News Update :
Powered by Blogger.

பெண்களுக்கு கைப்பையாக பயன்படும் பிரா...!!

Penulis : karthik on Saturday 29 September 2012 | 05:01

Saturday 29 September 2012




பெண்களுக்கு கைப்பையாக பயன்படும் பிரா...!!


இனி வரும் காலங்களில் பெண்கள் கைப்பையைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

அதற்குத் தான் புதிய கண்டு பிடிப்பு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிராவின் சைட் பாகங்களில் ஐ போன் மற்றும் கிரடிட் காட்களை வைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தான் இங்குள்ள விசேடம்.

Seattle's வாஷிங்டன் பலகலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தான் மேற்படி அரிய கண்டு பிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த பிராவில் வங்கி அட்டைகள், ஐடி காட்டுக்கள், மொபைல் போன்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைக்க முடியுமாம்.

Add caption
Add caption




comments | | Read More...

அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்


அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்

சென்னை, செப்.29-
 அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் சி, டி. பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு சார்ந்த துறைகளில் சி மற்றும் டி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத ஊக்கத் தொகை சேர்த்து மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படுகிறது. சி பிரிவில் இளநிலை உதவியாளர்களில் தொடங்கி சூப்பிரண்டு வரை உள்ளனர். டி பிரிவில் அலுவலக உதவியாளர் (ஓ.ஏ.) வாட்ச்மேன் போன்றோர் வருகின்றனர். இந்த இரு பிரிவிலும் மொத்தம் 50 ஆயிரம் பேர் வரை பணியாற்றுகிறார்கள். அவரவர் அடிப்படை சம்பளத்தை பொறுத்து போனஸ் கிடைக்கும். இதற்கான அரசாணையை தமிழக அரசின் நிதித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

comments | | Read More...

வாழப்பாடி அருகே நெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி



வாழப்பாடி அருகே நெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி வாழப்பாடி அருகே நெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

வாழப்பாடி, செப்.29-

வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கிழக்குகாடு சமயபுரம் கோவில் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடாஜலம். அவரது மனைவி வள்ளி (40). கடந்த பத்தாண்டுகளாக கருப்பு நிற வெள்ளாடு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த ஆடு, மூன்று பெட்டை ஆட்டுக் குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டிக்கு மட்டும் இரு கண்களுக்கு பதிலாக, நெற்றில் நடுவில் ஒரே ஒரு நெற்றிக்கண்ணுடன் பிறந்தது. முகத்தை விட்à ��ு சற்று வெளியே பிதுங்கியபடி இருக்கும் அந்த நெற்றிக்கண்ணில் இரு கரு விழிகள் இருந்தது. தாடை பகுதி வளைந்து காணப்பட்டதால் அந்த ஆட்டுக்குட்டியால் தாயின் மடியில் இருந்து பால் குடிக்க முடியவில்லை.

அந்த அதிசய ஆட்டுக்குட்டிக்கு பெண் விவசாயி வள்ளி இரு தினங்களாக மாட்டுப்பால் கொடுத்து வந்தார். நெற்றிக்கண்ணுடன் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது குறித்து தகவல் வெளியானதால், அந்த அதிசய ஆட்டுக்குட்டையை ஏராளமானோர் பார்த்து சென்றனர். நெற்றிக்கண்ணுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை கடவுள் கொடுத்த பரிசாக கருதி, பால் மற்றும் மருந்து வாங்கி கொடுத்து வளர்த்தப் போவதாக பெண் விவச ாயி வள்ளி தெரிவித்தார்.

ஆனால், துரதிஷ்டவசமாக அந்த நெற்றிக்கண் ஆட்டுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. பெண் விவசாயி வள்ளி குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களே சோகமடைந்தனர்.

comments | | Read More...

ராஜபாளையம்: மாநில அளவிலான கபடி போட்டிகள் 25 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு



ராஜபாளையம்: மாநில அளவிலான கபடி போட்டிகள் 25 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு ராஜபாளையம்: மாநில அளவிலான கபடி போட்டிகள் 25 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

ராஜபாளையம், செப். 29-

ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப் பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அம்மா சுழற்கோப்பைக்காக ஆடவர் மற்றும் மகளிர்களுக்கு இடையே மூன்று நாட்கள் நடைபெறும் 26-வது மாநில கீழ் இளையோர் கபடி சேம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட கபடிக்கழக சேர்மனும், நகர்மன்ற உறுப்பினருமான மணிகண்டராஜா தலைமை வகித்தார்.

நகர்மன்ற துணை தலைவர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. நகர செயலாளர் கவுன்சிலர் பாஸ்கரன், நகர பேரவை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்ட கபாடி கழக தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராம்சிங், கபாடி கழக மாநில துணை தலைவர் கபாடி ஏ.பி.எஸ். ராஜா ஆகியோர் வரவேற்று பேசினார்கள். மாநில கபாடி கழக பொதுச்செயலாளர் சபியுல்லா, மாநில துணைத்தலைவர் நாகராஜன், டைகர் பிராண்ட் ரோலிங் ஷட்டர் உரிமையாளர் டைகர் சம்சுதீன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

மகளிர்களுக்கு இடையேயான போட்டிகளை நகர் மன்ற தலைவர் தனலட்சுமி செல்வசுப்பிரமணிய ராஜாவும், ஆடவர்களுக்கு இடையேயான போட்டிகளை மாவட்ட பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணிய ராஜாவும் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் போட்டிகள் நடத்தப்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு தங்கத்தாரகை அம்மா சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச உள்ளார்.

மாநிலம் முழுவதும் இருந்து 25-க்கும் மேற்பட்ட அணி முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். இங்கு தேர்வு செய்யப்படும் தமிழ்நாடு அணிகள் ஆந்திர மாநிலம் ஹனுமன் சந்திப்பில் நடைபெற இருக்கும் 26-வது தேசிய போட்டிகளில் பங்கு பெறுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாநில கபடி கழகத் துணை தலைவர் கபடி ஏ.பி.எஸ். ராஜா, விருதுநகர் மாவட்ட கபடிக் கழக சேர்மன் மணிகண்டராஜா ஆகியோர் செய்து உள்ளனர். தொடக்க நாளை முன்னிட்டு கபடி வீரர், வீராங்கனைகள் பழைய பேருந்து நிலையம் முன்பிருந்து ஊர்வலமாக அணிவகுத்து சென்று விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர்.

comments | | Read More...

கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது



கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது

மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் பழைய நாயகன் கார்த்திக் மகன் கவுதமும் பழைய நடிகை ராதாவின் மகள் துளசியும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது.

படத்தின் கதை மற்றும் கேரக்டர் விவரங்களை மணிரத்னம் ரகசியமாக வைத்துள்ளார். படப்பிடிப்புக்குள் அன்னியர் பிரவேசிப்பதை தடுக்க தனியார் செக்யூரிட்டிகளும�¯ நிறுத்தப்பட்டு உள்ளனர். இருவர் படங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு விளம்பரபடுத்த கார்த்திக், ராதா விரும்புகின்றனர். ஆனால் மணிரத்னம் இதற்கு சம்மதிக்கவில்லை.

கடல் படம் ரிலீஸ்வரை கவுதம், துளசி படங்களை வெளியிடக் கூடாது என்று தடை விதித்துள்ளார். இதனால் இருவரையும் பொது நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்கள் வீடுகளுக்கும் அனுப்பாமல் கவனித்து வருகிறார்கள். அவ�® �்களின் போட்டோ ஆல்பங்களையும் பெட்டியில் வைத்து பூட்டி விட்டனர்.

சமீபத்தில் துளசி பத்திரிகையொன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னை போட்டோ எடுக்க கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார். இருவரையும் அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். படப்பிடிப்புகளில் செல்போனில் படம் எடுக்கவும் முயற்சிக்கின்றனர். ஆனால் இதுவரை முயற்சி பலிக்கவில்லை.

comments | | Read More...

சிலிண்டர் வெடித்து விபத்து: தீக்காயம் அடைந்த சிறுவனும் சாவு குடும்பமே பலியான பரிதாபம்


சிலிண்டர் வெடித்து விபத்து: தீக்காயம் அடைந்த சிறுவனும் சாவு குடும்பமே பலியான பரிதாபம் சிலிண்டர் வெடித்து விபத்து: தீக்காயம் அடைந்த சிறுவனும் சாவு குடும்பமே பலியான பரிதாபம்

பெரம்பூர், செப். 29-
 கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி லதா. இவர்களது மகன்கள் வினோத் (11), விக்னேஷ்(7).   கடந்த 25-ந்தேதி காலை 6.30 மணியளவில் இவர்களது வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் லதா வீட்டுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். கதிரேசன், வினோத், விக்னேஷ் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினர். உடனடியாà �• அவர்கள் 4 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே லதா பரிதாபமாக உயிர் இழந்தார்.   மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.  உயிருக்கு பேராடிய கதிரேசனும், வினோத்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் 26-ந்தேதி நள்ளிரவு இறந்தனர். விக்னேஷ் மட்டும் சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல ் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இன்று விக்னேசும் பலியானான். கியாஸ் சிலிண்டர் தீ விபத்தில் அந்த குடும்பமே பலியாகி உள்ளது. இந்த பரிதாப சம்பவம் முத்தமிழ் நகர் பகுதியில் சோகத்தை ஆழ்த்தி உள்ளது.

comments | | Read More...

திருமங்கலம்: பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் பறிப்பு வாலிபர் ஓட்டம்



திருமங்கலம்: பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் பறிப்பு வாலிபர் ஓட்டம் திருமங்கலம்: பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் பறிப்பு வாலிபர் ஓட்டம்

திருமங்கலம், செப். 29-

மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் மாரியம்மாள், இவரது மகள் முருகேஸ்வரி. இவருக்கு திருமணமாகி விருதுநகரில் குடியிருந்து வருகிறார். நேற்று மாரியம்மாள் தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் முருகேஸ்வரியிடம் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கிவிட்டு பஸ்சில் ஊருக்கு வந்தார். அவருடன் முருகேஸ்வரியும் வந்தார்.

முருகேஸ்வரி ரூ. 40 ஆயிரம் பணத்தை பையில் வைத்திருந்தார். திருமங்கலம் பஸ் நிலையத்தில் பஸ் வந்ததும் தாய்-மகளும் கீழே இறங்கி பெரியார் பஸ் நிலையம் செல்லும் பஸ்சில் ஏற முயன்றனர். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று முருகேஸ்வரி கையில் வைத்திருந்த பணப்பையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார்.

இது குறித்து அவர் திருமங்கலம் டவுண் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை பறித்துவிட்டு ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

comments | | Read More...

புதுக்கோட்டையில் சுனாமி வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்: இயக்குனர் அபூர்வா உத்தரவு



புதுக்கோட்டையில் சுனாமி வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்: இயக்குனர் அபூர்வா உத்தரவு புதுக்கோட்டையில் சுனாமி வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்: இயக்குனர் அபூர்வா உத்தரவு

புதுக்கோட்டை, செப். 29-

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உலக வங்கி உதவியுடன் அவசர கால சுனாமி மறு கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் ராஜீவ் காந்தி புனரமைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மேற்கானும் திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டும் திட்டங்களில் பணி முன்னேற்றம் குறித்த கூட்டத்தில் கட்டிட ஒப்பந்தகாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். சுனாமி வீடுகள் கட்டும் பணிகளை தரமான முறையில் மேற்கொண்டு வருகின்ற 30ந் தேதிக்குள் முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென திட்ட இயக்குனர் அபூர்வா அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் பொறியியல் வல்லுநர் சுரேந்தர் பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சக்திவேல், சுனாமி திட்ட செயற் பொறியாளர் நாகையன், உதவி செயற் பொறியாளர்கள் ராஜேந்திரன், சாகுல் அமீது, புஷ்பராஜ், தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

comments | | Read More...

திருமங்கலம் அருகே 20 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை கணவர் மாமியார் மீது புகார்




திருமங்கலம் அருகே 20 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை கணவர் மாமியார் மீது புகார் திருமங்கலம் அருகே 20 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை கணவர் மாமியார் மீது புகார்

திருமங்கலம், செப். 29-

திருமங்கலம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 31).இவருக்கும் பெரிய பூலாம்பட்டியை சேர்ந்த வசந்தி (29) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 18 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் அவர்கள் கர்நாடகம் சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். பின்னர் அவர்கள் பேரையூர் வந்தனர். அப்போது மஞ்சுநாத் அவரது தந்தை வெள்ளைசாமி, தாயார் ராமுதாய் மற்றும் உறவினர் முத்துமாரி ஆகியோர் 20 பவுன் நகை கூடுதலாக வாங்கி வரும்படி வசந்தியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வசந்தி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கணவர் மஞ்சுநாத், மாமியார் ராமுதாய், மாமனார் வெள்ளைசாமி, மற்றும் முத்துமாரி ஆகியோர் கூடுதல் நகை வாங்கி வரும் படி சித்ரவதை செய்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

comments | | Read More...

பாகிஸ்தானுடன் நாளை மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி



பாகிஸ்தானுடன் நாளை மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நாளை மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

கொழும்பு, செப். 29-

20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி எப் பிரிவில் இடம் பெற்று உள்ளது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி நேற்றைய தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை (30-ந்தேதி) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் 7.30 மணிக்கு நடக்கிறது. அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்திய அணி எஞ்சிய 2 போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

அதோடு ரன்ரேட்டை உயர்த்துவதும் முக்கிய மானது. ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்றதால் ரன்ரேட்டில் பின்தங்கி காணப்படுகிறது. இதனால் பாகிஸ்தானை அபாரமாக வெல்வது அவசியமானது. அதே நேரத்தில் அந்த அணி வலுவாக இருப்பதால் இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்களுடன் விளையாடிய இந்தியாவின் திட்டம் நேற்று எடுபடவில்லை. இதனால் வீரர்களின் மாற்றம் மிகவும் அவசியமானது.

2 ஆட்டத்தில் நீக்கப்பட்ட ஷேவாக் நாளைய போட்டியில் கண்டிப்பாக இடம் பெறுவார். பியூஸ் சாவ்லா நீக்கப்படுவார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பேட்டிங்கும், பவுலிங்கும் மோசமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இதை போக்கி திறமையை வெளிப்படுத்த வேண்டும். யுவராஜ்சிங், ரோகித்சர்மா, கேப்டன் டோனி ஆகியோரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இவர்கள் அதிரடியாக விளையாடுவது இந்தியாவுக்கு அவசியமாகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக பந்து வீச்சில் முத்திரை பதித்த ஹர்பஜன்சிங்கால் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட முடிய வில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டால் தமிழக வீரர் எல்.பாலாஜி அல்லது அசோக் திண்டா சேர்க்கப்படலாம். பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக உள்ளது. கேப்டன் ஹபீஸ், உமர் அக்மல், இம்ரான் நாசிர், ஜாம்ஷெட் நாசிர், கமரன் அக்மல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

பந்துவீச்சில் சுழற்பந்து வீரரான சயீத் அஜ்மல் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். இதுதவிர உமர்குல், அப்ரிடி ஆகியோரும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வென்று இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் காணப்படுகிறது. இரு அணிகளும் உலக கோப்பையில் 2 முறை மோதியுள்ளன. இந்த  இரண்டு ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்று உள்ளது. இதனால் இந்திய அணி இந்த முறையும் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய ஆட்டத்தில் இந்திய தோற்றால் அரை இறுதி வாய்ப்பை இழந்துவிடும். இந்த ஆட்டம் தூர்தர்சன், ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

முன்னதாக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.      

comments | | Read More...

அந்த சமயத்தில் இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க..!!



அந்த சமயத்தில் இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க..!!


சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய எரிச்சலுக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக உறவின்போது செய்யும் சின்னத் தவறுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடலாம். மூடு மாறக் காரணமாகி விடலாம். குறிப்பாக உறவின்போது பெண்கள் செய்யும் சில காரியங்கள், ஆண்களி ன் மூடை ஸ்பாயில் செய்து விடுகிறதாம். எனவே இதை அவர்கள் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.

பெட்ரூமில் மட்டும்தான்... சில பெண்களுக்கு பெட்ரூமில் மட்டும்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள பிடிக்கும். இதை அவர்கள் கண்டிஷனாக கடைப்பிடிப்பார்கள். பெட்ரூமைத் தாண்டி வேறு எங்காவது கூப்பிட்டால் வர மறுத்து விடுவார்கள். பிடிவாதமாகவும் இருப்�® ªார்கள். இது கணவர்களை டென்ஷனாக்கி விடுகிறதாம்.

பெட்ரூமில் மட்டுமல்லாமல், சமையல் அறை, ஹால், மொட்டை மாடி, மாடிப் படி என விதம் விதமான இடங்களில் உறவு வைத்துக் கொள்வதில் ஆண்கள் பொதுவாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதை மனைவி மறுக்கும்போது அந்த கணவனுக்கு எரிச்சலாகி விடுகிறதாம், மூட் அவுட் ஆகி விடுகி றதாம்.

ஆனால் பெண்கள் இவ்வாறு மறுக்க வெட்கம், தயக்கம்தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதேசமயம், செக்ஸ் உறவின்போது இருவருக்கும் நல்ல மூட் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் பாதுகாப்பானதாக கருதினால் கணவன் கூப்பிடும் இடத்திற&# 3021;கு மனைவி போவதில் தயக்கம் காட்டுவது தேவையில்லை என்பது இவர்களின் கருத்து. காரணம், இப்படி வித்தியாசமான இடங்களில் செய்யும்போது கணவனுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் கூட வித்தியாசமான அனுபவம் கிடைப்பதால்.

ஓரல் செக்ஸ்... பல பெண்களுக்கு வாய் வழி உறவில் உடன்பாடு உண்டு என்றாலும் கூட சிலருக்கு இதில் வெட்கம் மற்றும் அறுவறுப்பு இருக்கும். அதெப்படி அதைக் கொண்டு வாயில் ... என்று அவர்கள் தயங்கலாம். இதைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. இருப்பினும் இந்தத் தயக்à ��ம், ஆண்களுக்கு மூட் அவுட் பண்ணி விடுகிறதாம். இதைத் தவிர்க்க முதலில் ஆண்கள் களத்தில் இறங்குவது நல்லதாம். மனைவியிடம் கணவன் முதலில் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் மனைவிக்கு அந்த சுகத்தைப் புரிய வைக்கலாம். பின்னர் இதேபோல எனக்குச் செய் என்று மனைவிà �¯ிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

ஓரல் செக்ஸ் என்பது இருவருக்கும் மனம் ஒத்து வரும்போதுதான் செய்ய முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் ஓரல் செக்ஸ் வேண்டாம் என்று ஆண் கேட்டு பெண் மறுத்தாலும் அல்லது பெண் கேட்டு ஆண் மறுத்தாலும் சரி செக்ஸ் மூட் மாறிப் போய் விடும் அப&#30 06;யம் உள்ளதாம்.

ராத்திரி மட்டும்தான்... சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள பிடிக்கும். பகல், காலை, மதியம் என பிற நேரங்களை அவர்கள் விரும்புவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது உறவ&#3009 ; வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள். அதாவது பசிக்கும்போது சாப்பிட வேண்டும் என்பது அவர்களின் பாலிசி. அதேசமயம், பெண்களோ, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள். இது ஆண்களின் மூ்டை காலி செய்து விடுமாம்.

கடி, கிள்ளு... பெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணைவர், கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் லேசாக கடிப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யும்போது அதை ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். அதேசமயம், இதை மனைவிமார்கள் தங்களுக்குச் செய்ய விரும்பினால&# 3021; பல ஆண்கள் விரும்புவதில்லையாம். வலிக்கும் என்பதுதான் ஆண்கள் இதற்குச் சொல்லும் காரணம். இதையேதான் அவர்கள் மனைவிமார்களிடம் செய்கிறார்கள் என்றாலும், அதையே மனைவி செய்தால் இவர்கள் ஏற்பதில்லை. இதுபோன்று நடக்கும்போது மனைவியருக்கு கடுப்பாகி வ&#300 7;டுகிறதாம். இவர் மட்டும் கடிக்கலாம், நான் கூடாதா என்று அவர்கள் கொதிக்கிறார்கள். எனவே பரஸ்பர கடி, கிள்ளு இருக்குமாறு பார்த்துக் கொள்வது உத்தமமாம்.

இப்படி சின்னச் சின்னத் தவறுகள் நிறைய இருக்கின்றன. இதைத் தவறு என்று கூற முடியாது. மூடை கெடுக்கும் காரணிகள் என்று கூறலாம். இதைத் தவிர்த்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சப்ஜாடான உறவு அமையும் என்பதில் சந்தேகமில்லை.

comments | | Read More...

ஆண் குறி சிறியதாக உள்ளதா? இதோ தீர்வு-1


ஆண் குறி சிறியதாக உள்ளதா? இதோ தீர்வு-1

கேள்விகள் :

1. டாக்டர், என் ஆண் உறுப்பு சின்னதாக உள்ளது. இதனால் நான் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இதை எப்படி பெரிதாக்குவது?

2. என் காதலி என்னை கூப்பிடுகிறாள், ஆனால் என் ஆணுறுப்பு சின்னதாக இருக்கு, அதைப் பார்த்தாள் அவளுக்கு சிரிப்பு தான் வரும் என்று நினைக்கிறேன். இதை எப்படி சரி செய்வது?

3. என் ஆண்குறியை பெரிதாக்க வழிகள் என்னென்ன, சொல்லுங்கள் மருத்துவரே!


விடை :

இது போல பல கேள்விகள் தினமும் வந்து குவிந்த படி உள்ளன.இதற்கான விடை மிக விரிவானது என்பதால், ஒரே நாளில் அதனை எழுத இயலாது. இதனை பகுதிகளாக விவரிக்கிறேன்.

border=0
ஆண்குறிகளின் வகைகள் மற்றும் அளவெடுத்தல் முறை:

முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.
உங்கள் ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும். உங&#3021 ;கள் குறி சாதரணமான (விறைப்பில்லாத) நிலையில் அளவெடுப்பது சரியான முறை அல்ல. ஏனென்றால் ஆண்குறிகள் இரண்டு வகைப்படும்.

வளரும் வகை (Growers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையில் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு, விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்களே.

காட்டும் வகை (Showers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையிலேயே பெரியதாக இருக்கும், ஆனால் விறைப்படைந்தால், கொஞ்ச நீளமே அதிகமாகும். கிட்டத்தட்ட 20% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்கள்.

ஆண்குறியின் நீளத்தை அளவெடுக்கும் முறை:

1. இரண்டு நாட்களுக்கு சுய இன்பமோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.

2. முடிந்தால் இறுக்கமான உள்ளாடைகளை (ஜட்டி) இந்த இரண்டு நாட்களுக்கு தவிர்த்து விடுங்கள்.

3. துணியை அளவெடுக்கும் டேப் (measuring tape) ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.

4. இப்போது, யாருமில்லாத இடத்தில முழு விறைப்படையும் வரை சுய இன்பம் செய்யுங்கள்.

5. முழு விறைப்பு அடைந்ததும், எழுந்து நின்று, உங்கள் ஆண்குறியை தரையை நோக்கி கீழே தள்ளுங்கள். இப்போது, உங்கள் ஆண்குறி, உங்கள் உடம்பிலிருந்து 90 டிகிரியில் இருக்க வேண்டும்.

6. இப்போது அளவெடுக்கும் டேப்பை வைத்து, முழு ஆண்குறியை அளவெடுக்க வேண்டும்.

7. உங்கள் குறி கிட்டத்தட்ட ஐந்து இன்ச் (12.7 cm) நீளத்தில் இருந்தால், உங்கள் குறி சாதாரண நீளம் உடையது தான்.

8. உங்கள் குறி கிட்டதட்ட மூன்று இன்ச் (7.62cm) அளவில் இருந்தால், உங்கள் குறி மற்றவர்களை விட சிறியதாக இருந்தாலும், இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.

9. உங்கள் குறி இரண்டுக்கு இஞ்சுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு micropenis (மிகச்சிறிய குறி) என்கிற நோய் உள்ளது.

border=0
ஆண்குறியின் சுற்றளவை அளவெடுக்கும் முறை:

1. மேலே சொன்ன முறையிலே உங்கள் குறியை வைத்து, டேப்பை குறியின் சுற்றளவை அளவெடுங்கள்.
* உங்கள் ஆண்குறி உடலை சேரும் இடத்தில்
* நடு ஆண்குறியில்
* உங்கள் ஆண்குறியின் தலைப்பாகத்திற்கு முன்னால்

2. இந்த மூன்று எண்களையும் மூன்றால் வகுத்தால், உங்கள் சராசரி சுற்றளவு தெரிந்து விடும்.

3. இந்த சராசரி சுற்றளவு, 3.5-4 இன்ச் இருந்தால், உங்கள் குறியின் சுற்றளவு மற்றவர்கள் போலத் தான் உள்ளது.


border=0
அடுத்த பாகத்தில், ஆண்குறியை பெரிதாக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.







comments | | Read More...

ராணிப்பேட்டை அருகே லாரியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்தல்: 3 பேர் தப்பி ஓட்டம்



ராணிப்பேட்டை அருகே லாரியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்தல்: 3 பேர் தப்பி ஓட்டம் ராணிப்பேட்டை அருகே லாரியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்தல்: 3 பேர் தப்பி ஓட்டம்

ராணிப்பேட்டை, செப்.29-

ராணிப்பேட்டை அருகே லாரியில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த மேல்பாடி போலீசார் சேர்காட்டில் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் லாரி நிற்காமல் வேகமாக சென்றது.

இதை பார்த்ததும் போலீசார் இருசக்கர வாகனத்தில் லாரியை விரட்டி சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை பார்த்ததும் கடத்தல்காரர்கள் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். போலீசார் லாரியை சோதனை போட்ட போது அதில் 6 டன் செம்மரம் இருந்தது. கண்டு பிடிக்கபட்டது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். லாரியுடன் செம்மரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள் ராணிப்பேட்டை வனதுறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. செம்மரங்கள் சென்னைக்கு கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

comments | | Read More...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது: 19 தொழிலாளர்கள் காயம்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது: 19 தொழிலாளர்கள் காயம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது: 19 தொழிலாளர்கள் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 29-

சிவகாசியில் பட்டாசு ஆலை ஒன்றில் சொக்கம்பட்டி, மூவரை வென்றான், கிருஷ்ணாபுரம், சுரக்காபட்டியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தினமும் வேனில் சென்று வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை வேனில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிவகாசிக்கு புறப்பட்டது. வேனை அக்னாபுரத்தை சேர்ந்த முனியாண்டி ஓட்டி சென்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கம்பட்டி விலக்கில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த தொழிலாளர்கள் செல்வி, காமாட்சி, வெள்ளத்தாய், ஜோதி, டிரைவர் முனியாண்டி உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

comments | | Read More...

அதிக மின் தேவைக்கு அணுசக்தி மூலமே நிரந்தர தீர்வு: அணு விஞ்ஞானிகள் சங்க தலைவர் டி.ஜி. ஸ்ரீனிவாசன்


அதிக மின் தேவைக்கு அணுசக்தி மூலமே நிரந்தர தீர்வு: அணு விஞ்ஞானிகள் சங்க தலைவர் டி.ஜி. ஸ்ரீனிவாசன் அதிக மின் தேவைக்கு அணுசக்தி மூலமே நிரந்தர தீர்வு: அணு விஞ்ஞானிகள் சங்க தலைவர் டி.ஜி. ஸ்ரீனிவாசன்

கருப்பூர், செப். 29-

சேலம் பெரியார் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் அணு மின் நிலையங்களில் கதிரியக்க தனிமங்களின் பயன்கள் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்தினை அணு விஞ்ஞானிகள் சங்கத்தின் தென் மண்டல தலைவர் டி.ஜி. சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுச் சூழல் மாறுபாடு காரணமாக காற்றின் ஈரப்பதம் நாளுக்கு நாள் மாறி வருகிறது.இதனால் கடல் நீர்மட்டம் படிப்படியாக உயரும் அபாயம் நிலவுகிறது. இதற்கான தீர்வு குறித்து அறி வியலாளர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். பெட்ரோல், நிலக்கரி மற்றும் எண்ணை ஆகிய பொருள்கள் கையிருப்பின்றி முற்றிலும் தீர்ந்து போகும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும்.

இதுபோன்ற நிலையில் வாகனப் போக்கு வரத்து தொடங்கி அன்றாட சிறிய சிறிய நடவடிக்கைகள் கூட முடங்கும் நிலை உருவாகும். அப்போது ஹைட்ரஜனை மூலப்பொருளாக இயங்கும் வாகனங்கள் தயாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்த முடியும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தீர்வினை அணுசக்தி மூலம் மட்டுமே உருவாக்க முடியும்.

காற்றாலைகள் மூலம் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும். சூரிய ஒளியைக் கொண்டு பகலில் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதோடு அதற்கான கட்டமைப்பு உருவாக்குவதற்கு பெரும் செலவு பிடிக்கும் சூழ்நிலை தற்போது உள்ளது. அணுமின் நிலையங்களில் கிடைக்கும் கழிவுகளுக்கு இணையாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் போதும் கழிவுகள் ஏற்படும்.

ஆபத்து என்பது எல்லா வகை மின் உற்பத்தியிலும் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை போதிய கண்காணிப்புடன் செயல்படுத்தி வரும்போது நிச்சயம் பலன் கிடைக்கும். கல்பாக்கம் அணுமின் நிலையம் பல்வேறு ஆண்டு களாக நல்ல முறையில் இயங்கி வரும் நிலையில் கதிர் வீச்சு போன்று எந்தவித பாதிப்பும் அங்கிருக்கும் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களுடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஏற்பட வில்லை.

2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும்போது அணு சக்தி பயன்படுத்தலில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். பயிலரங்கத்தில் பதி வாளர் கே. அங்கமுத்து, வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் வி. ராஜ், ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.ராஜவேல், உதவி பேராசிரியர் லலிதா மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

comments | | Read More...

பரமக்குடியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ. 15 லட்சம் மோசடி வருவாய் உதவியாளர் ரேசன் கடை ஊழியர் கைது


பரமக்குடியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ. 15 லட்சம் மோசடி வருவாய் உதவியாளர் ரேசன் கடை ஊழியர் கைது பரமக்குடியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ. 15 லட்சம் மோசடி வருவாய் உதவியாளர் ரேசன் கடை ஊழியர் கைது

ராமநாதபுரம், செப். 29-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக தனி தாசில்தாரராக இருப்பவர் அனுசுயா. இவருக்கு கீழ் வருவாய் உதவியாளராக கார்த்திகேயன் என்பவர் பணியாற்றி வருகிறார். உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கியதில் ரூ. 15 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் தணிக்கை செய்தபோது இந்த மோசடியை தனி தாசில்தார் அனுசுயா, வருவாய் உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் பாண்டியூர் ரேசன் கடை விற்பனையாளர் முருகநாதன் ஆகியோர் செய்தது தெரியவந்தது. இவர்கள் போலியாக 8 உறுப்பினர்களை சேர்த்து ரூ. 15 லட்சம் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அறிக்கையை தணிக்கைத்துறையினர் மாவட்ட கலெக்டரிடம் சமர்பித்தனர். கலெக்டரின் உத்தரவின்பேரில் பரமக்குடி தாசில்தார் செல்லப்பா, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், நாகேஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன், முருகநாதன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட தனி தாசில்தாà ��் அனுசுயாவை தேடி வருகின்றனர்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger