News Update :
Powered by Blogger.

சவுதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்களுக்கு 300 ரியால் அபராதம் 300 Riyals fined on women for driving cars amidst ban

Penulis : Tamil on Sunday 27 October 2013 | 20:42

Sunday 27 October 2013

சவுதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்களுக்கு 300 ரியால் அபராதம் 300 Riyals fined on women for driving cars amidst ban

ரியாத், அக். 28-

சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என மதவாதிகள் தடை செய்துள்ளனர்.

இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் பயமுறுத்தினர்.

இந்த தடை அங்குள்ள பெண்ணியக்க வாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதவாதிகளின் மிரட்டல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அந்நாட்டில்  பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் வழங்கப்பட்டதில்லை.

இந்நிலையில், இந்த தடையை உடைத்தெறியும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை ஓட்டிச் சென்ற சுமார் 60 பெண்கள் தாங்கள் கார் ஓட்டிச் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்துள்ள இவர்களில் பெரும்பாலான பெண்கள் மதவாதிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் ரியாத்தில் கார் ஓட்டிச் சென்ற 6 பெண்களையும், நாட்டின் இதர பகுதிகளில் கார் ஓட்டிய மேலும் 10 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களுக்கு தலா 300 ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தனர்.

சவுதி அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என அபராதம் விதிக்கப்பட்ட பெண்களிடமும் அவர்களது தந்தை அல்லது கணவரிடமும் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

உலகிலேயே பெண்கள் கார் ஓட்டக்கூடாது என தடை செய்துள்ள ஒரே நாடு சவுதி அரேபியா தான் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

comments | | Read More...

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

பாட்னா, அக். 27-

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக பீகார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் குறித்து மோடி கூறியதாவது:-

உனது நண்பர் பாரதீய ஜனதாவை விட்டு ஏன் சென்றார் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். குரு ஜெயப்பிரகாஷ் நாராயணன், சமூக சீர்திருத்தவாதி ராம் மனோகர் லோஹியாவை யார் முதுகில் குத்துகிறார்களோ, அவர்கள்தான் நீண்ட கால நண்பர்களாகிய பாரதீய ஜனதாவை விட்டு எளிதில் செல்ல முடியும்.

முதல் மந்திரி நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பீகார் மக்களை காட்டிக்கொடுத்து விட்டார். இவர்கள் காங்கிரசுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

1999-ம் ஆண்டு அதிகப்படியான எம்.எல்.ஏ.-க்கள் எங்களுக்கு இருந்தும் நிதிஷ்குமார் தலைமையை ஏற்க எங்களது கட்சி முதலமைச்சர் பதவியையே தியாகம் செய்தது. அப்போது நிதிஷ் குமாரின் தலைமையை பாரதீய ஜனதா ஏற்றது.

பீகார் மக்களின் நலனுக்காவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்து ஐக்கிய ஜனதா தளத்துடன் பாரதீய ஜனதா இணைந்தே செயல்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger