News Update :
Powered by Blogger.

ஸ்பெக்ட்ரம் ஏலத்தொகை அதிகரிப்பு: செல்போன் கட்டணம் உயருகிறது

Penulis : karthik on Monday 23 April 2012 | 22:11

Monday 23 April 2012




2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கான குறைந்த பட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) சிபாரிசு செய்து உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி மட்டும்தான்.
 
ஆனால், டிராய் அமைப்பின் பரிந்துரை மூலம் 2 ஜி ஸ்பெக்ட்ர ம் ஏலத்தின் மூலம் ஏறத்தாழ 7 மடங்கு அதிகமாக அதாவது ரூ.7 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தற்போது உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் கட்டண விகிதங்கள் குறைவாக உள்ளன. டிராய் அமைப்பின் இந்த பரிந்துரை காரணமாக இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் அதிக அளவில் உயரும்' என்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அச்சம் தெரிவித்து உள்ளன.
 
வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பின் சிபாரிசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.














comments | | Read More...

'சன் பிக்சர்ஸ்'க்கு போட்டியாக விரைவில் வருகிறது ஜெயா பிக்சர்ஸ்!




சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியாக இருந்த சன் நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிற� �வனத்தை நிறுவி படங்களை தயாரித்தும், பிறர் தயாரித்த படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கி விநியோகம் செய்தும் வருகிறது.

தமிழ் தொலைகாட்சிகளில் சன் சேனலுக்கு போட்டியாக இருக்கும் ஜெயா தொலைக்காட்சி தனது சேனலில் சில படங்களுக்கு விளம்பரம் செய்தாலும் விநியோகம் செய்வதில் ஈடுபாடு காட்டாமல் இருந்தது.


சில நாட்களுக்கு முன் ஆஸ்கர் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வேலாயுதம் படத்தை ஜெயா சேனல் விநியோகம் செய்யும் எண்ணத்தில் இருப்பதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் பிறகு அது பொய்யாகி ஆஸ்கார் ஃபிலிம்ஸும், ஐங்கரன் இண்டர்நேஷனலும் அந்த படத்தை விநியோகம் செய்தன.

தற்போது ஜெயா தொலைக்காட்சி இனி வரவிருக்கும் படங்களை விநியோகம் செய்வதில் முனைப்புடன் இறங்கப்போவதாகத் தெரிகிறது. ஜெயா தொலைக்காட்சியின் பார்வை வளையத்திற்குள் இருப்பது கமலஹாஸனின் இயக்கத்திலும், தயாரிப்பிலும், நடிப்பிலும் உருவாகிக்கொண்டிருக்கும் படமான விஸ்வரூபம் மற்றும் ரஜினியின் நடிப்பில் உருவாகிகொண்டிருக்கும் கோச்சடையான் ஆகிய படங்கள் தான் என்கின்றனர்.

முக்கிய நடிகர்களின் படங்களையும், பிரபல தயாரிப்பாளர்களின் படங்களையும் தன் வசம் இழுப்பதற்கு ஜெயா தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாம்.



comments | | Read More...

பிரபுதேவாவுடன் காதலா? த்ரிஷா பதில்!




நடிகர் பிரபுதேவா கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தன் வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டா� �ினார். மிட்-நைட் பார்ட்டியாக அரம்பித்து காலை வரை நீடித்த அந்த பார்ட்டியில த்ரிஷா, விஷால், ஜெயம் ரவி என பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

 பிரபுதேவா கொடுத்த மிட்-நைட் பார்ட்டி! என்ற தலைப்பில் நக்கீரன் இணையதளத்திலும் அந்த
பார்ட்டியை பற்றிய தகவல் வெளிவந்தது. அதன் பின் பிரபுதே வா 'துன்பம் வரும் வேலையில் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும். அது ஒரு பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என பேசினார்.

பார்ட்டியில் த்ரிஷாவுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை த்ரிஷா தனது ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த போட்டோவினால் பிரபுதேவா த்ரிஷாவுடன் இணைத்து கதை கதையாக பேசினார்கள்.


இதை பற்றி பேசிய த்ரிஷா "தெலுங்கில் எனக்கு பிரேக் தந்தவர் பிரபு தேவா. அவர் இயக்கிய முதல் 2 படங்களிலும் நான்தான் ஹீரோயின். அப்போது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள். இடையில் எ� �்போது சந்தித்தாலும் சகஜமாக பேசுவோம்.நட்பு காரணமாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். அதனால் அவரது பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றேன்.

அதற்குள் ஏகப்பட்ட வதந்திகளை பரப்புகிறார்கள். நாங்கள் நண்பர்கள் என்பது எங்களுக்கு தெரியும். இது எனக்கு புதிதல்ல. இது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. இப்போது 'சமரன்' படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன்.

எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. மற்ற விஷயங்களை பற்றி யோசிக்கக் கூட என்னிடம் நேரம் இல்லை. " என்று கூறினார்.

இப்போது கோடை வெய்யிலை சமாளிக்க ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.



comments | | Read More...

கூடங்குளத்தில் 40 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும்: மத்திய அரசு




கூடங்குளத்தில் அணு உற்பத்தி செய்ய அப்பகுதி மக்கள் உதயகுமார் தலைமையில் 8 மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து 8 மாத காலமாக அணு உலை பணிகள் முடக்கப்பட்டன.
 
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை தொடங்க தமிழக அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து அங்கு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஆயத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது.
 
இதற்காக ஹாட்ரன் எனப்படும் வெந்நீர் மூலம் அணுஉலை செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் எரிபொருள் நிரப்புவதற்கான தடையில்லா சான்று வழங்க ஆய்வு நடத்தி வருகிறது.
 
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 40 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும். அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் கூடங்குளத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களின் சான்றளிப்பு ஒரு வாரத்தில் கிடைக்கும். அதன்பிறகு 20 ந ாட்கள் சோ‌தனை ஓட்டம் நடைபெறும்.
 
அதனை தொடர்ந்து, மின் உற்பத்திக்காக அணு உலையில் யுரேனியம் நிரப்பப்படும். பின் அந்த அணுஉலையில் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கப்படும். முதல் அணுஉலையில் உற்பத்தி தொடங்கிய இரண்டு மாதத்தில் இரண்டாவது அணுஉலையில் உற்பத்தி தொடங்கும்.
 
இதற்காக இந்திய மற்றும் ரஷிய த ொழில்நுட்ப பொறியாளர்கள் 2000 பேர் இரவு பகலாக பணிபுரிகிறார்கள் என கூறினார்.





comments | | Read More...

ஜாமீனில் விடுதலையாக மாட்டேன்: - ஆ.ராசா பேட்டி



2 ஜிஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு சர்ச்சையில் தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்த ஆ.ராசா மற்றும் அந்த துறை அதிகாரிகள் என பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட� �டனர். அனைவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

ஆ.ராசா கடந்த 2010 நவம்பரில் கைது செய்யப்பட்டார். ஓராண்டை கடந்து 14 மாதங்களாக அவர் ஜெயிலில் இருந்து வருகிறார். இவருடன் கைது செய்யப்பட்டவர்களில் தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா தவிர மற்றவர்கள் அனைவரு� ��் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

பெகுராவின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு நிலுவையில் உள்ளது. ஆனால் ஆ.ராசா தரப்பில் இதுவரை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லை. 

இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு ஆ.ராசா அழைத்து வரப்பட்டிருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:- 

நான் ஜாமீனில் விடுதலையாக விரு� �்பவில்லை. குற்ற மற்றவனாக வெளியே வரவே விரும்புகிறேன். 2ஜி வழக்கில் தற்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனது முழு கவனத்தையும் அதன் மீதுதான் செலுத்தி வருகிறேன். வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இதற்கு மேல் விரிவாக விவரிக்க விரும்ப வில்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 

ஆ.ராசாவின் வக்கீல் பாபன்ஜீத் சிங் கூறுகையில் பெகுரா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவர் ஜாமீனில் விடப்பட்டால் ராசாவுக்கும் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம் என்றார்.





comments | | Read More...

இலங்கை தமிழர்கள் பற்றி கம்யூனிஸ்டு எம்.பி. ரங்கராஜன் கூறியது வடிகட்டிய பொய்: சீமான் கண்டனம்




நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
தமிழ் ஈழத்துக்காக சாத் வீக வழியில் போராடிய தந்தை செல்வாவின் போராட்டங்களை ஆயுத வ� �்முறையின் மூலம் சிங்கள அரசு தொடர்ந்து ஒடுக்கியதன் எதிர்விளைவாகவே தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 

தமிழ் மக்களின் முழுமையாக ஆதரவுடன் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத்தான் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழர்களை அழிக்கும் இன அழிப்புப்போராக சிங்கள இனவெறி அர� �ு நடத்தி முடித்தது. இரண்டரையாண்டுக் காலம் நடந்த அப்போரில் 1 1/2 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

அப்படிப்பட்ட ஒரு கொடூரமான போரில் தங்கள் சொந்தங்களை இழந்தும், வாழ்விடங்களை இழந்து வாழ வழியின்றியும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயர நிலையை கண்டறியச் சென்ற நாடாளுமன்ற குழுவினர், அவர்களின் துயரத்தை போக ்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததைப்பற்றிப் பேசாமல், தமிழர்கள் அரசியல் தீர்வைப்பற்றி பேசுகிறார்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும். 

இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் சகஜ நிலை திரும்பி வருவதாக கூறுகிறார் ரங்கராசன். அப்படி ஒரு கருத்தை நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட கூற வில்ல� ��யே? 

இலங்கை தமிழர்களின் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று ஓங்கிக் குரல் எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர், தன் கருத்தை ஈழத் தமிழர்களின் கருத்தாக அங்கு போய் விட்டு வந்து கூறுவது கடைதெடுத்த அரசியல் மோசடியாகும். 

தமிழர்கள் அரசியல் தீர் வைத்தான் விரும்புகிறார்கள். விடுதலையை அல்ல என்று கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, ஈழத் தமிழர்களிடம் விடுதலைத் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கத் தயாரா? என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது. 

நாடாளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்ற சுஷ்மாசுவராஜ் மற்ற உறுப்பினர்கள் அனைவரையும் தவிர்த்து விட்டு தனியாக சென்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசியிருக்கிறார். இப்படியொரு தனித்த சந்திப்பு எதற்காக என்று தெளிவுப்படுத்தப்படவில்லை. அது குறித்து மற்ற உறுப்பினர்கள் ஒருவரும் விளக்கவில்லை. 

இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுன்ற குழுவில் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் இடம் பெறாததும் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மை உ� �ுப்பினர்கள் இலங்கை பிரச்சினை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் என்பதும் இக்குழுவின் பயணம் ஒரு திட்டமிட்ட நாடகமே என்பதை பறைசாற்றுகிறது. 

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.





































comments | | Read More...

இப்போதைக்கு நோ பாலிடிக்ஸ்... ஆனா ரசிகர் மன்றம் உண்டு! - உதயநிதி




இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு ரசிகர் மன்றம் உண்டு, என்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி.

மதுரையில் தனது ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஓடும் தியேட்டர்களில் விசிட் அடித்த உதயநிதி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மதுரையில் திமுக உள்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கும் இந்த சூழலில், அவரிடம் அரசியல் குறித்தே அதிக கேள்விகளை எழுப்பினர் நிருபர்கள்.

பொறுமையாக அனைத்துக் கேள்விகளையும் கேட்டுக் கொண்ட உதயநிதி, பதில் அளிக்கையில், "என் குடும்பமும் அரசியலும் வேறல்ல. அதனால் இப்படிக் கேட்கிறீர்கள். ஆனால் எனக்கு இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. என்னிடம் சினிமா பற்றி மட்டுமே கேளுங்கள். அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம். என் தாத்தா (மு.கருணாநிதி), அப்பா (மு.க.ஸ்டாலின்) ஆகியோர் கட்சியில் இருப்பதா லும், அப்பா இளைஞரணி பொறுப்பில் இருப்பதாலும் நானும் கட்சியின் இளைஞரணிக்கு முக்கியப் பதவிக்கு வருவேன் என்று பத்திரிகைகள்தான் எழுதுகின்றன. ஆனால், கட்சியில் உழைத்தவர்கள் நிறையப் பேர் உள்� ��னர். அவர்களுக்கு பொறுப்புகள் தரப்படவேண்டும்," என்றார்.

பின்னர் அவர் கூறுகையில், "இன்னும் 5 ஆண்டுகளுக்கு சினிமா தயாரிப்பிலேயே கவனம் செலுத்துவேன். பின்னால் நடப்பதைப் பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. பொருத்தமான கதைக ள் வந்தால்தான் நடிப்பேன்.

அடுத்து சொந்தமாகத் தயாரிக்கும் படத்தில்தான் நடிக்க இருக்கிறேன். நடிகர் சந்தானத்துடன் கூட்டணி தொடரும். அவருடன் காமெடி கலந்த கேரக்டரில் நடிக்கவே விருப்பம். எனக்கு அதற்கு ஏற்ற திரைக்கதைதான் சரியாக வரும்.

இங்கே மதுரையில் என் பெயரைப் போட்டு ரசிகர் மன்றம் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இளம்புயல் என்று வேறு போட்டிருந்தார்கள். அது ஜெயம்ரவிக்கு உரிய டைட்டில். ஆனால், இதுவரை என் பெயரில் ரசிகர் மன்றம் என்று யாருக்கும் நான் அங்கீகாரம் கொடுக்கவில்லை. ஆனால், அடுத்த படத்தில் அல்லது அடுத்த ஆண்டு ரசிகர் மன்றம் குறித்து அறிவிப்பேன்," என்றார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger