read More...

1500 கோடி ரூபா செலவில் தயாரான படம் தமிழில்



ஜான்கார்டன். மாவீரன் என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகிறது. ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் செலவில் தயாரான ஆங்கில படம் ஜான்கார்டர். ஜான்கார்டன் அமெரிக்க படையை சேர்ந்த வீரன் பல நாடுகளில் போர் புரிந்த பிறகு தனது வாழ்க்கையை சுரங்கத்தை தேடுவதில் அர்ப்பணிக்கின்றான். ஒரு தேடுதலில் ஆதிவாசிகளால் துரத்தப்பட்டு ஒரு குகைக்குள் நுழைகிறான். அந்த குகைக்குள் அற்புத நிகழ்வு நடக்கிறது. மாற்று கிரகத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான். அந்த கிரகத்தில் அபரிமித சக்தி கிடைக்கிறது. அங்குள்ள பயங்கர மிருகங்களுடன் போரிட்டு அந்த கிரகவாசிகளை காப்பாற்றுகிறான். பறக்கும் கப்பல், அபூர்வ இரட்டை விமானம், 12 அடி உயர மனிதர்கள், வினோத விலங்குகள் என படம் முழுக்க கிராபிக்ஸ் பிரளயம் நடத்தி உள்ளனர். இப்படத்தைஆண்ட்ரு ஸ்டான்டன் இயக்கி உள்ளார். மார்ச் 9ம் தேதி தமிழக மெங்கும் ரிலீசாகிறது.
comments | | Read More...

சாமியாரானார் சகீலா



நடிகை ஷகிலா புதிய படமொன்றில் பீரானந்தி ஸ்வாமியாக நடிக்கிறார். மலையாள கவர்ச்சிப் படங்களில் நடித்து வந்த ஷகீலா கடந்த சில ஆண்டுகளாக அந்த மாதிரியான படங்களில் நடிப்பதில்லை. தமிழ் சினிமாவில் கவுரவ தோற்றங்களில் நடித்து வரும் அவர், தற்போது தமிழ் படம் ஒன்றில் சாமியார் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சாமியாரின் பெயர் பீரானந்தி. பீர் குடித்துவிட்டு குறி சொல்லும் கேரக்டர் ஷகீலாவுக்கு.

ஆசாமி என்ற பெயரில் இந்தப் படம் தயாராகி வருகிறது. படத்தில் போலி சாமியாராக நடிக்கிறார் ஷகீலா. சாமியார்களை சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கப் போகும் இந்த ஆசாமி படத்தை ஏழுமலையான் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
comments | | Read More...

இந்திக்கு போகும் ஷாம்

 


தமிழில் 12 B திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் ஷாம் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்தப் படத்திற்காக 10 கிலோ எடை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர் நடித்துள்ள 6 தமிழ் திரைப்படம் இந்த கோடையில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
comments | | Read More...

முத்தகாட்சியில் 30 டேக் வாங்கிய நாயகி

 


கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் ரகுநாத். இவர் தனது சொந்த தயாரிப்பில் இயக்கும் படம் `சிறுவாணி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறுவாணி அணை மற்றும் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள ரேஸ்கோர்ஸ் ரகுநாத், மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது :-

சிறுவாணி' கோவை மக்களின் தாகத்தை தீர்ப்பதை போல எனது சிறுவாணி படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் பரபரப்பாக தயாராகி வருகிறது. 1980 களில் வெளிவந்த ஊமை விழிகள், சமீபத்தில் வெளி வந்த `மைனா' போன்ற அருமையான கதையம்சம் கொண்ட படம்.

பிரபல நாவலாசிரியர் ராஜேஸ்குமார் கதைக்கு திரைக்கதை அமைத்து படத்தை நானே இயக்குகிறேன். படத்தில் 5 பாடல்கள் மெல்லிய மெலடி, குத்துப்பாட்டு, ரம்மியமான பாடல் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக காதிற்கு இனிமையான பாடல்களை இசையமைப்பாளர் தேவா தந்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக அந்தமான் சென்று வந்தோம். அங்கு கடலில் கதாநாயன் சஞ்சயும், கதாநாயகி ஐஸ்வரியாவும் இணைந்து பாடல் காட்சியின் போது முதுலை வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கதாநாயகியை பத்திரமாக மீட்டோம்.

தொடர்ந்து ஏனடா…! ஏனடா…! கண்ணிலே மின்சாரம் என்ற பாடல்காட்சியை 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்ஜ் பகுதியில் படமாக்கினோம். அப்போது கதாநாயகன் சஞ்சய் ஐஸ்வரியாவின் கையை பிடித்து மெதுவாக இழுத்து இதழில் முத்தமிடுவது போல் காட்சி அமைத்திருந்தேன். ஐஸ்வர்யா குறுப்புக்கார பெண் என்பதால் இந்த முத்த காட்சியில் நடிக்க 30 டேக் வரை திரும்ப திரும்ப வாங்கினார். நேரம் வேறு இருட்டிக் கொண்டிருந்தது. பின்னர் தனது தவறை உணர்ந்து முத்த காட்சியை சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.

ஒருவருக்கொருவர் -குடும்பமாய் இருந்து சிறப்பான முறையில் படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பினோம். தற்போது சிறுவாணி அணைப் பகுதியில் இறுதிகட்ட படப்பிடிப்புக்கான லொக்கேசனை தேர்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger