News Update :
Powered by Blogger.

தமிழ்த் தாயின் தலைமகனுக்கு பிறந்தநாள்..

Penulis : karthik on Monday 28 November 2011 | 04:22

Monday 28 November 2011

 



தன இனம் நிமதியாக தூங்க வேண்டும் என்பதற்காக காட்டிலும், மேட்டிலும் தன தூக்கம் போக்கும் தங்க தலைவன்... இது போல ஒரு தலைவனை பெற நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்.


எந்த யுகத்தில் நம் இனம் செய்த தவமோ..!! இந்த யுகத்தில் இப்படி ஒரு தலைவரை நாம் பெறுவதற்கு..!! இன்று பிறந்த நாள் காணும் உங்களை வாழ்த்தவோ, பாராட்டவோ வயதில்லை ஆகவே வணங்குகிறோம் ..!
comments | | Read More...

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்!

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
 
இவர்கள் தவிர குசேகாவ்ன் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம ஜாமீன் கோரி ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
 
கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்து வந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அவர்களுக்கு ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்திலேயே தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அதேபோல, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த மனுக்கள் முதலில் டிசம்பர் 1ம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. இருப்பினும் மேற்கண்டோரின் கோரிக்கையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இவர்களின் மனுக்கள் விசாரிக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.
 
அதன்படி வெள்ளிக்கிழமை இவர்களின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது இவர்களது ஜாமீன் மனுக்களை சிபிஐ எதிர்க்கவில்லை.
 
விசாரணையின்போது கனிமொழியின் வக்கீலைப் பார்த்து நீதிபதி வி.கே.ஷாலி, ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்து விட்டது, எனவே மற்றவர்களையும் விட்டு விட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? உயர்நீதிமன்றம் இதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவற்றைப் பரிசீலிக்கக் கூடாது என்று கூற வருகிறீர்களா என்று கேட்டார்.
 
இதையடுத்து விசாரணையை திங்கள்கிழமை வரை நீதிபதி ஷாலி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் கனி்மொழி தரப்பு நம்பிக்கை இழந்த நிலையில், கடும் ஏமாற்றமடைந்தது.
 
இந் நிலையில் இன்று இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
 
அதே நேரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுராவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்ததால், அவரது மனு மீதான விசாரணை நாளையும் தொடர உள்ளது.
 
இதில், கனிமொழி மீது சிபிஐ நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் கிரிமினல் சதித் திட்டம் தீட்டுவது, கிரிமினல் சதி, ஏமாற்றுதல், மோசடி, ஊழல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

வேற்று கட்சியினரின் தாய் தந்தையரை இழிவாக பேசிய சீமான்

 
 
 
இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக பேசியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதைக் கட்சியாக தற்போது மாற்றி செயல்பட்டு வருகிறார் இயக்குநர் சீமான். தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இந்த இயக்கத்திற்கு நல்ல பெயரும், நல்ல ஆதரவும் காணப்படுகிறது. ஆனால் அதற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கடலூரில் நடந்த மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இடம் பெற்ற சீமானின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது.
 
கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சீமான், பேராசிரியர் தீரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்தது காவல்துறை.
 
அப்போது சீமான் பேசுகையில், சீமான் ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவான். பிரபாகரன் படம் இருக்கும் சட்டையுடன் போவேன். சட்டயை கழட்டச் சொன்னால் சட்டையை கழட்டுவேன். உள்ளே உடம்பில் பச்சை குத்தியிருப்பேன். அப்ப வெளியே போகச் சொல்ல முடியுமா?
 
இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்றார்.
 
இதைக் கேட்டதும் கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் முகம் சுளித்தனர். சீமான் பேச்சில் இடம் பெற்ற வார்த்தைகள் மிகக் கடுமையானவை என்று அவர்கள் அதிருப்தியுடன் வெளியேறியதைக் காண முடிந்தது.



comments | | Read More...

ராணாவிலிருந்து விலகும் தீபிகா படுகோன்?

 
 
 
ராணா படத்தை அதன் தயாரிப்பாளர்கள் கிடப்பில் போட்டு விட்டதால் கடும் அப்செட்டாகியுள்ளாராம் தீபிகா படுகோன். இந்தப் படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கி இத்தனை காலமாக காத்திருந்தும், தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், படத்தை நிறுத்தி வைத்ததால் அவர் கடும் அப்செட்டாகி விட்டாராம். இதனால் ராணா படத்தில் நடிக்கும் எண்ணத்தையும் அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் குறித்து பெரும் குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. முதலில் சுல்தான் தி வாரியர் என்ற படத்தைக் கூறி வந்தனர். பின்னர் ராணா என்ற பெயரில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான பூஜையும் போடப்பட்டது. தீபிகா படுகோன் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபிகாவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, ராணா படப்பிடிப்பு நின்று போனது. அவர் உடல் நலம் குணமடைந்து திரும்பினாலும் கூட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருப்பதால் அவரை ராணா படத்தில் நடிக்க வைப்பது குறித்து குடும்பத்தினரும், படக்குழுவினரும் தீவிர சிந்தனையில் மூழ்கினர்.
 
இந்த நிலையில்தான் கோச்சடையான் என்ற புதிய பட அறிவிப்பை வெளியிட்டனர். இந்தப் படத்தை அதி நவீன தொழில்நுட்பத்தில், எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவை நாடியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் மேற்பார்வைப் பணியைக் கவனிக்கப் போகும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
 
இதனால் ராணா பட நாயகி தீபிகா கடும் அப்செட்டாகியுள்ளாராம். ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது குறித்து அவரிடம் கருத்து கேட்போரிடம், அதுகுறித்து என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும். நான் இப்போது மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ராணா படம் குறித்து எனக்கு ஒரு தகவலும் தெரியாது. எனவே அதுகுறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்கிறாராம்.
 
தீபிகா இப்படி மறைமுகமாக கூறினாலும் கூட இப்படத்தில் நடிக்கும் திட்டத்தை தீபிகா கைவிட்டு விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. மாறாக, ராணா படத்துக்காக ஒதுக்கி வைத்திருந்த கால்ஷீட்களை தற்போது புதிய இந்திப் படங்களுக்கு அவர் ஒதுக்கிக் கொடுத்து விட்டாராம். மீண்டும் ராணா படத் தரப்பில் தன்னை அணுகினாலும் அவர் மறுத்து விடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஏற்கனவே கமல்ஹாசனின் விஸ்வரூபம், ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியப் படங்களிலும் நடிக்க தீபிகாவை அணுகினர். ஆனால் அவர் நடிக்க முன்வரவில்லை. தற்போது ரஜினி படத்திலிருந்தும் அவர் நழுவவுள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

டேம் 999... தெரியாம நடிச்சிட்டேன்! - பம்மும் விமலாராமன்

 
 
 
முல்லைப்பெரியாறு அணையின் வரலாறு பற்றி தெரியாமல் டேம் 999 படத்தில் நடித்துவிட்டேன் என்று அப்படத்தின் நாயகி விமலாராமன் தெரிவித்துள்ளார்.
 
முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்டுள்ள படம் டேம் 999. இதில் விமலாராமன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த விமலாராமனுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
இது குறித்து விமலாராமனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர், "நான் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்புக்காக கடந்த 1 வார காலமாக குலுமணாலியில் உள்ளேன். படப்பிடிப்பு ஒரு குக்கிராமத்தில் நடப்பதால் டேம் 999 படத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.
 
சென்னையில் இருக்கும் எனது நண்பர்கள் படத்துக்கு எதிர்ப்பு இருப்பது குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள்.
 
நான் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். நான் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவள். கே. பாலசந்தர் தனது 'பொய்' படம் மூலம் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு அணையின் வரலாறு பற்றி எதுவும் தெரியாது. இயக்குனர் என்னிடம் கதை சொன்னபோது அதை படமாகத் தான் பார்த்தேன். தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எண்ணமே எனக்கு இல்லை," என்றார்.



comments | | Read More...

நாசமா போயிருவீங்க! ஜெயலலிதா ஆட்சி பற்றி சீமான் ஆவேசம்!

 
 
 
25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள 'ஆஸ்ஸி' பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
 
 
அவர் பேசுகையில்,
 
 
ஒருத்தன் கேட்கிறான் பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் ஏறிவிட்டது. ஏன்னென்றால், பொதுநிறுவனங்களை பாதுகாக்க நிதி இல்லை. உடனே ஒருத்தன் எடுத்து பேசுறான், அண்ணா நூலகத்தை மாற்ற காசு இருக்கு. இதுக்கு காசு இல்லையா. இதுக்கு யாரிடம் பதில் இருக்கு.
 
 
மத்திய அரசு, மாநில அரசு கேட்ட நிதியை ஒதுக்கி தரவில்லை. மத்திய அரசுடன் கூட்டணி அமைக்காமல் இந்த அரசு அமைந்திருக்கிறது. பெரும்பான்மையோடு அமைந்திருக்கிறது. தனக்கு அடிபணியவில்லை. அதனால் வஞ்சிக்கிறது. பொதுவாகவே இந்தியாவை ஆளுகிற காங்கிரஸ் அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரானது.
 
 
மேற்கு வங்காளத்தை ஆளுகிற மம்தா பானர்ஜியோடு கூட்டணி வைத்திருக்கிறது. அதனால் கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. இங்கே ஆளுகிற அதிமுக அரசு காங்கிரசோடு கூட்டணி வைக்கவில்லை. அதனால தேவையான நிதியை தரவில்லை. அப்ப நீங்க என்ன செய்திருக்க வேண்டும். மக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கி தராததால், நான் விலைவாசியை உயர்த்தினால் பால் விலை 6 ரூபாய் 25 காசு கூடும். பேருந்து கட்டணம் இரட்டிப்பாகும். பேருந்தில் எவன் போவான். ஷேர் ஆட்டோவில் போகமுடியாதவன். இருசக்கர வாகனம் வைத்துக்கொள்ள முடியாதவன். கார் வைத்துக்கொள்ள முடியாதவன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். மாதச் சம்பளம் 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய் வாங்குபவன்தான் பேருந்தில் போவான். அவன் காசை பறித்து, அதில் இருந்து நிதியை பெருக்கி, நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டும் என்பது எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு மோசமானது என்பதை சிந்திக்க வேண்டும்.
 
 
 
 
அப்ப என்ன செய்திருக்க வேண்டும். என் அன்பு மக்களே, இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. தமிழக அரசுக்கு நிதி தரவில்லை என்றால், பால் விலையை ஏற்றினால், பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் உங்களுக்கு இவ்வளவு சுமை இருக்கும். இவ்வளவு கஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது. எனவே எனக்கு ஆதரவாக நில்லுங்கள். நான் போராடுகிறேன். அப்படித்தான் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் போராடினார்கள். மத்திய அரசு வேண்டிய அறிக்கையை கொடுக்காதபோது, மக்களைத் திரட்டி ஒரு நாள் போராட்டம். அடுத்த நாள் பதறிக்கொண்டு அறிக்கையை கொடுத்தது மத்திய அரசு. அப்படி போராடி இருக்க வேண்டும்.
 
மத்திய அரசு, நான் உங்களை அடிக்கிறேன். நீங்கள் திருப்பி என்னைத் தான் அடிக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் அப்பாவியை அடிக்கக் கூடாது. அது சரியல்ல.
 
 
ஆர்ப்பாட்டத்தில் பேச அனுமதி இல்லை. பெரம்பலூரில் டிசம்பர் 15ல் தம்பி அப்துல் ரசக்கின் நினைவுத் தினத்திற்கு கூட்டம் போட்டால் அந்த இடத்தில் அனுமதியில்லை. ஏன், பக்கத்தில் அகதிகள் முகாம் இருக்கிறது. சீமான் பேசினால், பக்கத்தில் இருக்கிற அகதிகள் எல்லாம் துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இலங்கைக்கு போய்விடுவானா. சீமான் பேசினால் உணர்வு பெற்றுவிடுவான். ஏண்டா ஒரு தமிழன் கூட உணர்ச்சியே பெற்றுவிடக் கூடாதா. உணர்வே பெற்றுவிடக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தீங்கன்னா, இதை எங்கப்போய் சொல்லறது. நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கும், எங்கோ ஓரத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருக்கும் தமிழர்கள் உணர்வு பெறுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அதுக்காக அந்த இடத்தில் பேச அனுமதி இல்லையென்றால், இதைவிட ஒரு கொடுமை, இதைவிட ஒரு சர்வாதிகாரம், இதைவிட அடக்கமுறை எதாவது இருக்கா.
 
 
கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னை பேச வைத்து இறையாண்மைக்கு எதிரா பேசுறான். விடுதலைப்புலிகளை ஆதரிச்சு பேசுறான். சட்டத்துக்கு எதிரா பேசுறான் என்று தூக்கி தூக்கி உள்ளே போட்டாரு. இதுக்கு அதுவே பரவாயில்லை. இங்கே நீ பேசவே விடல. அந்த கொடுமையை தொலைக்கத்தான் இந்த வேலையை செய்தோம். இது அதைவிட பெரிய கொடுமையா இருக்கு. இதை தொலைக்க பெரிய வேலை செய்யணும் போலிருக்கு நாங்க.
 
நான் சொன்னேன் ஒரு அதிகாரிகிட்ட எடுத்து, நாசமா போயிருவீங்கன்னு சொன்னேன். இது நடக்கும். இந்த சேட்டையெல்லாம் நீங்க வைச்சிக்கக் கூடாது. ஒண்ணு தெரிந்துக்கொள்ளுங்கள் அப்படியே ஒரு வாய்க்காலில் ஓடுகிற தண்ணீரை நீங்க அடக்கி தேக்கி தேக்கி வைச்சி வைச்சி திறந்தீங்கண்ணா, அது வேக வேகமா பாயும். அதைத்தான் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கீங்க. இரவு முழுவதும் பட்டியில் கட்டி வைத்திருந்த மாடுகளும், ஆடுகளும் காலையில் திறந்து விட்டால் எவ்வளவு வேகமா வெளியே பாய்ந்து வருமோ, அவ்வளவு வேகமா நாங்க வருவோம். ஆடு, மாடுமே அப்படி பாயும்போது, வீரத்தமிழ் புலிகள் நாங்கள் எப்படி பாயுவோம் என்று நீங்க புரிந்துக்கொள்ளுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

சீமான் இப்படி ஆவேசப்பட்டு பேசுவதால் கிடப்பில் இருக்கும் விஜயலக்ஸ்மி புகாரை ஜெயலலிதா கையில் எடுப்பார் என்றே தெரிகிறது. சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஜெயலலிதாவுக்கு பல நன்மைகள் கிடைக்கலாம். விடுதலைபுலிகளின் தீவிர ஆதரவாளரான சீமானை மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழக பெண்கள் மத்தியில் ஒரு பெண்பித்தனை போன்று சித்தரிக்கலாம், இதனால் சீமானின் புகழை அடியோடு இல்லாமல் செய்யலாம், சீமான் மீது கொலைவெறியில் இருக்கும் காங்கிரஷ்கரர்களை குளிரவைகலாம். அதுவே அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வழிவகுக்கலாம்...இதன் மூலம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக , காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான சீமானின் பிரசாரத்தை கேள்விக்குறியாக்கலாம் இப்படி பல நன்மைகள் இருப்பதால் விஜயலட்சுமி புகார் மீது நடவடிக்கை எடுத்து சீமான் கைது செய்யப்படும் நாட்கள் என்னப்படுவதாகவே தெரிகிறது.



comments | | Read More...

'இரண்டாம் உலகம்' :அனுஷ்காவுக்கு சூப்பர் ரோல் !

 
 
 
தனுஷ், ரிச்சா நடித்த ' மயக்கம் என்ன ' படத்தினை இயக்கினார் செல்வராகவன். இப்படம் நேற்று (நவம்பர் 25) வெளியானது. இதுவரை வந்த வரவேற்புகளை பார்த்து பெரும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் செல்வராகவன்.
 
'மயக்கம் என்ன' படத்தினை தொடர்ந்து ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் 'இரண்டாம் உலகம்' படத்தினை இயக்க இருக்கிறார். காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த படமாக இருக்குமாம் 'இரண்டாம் உலகம்'. ஆங்கிலத்தில் வெளிவந்த GLADIATOR மற்றும் தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'மகாதீரா' போன்ற படங்களின் வரிசையில் 'இரண்டாம் உலகம்' இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறாராம் செல்வராகவன்.
 
நாயகன் பாத்திரத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறாராம். அனுஷ்கா இதுவரை தமிழில் இந்த மாதிரி ஒரு பாத்திரம் செய்தது இல்லையாம். அந்தளவிற்கு அனுஷ்காவிற்கு முக்கிய வேடம் அளித்து இருக்கிறார் செல்வராகவன்.
 
'ஆயிரத்தில் ஒருவன்' படம் போல் தாமதம் ஆக கூடாது என்று கருதி இப்போதே 120 பக்கங்கள் அடங்கிய பட ஸ்கிரிப்ட்டை படக்குழுவினர் அனைவருக்கும் அளித்து இருக்கிறார் செல்வராகவன்.



comments | | Read More...

ஆங்கில படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர்கள் கூட கிடைக்கலயே : பாலை டைரக்டர் ஆதங்கம்!

 
 
 
தமிழர்களுக்கு எதிரான படமான டேம் 999 படத்துக்கு கிடைத்த தியேட்டர்களில் 25 சதவீதம் கூட தமிழகத்தில் எங்களின் பாலை படத்துக்குக் கிடைக்கவில்லையே என அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் குழுவினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் வெளியிட்டுள்ள உருக்கமான கடிதத்தில்,
 
முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். 'பாலை' என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.
 
'பாலை' படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, 'பிழைப்போமா அழிவோமா தெரியாதுவாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்' என்பது. 'பாலை' குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. 'பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாதுஇப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்.
 
சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, "பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் 'இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே' என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது'" என்று கடிதம் எழுதிக் கொடுத்தார். சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள். முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள். இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. 'அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்' என்கிறார்கள் இவர்கள். எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.
 
தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை. ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன். 'அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்'இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.
 
ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன. திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன. தமிழகத்தில் டேம்-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?
 
இப்போது டேம்-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு வார்னர் பிரதர்ஸ் தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த அரங்குகளில் பாலை 25ம் தேதி வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் 'செங்கோட்டை' திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!
 
இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன். நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



comments | | Read More...

தைமாதம் திருமணத் தேதியை அறிவிப்போம்: பிரசன்னா!!

 
 
 
இருவரது வீட்டில் சில விஷயங்கள் பேச வேண்டியிருப்பதால், திருமணத் தேதியை தைமாதம் அறிவிக்கிறோம் என்று சினேகாவை திருமணம் செய்ய இருக்கும் பிரசன்னா தெரிவித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் சேர்ந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்களாக பழகத்தொடங்கினர். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவரும், பின்னர் காதலிக்க தொடங்கினர். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே பலமுறை கிசுகிசு எழுந்தது. ஆனால் இதை இருவரும் மறுத்து வந்தனர்.
 
இந்நிலையில் இந்த காதலை பிரசன்னாவே உறுதி செய்தார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரசன்னாவும், நானும் சினேகாவும் காதலிப்பது உண்மை தான் என்றும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். பிரசன்னா இந்த செய்தியை அறிவித்தபோது நடிகை சினேகா, தன் அண்ணனை பார்க்க தோஹா சென்றிருந்தார். சிலதினங்களுக்கு முன்னர் தான், அவர் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய சினேகாவிடம் இதுகுறித்து கேட்க முற்பட்டபோது அவர் பேச மறுத்துவிட்டார்.
 
இதனையடுத்து பிரசன்னாவிடம் கேட்டபோது, நான் ஊரில் இல்லாத போது நம்முடைய செய்தி வெளிவந்தது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் எல்லாம் பேசி ஓ.கே., ஆன பிறகு, ரெண்டு பேரும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனா அது முடியல என்று சினேகா, என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். நானும், சினேகாவும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அதனால் இருவரது வீட்டிலும், சில விஷயங்கள் பேசி வருகிறார்கள். அதுஎல்லாம் முடிந்த பின்னர் திருமணத் தேதியை அறிவிக்கிறோம். தைமாதத்திற்குள் எல்லாம் பேசி முடிவாகிவிடும். அப்போது நல்ல செய்தியை தெரிவிக்கிறோம் என்றார்.



comments | | Read More...

கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி

 
 
 
கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் கற்பழித்தார் என்று பெண் பரபரப்பு புகார கூறினார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீசார் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த காசியின் மனைவி லட்சுமி (வயது 20). இருளர் பழங்குடியனத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகியோருடன் வந்து போலீசார் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறி புகார் மனு கொடுத்தார்.
 
அதில் கடந்த 22-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு 3 போலீசார் எனது கணவர் காசியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்களது உறவினர்கள் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் சென்று கேட்டபோது, காசியை விழுப்புரத்துக்கு கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வேனில் வந்த 8 போலீசார் எங்கள் வீட்டை சோதனை செய்து எங்களையும் மாமனார் முருகன், மாமியார் வள்ளி, எனது கணவரின் சகோதரர் ஆகிய 7 பேரையும் அடித்து உதைத்து வேனில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றனர்.
 
அதன் பிறகு என்னையும் (லட்சுமி) ராதிகா, வைகேஸ்வரி, கார்த்திகா ஆகியோரையும் தைலாபுரம் தோப்பிற்கு அழைத்துச் சென்று கற்பழித்தனர். மறுநாள் எங்களை வீட்டின் அருகே இறக்கி விட்டனர் என்று கூறி உள்ளார்.
 
புகார் கொடுக்க வந்த ஒரு பெண் கூறுகையில், நான் கர்ப்பிணியாக இருக்கிறேன். என்னையும் போலீசார் கீழே தள்ளி கற்பழித்தனர். நான் கர்ப்பிணி என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன். கர்ப்பிணியானால் என்ன என்று கூறி போலீசார் இரக்கமின்றி கற்பழித்தனர்.
 
போலீசார் எங்கள் வாயில் துணியை திணித்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என்று அழுதுக்கொண்டே கூறினார்.
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டி.ஐ.ஜி. சக்திவேல்,போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசார் எங்களை கற்பழித்தது உண்மைதான் என்று கூறினார்கள். நேற்று இரவு போலீசார் 4 பெண்களையும் தங்கள் பாதுகாப்பிலேயே வைத்து தொடர்ந்து விசாரித்தனர். விடிய விடிய இந்த விசாரணை நீடித்தது. அதன் பிறகு 4 பேரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி திருக்கோவிலூர் அழைத்து சென்றனர். அங்கு சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர்.
 
அதன்பிறகு 4 பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் மணிமேகலையும் தனியாக இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் நேற்று இரவு சம்பவம் நடந்ததாக கூறப்படும் தைலாபுரம் காட்டுப்பகுதிக்கு சென்று விசாரித்தார்.
 
காசி வீடு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடமும் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது "லட்சுமியின் குடும்பத்தினர் 6 பேரை திருட்டு வழக்கில் கைது செய்தோம். எனவே போலீசார் மீது அவர்கள் கற்பழிப்பு புகார் கூறுகிறார்கள். இது சம்மந்தமாக கலெக்டர் அறிக்கை வந்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.
 
பழங்குடியின இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி 4 பெண்களையும் போலீசில் புகார் கொடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார். பேராசிரியர் கல்யாணி நிருபரிடம் கூறியதாவது:- 4 பெண்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் இது உண்மையல்ல என்பது போல மறைக்க முயற்சி நடக்கிறது. நேற்று புகார் கொடுத்ததுமே விசாரணை என்ற பெயரில் 4 பெண்களையும் தங்கள் பாதுகாப்பில் போலீசார் கொண்டு சென்று விட்டனர். அவர்களை இரவு முழுவதும் தங்கள் பாதுகாப்பிலேயே வைத்துள்ளனர்.
 
தற்போது இந்த புகாரை வாபஸ் பெற வைக்க போலீசார் அவர்களை மிரட்டி வருகிறார்கள். இது சம்மந்தமாக நாளை விழுப்புரத்தில் மக்கள் உரிமை அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்துகிறோம். அதில் உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு எடுப்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger