News Update :
Powered by Blogger.

கசாபுக்கு மரணதண்டனை தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது

Penulis : karthik on Tuesday 11 September 2012 | 21:46

Tuesday 11 September 2012


கசாபுக்கு மரணதண்டனை தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது கசாபுக்கு மரணதண்டனை தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது

மும்பை தாக்குதல்  தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு விதித்த மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள க ுண்டுகள் துளைக்க முடியாத பாதுகாப்பான ஒரு முட்டை வடிவிலான சிறையில் பத்திரமாக அவன் வைக்கப்பட்டுள்ளான்.
 
மரணதண்டனை குறித்த உறுதிபடுத்தப்பட்ட தீர்ப்பு நகலில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவன் கையெழுத்தி�® �்டு உள்ளான். அதன் ஒரு மாதிரி நகல் அவனுக்கும் மற்றொரு மாதிரி நகல் உச்ச நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று அவனுக்கு மரணதண்டனை தீர்ப்பு குறித்த நகலை அதிகாரிகள் அவனிடம் கொடுத்à ��னர். அப்போது அவனிடம் மரணதண்டனை குற்றவாளியான உனக்கு அதிலிருந்து விடுதலை பெற ஜனாதிபதிக்கு கருணை மனு வழங்கும் உரிமை இருக்கிறது என்று எடுத்து கூறினர்.
 
அதற்கு அவன் எதும் பதிலளிக்காமல் மவுனமாக இருந்துவிட்டா ன் என்று கூறப்படுகிறது. மரண தண்டனையிலிருந்து விடுதலை வேண்டி கசாப் விண்ணப்பித்தால் அதிகுறித்து உடனடியாக பரிசீலிக்கப்படும் என்று உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே முன்பு கூறியிருந்தார்.


/

comments | | Read More...

சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்



சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள் சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்

போலீசில் சரணைடைய வந்த போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை அவரது ஆதரவாளர்கள் திருப்பி அனுப்பினர்.

முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இடிந்தகரை, கூடங்குள�® �்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார், போராட்டக்காரர்கள் என பலர் காயமைடந்தனர். இதையடுத்து இந்த போராட்டம் தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கும் பரவியது. இது தொடர்பாக இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவி்த்துள்ளனர்.

போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமறைவானார். மக்களின் நலன் கருதி தான் கூடங்குளம் போலீசில் சரணடையப் போவதாக அவர் நேற்று அறிவித்தார். இதையà ��ுத்து நேற்று மாலை இடிந்தகரை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.

இதற்கிடையே ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு இடிந்தகரை வந்தார். இந்நிலையில் தான் அறிவித்தவாறு சரணடைய உதயகுமார் கிளம்பியதாகவும், போராட்டக்காரர்கள் அவரை சரணடையவிடாமல் படகில் ஏற்றி திருப்பி அனுப்பியதகாகவும் தகவல் கிடைத்துள்ளது.


/

comments | | Read More...

இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு




இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மின்வ ெட்டு கூடாது என்று மின்சார வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரவில் மின்வெட்டு கூடாது என்ற மனுதாரரின் கோரிக்கையை மின்சாà �° வாரியம் பரிசீலனை செய்யலாம். ஆனால் இரவுநேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்சார வாரியத்திற்கு உத்தரவிட முடியாது.போதிய அளவில் மின்சாரம் இருப்பதை உறுதி செய்த பின்னரே மின்வெட்டை ரத்து செய்ய முடியும் என்றும் நீதிபதி கூறினார்.




/

comments | | Read More...

தமிழில் அஜீத், ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் டிரெய்லருக்கு வரவேற்பு


தமிழில் அஜீத், ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் டிரெய்லருக்கு வரவேற்பு தமிழில் அஜீத், ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் டிரெய்லருக்கு வரவேற்பு

பழைய நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின் 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். கவுரிஷிண்டே இயக்கியுள்ளார். தமிழிலும் இப்படம் உருவாகிறது.

தமிழ் படத்தில் அஜீத் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இதில் நடித்ததற்காக அஜீத் சம்பளம் வாங்கவில்லை. சொந்த செலவிலேயே மும்பை சென்று நடித்து கொடுத்துவிட்டு வந்தார்.

இதுகுறித்து ஸ்ரீதேவி கூறும்போது, அஜீத் தமிழில் பெரிய நடிகராக உள்ளார். நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவர் எளிமையாக இருக்கிறார். சிறந்த மனிதர் அஜீத் என்றார்.

இதற்கிடையில் ஸ்ரீதேவி அஜீத் இணைந்து நடித்த காட்சியுடன் 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' தமிழ் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அஜீத் ரசிகர்களை டிரெய்லர் கவர்ந்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' ரிலீசாக உள்ளது.


/

comments | | Read More...

ஆபீஸூக்கு செக்ஸி டிரஸ் போடாதீங்க




ஆபீஸூக்கு செக்ஸி டிரஸ் போடாதீங்க அது ஆபத்தாயிடும்! | இளமை

வீடோ, அலுவலகமோ உடை உடுத்தும் விதத்தில் நேர்த்தி இருக்க வேண்டும். நாம் உடுத்தும் உடைதான் நம் மீதான மதிப்பினை அதிகரிக்கும். பணி இடங்களில் நம்முடைய உடல் அழகை காட்டும் விதமாக உடை உடுத்திச் செல்வது ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்ற�® �ர் நிபுணர்கள்.

லோ கட் ப்ளவுஸ்
க்ளிவேஜ் காட்டும் லோ கட் ப்ளவுஸ் அணிந்து செல்வது என்றைக்கும் ஆபத்தானதுதான். வி நெக், யு நெக் என போட்டுக்கொண்டு சிங்கிள் பிளீட்ஸ் விட்டு புடவை உடுத்திக் கொண்டு அலுவலகத்திற்குச் செல்வது பார்ப்பவர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்திவிட& #3009;ம் என்கின்றனர் நிபுணர்கள்.

வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இன்றைக்கு முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை பெண்கள் பலரும் விரும்புகிறார்கள். டைட் டி சர்ட் போடுவது, லோ நெக் ப்ளவுஸ் போடுவது என மார்பக அழகை வெளியே காட்டினால் அது அவர்களுக்கு ஆபத்தாகி வ&#300 7;டும். அவர்களை மற்றவர்கள் விரும்பாமல் போகும் நிலை ஏற்படும் என்கிறார் மார்பக குணாதிசயங்கள் குறித்து ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவரான அமெரிக்காவின் எலிசபெத் ஸ்கொயர்ஸ். குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், அதீத க்ளீவேஜுடன் போனால், சக ஊழியர்களே அவர்களை வெறுப்பார்களாம். அவர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து கூட அதிகமாம்.

இப்படி மார்பகங்களை அதிக அளவில் வெளியில் தெரியும்படியான ட்ரஸ் போட்டுக் கொண்டு வேலை செய்யும் பெண்களால், அலுவலகத்தில் பல குழப்பங்கள் ஏற்படும். இது அவர்களின் வேலைக்கும் கூட உலை வைக்கும் என்கிறார் இது குறித்து ஆய்வு செய்த ஸ்கொயர்ஸ&#3021 ;. எனவே லோ கட் ப்ளவுஸ், டைட் டி சர்ட்ஸ் போன்றவைகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ்
இன்றைக்கு ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ் போடுவது நாகரீகமாகிவருகிறது. சுடிதார், டி சர்ட்க்ள் கூட ஸ்லீவ் லெஸ் ஆக வருகிறது. அக்குள் தெரிய உடுத்தும் ஆடைகளால் பணி புரியும் இடங்களில் கவனச்சிதறல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.

லெக்கின்ஸ்
உடம்பை இருக்கிப் பிடிக்கும் டைட் டாப்ஸ், லெக்கின்ஸ் அணிவது இன்றைக்கு பேஷனாகி வருகிறது. இது கேஷூவலாக நன்றாக இருந்தாலும் பணி இடங்களுக்குச் செல்லும் போது இந்த உடை கலாச்சாரம் தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்கர்ட் அன்ட் லோ கிப் டாப்ஸ்
சில அலுவலகங்களில் ஸ்கட் மற்றும் லோகிப் தெரிய டாப்ஸ் அணிந்து செல்கின்றனர். இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே இதுபோன்ற உடைகள் தடை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியான வாசகங்கள்
உடைகளில் கவர்ச்சியான வாசகங்கள் அடங்கிய டி சர்ட்களை அணிந்து செல்வது ஏற்றதல்ல. அதேபோல் பின்னழகை எடுத்துக் காட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் ஏற்புடையதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

ஹேர் கலர்ஸ்
அலுவலகத்திற்கு செல்பவர்கள் அதற்கேற்ப தலை அலங்காரம் செய்து கொள்வது அவசியம். அதை விடுத்து கலரிங் செய்வது, கண்ட இடத்தில் வெட்டி விடுவது என தேவையில்லாத அலங்காரங்கள் உங்கள் மீது அவமரியாதையை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஹைஹீல்ஸ் வேண்டாமே
அலுவலகத்திற்கு 3 இஞ்ச் அளவில் அதிகம் கொண்ட ஹைஹீல்ஸ் செருப்புகள் அணிய வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் இது செக்ஸி தோற்றத்தை ஏற்படுத்துமாம்.

அலுவலகத்திற்கு என்று சில டிரஸ் கோட் உள்ளது அவற்றின் படி உடை அணிந்து சென்று உங்களின் மதிப்பை உயர்த்திக்கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
comments | | Read More...

ஜெனிவாவை சிரிக்க வைத்த சிறீலங்கா




ஜெனிவாவை சிரிக்க வைத்த சிறீலங்கா




நவநீதம்பிள்ளையின்  ஜெனீவா அலுவலகத்துக்கு நிதி வழங்குவது, ஆட்களை நியமிப்பது தொடர்பில் வ ெளிப்படைத் தன்மையை கூட்டுவதற்கு நாடுகள் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டுமென சிறிலங்கா அரச பிரதிநிதி ஆரிய சிங்கா கூறியுள்ளார். நேற்று ஜெனீவா அமர்வின் போதே மேற்கண்&#297 5;வாறு அறிக்கை வாசித்துள்ளார்.

இவர் முதலில் தனது அரசாங்கம், தனது அரசாங்கத்தின் கீழ் இருக்கின்ற மனித உரிமை செயலகம் மற்றும் அதன் செயற்பாடுகள், மனித உரிமை செயற்பாடுகளில் நம்பிக்கைத்தன்மையுடனு&# 2990;், வெளிப்படையாகவும் இருக்கின்றதா என்பதனை பார்க்கவேண்டும். ஊழல், கொலை, கொள்ளை,ஆட்கடத்தல், விபச்சாரம், போதைப்பொருள்வர்த்தகம் என கொடிகட்டும் தனது ஆட்சியின் பிரதி &#2 984;ிதியாக இருப்பவர் இவ்வாறு பேசுவது தமாஷாக பேசுவது போன்றே உள்ளது. அல்லது யாரோ எழுதி வைத்த அறிக்கையினை  தனது என்று தப்பாக வாசித்துவிட்டாரா?


comments | | Read More...

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்: அசத்துவாரா யுவராஜ் சிங்



இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்: அசத்துவாரா யுவராஜ் சிங்



இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, இன்று நடக்கிறது. முதல் போட்டி ரத&# 3021;தான நிலையில் புற்றுநோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங், இன்று களமிறங்குவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு டி20 போட்ட&#30 07;கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டனத்தில் நடக்க இருந்தது. இடைவிடாமல் பெய்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்தானது.

 
இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு "கீமோதெரபி" சிகிச்சைக்கு ப் பின்பு மீண்ட யுவராஜ் சிங் 10 மாத இடைவெளிக்குப் பின்பு களமிறங்க காத்திருக்கிறார்.
 
இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக வீரேந்திர ஷேவாக், கவுதம் கம்பீர் வருவர். நடுவரிசையில் சமீப காலமாக இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகள் தேடித் தரும் வீராட் கோஹ்லி, ச&#30 09;ரேஷ் ரெய்னா, அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி உதவலாம்.
 
பார்ம் இல்லாமல் தவிக்கும் ரோகித் சர்மா இடத்தை, மனோஜ் திவாரி எளிதாக தட்டிச் செல்லலாம்.
 
கடந்த யூலையில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது பாதியில் திருப்பி அனுப்பப்பட்ட ஹர்பஜன், ஒருவழியாக இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றார்.
 
இவருக்கு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இன்று வாய்ப்பு கிடைப்பது சிரமமே. ஏனெனில் கடந்த 2 டெஸ்டில் 18 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்&#299 5;ார்.
 
வேகப்பந்து பந்துவீச்சில் இலங்கைத் தொடரில் அசத்திய இர்பான் பதான், மூன்றரை ஆண்டுக்குப் பின்பு அணிக்கு திரும்பிய பாலாஜி, ஜாகீர் கான், டிண்டா நம்பிக்கையுடன் செயல&#3021 ;பட வேண்டும்.
 
தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இந்திய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து தோற்றது.
 
கடைசியாக பங்கேற்ற மூன்று டி20 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்த அணிக்கு இன்று, மெக்கலம், அதிரடி துவக்கம் தரலாம். பிராங்க்ளின், அணித்தலைவர் ராஸ் டெய்லர், கப்டில், வில ்லியம்சனும் அசத்த தயாராக உள்ளனர்.
 
டெஸ்ட் தொடரில் பங்கேற்காத வெட்டோரியுடன், வேகத்தில் மிரட்டிய டிம் சவுத்தி, பிரேஸ்வெல், சகலதுறை வீரர் ஜேக்கப் ஓரம் ஆகியோர் பந்துவீச்சில் திறமை வெளிப்படுத்தலாம் .
 
மழையால் முதல் போட்டி ரத்தான நிலையில், இரு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதால், களத்தில் மோதல் காத்திருக்கிறது.

comments | | Read More...

பூதாகர விடயமாகும் செல்வி ஜெயலலிதாவை இழிவுபடுத்திய சிறீலங்காவின் கேலிச்சித்திரம்



பூதாகர விடயமாகும் செல்வி ஜெயலலிதாவை இழிவுபடுத்திய சிறீலங்காவின் கேலிச்சித்திரம்




தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவையும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் இழிவுபடுத்து&#2990 ;் வகையில், கேவலமான கேலிச்சித்திரத்தை வெளியிட்ட சிறிலங்காவின் அரசசார்பு முன்னணி சிங்கள மற்றும் ஆங்கில வாரஇதழ்களுக்கு எதிராக அனைத்துலக அளவில் கண்டனங்கள் எழுந&#302 1;துள்ளன. 

 

கடந்த ஞாயிறன்று வெளியான 'லக்பிம' சிங்கள வாரஇதழ் மற்றும் 'லக்பிம நியூஸ்' ஆங்கில வாரஇதழ் ஆகியவற்றில் இந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது. 

 

ஹசந்த விஜேநாயக்க வரைந்த இந்தக் கேலிச்சித்திரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் மிகக் கேவலமான முறையில் சித்திரிக்கப&#3021 ;பட்டுள்ளனர்.

இந்த கேலிச்சித்திரத்தை வெளியிட்ட 'லக்பிம' வாரஇதழ்கள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான த&#3007 ;லங்க சுமதிபாலவுக்குச் சொந்தமான சுமதி பப்ளிகேசன் நிறுவனத்தினால் வெளியிடப்படுபவையாகும். 

 

அத்துடன், சிறிலங்கா அதிபரின் ஊடக ஆலோசகரான பந்துல ஜயசேகரவின் ஆலோசனையின் பேரிலேயே இந்தக் கேலிச்சித்திரம் வரையப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரையப்பட்ட இந்தக் கேலிச்சித்திரத்தை உலகின் பல்வேறு பெண்கள் அமைப்புகளும் கண்டித்துள்ளன. 

 

அதேவேளை ஊடகநெறிமுறைகளை மீறும் வகையில் இந்தக் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடக அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தநிலையில், 'லக்பிம நியூஸ்' இணையப் பதிப்பில் இருந்து இந்தக் கேலிச்சித்திரம் அகற்றப்பட்டுள்ளது. 

 

அதேவேளை, லக்பிம நியூஸ் பதில் ஆசிரியர் ரங்க ஜெயசூரிய, இந்தக் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார். 

 

இது ஓவியரின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று அவர் கூறியுள்ளார். 

 

அதேவேளை. இந்திய ஊடகங்கள் பலவும் சிறிலங்காவின் இந்த அத்துமீறலுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.


comments | | Read More...

விலைக்கு வாங்கப்பட்ட ஹக்கீம், விலைபேசப்பட்ட முஸ்லீம்களின் உரிமை



விலைக்கு வாங்கப்பட்ட ஹக்கீம், விலைபேசப்பட்ட முஸ்லீம்களின் உரிமை




கிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக ச&# 3007;றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கல ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

 

சிறிலங்கா அதிபரின் வசிப்பிடமான அலரி மாளிகையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

 

இந்தச் சந்திப்பின் போதே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த முடிவை தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

 

எனினும் இதுபற்றி எந்த அதிகாரபூர்வ முடிவையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger