News Update :
Powered by Blogger.

இணையத்தில் சம்பாதிக்கலாம் வாங்க ( BEST CPM PAYOUTS )

Penulis : karthik on Saturday 3 March 2012 | 23:57

Saturday 3 March 2012

நீங்களும் இணையத்தில் சம்பாதிக்கலாம்.  அதற்கு உங்களுக்கு ஒரு பிளாக்கர் கணக்கு மற்றும் edomz.com அக்கௌன்ட் இருந்தால் போதும்


தினமும் ரூபாய் 300 to  ரூபாய் 1000  வரை நீங்கள் சம்பாதிக்கலாம் . 


edomz.com அக்கௌன்ட் பெற  இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உங்கள் பிளாக்கர் கணக்கில் HTML SCRIPT ல்  edomz ஸ்க்ரிப்டை add  செய்யவும்
இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் சம்பாதிக்கலாம்

உதாரணத்திற்கு என்னோட அக்கௌன்ட் பாருங்கள்  






comments | | Read More...

காதல் பாதை திரை விமர்சனம்

 
 
 
காதலியின் விருப்பத்தை உயிர்போகும் தருவாயிலும் நிறைவேற்றும் காதலனின் கதை தான் "காதல் பாதை"!


கதைப்படி கொடைக்கானலில் பாட்டியுடன் தங்கி கல்லூரியில் படிக்கும் பணக்கார வீட்டு கதாநாயகிக்கு, அங்கு குடிகார தந்தையுடன் செருப்பு தைத்து ஜீவனம் நடத்தும் கதாநாயகர் மீது காதல். முதலில் இந்த காதலை ஏற்க மறுக்கும் ஹீரோ, கதாநாயகியின் காதல் தீவிரத்தால்
காதலில் இறங்குகிறார். விஷயம் நாயகியின் அப்பாவிற்கு தெரிந்ததும் விஸ்வரூபம் எடுக்கிறது. காதலியை அவர் பார்க்க விரும்பிய தாஜ்மஹாலுக்கு சைக்கிளிலேயே அழைத்து போகும் நாயகன், நாயகியின் அப்பா அனுப்பிய அடியாட்களை தாண்டி நாயகியுடன் இணைந்தாரா...? இல்லை இறுந்தாரா...? என்பது க்ளைமாக்ஸ்!


கதை நாயகனாக புதுமுகம் வினோத் வெங்கடேஷ், கதாநாயகி திவ்யா, சஞ்சனா சிங், மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய், சத்யப்ரியா, ‌தீப்பெட்டி கணேசன், சுமன் ஷெட்டி, ராம்பாபு, புலியாண்டி, பரமு, உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் மன்சூரும், நாயகன், நாயகியும் நச் என்று நடித்துள்ளனர். பலே! பலே!!


எஸ்.எஸ்.குமரனின் இசையில், முருகன் மந்திரத்தின் பாடல் வரிகளும், ரவி சீனிவாஸின் ஒளிப்பதிவும், வியாசனின் எழுத்து-இயக்கத்தில் காதல் பாதையை கலக்கல் பாதையாக்க முயன்று இருக்கின்றன.


"காதல் பாதை" - "கமர்ஷியல் பாதை"! "கலெக்ஷன் பாதையா...?"!!
comments | | Read More...

உபி தேர்தல் :எக்ஸிட் போல் முடிவுகள்

 
 
 
உபியில் இப்போது நடந்துள்ள சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களைப் பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே நடத்தியுள்ள இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
 
இதில், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 195 முதல் 210 வரை சீட்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
 
தற்போதைய முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 88 முதல் 98 இடங்கள் கிடைக்கும். இது அக்கட்சிக்கு இப்போதுள்ள இடங்களை விட 100 சீட்கள் குறைவு.
 
பாஜகவுக்கு 50 முதல் 56 இடங்கள் வரை கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது.
 
காங்கிரஸுக்கு நான்காவது இடம்தான்
 
ராகுல் காந்தியே தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடம்தான் கிடைத்துள்ளது. அக்கட்சி 38 முதல் 42 தொகுதிகளை வென்றாலே பெரிய விஷயம் என இந்தத் தேர்தல் முடிவு கூறுகிறது. இத்தனைக்கும் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தள் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த முடிவுகள் காங்கிரஸ் வட்டாரத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



comments | | Read More...

அரவான் - கள்வன் பாதி ! காவலன் பாதி ...!

 
 

பத்து வருடங்களில் நான்கே படங்கள் இயக்கியிருந்தாலும் வணிக ரீதியான வெற்றி , தோல்விகளை தாண்டி நல்ல பெயரை பெற்றிருக்கும் இயக்குனர் வசந்தபாலன் ... இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே மாதத்தில் அங்காடி தெருவால் அனைவரையும் அசர வைத்தவர் இப்போது பீரியட் படம் அரவானில் ஆதி - பசுபதியுடன் இணைந்து வந்திருக்கிறார் ...

சு.வெங்கடேசன் எழுதி சாகித்திய அகாடமி விருது பெற்ற " காவல் கோட்டம் " படத்தின் ஒரு பகுதி கதையே " அரவான் " ... நாவலுக்கு கிடைத்த இருவேறு மாதிரியான விமர்சனங்களே படத்திற்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை ...

களவை குலத்தொழிலாக கொண்ட கூட்டத்தின் தலைவன் பசுபதி ... ராணியின் நகையை எவனோ திருடி விட பழி பசுபதியின் ஊரின் மேல் விழுகிறது , அதை துடைக்க உண்மையான திருடன் ஆதியை கண்டுபிடிக்கும் பசுபதி அவன் களவாடும் திறமையில் ஈர்க்கப்பட்டு தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான் ... தன் தங்கை ஆதியின் மேல் காதல் வயப்பட அவனுடைய பூர்வீகத்தை வினவும் பசுபதி ஆதி ஏற்கனவே திருமணம் ஆனவன் என அறிகிறான் , அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ஒரு கூட்டம் ஆதியை பலியாள் என்று சொல்லி அடித்து கூட்டி செல்கிறது ... ஆதியின் பின்னணி என்ன ? பசுபதியால் அவனை மீட்க முடிந்ததா ? என்பதை இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பாக விளக்கியிருக்கிறார்கள் ...


பசுபதி முறுக்கேறிய தோள்களுடனும் , பழுப்பேறிய பற்களுடனும் அந்த காலத்து களவாணியாக கண்முன் நிற்கிறார் ... முன்பாதியில் முழுவதும் இருந்து பின்பாதியில் காணாமல் போனாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் பசுபதி பிரமாதமாய் நடித்திருக்கிறார் ...

ஆதிக்கு உயரமும் , உடற்கட்டும் சீரியசாக பொருந்தும் அளவிற்கு முகம் ஏனோ பொருந்தவில்லை ... படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்தே வந்தாலும் இரண்டாவது பாதி முழுவதும் கதை இவரை சுற்றியே நகர்கிறது. படம் முடிந்து வெளியே வரும் போது தன் கதாபாத்திரத்தை மனதில் பதிய வைத்ததே ஆதியின் வெற்றி ...


ஆதிக்கேற்ற ஜோடியாக தன்ஷிகா கட்சித பொருத்தம் ... பரத் சில சீன்களே வந்தாலும் சிலிர்க்க வைக்கும் நடிப்பு ... அஞ்சலி அங்காடிதெருவின் நன்றிகடனுக்காக நடித்திருப்பார் போல , இவரின் உடல் அளவிற்கு கேரக்டரில் வெயிட்டே இல்லை ... பாளையத்து ராஜா , மாத்தூர்காரனாக வரும் கரிகாலன், தேவதாசியாக நடித்திருக்கும் ஸ்வேதா மேனன் , சின்ன ராணி , ஆதியின் நண்பனின் மனைவி போன்றோரும் நம்மை கவர்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலங்களான கலையும் , ஒளிப்பதிவும் 18 ஆம் நூற்றாண்டை நம் கண்முன் நிறுத்துகின்றன ... ஒளிப்பதிவாளர் சித்தார்த்திற்கு இந்த படம் நல்ல ப்ரேக் ... அறிமுக இசையமைப்பாளர் கார்த்திக்கின் இசையில் நிலா நிலா, களவு பாடல்கள் முனுமுனுக்க வைத்தாலும் பின்னணி இசை பயங்கர மைனஸ் ... ஒரே சத்தம் தான் திரும்ப திரும்ப கேட்கிறது ...

சென்ற படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை களனை தேர்ந்தெடுத்த இயக்குனரின் துணிச்சல் , சரித்திர நாவலை படமாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி ,பீரியட் படம் என்றதும் செயற்கை முலாம் பூசாமல் உடையலங்காரம், காட்சியமைப்பு உட்பட அனைத்திலும் காட்டப்பட்ட யதார்த்தம் , பாத்திர தேர்வு , கள்வர்கள் பற்றியும் , களவாடும் விதம் பற்றியும் சொல்லப்பட்ட நுணுக்கமான தகவல்கள் , பரத் எப்படி கொலை செய்யபட்டான் என்பதை ஆதி துப்பறிவதன் பின்னணியில் பின்னப்பட்ட சுவாரசியமான இரண்டாம் பாதி , அதன் முடிவில் ஏற்படும் எதிர்பாராத திருப்பம் , நரபலியே கூடாதென்னும் கதை , கள்வர்களையே காவலர்களாய் மாற்றிய பாசிடிவ் க்ளைமாக்ஸ் இவையெல்லாம் அரவானை அண்ணாந்து பார்க்க வைக்கின்றன.


சாமி கும்புடுகிறார்கள், களவுக்கு போகிறார்கள் , ஆடி பாடுகிறார்கள் இப்படியே திரும்ப திரும்ப வரும் ரிப்பீட்டட் காட்சிகள் , கதைக்குள் போகாமல் களவுக்குள் மட்டும் போன முதல் பாதி , நிறைய காட்சிகளில் ஆண்கள் மேலாடை இல்லாமலோ , பெண்கள் உள்ளாடை இல்லாமலோ இருந்திருந்திருந்தால் பீரியட் படம் என்பதையே மறக்கடிக்க வைக்கும் வசனங்கள் , திணிக்கப்பட்ட பாடல்கள் மற்றும் சிங்கம்புலியின் காமெடி , கிராபிக்ஸ் காட்சிகள் ,

ஒரு ஊரே பலி கொடுக்க தேடிக்கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்றுமறியாத சின்ன பையன் போல உலா வரும் ஆதியின் பாத்திர படைப்பு , ஆதிக்கு பதில் ஏற்கனவே அவன் நண்பனை பலி கொடுத்த பின்னரும் ஆதியையும் பலி கொடுக்க எந்த வித லாஜிக்கும் இல்லாமல் ஊர் துணிவது, மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஜெயிப்பதற்காக தன்னையே பலி கொடுத்த அரவான் ஏற்படுத்திய பாதிப்பை ஏற்படுத்தாமல் பெயரில் மட்டுமே அதை தாங்கியிருப்பது போன்ற தோற்றத்தை கொடுப்பது, இரு விதமான கதைகளை சொல்ல முற்பட்ட திரைக்கதை உத்தி இவையெல்லாம் அரவானை பலி கொடுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 44
comments | | Read More...

சுளையாக இருநூறு டொலர்கள்

 

சுளையாக இருநூறு டொலர்கள்

மனைவி வீட்டில் தனியாக இருந்தாள்.

யாரோ கதவின் அழைப்பு மணியை அழுத்தினார்கள்.

அவள் கதவைத் திறந்தாள். அவள் கணவனின் நண்பன் டேவிட் வெளியே நின்றிருந்தான்.

ஹாய்! ரொம் வீட்டில் நிற்கிறாரா?

இல்லை!. கடைக்குப் போயிருக்கின்றார். உங்களுக்கு அவசரமென்றால் அவருக்காக நீங்கள் இங்கே காத்திருக்கலாம். இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவார்.

நன்றி சொல்லிவிட்டு அவன் வரவேற்பறையிலிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.

சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன.

ஒரு முறை செருமியபடி சாரா.. என்றான் அவளது கணவனின் நண்பன்.

சாரா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

உனது மார்பகங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன…

அவள் கூச்சத்தோடு தன் இருக்கையில் நெளிந்தாள்.

நீ உன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினால் 100 டாலர்கள் தருகின்றேன் என்றான் அவன்.

அட இதென்ன தொல்லையாக இருக்கின்றது. மார்பைக் காட்டட்டுமாம். 100 டாலர் தருகிறானாம்.

அவளுக்குள் சபலம் தட்டியது. ஒரு தடவை காட்டினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகின்றது? 100 டாலர் இலாபந்தானே.?

ஒரு கணம் தயங்கியவள் மறு கணம் தன் மேலாடையை விலக்கி தன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினாள். ஆசை தீர அவன் பார்த்துவிட்டு மேசையில் 100 டாலர் நோட்டு ஒன்றை வைத்தான். தன் மேலாடையைச் சரிசெய்து கொண்ட அவள் ஆவலோடு அந்த 100 டாலர் தாளை எடுத்துக் கொண்டாள்.

அழகே அழகுதான். ஒன்றைப் பார்த்த எனக்கு மற்றையதையும் பார்க்காவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கின்றது. இரண்டாவதையும் நீங்கள் காட்டினால் இன்னொரு 100 டாலர் தருகின்றேன் என்றான் அவன்.

எந்த நரி முகத்தில் இன்று நான் விழித்தேன்? இன்னொரு 100 டாலரா?

ஆசை யாரைத்தான் விட்டது? கையில் கிடைத்த 100 டாலரின் ருசி வெட்கத்தை ஓரத்தில் தள்ள தன் மேலாடையை அகற்றி தன் இரு மார்பகங்களையும் அவனுக்குக் காட்டினாள் அவள்.

அடடா அற்புத அழகு.. அவன் கண்கள் அவள் மார்பகங்களில் மொய்த்தன. ஆசை தீரப் பார்த்து விட்டு அடுத்த 100 டாலர் தாளை அவளிடம் நீட்டினான்.

அவன் எழுந்தான். எனக்கு நேரமாகின்றது. இன்னொரு தினம் ரொம்மிடம் வருகின்றேன். கேட்டதாகச் சொல்லுங்கள்.

அவசரமாக எழுந்து அவன் போய்விட்டான். இருநூறு டாலர் சம்பாத்தியத்தில் மெய்மறந்து போயிருந்த அவள் அவசரம் அவசரமாக தன் உடைகளைச் சரிசெய்து கொண்டாள். 200 டாலரை மெல்ல தன் உட் சட்டைக்குள் செருகிக் கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கழித்து அவள் கணவன் வந்தான். வந்ததும் வராததுமாக

டேவிட் வந்தானா சாரா? என்று கேட்டான் ரொம்.

வந்தார். ஆனால் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு பிறகு வருவதாகக் கூறி விட்டுப் போய்விட்டார் என்றாள் அவள்.

நான் கடனாகக் கொடுத்த 200 டாலர் பணத்தைக் கொண்டு வந்து உன்னிடம் கொடுப்பதாகக் கூறினான். தந்தானா ? என்று கோபத்தோடு வெடித்தான் ரொம்.

comments | | Read More...

எழும்பூரில் திரண்ட நாம் தமிழர் மாபெரும் பொதுகூட்டம்.(படங்கள் இணைப்பு)


இலங்கை அரசு மீதான போர்குற்ற விசாரணை நடத்தவும், சுதந்திர பன்னாட்டு குழு அமைக்கவும்,போர்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவும் வலியுறுத்தி கோரிக்கை பேரணி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்களும், நடிகர் திரு. மணிவண்ணன் அவர்களும் தலைமை தாங்குகிறார்கள்.

இப்பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் திரு. சீமான் கூறியபோது, ஈழ மக்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு இந்திய அரசு பக்க பலமாக இருக்கிறது. இது நிறுத்தப்படவேண்டும். தமிழ்நாட்டு அரசைப்பொறுத்தவரை அவர்கள் எங்கள் கோரிக்கையை செவிசாய்க்க ஆரம்பித்துள்ளார்கள். இது நமக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் இந்திய மத்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டால், கொடுங்கோலன் இராஜபக்சே அரசை நாம் முற்றிலுமாக நிராகரிக்கலாம், நாம் இங்கும் எழுப்பும் உரத்த ஒலிகள் கடல் தாண்டி இருக்கும் இராசபக்சே அரசின் காதுகளில் ஊசியென பாயவேண்டும் என்றார்.

எழும்பூர் இராசரத்தினம் மைதானத்தில், அலைகடலென திரண்ட மாபெரும் மக்கள் கூட்டத்தில், நாகை, திண்டுக்கல், காஞ்சிபுரம்,திருவள்ளூர் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் இருந்தும், மற்றும் மகளிர் பாசறையை சேர்ந்தவர்களும் என வயது வேறுபாடின்றி மக்கள் திரண்டு இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இன்னும் ஒரு முறை இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரிவிப்போம் என்ற சபதத்தோடு இப்பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். பலத்த காவல் துறையினரின் பாதுகாப்போடு நடத்தப்படும் இப்பேரணி மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

தமிழர்கள் நாம் ஓன்று திரண்டால் இத்தரணியை கூட வென்றிடலாம்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger