News Update :
Powered by Blogger.

காதல் புஸ்வானம் குறித்து நயன்தாரா நச்சுனு பேட்டி!!

Penulis : karthik on Sunday 1 April 2012 | 23:27

Sunday 1 April 2012

 
 
நான் என்னுடைய காதலில் 100 சதவீதம் உண்மையாகத்தான் இருந்தேன். ஆனால் அவர் அப்படி இல்லை என்று பிரபுதேவா உடனான காதல் முறிவு குறித்து நடிகை நயன்தாரா முதன்முறையாக மனம் திறந்துள்ளார். சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் வாடிய நயன்தாராவுக்கு, வில்லு படம் மூலம் பிரபுதேவாவின் அன்பு கிடைத்தது. பின்னர் அந்த அன்பு காதலாக மாறியது. நயன்தாராவுக்காக பிரபுதேவா, தனது காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
நயன்தாராவோ பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார். மேலும் அவரது பெயரான பிரபுதேவா என்பதை பிரபு என்று ‌சுருக்கி கையில் பச்சை எல்லாம் குத்திக்கொண்டார். சீக்கிரத்தில் மாலையும்-கையுமாக காட்சியளிப்பாளர்கள் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், தங்களது காதலை முறித்து கொண்டுள்ளனர் இருவரும். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது கைவசம் 4 படங்களை வைத்து கொண்டு பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் பிரபுதேவாவுடனான காதல் முறிவு குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் நய‌ன்தாரா. அவர் கூறியதாவது, காதல் வாழ்க்கையிலும் சரி, திருமண வாழ்விலும் சரி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது இருக்கத்தான் செய்யும். இதனால் அவர்களுக்குள் லேசான மனகசப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால் அந்த மனகசப்பு சீக்கிரத்திலேயே சரியாகி விட வேண்டும். இல்லை என்றால் காதல் முறிவு, விவாகரத்து போன்றவற்றுக்கு வழிவகுக்கும். அப்படித்தான் என் வாழ்விலும் ஏற்பட்டு விட்டது. காதலுக்காக எதையும் செய்ய நான் தயாராகத்தான் இருந்தேன். பல விஷயங்களை விட்டுக்கொடுத்தேன். இருந்தும் திருமணம் வரை சென்ற எங்களது காதல் கடைசியில் முறிந்துவிட்டது.

நான் என்னுடைய காதலில் 100 சதவீதம் உண்மையானவளாக இருந்தேன். ஆனால் பிரபுதேவா அப்படி இல்லை. சில விஷயங்களை என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதனால் பிரச்னைக்கு மேல் பிரச்னை. எப்போது என்னுடைய உண்மையான காதலுக்கு மதிப்பில்லையோ அப்போ‌தே அந்த உறவு முறிந்து விட்டது. எப்போது ஒரு உறவு சரியாக இல்லையோ, அப்போது எல்லாமே மாறி விடுவது இயற்கைதானே? உலகில் நிலையானது என்று எதுவும் கிடையாது. மக்கள் மாறுகின்றனர். சூழ்நிலைகள் மாறுகின்றன. செயல்பாடுகள் மாறுகின்றன. அதுபோன்றதொரு மாற்றம், என்னை பிரியச் செய்தது. எங்களது காதல் இப்படி பாதியிலேயே முறிந்து போகும் என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. இதற்கு மேல் இந்த விஷயத்தை பற்றி நான் விரிவாக பேச விரும்பவில்லை என்றார். மேலும் பாலிவுட் படங்களில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் தென்னிந்திய படங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாகவும் நயன்தாரா கூறியுள்ளார்.

இதனிடையே பிரபுதேவா நினைவாக பிரபு என்று தன் கையில் குத்தியிருந்த பச்சையை இப்போதும் அழிக்காமல் தான் உள்ளார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

விகடன் பார்வைக்கு சில அசத்தல் ட்விட்டுகள் - சிறப்பு வலைபாயுதே...

 
: நாம் எடுக்கும் எந்த போட்டோவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, நம்முடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடம்பெற !

: குருட்டு பிச்சைக்காரன் தொலைத்த புல்லாங்குழலை எடுத்து கொடுக்கிறான் பார் - அவன் கடவுள்.


பேலன்ஸ் இல்லன்னு ATM வெறுப்பேத்துச்சு... பதிலுக்கு நாலு தடவ மினி ஸ்டேட்மன்ட் எடுத்து நான் அத வெறுப்பேத்திட்டேன். :-)


உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லை என்றால், நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.


"எல்லாப் புகழும் இறைவனுக்கே" என ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி குறிப்பிடுவது இளையராஜாவைத் தானோ!


கற்பனையில் பறக்கும் சில குதிரைகள், நிஜ வாழ்வில், கழுதைகளிடம் தோற்றுப்போகின்றன!


ஈழ தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுனா, காங்கிரஸ் அகராதியில் மிச்சமிருப்பவர்களையும் முடிச்சிடுனு அர்த்தம்!


ஏண்டா எங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கள கரெக்ட் பன்றத தவிர வேற வேலயே இல்லயா#டிவி விளம்பரம் பாத்தாலே கடுப்பு ஆகுது.


மின்வெட்டு குறித்து கருணாநிதியை எச்சரித்தேன்- சிதம்பரம்# அதான் சட்டினிய கரண்ட் போறத்துக்குள்ள மிக்சில அரைச்சுகிட்டாங்க.!!


சாலையில் கிடக்கிறது சல்லி சல்லியாய்..... மலையின் ஆணவம்!
http://bharathbharathi.blogspot.com
 
கோமதியை கோம்ஸ் என்று கூப்டுவதை போல ஈமு கோழியை #ஈம்ஸ் என்று சுருக்கி கூப்பிடலாமே !

டேமேஜர்ங்கிறவன் "ஒரு சப்ப மேட்டர குழப்புற மாதிரி சொல்லி அந்த குழப்புத்துக்கு காரணம் நீங்கதான்னு உங்களையே நம்ம வைக்கிறவன்!"

: பாகிஸ்தானிற்கு மின்சாரம் வழங்குகிறது இந்தியா # சானியா மிர்சாவையே சம்சாரமா கொடுத்தாச்சு, இனி எதை கொடுத்தா என்ன?

பட்ஜெட் அறிக்கையை கிழித்து கருணாநிதி முகத்தில் எறிந்தது யார்? ஜெவுக்கு ஸ்டாலின் கேள்வி#முக: விடுப்பா. அதான் எறிஞ்சாச்சுல!

பூவா தலையா? பூ விழுந்தால் நான் உனக்கு, தலை விழுந்தால் நீ எனக்கு..

நல்ல தூக்கத்தில்...நம் குறட்டை `சப்தம்` நமக்கே கேட்காமல் இருப்பதுதான்...நாம் செய்த பூர்வ புண்ணியம்!

நம்மை கடுப்பேற்றவே படைக்கப்பட்டவர்கள்# பார்க்கிங் ஏரியாவில் வேலை செய்யும் செக்கியுரிட்டீக்கள்..
IPL 2012 - Complete Schedule.

அரசியல் பாதையை தேர்வு செய்தது தவறு,டென்னிஸிலேயே இருந்திருக்கலாம் .ப.சி #அங்க வீடியோ எடுப்பாங்க,கோல்மால் செஞ்சு ஜெயிக்கமுடியாது
 
கோயிலில் சாமியாடும் போது மட்டும் பாய்ந்து வரும் கடவுள்கள் ஏனோ வரவேண்டிய நேரங்களில் வருவதில்லை.

: மனைவியை முழுமையாக புரிந்துகொள்ளும் போது மணிவிழா கொண்டாடப்படுகிறது!"

எல்லா நகைச்சுவையாளனுக்குள்ளும் ஓர் ஆறாத காயம் பத்மாஸனமிட்டு அமர்ந்திருக்கிறது எப்போதும்!

ஜெ.வை போயஸ்கார்டனில் சந்தித்தார் சசி#சசிகலாவை திருமணத்தில் சந்தித்தார் நடராஜன்#நடராஜன் திருமணத்தை நடத்திவைத்தார் கலைஞர்.
வடகரை வேலன் #FB

திமுக தலைவருக்கு ஒரு கேள்வி "அந்த தியாகிய வெளிய கொண்டுவர ஏதாவது திட்டம் இருக்கா? இல்லையா?"

காலை நேரத்தில் முயலாகவும், வேலை நேரத்தில் ஆமையாகவும், மாலை நேரத்தில் தீயாகவும், கடிகாரங்கள் பணிசெய்கின்றன!

கடந்த 24 வருஷத்தில் கரகாட்டக்காரன் சண்முகசுந்தரத்துக்கு அடுத்து இத்தனை அக்கா போட்டது இந்த தங்கச்சிக்காதான் #சசிகலாஅறிக்கை

ஐசோட மூணு நெலவரத்த பாத்தா சவுந்தர்யாவோட கோச்சடயான்.? கலவரமா இருக்குப்பா

உலகின் பயங்கரமான தீவிரவாதகுழுக்கள்;அல்கொய்தா,லஸ்கர்- இ-தொய்பா,ஹிஜுபுல் முகாஜுதின் மற்றும் கும்பலாக இருக்கும் கல்லூரி பெண்கள்.
 
மின்சாரம் போனதிலிருந்து அழுது கொண்டேயிருக்கிறது பக்கத்து வீட்டுக் குழந்தை #அம்மாவின் திராணி குழந்தைக்கு இல்லை.

மின்சாரப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு...

ஏம்ப்பா இந்த விகடன்ல ட்விட் வர்றதுக்கு எதாவது காச கீச குடுத்து மூவ் பண்ண முடியுமா?

வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்க்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது..

ஒருவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதை விட...ஊழல் செய்ய கற்று கொடுங்கள்;அது அவன் பரம்பரைக்கே பயன்படும்:-)

எல்லாக் கட்டணத்தையும் உயர்த்திய அம்மாக்கு ஒரு வேண்டுகோள்: சம்பளத்தையும் கட்டணமா நினச்சு ஒரு 50% உயர்த்திருங்க!!

விவசாயிகளிடம் அரசியல் கற்றுக்கொண்டேன் -ராகுல்#அப்படியே இட்லிகடை ஆயாவிடம்,ப்ளைட்ஓட்ட கத்துக்கிட்டா,சீக்கிரம் பிரதமர் ஆகிடலாம்.

எல்லா காலையும் கவலையுடனும் எல்லா மாலையும் கேள்வியுடனும் முடிந்தால் உன் வேலையை மற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்றர்த்தம் !

விலையேற்றத்தை முன்னிட்டு காற்றடிக்க சைக்கிள் வீல் ஒன்றுக்கு RS.2 ,டூ வீலர்களுக்கு வீல் ஒன்றுக்கு RS.5 # டேய் டக்ளஸு நீயுமாடா???

நான் எனக்குப் போட்டுக்கிற சோப்பு ஒரே பிராண்ட்தான். ஆனா மத்தவங்களுக்குப் போட்ற சோப்பு வேற வேற பிராண்ட்ஸ்.
இதுல எதுவும் விகடனாருக்கு பிடிக்கலைனா... பெரும் அக்கப்போராக அல்லவா போய்விடும்..டும்..டும்..'
டிஸ்கி:
இந்த ட்விட்களில் உங்கள் மனம் ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிங்களேன்.. இதில் இல்லாத வேறு ட்விட் ஏதேனும் இருந்தாலும் மகிழ்ச்சியே!
comments | | Read More...

அமெரிக்காவின் இரட்டை வேடம்: நஷீத் புலம்பல்!



மாலே:’துப்பாக்கி முனையில் ஆட்சியை பறிகொடுத்த என்னை அமெரிக்கா ஆதரிக்கவில்லை’ என்று முன்னாள் மாலத்தீவு அதிபர் முஹம்மது நஷீத் கூறியுள்ளார். ‘அமெரிக்காவின் தத்துவங்களுக்கு கட்டுப்பட்டு நான் ஆட்சியை நடத்தினேன். ஆனாலும், அமெரிக்கா என்னை ஆதரிக்கவில்லை’ என்று நஷீத் கூறுகிறார். ‘தி ஐலண்ட் பிரசிடண்ட்’ என்ற டாக்குமெண்டரின் பிரச்சாரத்திற்காக அமெரிக்காவிற� �கு வருகை தந்துள்ளார் நஷீத். மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணும் இஸ்லாமிய சமூகத்தை வார்த்தெடுக்க நான் முயன்றேன். ஆனால், எனது ஆட்சியை கவிழ்த்த முஹம்மது வஹீதியை அமெரிக்கா ஆதரிக்கிறது [...]

http://sex-story7.blogspot.com

comments | | Read More...

பிரதமருக்கு வி.கே.சிங் எழுதிய கடிதம் குறித்து புலனாய்வுத்துறை இரகசிய விசாரணை



டெல்லி:நாட்டின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலவீனமாக இருப்பதாக பிரதமருக்கு வி.கே.சிங் எழுதிய கடிதம் அண்மையில் ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து வி.கே.சிங் தெரிவித்த கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என்று ஒருசாரார் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கும் தமக்கும் இடையே பிளவை ஏற்படுத்த “தீ� �� சக்திகள்” முயற்சித்து வருவதாக வி.கே.சிங் நேற்று குற்றம்சாட்டினார். “எனக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் கருத்துகளில் உண்மையில்லை. ஒவ்வொரு பிரச்னையையும் அரசுக்கும் [...]

http://sex-story7.blogspot.com

comments | | Read More...

புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் சாலை விபத்தில் பலி



புதுக்கோட்டை:புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.பி. முத்துக் குமரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் வசித்து வருக� �றார். முத்துக்குமரனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பி.காம் படித்தவரான இவர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அன்னவாசலில் உள்ள தனது கட்சித் தொண்டர் பழனிச்சாமி வீட்டில் துக்கம் [...]

http://kaamakkathai.blogspot.com

comments | | Read More...

அணுமின் சக்தியிடம் ஏன் இந்த பாசம்?



அணுமின் சக்தி துறை குறித்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்ல 2032-ஆம் ஆண்டு அணுமின்சக்தியின் உற்பத்தியை 62 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கப்படும் என்பதும் மன்மோகன்சிங்கின் பிரகடனத்தில் அடங்கிய முக்கிய வாக்குறுதியாகும். அணுகதிர் கசிவை தடுக்கும் உயர் தொழில்நுட்ப � �சதிகளை குறித்தும் நமது பிரதமர் பேசுகிறார். அதைப் போலவே சுதந்திர பொறுப்பை வகிக்கும் ‘நியூக்ளியர் ஸேஃப்டி ரெகுலேட்டரி அதாரிட்டி’ அதாவது அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் நிறுவும் [...]

http://sirappupaarvai.blogspot.com

comments | | Read More...

எகிப்து அதிபர் தேர்தல்:12 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை கழித்த கைராத் அல் ஷாதிர் இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர்!



கெய்ரோ:எகிப்தில் அதிபர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளரை இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது. தொழிலதிபரும் இஃவானுல் முஸ்லிமீனின் துணைத் தலைவருமான கைராத் அல் ஷாதிர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். கடந்த நவம்பர் மாதம் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சிய� ��க இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட்ஜஸ்டிஸ் கட்சி மாறியது. துவக்கத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இஃவானுல் முஸ்லிமீன் முடிவு எடுத்தது. ஆனால், ராணுவ அரசு [...]

http://sirappupaarvai.blogspot.com

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger