News Update :
Powered by Blogger.

சீனர்கள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுக்கின்றனர்

Penulis : karthik on Friday 6 January 2012 | 17:56

Friday 6 January 2012

சீனப் பிரஜைகள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுத்து வருவதாக
கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பல்லாயிரக் கணக்கான சீனர்கள் கடந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
2011ம் ஆண்டில் சுமார் 60000 சீனப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம்
செய்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலாத்துறை அமைச்சின்
உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில்
பணியாற்றும் நோக்கிலேயே பல சீனர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்.
இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்த 60000 சீனப் பிரஜைகளில், 9000 பேர்
இன்னமும் நாடு திரும்பவில்லை.
எவ்வாறெனினும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு சீனர்களின் வருகையை
சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பாகவே தனது புள்ளி விபரங்களில்
வெளிப்படுத்தியுள்ளது.
2011ம் ஆண்டில் 90000த்திற்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் இலங்கைக்கு
விஜயம் செய்துள்ளனர்.
முன்னைய ஆண்டை விடவும் இந்த எண்ணிக்கை 15 வீதம் அதிகமாகும்.
எனினும், இந்த சுற்றுலாப் பயணிகளில் பலர் இலங்கையில் ஓய்வெடுப்பதற்காக
செல்லவில்லை எனவும், உழைப்பை வழங்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில்
சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தென் பகுதியில் அதிகளவான சீனர்கள் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளுர் உழைப்பாளர்கள் பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெறவில்லை என்பதே
யதார்த்தமாகும். சீன அரசாங்கம் மிகவும் கருணையுடன் இலங்கையின்
அபிவிருத்திக்காக பங்களிப்பு செய்வதனைப் போன்று தோன்றிய போதிலும், உண்மை
நிலைமை வேறுவிதமாக அமைந்துள்ளது.
சீன நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில்ச
சீனர்கள் கடமையாற்றி வருகின்ற அதேவேளை, சீன அரசாங்கமே கடன்களை
வழங்கியுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு வழங்கப்பட்ட பணம் சீனர்களுக்கு மீளவும்
சென்றடைகின்றது. சீனாவுடனான உறவுகள்; வலுப்பட்டுள்ள அதேவேளை ஏனைய
நாடுகளுடனான உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம்
தெரிவித்துள்ளது
comments | | Read More...

மன்னார்குடி நீதிமன்றத்தில் புவனேஸ்வரி... மேலும் ஒரு தயாரிப்பாளர் மோசடி புகார்!

சென்னை: கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது மேலும் ஒரு சினிமா தயாரிப்பாளர்
மோசடி புகார் கொடுத்துள்ளார்.
வடபழனி ஆற்காடு ரோட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் குமார் போலீஸ்
கமிஷனரிடம் இன்று அளித்த புகார் மனுவில், "நான் 'திருமங்கலம் பேருந்து
நிலையம்' என்ற படத்தை தயாரித்துள்ளேகடந்த மே மாதம் நடிகை புவனேஸ்வரி
என்னை நேரில் சந்தித்து டெலிவிஷன் தொடர் தயாரிப்பதாகவும் அதை முடிக்க ரூ.
10 லட்சம் தேவை என்றும்கூறினார்.
தான் எடுத்ததாக டி.வி. தொடர் காட்சிகள் சிலவற்றையும் எனக்கு போட்டு
காட்டினார். ரூ. 10 லட்சம் கொடுத்தால் இரண்டு மாதத்தில் மேலும் ரூ. 40
ஆயிரம்சேர்த்து பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறினார்.
நான் பணம் கொடுத்தேன். அதற்கு பதில் காசோலைகள் தந்தார். அவற்றை வங்கியில்
செலுத்தியபோது பணமின்றி திரும்பி வந்தது. பிறகு பல தடவை பணம் கேட்டு
புவனேஸ்வரியை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அதன் பிறகு வக்கீல்
நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை.
மிரட்டல்
இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.நீதிமன்றம்
புவனேஸ்வரிக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் நான்
சிங்கப்பூர் சென்று விட்டேன். அப்போது வக்கீல்கள் என்ற பெயரில் 4 பேர்
எனது அலுவலகத்துக்கு வந்து புவனேஸ்வரிக்கு எதிரான வழக்கை வாபஸ்பெறும்படி
மிரட்டியுள்ளனர்.
புவனேஸ்வரி மீதும் மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,"
என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜரான புவனேஸ்வரி
இதற்கிடையே ரூ 10 லட்சம் செக் மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில்
மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார் புவனேஸ்வரி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள கோட்டூரைச் சேர்ந்த
செல்வக்குமார் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,
புவனேஸ்வரி தனக்குக் கொடுக்க வேண்டிய, ரூ 10 லட்சத்துக்காக அவர் தந்த
காசோலை பணமின்றி திரும்பி வந்துவிட்டதால் அவர் மீது நடவடிக்கைஎடுக்கக்
கோரியிருந்தார்.
இந்த வழக்கில் நேற்று காலை 10 மணியளவில் மன்னார்குடி குற்றவியல்
நீதிமன்றத்தில் புவனேஸ்வரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன்
பிள்ளை, பிப்ரவரி 2ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக
உத்தரவிட்டார்.
ஏற்கெனவே ரூ 1.5 கோடிமோசடி வழக்கில் புவனேஸ்வரி மீது வழக்குப் பதிவு
செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: bhuvaneshwari , புவனேஸ்வரி , மோசடி புகார்
comments | | Read More...

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லாதெரிஞ்சுக்கடா !

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும் .. .
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல ,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல !
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
' வெறுப்படிக்கிதுடா மச்சான் ' னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா ,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க ,
இல்ல ' மனிஸ் ' தியேட்டர்ல படம் பாக்க !
' கஷ்டப்பட்டு ' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான் .. .
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான் !
கேலி கிண்டல் பஞ்சமில்ல ,
கூத்து கும்மாள குறையுமில்ல ,
எல்லாருக்கும் சேத்துதான் punishment ன்னா
H.O.D ய கூட விட்டதில்ல !
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம் …
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு !
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல .. .
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல !
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல …
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல ,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல !
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல .. .
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல !
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
' வெட்டி ஆபிஸர் ' னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம் !
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்திகாட்டி குடுக்கும் .. .
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
' சாப்பாட்ல காரம்டா மச்சான் ' னு
சமாளிச்சி எழுந்து போவோம் .. .
நாட்கள் நகர ,
வருஷங்கள் ஓடுது ,
எப்போதாவது மட்டுந்தான் இ - மெயிலும் வருகுது
"Hi da machan… how are you?" வுன்னு .. .
தங்கச்சி கல்யாணம் ,
தம்பி காலேஜி ,
அக்காவோட சீமந்தம் ,
அம்மாவோட ஆஸ்த்துமா ,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல் ,
appraisal டென்ஷன் ,
இந்த கொடுமையெல்லாம் பத்தா
' இன்னிக்காவது பேச மாட்டாளா ?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல் ,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா ,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா !
இ - மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க !
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
' ஏண்டா பேசல ?' ன்னு கோச்சிக்க தெரியல . .
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல !
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது !
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது !
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது !
வசதி வாய்ப்பு வந்தாலும்
' மாமா ' ' மச்சான் ' மாறாது !
comments | | Read More...

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர், மேக்கப்மேன் கைது; போலீஸ்காரர் சஸ்பெண்டு

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி இளம்பெண்களை விபச்சாரத்தில்
ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து
நடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர்
திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் ராதிகா, கூடுதல் துணை
ஆணையாளர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் விபச்சாரத் தடுப்பு பிரிவு உதவி
ஆணையாளர் கிங்ஸ்லி, இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோர் சென்னையில் விபச்சார
தொழில் செய்வோர் பற்றி ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது தி.நகரில்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில்
ஈடுபடுத்துவதாகரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தொலைபேசி
மூலம் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசினார்கள்.
மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் அழகான துணை நடிகைகள் இருப்பதாகவும்
குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக
கூறினார். அவர் கூறிய இடத்திற்கு வாடிக்கையாளர் போல் சென்ற விபச்சாரத்
தடுப்பு பிரிவு போலீஸ்காரரை அந்த நபர் தி.நகரில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ்
என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.
அவர்களை பின் தொடர்ந்து சென்ற இன்ஸ்பெக்டர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம்
நடப்பதை உறுதி செய்து கொண்டு அதிரடியாக புகுந்து அங்கு விபச்சாரத்
தொழில் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர்
ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர்.
அங்கிருந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் செல்வ நாயகன்
தேவ்ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா படம்
தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும்
தெரிவித்தார்.
தற்போது 'பேசாதே' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார்.
சினிமா மேக்கப்மேன் கைது
இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக
சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு அபார்ட்மெண்டில் 3 இளம்பெண்களை தங்க வைத்து
விபச்சாரத் தொழில் செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு
உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) ஆகியோரையும் போலீசார்
கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது
செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ்காரர் சஸ்பெண்டு
கடந்த 2 மாதத்துக்கு முன்பு தி.நகரில் சித்தி விநாயகர் கோவில் தெருவில்
உள்ள ஒரு அபார்ட்மெண்டில் விபசார தடுப்பு போலீசார் திடீர் சோதனை
நடத்தினர். இதில் அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக சுபா என்கிற
நான்சி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கைதான பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த அபார்ட்மெண்ட் வீட்டை
மாதவரத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் லீசுக்கு எடுத்து இருந்ததும்
அவர் அயனாவரத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
அரிகிருஷ்ணன் மீது துறை ரீதியானவிசாரணை நடந்தது. இதில் அவருக்கும், கைதான
சுபாவுக்கும்தொடர்பு இருந்ததும் லீசுக்கு எடுத்த வீட்டை அவரிடம்
ஒப்படைத்து விபசார தொழில் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அரிகிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
போலீஸ்காரர் அரிகிருஷ்ணன் 2008-ம் ஆண்டு விபசார தடுப்பு பிரிவு
போலீஸ்காரராக இருந்ததாகவும் அப்போது சுபாவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும்
கூறப்படுகிறது
comments | | Read More...

கடலூர், புதுவையில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும்நித்யானந்தா

கடலூர், புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நித்யானந்தா
சாமியாரின் தியான பீட ஆசிரமம் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. புதுவை
மாநிலம் ஏம்பலத்தில் தியான பீடம் ஆசிரமம் இருக்கிறது. இங்கிருந்து நிவாரண
உதவிகளை செய்து வருகின்றனர். நிவாரண பணிகளை செய்வதற்காக நித்யானந்தா
சாமியார் தனது பக்தர்கள் 600 பேருடன் ஏம்பலத்துக்கு வந்துள்ளார்.
இவர்களில் 35 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அங்கு பெரிய அளவில் பந்தல்
அமைத்து சமையல் கூடத்தை உருவாக்கி உள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான
பாத்திரங்களை வைத்து சமைத்து வருகின்றனர்.
தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் தயாரித்து அருகில் உள்ள புதுவை,
கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். பல
ஆயிரம் கிலோ காய்கறிகள், அரிசி மூட்டைகள், ரவை போன்றவை
குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து 24 மணி நேரமும் சமையல் நடந்து
வருகிறது. அவற்றை நித்யானந்தரே நேரடியாக கண்காணித்து வருகிறார்.
தயாரிக்கப்பட்ட உணவுகளை 15 வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று
கிராமங்களில் வழங்கி வருகிறார்கள். புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள
மின் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் நித்தியானந்தாஆசிரமம் மூலம்
உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2-ந்தேதியில் இருந்து நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப இன்னும் 3 அல்லது 4 நாட்கள் வரை உணவு
வழங்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று ஆசிரம நிர்வாகிகள்
கூறினார்கள்
comments | | Read More...

நிலமோசடி புகார் : நடிகர் மன்சூர் அலிகான் கைது!

ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில்
நடிகர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த துரைவேல் என்பவர், சென்னை அரும்பாக்கத்தில்
உள்ள தனது 1247 சதுர அடி நிலத்தை அபகரித்து நடிகர் மன்சூர் அலிகான்,
கட்டிடம் கட்டியுள்ளதாகவும், நில அபகரிப்பு குறித்து கேள்வி எழுப்பிய
தன்னை மன்சூர் அலிகான்மிரட்டியதாகவும், புகார் அளித்தார்.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த புகார் அடிப்படையில் மன்சூர் அலிகானிடம் துணை கமிஷனர் ராதிகா
மேற்பார்வையில் நில மோசடிப் பிரிவு உதவி கமிஷனர் ஜேசுராஜன் மற்றும்
போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை
போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் மன்சூர் அலிகானை போலீசார் கைது
செய்தனர்
comments | | Read More...

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பேர் சூட்டுவிழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு செல்லமாக
'பேட்டி பி' என்று பெயரிட்டனர். ஆனால் முறைப்படி குழந்தைக்கு பெயர்
சூட்டவில்லை.
இந்நிலையில் 'ஏ' என்ற எழுத்தில் தொடங்கும்படியான பெயரை தேர்வு செய்து
அனுப்பும்படி ரசிகர்களுக்கு அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து நூற்றுக்கணக்கில் அவருக்கு பெயர்களை ரசிகர்கள் அனுப்பி
வைத்தனர். குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதை குடும்பத்தினர் தற்போது
முடிவு செய்து விட்டனர்.
ஜனவரி 13ம் தேதி பெயர் சூட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதற்காக அமிதாபின்வீடு இப்போதே களைகட்டி உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை
அமிதாப் பச்சனும், அவரது மனைவி ஜெயா பாதுரியும் செய்து வருகின்றனர்.
இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் மும்பை நட்சத்திரங்களும்
பங்கேற்கின்றனர்.
comments | | Read More...

வயது பிரச்சினைக்காக ராணுவ அமைச்சகத்துடன் மோதல் இல்லை - ராணுவ தலைமை தளபதி

இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் வி.கே.சிங் தொடர்பான ஆவணங்களில்
பிறந்த தேதி 1950-ம்ஆண்டு மே 10 என இருக்கிறது. ஆனால், 1951-ம் ஆண்டு மே
10-ந் தேதி அன்று பிறந்ததாக வி.கே.சிங் கூறுகிறார். இதை, ராணுவ அமைச்சகம்
நிராகரித்து விட்டது.எனவே, ஓராண்டுக்கு முன்பே ஓய்வு பெற வேண்டிய
நிலையில் சிங் இருக்கிறார். இது தவிர, `பாகிஸ்தான் தளபதி போல என்னை
நடத்துகின்றனர்' என்றும் சில நாட்களுக்கு முன் சிங் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், தன்னுடைய வயது விவகாரம் தொடர்பாக ராணுவ
அமைச்சகத்துக்கு எதிராக கோர்ட்டில் வி.கே.சிங் வழக்கு தொடர்வார் என
தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவரிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது,
`இது போன்ற எண்ணம் எதுவும் என்னிடம் இல்லை. எனக்கும் ராணுவ
அமைச்சகத்துக்கும் இடையே எந்தவித சர்ச்சையும் கிடையாது. இது முற்றிலுமாக
தனிப்பட்ட விவகாரம்' என்றார்.
comments | | Read More...

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்!

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உடைகளைக்
கண்டறிவது என்பது சற்று சிரமமான வேலைதான்.
சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு பெரும்பாலும் இந்த சிரமம்
இருப்பதில்லை. மேலும் அவர்களுக்கு மார்பகங்களை எடுப்பாக்கி்க் காட்டும்
வகையிலான உடைகள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால் பெரிய மார்பகப்
பெண்களுக்கு இந்த வசதிகள் இல்லை.
பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் எந்த மாதிரியான உடைகளைத் தேர்வு
செய்யலாம் என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ...
*. மூடிய கழுத்துடைய உடைகளை ஒருபோதும் தேர்வு செய்யாதீர்கள்.
அப்படிப்பட்ட உடைகள் உங்களது மார்பகங்களை மேலும் பெரிதானதாக காட்டி
விடும்.
*. அதிக கிளீவேஜ் தெரியும்படியானஉடைகளையும் தவிர்ப்பது நல்லது.இது
அழகாகக் காட்டுவதற்குப் பதில் அகோரமாக காட்டி விடும்.
*. மிகவும் டைட்டான உடைகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.சற்றே லூசான
உடைகளைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
*. குர்தா உள்ளிட்ட உடைகளைத் தாராளமாக தேர்வு செய்யலாம். இது அழகாகவும்
காட்டும், அகோரத்தையும் குறைக்கும். இதுபோன்ற நீளமான உடைகள் உங்களது
உடல்வனப்பைக் காட்டுமே தவிர அதன் அளவைக் குறைத்தேக் காட்டும். எனவே இது
சவுகரியமானது.
*. சல்வார் போன்ற உடைகளை அணியும் போது துப்பட்டாவை மார்புக்குக் குறுக்கே
இருப்பது போல, மார்பகங்களை மூடுவது போல போட்டுக் கொள்வது நன்றாக
இருக்கும்.
*. கழுத்தை ஒட்டிய பேஷன் கவரிங் நகைகளை போட்டுக் கொள்வது இன்னொரு
புத்திசாலித்தனமான செயல். இதுபோல போடும்போது மார்பகங்களுக்குப் பதில்
உங்களது கழுத்தை நோக்கி மற்றவர்கள் பார்வை செல்லும். உங்களுக்கும் அழகு
கூடி, தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
இதுபோல சின்னச் சின்ன மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உங்களது அழகையும்
கூட்டலாம், மற்றவர்களின் பார்வையிலிருந்தும் தப்பலாம்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger