News Update :
Powered by Blogger.

பதிவுலகமும் ஆபாசமும்

Penulis : karthik on Thursday 29 September 2011 | 20:09

Thursday 29 September 2011

 
 
யாரோ புதியபதிவராம்.ஐடியா மணி என்று பெயர்.அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால்என்னை ''நீங்க நல்லா இருக்கணும் சண்முகவேல் சார்" என்று சொல்வாரா? நிரூபன் என்னை தன் பதிவில்அறிமுகப்படுத்திய பதிவில் அவர் சொன்னது.ஆண்டாள் பாசுரங்களையெல்லாம் விமர்சித்துஒரு பதிவு எழுதி விட்டார்.வழக்கமாக பதிவுகளில் இம்மாதிரி பார்க்கும்போது நான்விமர்சிப்பதில்லை.இவர் நல்ல ஆளாச்சே! ஏதோ சகவாசதோஷம் என்று எதிர்பதிவு எழுதுவதாகசொல்லிவிட்டேன்.
 
கவர்ச்சி,ஆபாசம் என்று பதிவுலகில் காரசாரமாக தனக்குத் தெரிந்த்தைஎழுதி வருகிறார்கள்.ஆபாசம் என்றால் என்ன என்பது பற்றி முன்பே பதிவில் குறிப்பிட்டுவிட்டேன். வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வைஏற்படுத்தினால் அது ஆபாசம்.
 
சினிமாக்களில் கற்பழிப்புகாட்சி இடம்பெறுவதுண்டு.பல திரைப்படங்களிலும் அதன் நோக்கம் ஆபாசம்தான்.சினிமாவைசிறந்த கலையாக கையாளும் இயக்குனர்கள் படங்களில் கற்பழிப்பு காட்சி இருக்கும்.ஆனால்அக்காட்சி பரிதாபத்தையும்,பாதிக்கப்படும் பெண்ணின் மீது பரிவையும் தூண்டுமே தவிரகிளர்ச்சியைத்தருவதில்லை.
 
ஆண்டாளின் பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியைதூண்டாது,ஆண்டாள் பாசுரம் பக்தி இலக்கியம்.இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம்வேறு.முன்பேகுறிப்பிட்ட்து போல இலக்கியம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன்தகுதி தீர்மானிக்கப்படுகிறது.உலகின் சில திரைப்படங்களும்,நாவல்களும் ஆபாசம் என்று தடை செய்யப்பட்டு கலை,இலக்கியத்தகுதி காரணமாக தடை நீக்கப்பட்ட்துண்டு.
 
மணி எதற்காக ஆண்டாளைப் பற்றி விமர்சிக்கிறார்? ஏன் கில்மா பதிவுகளைபெண்களிடம் எதிர்பார்க்கிறார்? இந்த பதிவின் நோக்கமென்ன? இன்று கலாச்சார காவலர்களைவிமர்சிப்பவர்கள் யார்? அவர்களின் நோக்கமென்ன? பெண்களுக்கு சப்போர்ட் செய்து ஹீரோஆகலாம் என்று பார்க்கிறீர்களா என்பது ஏன்?
 
பெண்களுக்கு சப்போர்ட் செய்து எழுதி விட்டால் ஹீரோ ஆகிவிடலாம் என்பதுஉண்மையா? அப்படி யாராவது மணிரத்னம் பட்த்துக்கோ,தங்கர் பச்சான் பட்த்துக்கோ ஹீரோஆகி இருக்கிறார்களா? நான் பல பதிவுகளை அப்படி எழுதியதுண்டு.அடுத்த சிலபதிவுகளுக்கு ஹிட்ஸ் குறையுமே தவிர ஹீரோ மட்டும் ஆகவில்லை.ஆனாலும் எழுதுவதைதவிர்க்க முடியாது.அது பாரதியிடமிருந்து பெற்ற மதிப்பீடு!
 
கில்மா என்பது கவர்ச்சிப்பட்த்தை குறிக்கிறதா? அரைநிர்வாண பட்த்தைகுறிக்கிறதா? எனக்கு தெரியாது.கவர்ச்சி உணர்வுகளைத் தூண்டும் என்று பிரபல பதிவர் நிரூபன்சொல்கிறார்.அப்படியானால் ஆபாசம்தானே! ஆபாச பதிவுகள் என்ன நோக்கத்திற்காகபதிவுலகில் எழுதப்படுகிறது.ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் கலாச்சார காவலர்கள் என்றால்அதை தூக்கிப்பிடிப்பவர்கள் கலாச்சாரம் இல்லாத ஆட்களா?
 
ஆபாச சொற்களை எழுதுவதில்,வரைவதில்ஆர்வம் உள்ளவர்களை கோப்ரோலாலியா(Corprolalia) என்று சொல்வார்கள்.சில முற்றியமனநோய்களிலும்,முதிர்ச்சி அடையாதவர்களிடமும் இந்நிலை இருக்கும்.இவர்கள்ஆலோசனையும்,சிகிச்சையும் பெறவேண்டியவர்கள்.
 
பெண்கள் சிக்ஸ்பேக்கைவிரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? விரும்பினால்தானே அதைப்பற்றி எழுதமுடியும்?ஆண்களைப்போல பெண்கள் உடலைப்பார்ப்பதில்லை என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.தாமரைபட்த்தின் காட்சிக்குத் தகுந்தவாறு பாடல் எழுதலாம்.பதிவர்கள் அதை செய்யுங்கள்,இதை எழுதுங்கள் என்ற ஐடியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா? அவரவர்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள்.
comments | | Read More...

சமையல்னா சாதாரண விஷயமா?

 
சமையலை விடவும் அதி உன்னதமான ஒரு கலை உலகில் இருப்பதாகதெரியவில்லை.மனிதன் உயிர்வாழ அத்தியாவசிய தேவைகளில் முதலிட்த்தில் இருப்பதுஉணவு.மனிதன் உணவால் உருவாக்கப்பட்டவன் தான்.பாரம்பர்யத்தை விட்டுவிலகி விதம்விதமானசமையல் பழக்கத்துக்கு வந்துவிட்டாலும் இன்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள்குறைந்து போய் விட்டார்கள் என்று தோன்றுகிறது.
 
எனக்கு தெரிந்தவர் ஒருவர் கடை வைத்திருக்கிறார்.தினமும் வீட்டுக்குசெல்லும் முன்பு மெஸ்ஸில் சாப்பிட்டு விடுவார்.வீட்டுக்குப்போய் கொஞ்சம் போதும்தொப்பை பெரிதாகிக் கொண்டே வருகிறது என்பார்.கிட்ட்த்தட்ட தினமும் இதுவேதான்.ஒருநாள் கேட்டுவிட்டேன்.''அம்மா போனப்புறம்இப்படித்தான் சார்,அவங்க(மனைவி) சமைக்கறது எனக்கு பிடிக்கிறதில்ல!"
 
சமையல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வித்தியாசமான ஒன்று.சில குடும்பங்களில் காரம்குறைவாக சாப்பிடுவார்கள்,சில இட்த்தில் நமக்கு நாக்கு சுட்டுவிடும்.உப்பும்அப்படித்தான்.சில வீடுகளில் சப்பென்று இருக்கும்.உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில்சாப்பிட நேரும்போது உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்வதும்,அதிகமாகஇருந்தால் தண்ணீர் விட்டுக்கொள்வதும் எனக்கு வழக்கம்.
 
அடிக்கடி நோய்வாய்ப்படும் குடும்பங்களில் சமையலும் ஒரு பிரச்சனையாக இருக்கவாய்ப்புண்டு.ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகள் சேர்ப்பது குறைவாக இருக்கும்.சிலகுறிப்பிட்ட உணவு வகைகளுக்கு பழகிப் போய்விடுவதும் காரணம்.சிலருக்கு கொழுப்புநிறைந்தவை,சிலருக்கு காரம் நிறைந்தவை.
 
ஒவ்வொரு பகுதிக்கும்உணவு வகைகளில் மாற்றம் இருப்பது தெரிந்த்தே! வட நாட்டிலிருந்து வரும்லாரிக்கார்ர்கள் எங்காவது சாலையோரங்களில் நிறுத்திவிட்டு அவர்களேசமைத்துக்கொள்வார்கள்.ஆந்திராவில் பச்சை மிளகாய் கடிப்பதை பார்த்தால் நமக்குகண்ணில் நீர் வரும்.
 
என் தாத்தாவுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் அரை ஆழாக்கு நெய் வேண்டும்என்று பாட்டி சொன்னதுண்டு.இப்போது அப்படி சாப்பிட்டால் கதை வேறு.அவர்கள் நாள்முழுக்க உடல் உழைப்பில் வாழ்ந்தவர்கள்.சமையலில் இருக்கும் பெரும்பாலான சேர்க்கைகளும்நிலத்தில் விளைந்த்தாக இருக்கும்.
 
சிறப்பாக சமையல் செய்யும் நண்பர்களை பார்த்திருக்கிறேன்.ஆண்கள் சிலருக்கும்அந்த கலை கைவந்து விடுகிறது.நிலத்தில் விளைந்து,அம்மா சமைத்த அந்த எளிய உணவு தந்ததிருப்தியை இனி எப்போதும் அடைந்துவிட முடியாது என்று தோன்றுகிறது.எல்லாவற்றிலும்சுட்டியாக இருந்தால் அந்த குழந்தைக்கு நல்ல உணவு கிடைக்கிறது என்பது பொருள்.
 
மனம் நிறையும் உணவு வகைகளை தயாரிக்கும் குடும்பத்தில் பிரச்சினைகளும்குறைவாக இருக்கும்.உடைந்து போகும் வாய்ப்புகள் குறைவு.ஆரோக்கியத்தையும் அமைதியையும்தருவது இதமான உணவுதான்.
comments | | Read More...

உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?

 
 
உணர்ச்சிகள் எண்பது கூரான கத்தி.முறையாக பயன்படுத்தினால் நன்மையைத் தரும்.இல்லாவிட்டால் வாழ்வில் நாசத்தை ஏற்படுத்தும்.உணர்ச்சிகள் தூண்டப்படும்போது நம் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? நகைச்சுவை உணர்ச்சி மிகுந்திருக்கும்போது மனம் லேசாகி பார்ப்பவைஎல்லாம் அழகாகத் தெரியும்.உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.அன்பு,கருணை போன்ற உணர்ச்சிகளிலும் நன்மைதான்.கோபம் ,பொறாமை போன்ற உணர்ச்சிகளின் நிலையை சிந்தித்துப்பாருங்கள்.அப்போது நடப்பது எதுவும் நல்ல விளைவுகளை தருவதில்லை.


கோபம் தற்காலிக பைத்தியம் என்று சொன்னார்கள்.உண்மையில் பைத்தியத்தில் மற்றவர்கள் பரிதாபமாவது கிடைக்கும்.கோபத்தில் ஒட்டுமொத்த வாழ்வும் நாசமாகி விடும் வாய்ப்புகள் உண்டு.அதைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.பொறாமை பற்றி ஒரு பதிவும் தந்திருக்கிறேன்.பதிவரை பற்றி இ மெயில் அனுப்பியவரிடம் நான் கேட்டேன்"என்ன உணர்ச்சியை தூண்டுவதற்காக மெயில் அனுப்பப்பட்டது?'' உண்மையில் என்னிடம் வெறுப்பு தூண்டப்பட வேண்டும்.

பயம்,கோபம் ,பொறாமை,வெறுப்பு ,குற்ற உணர்வு,கலக்கம் போன்றவை பசியின்மையிலிருந்து தூக்கத்தை கெடுப்பது வரை மோசமான மனநிலைக்கும் உடல்நிலைக்கும் இட்டுச்செல்லும்.நாடித்துடிப்பு,(pulse rate) ரத்த அழுத்தம் (blood pressure) அதிகரிக்கும்.உணர்ச்சிகள் மேலாண்மை (Emotional intelligence)பற்றி இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.வாழ்க்கையை நல்லவண்ணம் வாழ்வதற்காக மட்டுமல்லாது நல்ல வேலையைப் பெறவும் முக்கியம்.வேலைக்கான நேர்முகத்தேர்வுகளில் அதிகம் கவனிக்கப்படும் விஷயம்,ஒருவர் உணர்ச்சிகளை கையாளும் திறன் தான்.




பாரதியார் உணர்ச்சிகளைப்பற்றி குறிப்பிடும்போது கோபம்,தாபம்,கவலை,அச்சம் போன்றவற்றை வென்று விட்டால் சாவையும் வெல்லலாம் என்கிறார்.
நாடியிலே அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் ஏற்படுவதாக ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதை மேற்கோள் காட்டி ,கோபம் முதலான உணர்ச்சிகள் நாடியில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ,அதனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் சாவை வெல்வது சாத்தியமாகும் என்கிறார்.உணர்ச்சிகளின் விளைவுகளை உணர்வதும் ,சிந்திப்பதும்தான் முதல் படி.பாரதியாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு ஒரு சில வரிகள் உங்கள் சிந்தனைக்காக கீழே !


ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான்
 
(ஞானானு பவத்திலிது முடிவாம் கண்டீர்!)
 
"நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்" என்றான்
 
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
 
கொடுங்கோபம் பேரதிர்ச்சி;சிறியகோபம்
 
ஆபத்தாம் அதிர்ச்சியிலேசிறியதாகும்;
 
அச்சத்தால் நாடியெலாம் அவிந்துபோகும்;
 
தாபத்தால் நாடியெலாம் சிதைந்துபோகும்;
 
கவலையினால் நாடியெலாம் தழலாய்வேகும்;
 
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
 
கொல்வதற்கு வழியென நான்குறித்திட்டேனே.
 
comments | | Read More...

பி.எஸ்.என்.எல்.க்கு மாறணுமா? அட போங்கப்பா!

 
அதே நம்பரில் கம்பெனி மாற்றிக்கொள்ளலாம்என்ற புரட்சி திட்டம் வந்தது.மாற்ற விரும்பியவர்கள் மாற்றி விட்டார்கள்.இதில்அதிகம் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இழந்ததாக கூறப்பட்டது.இப்போதுகொஞ்சம் லேட்டாக விழித்துக் கொண்டு சலுகைகளை அறிவித்துத் தள்ள,கொஞ்சம்வாடிக்கையாளர்கள் கூடியிருப்பதாக கேள்வி.
 
மற்ற கம்பெனிகளுக்கும்பி.எஸ்.என்.எல்.க்கும் வித்தியாசம் இருக்கிறது.இது அரசு நிறுவனம்.அதனால் அதிகம்சம்பாதிக்க வேண்டும் என்று கில்லாடி வேலைகளை ஊழியர்கள் செய்ய மாட்டார்கள்.டேட்டாகார்டு வாங்க வேண்டும் என்று பார்த்தபோது பி.எஸ்.என்.எல்.பரவாயில்லைஎன்றார்கள்.வாங்கி விட்டேன்.

ஆரம்பத்தில் நல்லாத்தான்இருந்துச்சி.இரவில் திடீரென்று நெட் கனெக்ட் ஆகாது.சிம்மை எடுத்து போனில் போட்டிதொகையை பார்த்தால் மைனசில் காட்டும்.அடுத்த நாள் ரீசார்ஜ் செய்தால் தான் மறுபடிகனெக்சன் .இப்போது 53733 க்கு மெசேஜ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.ஒரு நாள் பிளாக்கை ஓபன்செய்தால் ஏதோ மெசேஜ் வந்தது.(The connection was reset while the page was loading). சுத்தமாக எந்த தளமும் ஓபன் ஆகவில்லை.டேட்டா கார்டு வைத்திருப்பவர்கள்யாரும் தெரியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.


நமக்கு தெரிந்த விஷயம் வரும் மெசேஜைகூகுள் சர்ச்சில் கொடுத்து தேடிப் பார்ப்பது.மொசில்லாவில் நிறைய தகவல்கள் வழிகாட்டின .அதில் சொள்ளப்படுல்லத்தை செய்து பார்த்தேன்.பிரயோஜனமில்லை.இன்னொரு நல்லஐடியா தோன்றியது.
 
 
கொமோடோ ஆண்டி வைரஸில்உள்ள டெக்நிசியனுடன் சாட் செய்ய முடியும்.சாட்டில் நான் ஒர்க் செய்யட்டுமா ? என்றார். சரி என்றுசொல்ல,சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆன்லைனில் ஏதேதோ செய்துபார்த்தார்.வெற்றி கிடைக்கவில்லை.இன்டர்நெட் சர்வீஸ் புரோவைடரிடம் சொல்லுங்கள்என்று முடித்துக் கொண்டார்.


பி.எஸ்.என்.எல்.இல் கேட்டால் ஒன்றும்பிரச்சினை இல்லையே என்றார்கள்.பிறகு அடிக்கடி பிரச்சினை செய்வதும்,பின்பு சரியாவதுமாகஇருந்தது.பிரச்சினை வரும்போது நெட்வொர்க்கில் மாற்றம் ஏற்படுவதை கவனித்தேன்.GSM/EDGE வரும்போது தளம் ஓபன் ஆகாமல் ஏதாவது மெசேஜ்வருவதும் UMTS/HSDPA நெட் வொர்க்குக்கு மாறும்போது பிரச்சினை இல்லாமல் இருப்பதுமாகஇருக்கிறது.இன்னும் அப்படித்தான்.
 
கமென்ட் போட்டு பப்ளிஷ் செய்துவிட்டுசாப்பிட்டுவிட்டு வந்தால் அப்போதுதான் பப்ளிஷ் ஆகியிருக்கும்.இந்த மாதிரிபிரச்சினைகளை சந்திக்கும்போது வெளிநாட்டில் இருப்பவர்களை நினைத்து கொஞ்சம்பொறாமையாக இருக்கிறது.
 
கீழ்கண்ட தகவல் பெங்களூர் ISKCON லிருந்து அனுப்பியிருக்கிறார்கள்.சர்வதேச அளவில் வல்லுனர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.(social media வில் ஆர்வம் உள்ளவர்கள்)
 
weare happy to announce Social India Conference in Bangalore which is tobe held on 12th & 13th of November 2011in Royal Orchid Hotel Bangalore.
 
 
This is an invite-only Conference. Over 1000executive-level professionals from top Social Media related companies will beattending this conference. Executive-level invitees include CEOs, ManagingDirectors, Presidents, VPs, and Directors. Many of these executives are bigleaders running companies today or are going to lead companies in the future.
 
This is an opportunity for you to meet your peersin the Social Media industry and exchange notes. At this conference, you'llfind people from social media companies, who excel at innovation, are engagedin business transformation, and are building workforces that are efficient,engaged, and effective.
 
The conference will kick off an active dialogueamongst leaders in the Indian social media industry. At this conference, Topmost leaders like you, get a true insider's look at what's new today, andwhat's coming over the next 12-18 months. It's an exclusive preview of howcompanies, such as yours, will change the way other companies do business.What's more, we want to hear your professional views on how we can make thenext wave of social media even better.



comments | | Read More...

பெண் பார்க்கப்போய் காலில் விழுந்த பதிவர்-காமெடிபீஸ்

 
 
சில வலைப்பதிவுகளைப் படிப்பது வாழ்க்கையில் எந்தமாதிரியெல்லாம் கஷ்டம்தரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.கல்யாணமாகாத இளம்பெண்ணென்றால்சொல்லத்தேவையில்லை.பல்லைக்கடித்துக்கொண்டு படித்தால் கொஞ்சம் கொஞ்சமாக புரியும்.விவரமாகச்சொல்கிறேன்.
 
தனக்குக் கல்யாணமாகவில்லை என்று மனம் நொந்து எழுதிய பதிவை படித்தார் அந்தஇளம்பெண்.என்ன நேரத்தில் படித்த்தோ தெரியவில்லை.அவ்வளவு நாளும் கல்யாணத்தின் மீதுஇருந்த வெறுப்பு மாயமாய் மறைந்து விட்ட்து.கல்லும் கரையும் என்பார்களே? இங்கேகரைந்து கடலில் கலந்து விட்ட்து.பெண்ணுக்கு காதலும்,கல்யாண ஆசையும் துளிர்த்துவிட்ட்து.
 
ஆசைஆசையாய் வலைப்பதிவருக்கு தனது காதலை இல்லை,உயிரையே கொட்டி எழுதினார்காதல் கடிதம்.கல்யாணத்திற்கு அழைப்பாகவும் கருதலாம்.அந்தக் கடிதம் கீழே!
 
அன்பே,
 
உங்களைப் பார்ப்பதற்காக தூங்காமல் காத்திருப்பேன்.குளிக்காமல்உட்கார்ந்திருப்பேன்.நீங்கள் பெண் பார்க்க வரும் வரை வாசலை விட்டு எழுந்து உள்ளேபோக மாட்டேன்.நீங்கள் எதற்காக பதிவு எழுத வேண்டும்? நான் ஏன் அதை விடிகாலையில்படிக்கவேண்டும்? இப்போது புரிந்துவிட்ட்தா? இருவருக்கும் கல்யாணமாகவில்லை.இனிநீங்களில்லாமல் என்னால் நடக்க முடியாது,ஓட முடியாது,கோலம் போட முடியாது! கீழ்கண்டமுகவரிக்கு உடனே வரவும்.
 
இளம்பெண் பழசை மறக்காதவர்.தான் வளர்க்கும் புறா காலில் கட்டி பதிவரிடம்தனது கடித்த்தை சேர்க்குமாறு அனுப்பினார்.கடித்த்தை படித்த பதிவருக்கு தலைசுற்றாமலா இருக்கும்.ஆஹா! நம்முடைய எழுத்தையும் படித்து நம்முடைய அறிவில் மயங்கிஒரு பெண்ணுக்கு வந்த காதல்!
 
கடிதம் கிடைத்த்வுடன்புறப்ப்ட்டு முகவரி கண்டு பிடித்து ஊர் போய் சேர்ந்து விட்டார்.உண்மையில் அந்தபெண்ணும் வாசலில்தான் இருந்த்து.பதிவருக்கு அதைப் பார்க்க எப்படி இருந்திருக்கும்என்று கற்பனை செய்து பாருங்கள்!ஆமாம்,உலகத்தில் இருக்கும் அத்தனை காதலும் அவருக்குவந்து விட்ட்து.அவர்களது காதலையும்,உணர்ச்சிவேகத்தயும் கண்ட காக்கைகள் அலறிஅடித்து ஓடின.
 
வீட்டுக்குள்ளே அழைத்துச்சென்றவுடன் உங்களிடம் நான் நிறைய பேச வேண்டும்என்றார் பெண்.''தாராளமாக! அதற்குத்தானே வந்திருக்கிறேன்!"
 
''உங்களுக்கு வடிவேல் பிடிக்குமா? விவேக்கா?''
 
இதுஎதற்கு என்று பதிவருக்கு தோன்றினாலும்சொல்லி வைத்தார்,''வடிவேல்"
 
"ச்சீநீங்கள் ரொம்ப மோசம்,எனக்கும்தான்! பாவம் போக்கிரியில் அசினை உயிருக்குஉயிராக காதலிப்பார்,நடுவில் விஜய் வந்து கெடுத்து விட்டார்.அவர் மனசு எப்படிஇருந்திருக்கும்?''நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் என்று பதிவருக்கு தோன்றியது.
 
''உங்களுக்குசமைக்கத்தெரியுமா?''ஆண்கள் சமைத்தால் ருசியாக இருக்கும் என்று என் தோழி சொன்னாள்.''
 
இந்தஅதிரடியை நம்ம ஆள் எதிர்பார்க்கவில்லை! " தெரியாது" என்றார்
 
"நீங்கள் கவலைப்படவேண்டாம்,எள்ளுருண்டை செய்ய உங்களுக்குத்தெரியும்தானே? அது போதும்.நான் தினம் இரண்டு எள்ளுருண்டை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்வேன்"
 
பதிவருக்குகுழப்பம் வந்தாலும் விடவில்லை."உயிர்வாழ்வது எங்கே! என் உயிரை எடுப்பாய்! அதில் இரண்டு வைட்டமின் தான்இருக்கிறது,வைட்டமின் சி இல்லை.அது நல்லதுதான்.ஆனால் மற்ற உணவும் வேண்டும்.நிரூபன்பதிவை படித்தீர்களா? சலிப்புடன் கேட்டார்.
 
"உங்களுக்குநகைச்சுவை உணர்வு அதிகம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் நிரூபன் இல்லாமல் வேறுயாராம்?"
 
"என்னது?நான் நிரூபன் இல்லை! நீ நிரூபனை காதலிக்கிறாயா?"
 
"ஆமாம்,நான்அவருக்குத்தான் கடிதம் எழுதினேன்," என்றார் அதிர்ச்சியுடன்.
 
பதிவர் மயக்கம்போட்டு பெண்ணின் காலடியில் விழுந்துவிட்டார்."நீங்கள் காலில் விழுந்தாலும் நான் நிரூபனைத்தான் காதலிப்பேன்" இவ்வார்த்தை பதிவரின் காதில் விழவில்லை.மயங்கிக் கிடந்தார்.புறாஓரமாக நின்று சிரித்துக்கொண்ட்து.காமெடி செய்யலாம் என்று திட்டமிட்டு வேறுபதிவரிடம் கடித்த்தை கொடுத்துவிட்ட்து..
 
டிஸ்கி: பதிவர்கள்,அதிலும் கல்யாணமாகாதவர்கள் பிளாக்கில் போட்டோ போடவேண்டும்.
 
 
 
 
 
 
comments | | Read More...

Anandha Vikatan 05 10 2011 (Download Tamil Magazine)

 

Anandha Vikatan 05 10 2011 (Download Tamil Magazine)

http://www.megaupload.com/?d=WGXAY3IT

comments | | Read More...

வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய வன்கொடுமை அட்டூழியம்

 
 
ஆதிவாசி கிராமமான வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அட்டூழிய செயலுக்கு இன்றுதான் தீர்ப்பு கிடைத்துள்ளது.
 
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை ஜாதியினர் .
 
இந்த கிராம மக்கள் காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.
 
இதையடுத்து அந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.
 
வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு, வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
 
இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.
 
ஆனால், இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் ஜெயா, செல்வி, சித்ரா, காந்தி, அபரக்கா, பாப்பாத்தி, காந்தி, மாரிக்கண்ணு, லட்சுமாயி, கம்சலா, முத்துவேதி, பூங்கொடி, மல்லிகா, சுகுணா, பாப்பாத்தி, முத்துவேதி, தேன்மொழி, பழனியம்மாள் உள்ளிட்ட 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது.
 
விசாரிக்க மறுத்த போலீஸ்
 
இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
 
இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
உச்சநீதிமன்றம் கொடுத்த சூடு
 
இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
 
இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
சிபிஐக்கு மாறிய வழக்கு
 
ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி 1993ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கூட்டுக்குழுவினரின் அட்டகாசங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து அந்தக் குழுவைச் சேர்ந்த 269 பேரையும் சிபிஐ கைது செய்தது. மேலும் கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
 
2006ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இந்த வழக்கு நடந்து முடிந்துள்ளது.



comments | | Read More...

டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள் விழா... வள்ளுவர் கோட்டத்தில் நடக்கிறது!!

 
 
 
வரும் டிசம்பர் 12 -ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள். இந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாட சென்னை மாவட்ட ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.
 
உடல்நிலை சீரடைந்து, புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினிக்கு, மிகப் பிரமாண்டமாக இந்த விழாவை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் சென்னை மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.
 
டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் அந்தத்தப் பகுதியில் எளிமையாக ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடுவதென்றும், அதற்கடுத்த நாள் டிசம்பர் 13-ல் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பங்குபெறும் பெரிய நலத்திட்ட விழாவாக நடத்துவதென்றும் ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.
 
இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதி ரசிகர் மன்றமும், தங்கள் பெயரிலேயே இந்த உதவிகளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வழங்கலாம்.
 
ரஜினிக்கும் அழைப்பு
 
ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு, ரசிகர்களைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர். ஆனால் போயஸ் தோட்ட இல்லத்தின் பணிகள் மற்றும் ரஜினியின் ஓய்வு கருதி இதுவரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
 
எனவே, ரஜினி ரசிகர்களை அழைத்துச் சந்திப்பதைவிட, ரசிகர்கள் ஒன்று திரளவிருக்கும் அவரது பிறந்த நாள் விழாவுக்கே வருகை தந்து அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டால், ரசிகர்களின் மனக்குறை தீரும் என்ற நோக்கத்தில், ரஜினியையே விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.
 
ஏற்கெனவே இதுகுறித்து லதா ரஜினியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அழைப்பாக இல்லாமல் ஒரு கோரிக்கையாக ரஜினியின் முன் வைத்துள்ளனர்.
 
ஒருவேளை இந்த விழாவுக்கு ரஜினி வரவில்லை என்றால், அவர் ரசிகர்களுக்கு விடுக்கும் பிறந்த நாள் செய்தியை வீடியோவாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
 
இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் ஆர் சூர்யா, கே ரவி, சைதை ரவி உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.



comments | | Read More...

ஓட்டு ,கமெண்டு யாருப்பா இதெல்லாம் கண்டு புடிச்சது?

 
நாம் ஒன்று நினைத்தால் அது (ஒரு புளோவில் வந்து விட்டது.யாரும் புகார் அனுப்பாதீங்கப்பா!) ஒன்று நடந்து விடுகிறது. கூகுள் பிளாக்கர்களுக்கு பிரபலமாவதற்கு சில வழிகளை சொல்லித் தந்திருக்கிறது.நிறைய பேருக்கு கமென்ட் போடுங்கள் என்பதும் அதில் ஒன்று.இதை கடைப் பிடித்தவர்கள் வெற்றிகரமாக உலா வருவது நமக்கு தெரியும்.என்னுடைய கதை பதிவரிந்தது,அதாம்பா பதிவுலகம்.பிளாக்கர் சொல்லாமல் விட்ட ஒன்று ஓட்டு போடுவது!

ஒருவர் மெயில் மூலம் என்னுடைய போன் நம்பர் கேட்டார்.அனுப்பி வைத்தேன்."வணக்கம் சார் என் பெயர் ராஜன்.நான் பிளாக் ஆரம்பிக்கலாமென்று இருக்கிறேன்." ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கஷ்டமாக இருந்தது.எதற்கு இந்த வேண்டாத வேலை உங்களுக்கு என்று கேட்கலாம்.ஆனால் அப்போ நீ மட்டும் எதற்காக ? என்று நினைத்து விடுவாரோ என்று பயம்.பிரௌசிங் செண்டர் பணியாளிடம் போனிலேயே சொல்ல அவரும் வலைப்பதிவு ஆரம்பித்து விட்டார்.


சில புத்தகங்களை எழுதியிருப்பதாக சொன்னார்.பழனிபாபா,குந்தவை பற்றிய இரண்டு புத்தகம் கொடுத்திருக்கிறார்.இன்னும் படிக்கவில்லை.அவருக்கு முக்கியமாக ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும் என்று தோன்றியது.அதேதான்.மற்ற பதிவுகளை படித்து ஓட்டும் கமெண்டும் போடுவது! சிலர் அருமையாக கமென்ட் மட்டும் போடுவார்கள்.ஓட்டு போடமாட்டர்கள் .ஓட்டு போடாமல் வருவதை பதிவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை என்று தோன்றுகிறது.


ஒரு நண்பருக்கு இதை சொல்லலாம் என்று நினைத்தேன்.இவனுக்கு ஓட்டு போட சொல்லி கேட்கிறான் என்று நினைத்து விட்டால் என்ன செய்வது என்று சொல்லாமல் விட்டு விட்டேன்.ஆனால் ராஜனுக்கு மிக பொறுப்பாக நான் இதை சொல்லிவிட்டேன்.அவரும் அப்படித்தான் நினைத்து விட்டார் போலிருக்கிறது.எனக்கு மட்டும் சரியாக ஓட்டு,கமென்ட் போட்டு விடுகிறார்.அடக் கடவுளே!


என்னைப் பொறுத்தவரை அது நண்பர்களின் விருப்பம்தான்.கமென்ட் மட்டும் போட்டாலும் சரி.ஓட்டு சேர்த்து போட்டாலும் சரி.நான்கு நாட்களுக்கு முன்பு ராஜன் போன் செய்து உங்களுக்கு ஓட்டு போட்டுவிட்டேன் ,நான் கொஞ்சம் பிஸி என்றார்.பரவாயில்லை விடுங்க சார் என்றேன்.சகோதரர் ஒருவர் அலுத்துக்கொண்டார்.பெரிய பேஜார் சார்.இன்னும் ஓட்டு கமென்ட் போட்டு முடியவில்லை. வேறு வழி இல்லை.நம்முடைய பதிவுக்கு வந்து நாம் எழுதியதை எல்லாம் படித்து கமென்ட் போட்டிருக்கிறார்களே! அவர்களுக்கும் நாம் மரியாதை செய்வதுதானே சரி!

அதிலும் நிறைய பிரச்சினை இருக்கிறது.எனக்கு ஏ.ஆர் ,ரஹ்மான் பற்றி ஒரு கமென்ட் .நான் அப்படி எதுவும் எழுதவில்லையே? என்று யோசிக்கவில்லை.பதிவுலகில் இதெல்லாம் சகஜம்.எனக்கும் அந்த மாதிரி அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு.இரண்டு பதிவுகளை ஒரே நேரத்தில் திறந்து கொண்டு எனக்கு போட வேண்டிய கமெண்டை வேறு ஒருவருக்கு போட வேண்டியது. மெயில் மூலமும்,டேஷ்போர்டு மூலமும் இரண்டு பதிவுகளை ஒரே நேரத்தில் ஓட்டு கமென்ட் போட வேண்டியது.


ஒரு நண்பருக்கு ஓட்டும் கமெண்டும் போட்டுவிட்டு அரைமணி கழித்துப்பார்த்தால் நான் போட்ட கமெண்டை காணோம்!ஒரு வேளை நீக்கி விட்டாரோ! இன்னொரு பதிவையும் பார்த்தபோது விஷயம் தெரிந்தது.ஆமாம் வேறு ஒருவருக்கு போட்டு விட்டேன்.அப்புறம் சுருக்கமாக கமென்ட் போட்டால் பதிவை படிக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.நான் அவசரமாகவாவது படிக்காமல் கமென்ட் போடுவது வழக்கமில்லை.ஓட்டு போடுவதிலும் கூட ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.நான் எந்த தளத்திற்கு போனாலும் இன்டலி,தமிழ்மணம்,தமிழ் 10 அனைத்திலும் வாக்களிப்பது வழக்கம்.

ஓட்டு கூட எங்கோ போகட்டும்.கமெண்ட்டை கண்டுபிடித்தவர்கள் புண்ணியவான்கள்.பல நேரங்களில் நாம் ஏதாவது விட்டுவிட்டாலும்,தவறான தகவல் தந்திருந்தாலும் உடனே சொல்லி விடுகிறார்கள்.பல காலமாக கமென்ட் மாடரேஷன் வைத்திருந்தேன்.பல கமெண்டுகளை நான் வெளியிடவில்லை.சில தனி மனித தாக்குதல்,நீதிமன்ற அவமதிப்பு போன்றவை.ஆனால் இரவுகளில் மட்டுமே பதிவை பார்க்க முடிவதால் மாடரேஷன் சரியாக வரவில்லை.மற்றபடி மாடரேஷன் வைப்பது சரி என்றே படுகிறது.
comments | | Read More...

நோ கமெண்ட்ஸ் !

 




ஒண்ணுக்கு இரண்டா இருந்தா ரிலீஃப் தான். ஒண்ணா 'இருக்க' கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
comments | | Read More...

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்

 
 
 
வெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரியபிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாதவிலக்குக்கு முன்பும் பின்பும் அல்லது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு லேசாக வெள்ளைப்படுவது இயல்பானது.பலரும்இதை உடல் சூடாகி விட்ட்து என்பார்கள்.ஆனால் இது பால்வினை நோயாக இருப்பதற்கானநம்பிக்கை அதிகம்.
நிரூபன் வெள்ளைப்படுதலுக்கு எள்ளுருண்டை சாப்பிடலாம் என்று ஒரு பதிவுஎழுதியிருக்கிறார்.எள்ளுருண்டை எனக்கு மிகவும் பிடித்த உணவுப் பண்டம்.உருண்டைபிடிக்க எளிதாக சில இடங்களில் அடை சுட்டும் இதில்சேர்ப்பார்கள்.நிலக்கடலை,பொட்டுக்கடலை,முந்திரி சேர்ப்பதும் உண்டு.சாப்பிட அப்படிஒரு சுகம்.
 
 
வெள்ளைப்படுதல் உடல் சூட்டால் வருகிறது என்ற நம்பிக்கையொட்டி இந்தஎள்ளுருண்டை சாப்பிடுவதும் ஏற்பட்டிருக்கலாம்.எள் குளிர்ச்சி என்று கருதுவதால்சாப்பிட ஆரம்பித்திருக்க வாய்ப்பிருக்கிறது.முன்பே சொன்னது போல சாதாரணமாக ஏற்படும்நீர்க்கசிவு தானாகவே சரியாகி விடும்.பால்வினை நோயாக இல்லாதவரை பிரச்சினை இல்லை.
 
வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலோ,நமைச்சல் எரிச்சலுடனோ,துர்நாற்றத்துடனோவெள்ளைப்படுதல் இருந்தால் அது நிச்சயம் பால்வினை நோய்.பாக்டீரியா,பூஞ்சை போன்றநுண்ணியிரிகள்(micro organisms) ஒருவரிடமிருந்துஒருவருக்கு தொற்றி இருக்கலாம்.உடல் சூடு போன்ற தவறான கருத்துக்களால் சிகிச்சைக்குஅணுகுவது குறைவாக இருக்கிறது.


இத்தைகைய நீர்க்கசிவை ஒரே வகையில் அடக்கிவிட முடியாது.அதே சமயம்எல்லாமும் பால்வினை நோயல்ல! கருப்பை சார்ந்த இடங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும்உண்டாகும்.சுத்தமில்லாமல் இருந்தால் குழந்தைகளுக்கும் பரவும்.வெள்ளைப்படுதல் என்றுபொதுவாக சொன்னாலும் அறிகுறிகளிலேயே வகைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுவழக்கத்தில் இருக்கிறது.
நமைச்சலுடன் வெள்ளைப்பட்டால் அதுபூஞ்சைத்தொற்றாக (candidiasis)இருக்கலாம்.curdy type என்று சொல்வார்கள்.கெட்டியான திரவம் வெளியாகும்.துர் நாற்றத்துடன்வெளியாகும் நீர்க்கசிவு (டிரைகோமோனியாஸிஸ்)இன்னொரு வகை.கொனேரியாஎன்ற நோயில் சிறுநீர்க்கழிக்கும்போது கடுமையான வலியுடன் அல்லது சாதாரணமாகஇருக்கலாம்.ஆண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் இந்நோயாகவும் இருக்கலாம்.ஆண்களுக்குபழுப்பு நிறத்தில் திரவம் வெளியாகும்.
 
மேலே குறிப்பிட்ட கொனேரியா(இப்போது ஆண்டிபயாடிக் மருந்துகளுக்குகட்டுப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்) தொற்றில் பழுப்பு நிற திரவம் வெளியாவதுநின்றுவிடுவதும் சாத்தியம்.அப்போது நோய் குணமாகிவிட்ட்தாகநினைத்துக்கொள்வார்கள்.ஆனால் உண்மையல்ல! அறிகுறி இல்லாமல் நோய்த்தொற்று இருந்துகொண்டிருக்கும்.எள்ளுருண்டை தின்று நோய் குணமாகிவிட்ட்தாக நினைத்துக்கொள்வதன்விபரீதம் இப்போது புரிந்திருக்கும்.
 
ஆண்கள் பலருக்கு கிருமித்தொற்று இருந்தாலும் அறிகுறிகள் வெளியேதெரிவதில்லை.அதனால் எனக்கு ஒன்றுமில்லை என்று சிகிச்சைக்கு மறுப்பார்கள்.ஆனால்காரணமே பெரும்பாலும் அவர்கள்தான்.இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டாலும்மீண்டும் தொற்று ஏற்படும்.பாதுகாப்பில்லாத பாலுறவு மூலம் இத்தகைய வியாதிகள்பரவுவதால் எய்ட்ஸ் தொற்றும் பாதிப்பும் இவர்களுக்கு அதிகம்.
comments | | Read More...

Vijay to endorse new brand

 

A national telecom company has approached Vijay and has asked him to endorse their product. We hear that an astronomical sum of 5 crores has been offered and Vijay has given the nod. The actor is very selective and is the brand ambassador only for a couple of select products – s soft drink and a leading jewellery chain.

Actors like Madhavan, Suriya and Karthi are already endorsing certain telecom companies and Vijay is the latest to join the bandwagon. Looks like the commercial wars have begun!

comments | | Read More...

Ajith’s Billa 2 heroine is a beauty queen

 

Director Chakri Toleti had made some changes to the script of Billa 2 and accordingly he felt that certain characters had to be recast. So Huma Qureshi had to leave the project. Now we hear that a replacement has been finalized.

It is none other than Parvati Omanakuttan, winner of the Miss India World crown in 2008. She is no stranger to acting and is currently doing a Malayalam film with Major Ravi in which she has a double role. The former beauty queen has also done a Hindi film called United Six. But her third film is a biggie as she has a coveted part next to one of the biggest superstars in the country, Ajith Kumar.

On roping in Parvathy, Sunir Kheterpal, CEO – IN Entertainment and Producer of Billa 2, said, "Parvathy was outstanding in her auditions and completely understood the subtle nuances of this pivotal role. She has an attitude and a screen presence, which will take her places. Later this week, she will be joining the unit in Goa, where Billa 2 is currently shooting".

Confirming her association with the film, Parvathy said, "It is like a dream to be making my debut in the Tamil Film Industry with Ajith Sir. I am delighted to be a part of the Billa Franchise and can't wait to start work on the Film."

Chakri Toleti, the director said, "The part of the leading girl in Billa 2 is a highly demanding role and it was a challenge to find an actress with just the right mix of talent and looks. Parvathy has great attitude and the understated charisma required for the role."

comments | | Read More...

இரவு நேரத்துக்கு ஏற்ற உணவுகள்

 
 
ஜீரண மண்டலங்கள் எப்போது சிறப்பாக இயங்கும்? வேலை செய்யும்போதா?ஓய்வாக இருக்கும்போதா? தூங்கும்போது அவற்றின் செயல்பாடு எப்படி இருக்கும்?இவற்றுக்கான விடையை உங்களால் எளிதில் சொல்லிவிட முடியும்.ஆமாம்,உறக்கத்திலும்,ஓய்வுநிலையிலும் செரிமானத்தின் ஆற்றல் மிதமாக இருக்கும்.
 
இரவு நேரத்தில் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இப்போதுபுரிந்திருக்கும்.எளிதாக ஜீரணம் செய்யத்தகுந்தவையாக இருக்க வேண்டும்.அசைவம்உள்ளிட்ட கொழுப்பு உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.பழங்கள் போன்ற நார்ச்சத்துள்ளஉணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
ராத்திரி பொழுதுகளில் வயிற்றை சங்கடப்படுத்தும் உணவுகள் தூக்கத்தையும்பாதிக்கின்றன.தூக்கம் பாதிக்கப்பட்டாலே உடலில் நோய்களுக்கான வாசல் திறக்கப்பட்டுவிட்ட்து என்று அர்த்தம்.வாயுவை உண்டாக்கும் கிழங்கு வகைகள்,அதிக பருப்புகள்,முட்டை,முட்டைக்கோஸ்,காலிஃபிளவர்ஆகியன பலருக்கு நல்ல உறக்கத்தை கெடுக்கும்.
அசைவ உணவுகள் எளிதில் செரிப்பவை அல்ல! ஆனால் இரவு நேரங்களில்தான் அசைவ உணவுவகைகளும்,மற்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளும் அதிகம் விற்பனையாவதாக ஹோட்டல்நட்த்துபவர்கள் சொல்கிறார்கள்.மதுப் பிரியர்கள் ஒரு காரணம் என்றால் இன்றையவாழ்க்கை முறையும் அப்படித்தான்.
 
உள்ளூரில் தொழில்நட்த்தும் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்."நைட்லதான் சார் நிம்மதியா உட்கார்ந்துசாப்பிட முடிகிறது,ருசி பார்த்து சாப்பிடறதும் அப்போதான்" காலையில் அரக்க பரக்க வெந்த்தையும்,வேகாத பண்ட்த்தையும் வாயில்திணித்துக் கொண்டு பறக்க வேண்டியிருக்கிறது.பிள்ளைகளுக்கு தயார் செய்ய வேண்டும்,அலுவலகத்துக்கு,தொழிலுக்குதயாராக வேண்டும்.இந்நேரத்தில் மதிய உணவையும் அவ்வளவு சிறப்பாக தயார் செய்யமுடிவதில்லை.
குடும்பத்தோடு ஒரு நாளைக்கு ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற பழக்கம் அதிகரித்துவருகிறது.இது பெரும்பாலும் இரவு நேரங்களில் இருக்கும்.தின்பதும் அதிக மசாலாசேர்க்கப்பட்ட கொழுப்பு வகைகளையும்,மைதாவால் செய்யப்பட்ட பண்டங்களையும்தான்.மைதா நீரிழிவைதூண்டுகிறதென்று கேரளாவில் இயக்கம் நட்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள்.தென்னிந்தியாவில் இதன் பயன்பாடு அதிகம் என்கிறார்கள்.
 
நொறுக்குத்தீனிகளை உண்பதும் மாலை நேரங்களில்தான்.வயிற்றுப் புண்ணிலிருந்துநீரிழிவு வரையிலான பிரச்சினைகளுக்கு காரணம் நமது பழக்கங்கள்தான்.இவை தொடர்ந்துஅதிகரித்துக் கொண்டிருக்கின்றன.மருந்துக்கடைகளில் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.இவற்றுக்குராத்திரி நேரத்து உணவுகளுக்கு அதிகம் பங்கிருக்கிறது.
தொலைக்காட்சி வரவுக்குப் பிறகு தூங்கும் நேரமும் வெகுவாக குறைந்துவிட்ட்து.இன்று சராசரியாக தூங்கப்போகும் நேரம் பல வீடுகளில் இரவு பன்னிரண்டுமணி.இதன் விளைவுகளை உணர்ந்து திருத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள்,அவர்கள் நல்லஆரோக்கியம் பெறுவார்கள்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger