News Update :
Powered by Blogger.

மூச்சு விட சிரமப்பட்டதால் நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாராம் ஸ்ருதி…

Penulis : karthik on Sunday 26 February 2012 | 23:58

Sunday 26 February 2012

 

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தெரிவித்துள்ளார். கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஆமீர் கானின் மருமகன் இம்ரான் கான் நடித்த லக் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானார். இந்தியாஸ் கிளாம் திவா என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதி தான் நடிக்க வரும் முன்பு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும் அதை மறைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தானாக ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ருதி. மூச்சு விட சிரமமாக இருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கே மூக்கில் அறுவை சிகிச்சை செய்தால் பாடகியான தனது குரல் வளம் பாதிக்கப்படுமோ என்று பயந்துள்ளார். தற்போது சிகிச்சைக்குப் பிறகு நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும், பிரச்சனையின்றி பாட முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் லக் கைகொடுக்காவிட்டாலும் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஸ்ருதிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தற்பொழுது ஸ்ருதி நடித்து வரும் 3 படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது கூடுதல் தகவலாகும்

comments | | Read More...

ஷாருக்கானுடன் இணையும் விக்ரம் -

 


சைத்தான் என்ற படத்தைப் பார்த்த ஷாருக்கான் அப்படத்தை வெகுவாக புகழ்ந்தார். சைத்தானை புகழ்ந்தால் சைத்தான் நம்மைவிடாது என்பது புராணம். ஷாருக்கான் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

சைத்தானை இயக்கிய பிஜாய் நம்பியார் விக்ரமை வைத்து டேவிட் என்ற படத்தை இயக்கி வருகிறார். பெயர் சிங்கிளாக இருந்தாலும் கதைப்படி 3 டேவிட்கள் வருகிறார்கள். அதில் முக்கியமான டேவிட் விக்ரம். இன்னொருவர் தமிழின் பிரபல நடிகராக இருப்பார் என்கிறார்கள். நம்பியா‌ரின் மூன்றாவது சாய்ஸ் ஷாருக்கான்.

டேவிட் படத்தை இந்தி, தமிழ் என இரு மொழிகளில் இயக்கி வருவதால் ஷாருக்கின் பெயர் இந்திப் படத்துக்கு பெரும் மார்க்கெட்டாக அமையும். மேலும் ஷாருக் நடித்தால் மட்டுமே அந்த கதாபாத்திரம் பேசப்படும் என நினைக்கிறார் பிஜாய் நம்பியார். இந்தப் படத்துக்கு ஷாருக்கின் 10 நாள் கால்ஷீட் போதும். சைத்தானை ரொம்பப் புகழ்ந்தவர் என்பதால் டேவிட்டில் நடிக்க ஒப்புக்கொள்வார் என நினைக்கிறார் பிஜாய்.

ஒரே படத்தில் விக்ரம், ஷாருக்கான். கேட்கவே நல்லாயிக்கே.
comments | | Read More...

இந்தியில் ரீமேக் ஆகும் வேட்டை



தமிழில் மாதவன், ஆர்யா, சமீராரெட்டி, அமலாபால் நடித்த வேட்டை படம் இந்தியிலும் ரீமேக் ஆகவிருக்கிறது. இந்த தகவலை டைரக்டர் லிங்குசாமியே வெளியிட்டுள்ளார்.

லிங்குசாமி அளித்துள்ள பேட்டியில், வேட்டை திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதனை நான்தான் இயக்குகிறேன். இதுவரை மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற விஷயங்கள் குறித்த பேசி முடிவெடுக்க இன்னும் ஓரிரு நாட்களில் நான் மும்பை செல்லவிருக்கிறேன். அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள் தெரிய வரும், என்று கூறியுள்ளார்.

தற்போது தமிழில் விஷாலுக்கு இரண்டு கதைகளை தயாராக வைத்திருப்பதாக கூறியிருக்கும் லிங்குசாமி, தங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள வழக்கு எண் 18/9 படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் பேட்டியில் கூறியிருக்கிறார்.
comments | | Read More...

டெக்னிக்கல் புலி திரை விமர்சனம்

 

ஹாலிவுட் 3டி படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக முழுக்க முழுக்க கோலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களால், காட்சிக்கு காட்சி மிரளவைக்கும் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி தரமானதாக வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் "அம்புலி 3 டி".


ஒரு கல்லூரி காதல் ஜோடி, கல்லூரியின் கோடை விடுமுறையிலும் காதலை வளர்க்க விரும்புகிறது. அதற்காக கல்லூரி விடுதியில், விடுமுறையிலும் தங்குகிறார் ஹீரோ. அவருக்கு உதவுகிறார் அவரது வகுப்பு மாணவனும், அந்த கல்லூரி வாட்ச்மேனின் வாரிசுமான மற்றொரு ஹீரோ. இரவில் நண்பனுக்கும் தெரியாமல் கல்லூரியை அடுத்த கிராமத்தில் இருக்கும் கதாநாயகியைத் தேடி காதலை வளர்க்க, திகில் அடர்ந்த சோளக்காட்டின் வழியாக போகிறார் ஹீரோ! ஹீரோவை மனித உயிர்களை குடிக்கும் அம்புலி துரத்துகிறது. அம்புலியிடமிருந்து தப்பி பிழைக்கும் ஹீரோ, அதன்பின் வரும் இரவுகளில் நண்பனுடன் சேர்ந்து கொண்டு அம்புலி பேயா...? பிசாசா..? மனித மிருகமா...? விநோத மிருகமா...? என்பதை கண்டுபிடிக்க களம் இறங்குவதுடன், காதலையும் வளர்ப்பதும், உயிருக்கு பயந்து வாழும் கதாநாயகியின் ஊரை காப்பாற்றுவதும் தான் அம்புலி படத்தின் அட்டகாசமான மீதிக்கதை!



அஜெய்-சனம், ஸ்ரீஜித்-ஜோதிஷா காதல் காட்சிகள் நச்! கல்லூரி விடுதி காவலாளி தம்பி ராமய்யாவின் எச்சரிக்கையையும் மீறி ஹீரோ ‌அஜெய், அந்த சோளக்காட்டை சைக்களில் கடந்து போவதில் ஆரம்பமாகும் திகில், படம் முழுக்க பரவிக்கிடப்பது அம்புலி படத்தின் பெரிய பலம்! மொட்டை ராஜேந்திரன் குடித்துவிட்டு போதையில் ஊரைச் சுற்றிக்கொண்டு கிராமத்திற்கு போக விரும்பாமல், தன் பெண் குழந்தையை அம்புலியிடம் பலி கொடுத்துவிட்டு அலறியடித்து ஓடுவதிலாகட்டும், இடையில் காட்டுவாசி போல் பார்த்திபனைக் காட்டி அம்புலி அவர்தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை கூட்டுவதிலாகட்டும் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஹரிசங்கர் - ஹரீஷ் நாராயணன் இருவரும்!


மனித மிருகமாக அம்புலி உருவான விதத்தை ப்ளாஷ்பேக்கில் சொன்ன விதத்திலாகட்டும், அம்புலியின் அண்ணன் பார்த்திபன், கல்லூரி முதல்வரை கொன்றதற்கான காரணத்தை விளக்கியதிலாகட்டும், அதேகாட்டில் தன்னை கொல்ல வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழும் பார்த்திபனை, சகோதர பாசத்துடன் அம்புலி விட்டு வைத்திருப்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதிலாகட்டும், இப்படி ஒவ்வொரு காட்சியையும் கவனமாக கையாண்டிருக்கின்ற இரட்டை இயக்குநர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! செங்கோடனாக பார்த்திபனும், அம்புலியாக கோகுலும் வாழ்ந்தே இருக்கிறார்கள் பலே! பலே!!


திகில் படத்திற்கு ஏற்ற மிரட்டல் பின்னணி இசையை தந்திருக்கும் வெங்கட்பிரபு சங்கர், சாம்ஸ், சதிஷ், மெர்வின் சாலமன் நால்வர் கூட்டணியும், சதிஷ், ஜியின் பயமுறுத்தும் இருட்டிலும் பளீரிடும் ஒளிப்பதிவும் பிரமாதம்! ரெமியனின் கலை இயக்கமும் பிரமாண்டம், பிரமாதம்!!


கண் எதிரே படமெடுத்தாடும் பாம்பு, முகத்திற்கும் மூக்கிற்கும் அருகில் நீளும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மையும் காட்டிற்குள் அழைத்துப்போகும் 3டி எஃபெக்ட் சோளக்காடு, நம்மீது பறந்து வந்து விழும் பாவனையை ஏற்படுத்தும் இலை, தழைகள், பாய்ந்து வந்து தாக்கும் பயத்தை ஏற்படுத்தும் ராட்சஸ அம்புலி இத்யாதி இத்யாதி, 3டி தொழில் நுட்பங்களுக்காகவே லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் படத்தை கண்டு களிக்கலாம்!


ஆக மொத்தத்தில் "அம்புலி", தமிழ் சினிமாவின் "டெக்னிக்கல் புலி" என்றால் மிகையல்ல!!
comments | | Read More...

”3” படத்தில் ரஜினியா? - படக்குழுவின் பிஸினெஸ் டெக்னிக்

 


தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள '3′ என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என்ற 'ஆராய்ச்சி' ஆரம்பமாகிவிட்டது.

கொலைவெறி என்ற பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்படும் படமாகிவிட்ட, 3-ல் தனுஷ் – ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ளனர்.

படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவே அதை மறுத்திருந்தார்.

இப்போது படம் முடிந்து வெளியீட்டு உரிமை பேரங்கள் நடக்கும் நிலையில் மீண்டும் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்ற செய்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன.

இந்த முறை செய்தியை யாரும் மறுக்கவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா, படத்தில் இடம்பெற்றுள்ள 3வது முக்கிய நடிகர் குறித்து எதுவும் சொல்ல மாட்டோம். அது சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார்.

நல்ல பிஸினெஸ் டெக்னிக் சாரே… ரஜினியே உங்ககிட்ட ட்யூஷன் கத்துக்கணும் போங்க!
comments | | Read More...

எல்லா தப்பும் என்மேல தான் சாமியோவ்...ஜெயலலிதா உத்தமிங்கோ...நீதிபதி கேள்விகளும் சசிகலா பதில்களும்

 
 
 
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று 4வது நாளாக நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் முழு விவரம் வருமாறு:

நீதிபதி: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, விலகபுரா கிராமத்தில் ரத்தினவேலு உட்பட 14 பேருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதற்காக நீங்கள், சுதாகரன் ஆகியோர் போயஸ்கார்டனில் இருந்து காரில் சம்மந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று நிலத்தை பார்த்து, பின் அதை வாங்குவது தொடர்பாக ஜவகர்பாபு மற்றும் முத்தையா ஆகியோர் மூலம் நில உரிமையாளர்களிடம் பேசியது உண்மையா?

சசிகலா: அந்த நிலம் வாங்கியது உண்மை. இது தொடர்பாக ஜவகர்பாபு, முத்தையா ஆகியோரை நான் சந்தித்து பேசவில்லை.
நீதிபதி: ஈஞ்சம்பாக்கம் அடுத்த வெட்டுவாங்கேணி என்ற இடத்தில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ரூ1.10 லட்சத்துக்கு கிரின் பார்ம் ஹவுஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்தது உண்மையா?
சசிகலா: உண்மை.
நீதிபதி: இந்திராணி ரங்கராஜுக்கு சொந்தமான நிலத்தை ரூ5.07 லட்சம் கொடுத்து வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மைதான். சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்காக இந்த நிலம் வாங்கப்பட்டது.

நீதிபதி: லலிதா குமார் பண்டாரிக்கு சொந்தமான 1.9 ஏக்கர் நிலம் ரூ5.57 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டதா?

சசிகலா: நிலம் வாங்கியது உண்மை தான். அந்த நிலம் ஜெ கிரின் பார்ம் ஹவுஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
நீதிபதி: சென்னையில் ரூ13.05 லட்சம் மதிப்பிலான வணிக கடையை ரூ8.25 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், இதற்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் குறைவாக செலுத்திய குற்றம் தொடர்பாக?

சசிகலா: அந்த சொத்து ஜெ ஹவுசிங் நிறுவனத்திற்காக 9.8.1994ல் வாங்கப்பட்டது. இதில் கட்டண குறைப்பு எதுவும் செய்யவில்லை.

நீதிபதி: அமானுல்லா என்பவரின் மனைவி அனிபா பெயரில் கடந்த 1989ம் ஆண்டு சென்னை நீலாங்கரை, ஸ்ரீரங்கவேலன் தெருவில் 4 கிரவுண்ட் நிலம் நீங்கள் வாங்கியதாக கூறப்படுவது குறித்து?

சசிகலா: எனக்கு தெரியாது.

நீதிபதி: ஊத்துக்கோட்டையில் சிவ,விஷ்ணு பில்டர்ஸ் உரிமையாளர் ராஜராம் மூலம் 10.10 ஏக்கர் நிலம், மணவாளன் என்பவருக்கு சொந்தமான 12.8 ஏக்கர் நிலம், பேரூர் ராஜாராமுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் (சிறிது சிறிதாக) ஊத்துகுடியில் 9.65 ஏக்கர் நிலம், பாலசுப்ரமணியம், பொன்னுசாமி, சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான 10,.29 ஏக்கர் நிலம் ரூ1.02.090க்கும், பாப்பம்மா, வெங்கடேஷ் ஆகியோருக்கு சொந்தமான 8.23 ஏக்கர் நிலம் ரூ. 83,200க்கும், கங்கா, பால, நாராயணசாமி ஆகியோருக்கு சொந்தமான 8.65 ஏக்கர் நிலம் ரூ86,500க்கும், கண்ணியப்பன், சத்தியமூர்த்தி உள்பட பலருக்கு சொந்தமான 6.40 ஏக்கர் நிலம் ரூ.64,050க்கும், துரைசாமி, முனிசாமி உள்பட பலருக்கு சொந்தமான 7.11 ஏக்கர் நிலம் ஸி99,159க்கும், கோவிந்தன், எல்லப்பன் உள்பட சிலருக்கு சொந்தமான 15.71 ஏக்கர் நிலம் ஸி1,57,100க்கும், அண்ணாமலை, கோவிந்தசாமி உள்பட பலருக்கு சொந்தமான 9.50 ஏக்கர் நிலம் ரூ95 ஆயிரத்திற்கும், ஆகிய நிலங்களை மெடோ ஆக்ரே பாரேம் மற்றும் மெட்டல் கிங் நிறுவனங்களுக்கு வாங்கினீர்களா?

சசிகலா: எனக்கு தெரியாது. அப்படி எந்த நிலமும் வாங்கவில்லை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு ரூ2,81,160 கொடுத்து கார் வாங்கியது உண்மையா?

சசிகலா: வாங்கியது உண்மை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக 18.7.1992 அன்று ரூ4.06,205 கொடுத்து வாகனம் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: கடந்த 18.7.1992ல் உங்கள் பெயரில் கார் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை. எனது வங்கி கணக்கில் இருந்து ரூ3,88,376 கொடுக்கப்பட்டது.

நீதிபதி: 30.3.1996ல் 2 கார் நீங்கள் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை. எனது வங்கி கணக்கில் ரூ10,60,790 கொடுக்கப்பட்டது.

நீதிபதி: 6.12.1994ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கார் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை. சசி என்டர்பிரைசஸ் நிறுவன வங்கி கணக்கில் இருந்து ரூ3,16,537 கொடுக்கப்பட்டது.

நீதிபதி: 25.12.1994ல் மெட் டல் கிங் நிறுவனத்திற்கு வாகனம் வாங்கப்பட்டதா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: 19.1.1995ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மாருதி கார் வாங்கப்பட்டதா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: 18.11.1993ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத் துக்கு டெம்போ டிராவலர் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்காக சுராஜ் மஸ்தா வாகனம் வாங்கப்பட்டதா?

சசிகலா: இந்த வாகனம் ஏற்கனவே வாங்கி, ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது.

நீதிபதி: ஆஞ்சநேய பிரின்டிங் பிரஸ் நிறுவனத்திற்காக 3 சுராஜ் மஸ்தா வாக னம் வாங்கப்பட்டது உண்மையா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக வாகனம் வாங்கப்பட்டது உண்மையா?

சசிகலா: உண்மை. அதற்காக தொகை ரூ3,30,250 அதன் வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது.

நீதிபதி: ஜெயா ப்பளிகேஷன் நிறுவனத்திற்காக அசோக் லேலாண்ட் நிறுவனத்திடம் இருந்து பஸ் வாங்கப்பட்டதா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: நமது எம்.ஜி.ஆர். நிறுவனத்திற்காக வாகனம் வாங்கப்பட்டதா?

சசிகலா: ஆம்.

நீதிபதி: சென்னையில் உள்ள ஜெயலலிதா வீட்டு முகவரியில் அசோக் லேலாண்ட் நிறுவன பஸ் பதிவு செய்துள்ளது குறித்து?

சசிகலா: அசோக் லேலாண்ட் பஸ் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்காக வாங்கப்பட்டது. அந்த பஸ்சை எப்படி ஜெயலலிதா வீட்டு முகவரியில் பதிவு செய்ய முடியும். இது தவறான கருத்து. ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் பெயரில் பதிவு செய்து நான் கையெழுத்து போட்டுள்ளேன்.
நீதிபதி: டெல்லியில் பதிவு செய்யப்பட்ட, குடியரசு தலைவர் பயன்படுத்திய பென்ஸ் காரை ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு வாங்கியது உண்மையா?

சசிகலா: 1991ம் ஆண்டு ஜனாதிபதி பயன்படுத்திய பென்ஸ் காரை, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஸி9.15 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார். அந்த காரை கடந்த 1993ம் ஆண்டு ரூ6.76 லட்சம் கொடுத்து ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்காக வாங்கினோம். இவ்வாறு நீதிபதியின் கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்தார்.



comments | | Read More...

ஹஸ்ஸிக்கு சாதகம், தெண்டுல்கருக்கு பாதகம்: நடுவர்கள் அளித்த பாரபட்சமான முடிவுகள்

 
 
சிட்னி என்றாலே இந்திய அணியை பொறுத்தவரை சர்ச்சை என்றாகி விட்டது. 2008-ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்டின் போது ஹர்பஜன்சிங், சைமண்ட்சை குரங்கு என்று திட்டியதாக பூதாகரமாக வெடித்த பிரச்சினையை யாரும் மறந்து விட முடியாது.
 
அதே சிட்னி மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டியின் போது இரு சர்ச்சைக்குரிய விஷயங்கள் அரங்கேறின. 24-வது ஓவரின் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் ஷார்ட் கவர் திசையில் பந்தை அடித்து விட்டு, டேவிட் ஹஸ்ஸியை ஒரு ரன்னுக்கு அழைத்தார். இதற்குள் பீல்டிங் செய்த சுரேஷ் ரெய்னா, பந்தை ஸ்டெம்பை நோக்கி மின்னல் வேகத்தில் எறிந்தார்.
 
அப்போது வேகமாக ஓடி வந்த டேவிட் ஹஸ்ஸி பந்தை வலது கையால் தடுத்து விட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் பந்து ஸ்டம்பை பதம் பார்த்து ரன்-அவுட் ஆகியிருக்கலாம். பீல்டிங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேட்ஸ்மேன்கள் செயல்படும் போது அவுட் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) விதியில் இடம் உள்ளது.
 
இதையடுத்து இந்திய கேப்டன் டோனி மற்றும் சக வீரர்கள், நடுவர்கள் பில்லி பவுட்டன் (நியூசிலாந்து), சைமன் டபெல் (ஆஸ்திரேலியா) இருவரிடமும் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் கேட்டு முறையிட்டு, வாக்குவாதம் செய்தனர். பின்னர் முடிவு 3-வது நடுவர் சிமோன் பிரை (ஆஸ்திரேலியா) வசம் விடப்பட்டது. அவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக நாட்-அவுட் வழங்கியதால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 
அப்போது 17 ரன்களில் இருந்த டேவிட் ஹஸ்ஸி, அதன் பிறகு இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை அடித்தார். அவர் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கில் பந்தை தடுக்கவில்லை. காயமடைந்து விடக்கூடாது என்பதற்காகவே பந்தை தடுத்தார் என்பது நடுவர்கள் தரப்பு விளக்கமாகும்.
 
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், இயான் சேப்பல் மற்றும் டோனி கிரேக் ஆகியோர் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் வழங்கியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
 
இப்படி நடுவரின் முடிவு சரியா-தவறா? என்று விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில், இந்தியா பேட் செய்த போது மீண்டும் இதே போன்ற சம்பவம் நடந்தது. தெண்டுல்கர் 14 ரன்களில் எதிர்முனையில் நின்ற போது, கவுதம் கம்பீர், பாயிண்ட் திசையில் பந்தை அடித்து விட்டு ஒரு ரன்னுக்கு ஓடினார். துரிதமாக கிரீசை நோக்கி தெண்டுல்கர் ஓடிய போது, ஸ்டம்பில் இருந்து சில அடி தூரத்தில் பந்து வீசிய பிரெட்லீ குறுக்கீடுவது போல் வழியில் நின்றார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க தெண்டுல்கர் சற்று விலகி ஓட நேர்ந்தது. இதற்குள் டேவிட் வார்னர் அவரை ரன்-அவுட் செய்து விட்டார்.
 
பிரெட்லீயின் குறுக்கீடு இல்லாமல் தெண்டுல்கர் ஓடியிருந்தால் ரன்-அவுட்டில் இருந்து தப்பியிப்பார். ஆட்டத்தின் முடிவும் மாறியிருக்கலாம். லெக் அம்பயர் சைமன் டபெல் விரலை உயர்த்தியதும் அதிர்ச்சி அடைந்த தெண்டுல்கர், ஏதோ சொல்லி கொண்டே பெவிலியன் திரும்பினார்.
 
நடுவர்களின் பாதகமான தீர்ப்புகள் குறித்து இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:-
 
தெண்டுல்கரின் ரன்-அவுட் விவகாரத்தில், பிரிஸ்பேன் ஆட்டத்தில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பிப்.19-ந்தேதி) நடந்த விஷயத்தை உதாரணமாக சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அந்த ஆட்டத்தில் வினய்குமார் பந்து வீசிய போது, ஸ்லிப்பில் பீல்டர்களை நிறுத்தியிருந்தோம். மிட் விக்கெட் திசையில் பீல்டர் இல்லை. அவர் வீசிய பந்து பாயிண்ட் திசைக்கு அடிக்கப்பட்டது. உடனே அவர், பிட்ச்சை கடந்து மிட்விக்கெட் நோக்கி ஓடி வந்தார். அப்போது நடுவர், விதிப்படி இதை செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை என்று வினய்குமாரிடம் கூறினார்.
 
எனவே பந்து வீசிய பிரெட்லீ பாயிண்ட் திசை பீல்டர் நோக்கி சென்றார் என்று சொல்லி நியாயப்படுத்த முடியாது. உண்மையிலேயே தெண்டுல்கர் செல்லும் வழியில் அவருக்கு எந்த வேலையும் இல்லை. தெண்டுல்கர் சில அடி தூரம் கூடுதலாக ஓட வேண்டும் என்பது அவரது நோக்கம். அப்படி பார்க்கையில் ரன்-அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் அவர் வழியில் நின்றிருக்கிறார் என்பது எனது கணிப்பாகும்.
 
இதனால் தெண்டுல்கர் உண்மையிலேயே ஏமாற்றத்திற்குள்ளானார். இந்த விஷயத்தில் லெக் அம்பயர் (டபெல்) அவுட் கொடுத்தது தவறானதாகும். ஏனெனில் அவுட் ஆகிய விதத்தில் சரியாக கணிக்க கூடிய இடத்தில் மற்றொரு நடுவர் பில்லி பவுட்டன் தான் இருந்தார். லெக் அம்பயர் டபெல் நின்ற கோணத்தில் இருந்தபடி இந்த அவுட்டை கணிப்பது கடினமாகும்.
 
எனவே பவுட்டன், லெக் அம்பயரிடம் இது பற்றி சொல்லியிருக்க வேண்டும். இதே போல் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் வழங்கியிருக்க வேண்டும். அவுட் கொடுக்கப்படாதது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். அவர் முகத்தில் பந்து படாமல் இருக்க தடுத்ததாக நினைக்கலாம். ஆனால் பந்தை முகத்தின் அருகில் வைத்து தடுக்கவில்லை. இரண்டுக்கும் நிறைய இடைவெளி இருந்தது. அப்படி இருந்தும் அவருக்கு ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.
 
நாங்கள் 2006-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த போது, இன்ஜமாம் உல்-ஹக் இதே போன்று அவரை நோக்கி பந்து எறியப்பட்ட போது, முகத்தில் படாமல் இருக்க பேட்டை வைத்து தடுத்ததாக கூறிய போதும், அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. மொத்தத்தில் இரு நடுவர்களின் முடிவால் எங்களுக்கு தான் பாதிப்பு.
 
இவ்வாறு டோனி கூறினார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger