News Update :
Powered by Blogger.

உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

Penulis : karthik on Monday 17 September 2012 | 23:49

Monday 17 September 2012

உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம் உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

திண்டுக்கல், செப். 18-
 உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ. 3 லட்சம் அபராதமும், விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த திருட்டுக்கும்பலை பிடிக்க போலீசார் முயன்றபோது, துப்பாக்கியை காட்டி அக்கும்பல் தப்பியது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் சப்-கோர்ட்டு, வழக்கில் ஆஜராகாத தேனà �¿ மேலக்கூடலூரை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் என்பவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவரை பிடிக்க திண்டுக்கல் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட முருகனுக்கு பதிலாக வேறொரு வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை முருகன் எனக் கூறி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவருக்கு தண்டனையும் வி�® �ிக்கப்பட்டது. சிறையிலிருந்த போலி நபர், கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் தனது பெயர் கம்பம் சத்யா, தனக்கும், துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வேறு ஒரு வழக்கில் கைதான என்னை போலீசார், குற்றவாளியாக சேர்த்து, தண்டனை வாங்கி தந்துள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வெங்கிடுசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை à ��ிசாரித்த நீதிபதி உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு, ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தார். இத்தொகையை பாதிக்கப்பட்டவருக்கு கலெக்டர் வழங்கவேண்டும் என்றும், மேலும் தவறு செய்த சப்-இன்ஸ்பெக்டர் முருகனிடமிருந்து அபராத தொகையை வசூலிக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தற்போது ரெயில்வே இன்ஸ் பெக்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டர் முருகன் மீது, போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

comments | | Read More...

சுயநலத்துக்காக திராவிடக்கட்சிகள் தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது: சீமான் பேச்சு


சுயநலத்துக்காக திராவிடக்கட்சிகள் தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது: சீமான் பேச்சு சுயநலத்துக்காக திராவிடக்கட்சிகள் தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது: சீமான் பேச்சு

ஈரோடு, செப். 18-
 ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் மற்றும் தமிழ்தேசிய இன எழுச்சி பொதுக்கூட்டம் ஈரோடு பெரியார் நகரில் நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட தலைவர் செயராசு தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அமைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை வளர்த்தவர்கள், என்னை உருவாக்�® �ியவர்கள், நான் தலைவராக மதித்தவர்கள் இப்போது நான் பெரியாரை மறந்து விட்டதாக விமர்சிக்கிறார்கள். பெரியார் இல்லாமல் இந்த சமூகத்துக்கு எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது. பெரியார் செய்த சாதி ஒழிப்பு போராட்டம், சமூக நீதிபோர், பெண்ணிய விடுதலை, தீண்டாமை, பகுத்தறிவு கடவுள் மறுப்பு இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள். என்னை பற்றிய விமர்சனங்கள் என்னை சிதைக்கவி ல்லை. மாறாக என்னை செதுக்கி கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் தேசிய இனத்தின் வழிகாட்டியாக பெரியாரை ஏற்றுக் கொள்வோமே தவிர தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை தாங்கள் சார்ந்திருக்கும் சாதிக்காகவும், மதத்துக்காகவும் சேர்ந்த மக்கள் கூட்டம் இப்போது முதல்முறையாக தமிழுக்காக சேர்ந்து இருக்கிறது. இன்று தமிழ் தேசிய இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதை எழுச்சி அடைய செய்ய வேண்டுமà � . எப்போது தமிழன் தன்னை இந்தியன் என்று கருதினானோ அப்போது தமிழ் இனம் வீழ்ச்சி அடைந்து விட்டது. தமிழர்கள் முதலில் இனப்பெருமை கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக கொள்கைகளை அடகு வைத்து விட்டு தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது. தமிழ் மொழியின் மீட்சியே தமிழ் இனத்தின் எழுச்சியாக இருக்க முடியும். இவ்வாறு சீமான் பேசினார்.

comments | | Read More...

டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்துக்கு விஜயகாந்த் ஆதரவு




டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்துக்கு விஜயகாந்த் ஆதரவு டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்துக்கு விஜயகாந்த் ஆதரவு

சென்னை, செப். 18-

தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசு கடந்த 13-ம் தேதி டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 5 உயர்த்தியதன் விளைவாக தமிழ் நாட்டில் ரூபாய் 6.07 அளவிற்கு வரிகள் உள்பட உயர்ந்துள்ளது.

இந்திய அரசு மேலும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதன் விளைவாக மேலும் கூடுதல் சிலிண்டர்களை ரூபாய் 400 அளவிற்கு அதிகமாக கொடுத்து சந்தை விலையில் பெற வேண்டும்.

இதுமட்டுமில்லாமல் சில்லரை வர்த்தகத் தில் 51 சதவிகித அந்நிய நாட்டு கம்பெனிகள் முதலீடு போடுவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விமான போக்குவரத்து துறையில் 49 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்க முடிவெடுத்துள்ளது.

மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்கவும் முடிவெடுத்துள்ளது. ஒலிபரப்பு சேவை துறையில் 74 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இவை போன்ற நடவடிக்கைகளால் வீழ்ந்து விட்ட பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் உண்மையில் இந்திய அரசின் இந்த முடிவுகள் சாதாரண ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். அன்றாட வாழ்க்கையே அவர்களுக்கு பிரச்சினையாகி விடும். குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 4 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே இருந்து வருகிற விலைவாசி மேலும் உயரும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும், வறுமை அதிகரிக்கும்.

இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் இவைதான் நடக்கும். இந்திய அரசு வகுத்துள்ள 12வது ஐந்தாண்டு திட்டத்தில் 9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் 8.2 சதவிகிதம்தான் எட்ட முடியும் என்று அறிவித்தார்.

தற்போதைய இந்திய அரசு கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கைகளே இச்சீரழிவிற்கு காரணமாகும். இருந்தும் இதே கொள்கையை மேலும் தீவிரமாக செயல்படுத்தவே இந்திய அரசு முனைந்துள்ளது.

உண்மையில் பாமர மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் வகையில் பொருளாதார கொள்கையை மாற்றி யமைக்க இந்திய அரசு தயாராக இல்லை. இதன் விளைவாக மேலும் பொருளாதார நெருக்கடி வலுக்குமே தவிர, வளர்ச்சியோ அல்லது வறுமை ஒழிப்போ வெறும் பகல் கனவாகத்தான் முடியும்.

இந்திய அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான போக்கை எதிர்த்து தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் வருகிற 20.09.2012 வியாழக்கிழமை அன்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளன. பொருளாதாரக் கொள்கையில் அடிப்படையான மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளும் மற்றும் தோழமைக் கட்சிகளும் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானித்துள்ளத ை தே.மு.தி.க. சார்பில் நான் வரவேற்பதுடன், முழு அடைப்பு போராட்டத்திலும் தே.மு.தி.க. கலந்து கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை வருகிற 20ஆம் தேதி அன்று இந்த முடிவிற்கு தமிழ்நாட்டு மக்கள் பரிபூரண ஒத்துழைப்பு நல்கி, இப்போராட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். தற்போது இந்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

comments | | Read More...

மூன்றெழுத்து மந்திரம் MBA

மூன்றெழுத்து மந்திரம் MBA

இளைஞர்களுக்கான புத்தம் புதிய பிராக்டிகல் தொடர்
பிஸினஸ் பிறக்கிறது!
height=262
ம் வீடுகளில் பெண்கள் எப்படிச் சமையல் செய்கிறார்கள்? மிகச் சில வீடுகளில் விறகடுப்பு, இன்னும் சில வீடுகளில் கேஸ் அடுப்பு, நகர்ப்புறங்களில்  மைக்ரோ வேவ் அவன் (Oven), இன்டெக்ஷன் ஸ்டவ் என பல வகை அடுப்புகள். ஏன்? இவை பெண்களின் வேலை சுமையைக் குறைக்கின்றன; உற்பத்தித்திறனை மேம்படுத்துகின்றன; நேரத்தை மிச்சப்படுத்துவதோடு  வாழ்க்கையை எளிதாக்குகின்றன.
கடையில் பன்னிரண்டு சோப் வாங்குகிறீர்கள். ஒரு சோப் விலை 18 ரூபாய். மொத்தமாக எவ்வளவு பணம் தரவேண்டும் என்பதற்கு ஐம்பது வயது தாண்டிய மனிதர் எனில் மனக்கணக்குப் போட்டு பார்ப்பார். முப்பதுக்குக் கீழே என்றால் கால்குலேட்டர் தேடுவார். இருபதுக்குக் கீழ் என்றால் செல்போனில் இருக்கும் கால்குலேட்டர்.

அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்திலேயே இத்தனை மாற்றம் எனில், பிஸினஸ் உலகத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? போட்டிகள் நிறைந்தது பிஸினஸ் உலகம். அது ஒரு நிரந்தர ஓட்டப் பந்தயம். நாம் ஒரு நிமிடம் கண்ணயர்ந்தால், போட்டி கம்பெனி நம்மை தள்ள�® �விட்டு முன்னால் போய்விடும். நம் கண் முன்னாலேயே இதற்குப் பல உதாரணங்கள். மர்ஃபி ரேடியோ, டயனோரா டி.வி, ராஜா ஸ்நோ ஒரு காலத்தில் வெற்றிக் கொடி கட்டிய இந்த பிராண்டுகள் இன்று காணாமலே போய்விட்டன. கால்குலேட்டர்கள், கேமிராக்களை தயார் செய்த கம்பெனிகள் செல்போன்களின் வருகைக்குப் பிறகு திண்டாடத் தொடங்கிவிட்டன.
குழந்தைகளின் பொம்மைகளை எடுத்துக்கொள்ளுங்கள். சின்னச் சின்ன கிரà ��மக் கடைகளில்கூட சீனநாட்டுப் பொம்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. நீங்கள் கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் பொம்மைகள் தயாரிப்பவரா? உங்கள் போட்டிக்காரர் அடுத்த தெரு பழனிச்சாமி, மும்பை சவான், நாசிக் தேஷ்முக், பரோடா மேத்தா மட்டுமில்லை, சீனாவின் ஹூவா, லிங் ஆகியோரும்தான். சீனப் பொம்மைகள் அடிமாட்டு விலைக்குக் கிடைக்கிறதா? நீங்களும் குறைந்த விலையில் உங்கள் பொம்மையை எப்படி விற்ப�® �ு என்று வியூகம் வகுக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பிஸினஸ் காணாமல் போய்விடும்.
height=78வரலாற்றைப் புரட்டினால் ஆயிரமாயிரம்  ஆண்டுகளாக இந்த மாதிரியான மாற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்கள்தாம் நம் வாழ்க்கையே; பொருளாதார, நாகரிக வளர்ச்சியே. வாழ்க்கை இப்படி மாறும்போது பிஸினஸும் மாறுகிறது. பிஸிà ��ஸை நிர்வகிக்கும் மேனேஜ்மென்ட் கொள்கைகளும் தடாலடியாக மாறியிருக்கின்றன. எப்படி?
கற்காலம் முதல் இன்றைய கம்ப்யூட்டர் காலம் வரை வரலாற்றை வேகமாக ஒரு ஓட்டு ஓட்டிவிடுவோம்.
வரலாற்றின் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தேவைக்குத்தானே விவசாயம் செய்தான். தன் ஆயுதங்களைத் தானே வடிவமைத்தான். தன் குடிசைகளை, வீடுகளை அவனே கட்டினான். காலப்போக்கில் அவன் தேவை விரிவடைà ��்தன. எல்லாத் தேவைகளையும் தானே பூர்த்தி செய்யமுடியாது. பக்கத்து வீட்டுக்காரனுடைய சில அவசியங்களை நிறைவேற்றினால், தன் சில தேவைகளை அவன் பூர்த்தி  செய்வான் என உணர்கிறான்.
height=308
அடுத்தவர்களின் உழைப்பை தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் புதிய வாழ்க்கைமுறை தொடங்குகிறது. வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் இந�¯ �த மாற்றத்துக்கு மேனேஜ்மென்ட் அறிஞர்கள் வைத்திருக்கும் பெயர் உழைப்புப் பங்கீடு (Division of Labour).
விவசாயிகள், கொத்தனார்கள், தச்சர்கள், கொல்லர்கள், ஆசிரியர்கள், போர்வீரர்கள் எனத் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்ட வல்லுநர்கள் உருவாகிறார்கள். கொத்தனார் விவசாயிக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார். விவசாயி, தான் பயிரிடும் அரிசியை, காய்கறியை அவருக்குக் கூலியாகத் தருகிறார். வியாபாரமà � பண்டமாற்று முறையாகத் தொடங்குகிறது.  
மனிதனின் முயற்சியால் விவசாயத்தில் உற்பத்தித்திறன் பெருகுகிறது. மாடுகள், ஏர் ஆகியவை பயன்பட ஆரம்பிக்கின்றன. பத்து பேர் வேலை பார்த்த வயல்களில் ஐந்து பேரை வைத்து வேலையை வாங்குகிறான். முதலாளி, தொழிலாளி என்ற இரு மாறுபட்ட இனங்கள் உருவாகின்றன. நிலச் சொந்தக்காரன், தன் கீழ் வேலை பார்ப்பவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியைப�¯ பெறுகிறான். தொழிலாளிகளிடம் குறைந்த சம்பளத்தில் அதிக உழைப்பை எப்படிப் பெறுவது என்னும் ஊழியர் நிர்வாக மேனேஜ்மென்ட் தொடக்கம் இதுதான்.
height=78விவசாயத்தால் எல்லோருக்கும் படியளக்க முடியவில்லை. கொத்தனார்கள், தச்சர்கள், கொல்லர்கள், ஆசிரியர்கள், போர்வீரர்கள் மற்றத் தொழில்களிலும் பலர் நுழைகிறார்கள். தொழில் தெரிந்தவர்க�® �ிடம் பயிற்சிக்கும், வேலைக்கும் சேருகிறார்கள். விவசாயம் தாண்டிப் பிற தொழில்களிலும் முதலாளி - தொழிலாளி என்னும் இரண்டு வர்க்கங்கள் ஆரம்பமாகின்றன.
மக்கள் தொகை பெருகுகிறது. பொருட்களுக்கான தேவை அதிகரிக்கிறது. தனி மனிதர்களால் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த பற்றாக்குறைகளைச் சமாளிக்க, தனிமனித அல்லது குடும்ப முயற்சிகளாக மட்டுமே இருந்த நெசவு, பண்டபாத் திரங்கள் தயாரிப்பு ஆகியவை குடிசைத் தொழில்களாகப் பரிணாம வளர்ச்சி கண்டன. விவசாயத்தையும் தாண்டித் தொழில்கள் தொடங்கியது இப்போதுதான்.
குடிசைத் தொழில்கள் சிறுசிறு தொழில்களாக வளர்கின்றன. பதினேழாம் நூற்றாண்டு முடிவில் ஒரு மாபெரும் மாற்றம்... அது மனிதகுலத்தின் வருங்காலத்தையே நிரந்தரமாக மாற்றியது. வரலாற்றின் ஆரம்ப காலங்களில், மனிதன் உடல்சக்தியை மட்டுமே பயன்படுத்தி�® �ான். அடுத்ததாக, மாடுகளும், குதிரைகளும் புழக்கத்துக்கு வந்தன. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போக எப்போதும் நடக்க முடியுமா? மாடுகளும் குதிரைகளும் இழுக்கும் வண்டிகள் வந்தன. 1755-ல் ஜேம்ஸ் வாட் நீராவி எந்திரம் கண்டுபிடித்தார். மனித சக்தியையோ, மற்ற மிருக சக்திகளையோ நம்பியிருக்காமல் இயந்திரங்களால் உற்பத்தி செய்யமுடியும்; உற்பத்தியை ஏராளமான மடங்கு அதிகமாக்க மு டியும் என்று உலகம் உணர்ந்தது.
height=337
நீராவி இயந்திரத்தால் ரயில் போக்குவரத்து தொடங்கியது. உற்பத்தி செய்கிற இடத்தில் மட்டுமே தயாரிப்புப் பொருட்களை விற்கமுடியும் என்ற நிலை மாறி, வெகு தூரத்தில் வாழும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிந்தது. பூகோள வரம்புகள் தளரத் தளர, பொருட்களுக்கான தேவை அமோக�® �ாகப் பெருகியது. உற்பத்தியைப் பெருக்க, லாபத்தை அதிகரிக்க, முதலாளிகள் முயற்சிகள் எடுக்கத் தொடங்கினார்கள். குறைந்த மனிதர்கள், நிறைந்த இயந்திரங்கள் என புதிய தயாரிப்பு சித்தாந்தம் உருவாகத் தொடங்கியது. நெசவுத் தொழில் வேகமாக வளர ஆரம்பித்தது.
நீராவி தயாரிக்க கரி தேவைப்பட்டது. இது சுரங்கத் தொழிலின் வளர்ச்சியில் வேகத்தைக் கொண்டுவந்தது. நிலக்கரி உற்பத்தி அதிகமானது. இத�¯ �வரை இரும்பு உற்பத்திக்குச் சாதாரண கரிதான் பயன்பட்டது. நிலக்கரி சாதாரண கரியைவிட வீரியம் கூடியது. தாராளமாகக் கிடைத்த நிலக்கரி இரும்புத் தொழிலின் உற்பத்தித்திறனை அதிகமாக்கியது. இரும்புத் தொழில் ஓஹோ என்று வளர்ந்தது.
நெசவு, கரி, இரும்பு ஆகிய தொழில்களில் அசுர வேக வளர்ச்சி தொடங்கியது. இது மாபெரும் புரட்சி. இந்த வளர்ச்சிக்குத் தொழில் புரட்சி என்று பெயரிட்டார்கள்.
இà ��ும்பால் செய்யப்பட்ட புதிய புதிய இயந்திரங்கள் 18, 19-ம் நூற்றாண்டுகளில் களத்துக்கு வர ஆரம்பித்தன. முதலாளிகள் தொழிலாளிகளைக் கசக்கிப் பிழியத் தொடங்கினார்கள். இயந்திரங்கள் பல தொழிலாளிகளின் வேலைகளைச் செய்யும் சக்தி கொண்டவையாக இருந்தன. முதலாளிகள் இயந்திரங்களை அதிகரித்து, தொழிலாளர்களை வேலைகளிலிருந்து நீக்கினார்கள். தனிப்பட்ட தொழிலாளியின் முக்கியத்துவம் குறையத் தொட ங்கியது. தொழிலாளிகளின் மனக்குறைகள் வெளிப்பட்டு, வெடிக்க ஆரம்பித்தன.
1901-ல் அமெரிக்க நேஷனல் கேஷ் ரிஜிஸ்டர் கம்பெனியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர்களை அடக்கி ஆளலாம் என்ற சில முதலாளித்துவ சிந்தனைகள் இதனால் ஆட்டம் காண ஆரம்பித்தன. தொழிலாளிகளின் நலம் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள். உலகில் முதன் முதலாக ஊழியர் நிர்வாகத் துறை   (Personnel Department) நேஷனல�¯ கேஷ் ரிஜிஸ்டர் கம்பெனியில் பிறந்தது.
1903. இன்னொரு அதிரடி மாற்றம். இதைக் கொண்டுவந்தவர் ஹென்றி ஃபோர்ட். ஜேம்ஸ் வாட்டுக்குப் பிறகு வந்த புரட்சித் தலைவர் இவர் என்று சொல்லலாம். எப்படி?
(கற்போம்)
படம்: ஜெ.வேங்கடராஜ்.
/

comments | | Read More...

பாலகாட்டில் மகனை கிணற்றுக்குள் தள்ளி கொன்று தாயும் தற்கொலை


பாலகாட்டில் மகனை கிணற்றுக்குள் தள்ளி கொன்று தாயும் தற்கொலை பாலகாட்டில் மகனை கிணற்றுக்குள் தள்ளி கொன்று தாயும் தற்கொலை

கொழிஞ்சாம்பாறை, செப்.18-

பாலக்காடு மாவட்டம் மழம்புழா அருகேயுள்ள மாட்டு மந்தையை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு பிந்து (வயது 28) என்ற மனைவியும், கோபிகா (10), அகில் (8) என்ற குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணேசன் குடும்பத்தினர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மனம் உடைந்த பிந்து தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு அருகிலுள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு மகன் அகிலை பிடித்து கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தார். இதை பார்த்து பயந்த கோபிகா தாயிடமிருந்து தப்பி ஓடினார். அதன்பின்னர் பிந்து கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பாலக்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கிணற்றுக்குள் இருந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

comments | | Read More...

டெல்லியில் மானிய விலையில் மேலும் 3 கியாஸ் சிலிண்டர்கள்: முதல் மந்திரி ஷீலாதீட்சித்


டெல்லியில் மானிய விலையில் மேலும் 3 கியாஸ் சிலிண்டர்கள்: முதல் மந்திரி ஷீலாதீட்சித் டெல்லியில் மானிய விலையில் மேலும் 3 கியாஸ் சிலிண்டர்கள்: முதல் மந்திரி ஷீலாதீட்சித்

புதுடெல்லி, செப். 18- சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளைக்கு மத்திய அரசு சமீபத்தில் கட்டுப்பாடு விதித்தது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் தேவைப்படும் கூடுதல் சிலிண்டர்களை அன்றைய சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி à ��ள்ளது. இந்த நிலையில் டெல்லியில் கூடுதலாக 3 சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் வசிப்பவர்கள் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற முடியும். மண்எண்ணை இல்லாத டெல்லியை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு கூடுதலாக 3 சமையல் கியாஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டà ��ல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்- மந்திரி ஷீலா தீட்சித் கூறியதாவது:- டெல்லியில் உள்ள ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இத்திட்டத்தின்படி ஒரு சிலிண்டருக்கு மாநில அரசு சுமார் ரூ.350 மானியமாக வழங்கும். இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோர்ட்டுக்கு கீழே உள்ளவர்கள், அனைவருக்கும் உணவுத்à ��ிட்டம், சிறுகுடில்களில் வசிப்போருக்கான குடும்ப அட்டை வைத்திருக்கும் டெல்லிவாழ் மக்கள் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார். ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு மானிய விலையில் மேலும் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களை வழங்க கோவா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில குடிமைப்பொருள் வழங்கல் மந்திரி தயானந்த் மந்த்ரேகர் கூறி யதாவது:- சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 6 ஆக குறைத்துள்ளது. கோவா மாநில அரசு அதே மானிய விலையில் மேலும் 6 சிலிண்டர்களை வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெறும் வாய்ப்பு சாதாரண மக் களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

comments | | Read More...

விருதுநகர், சிவகாசியில் அச்சுக் குழுமத்திற்கு பொது வசதி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு



விருதுநகர், சிவகாசியில் அச்சுக் குழுமத்திற்கு பொது வசதி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு விருதுநகர், சிவகாசியில் அச்சுக் குழுமத்திற்கு பொது வசதி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு

சென்னை, செப்.18-

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதும், தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதற்கான நாற்றங்காலாக விளங்குவதுமான சிறு மற்றும் குறு தொழில்களின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் போட்டித் திறனை அதிகரிக்கும் வண்ணம், மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஏற்கெனவே, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பொறியியல் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்க மாநில அரசின் பங்களிப்பில் 49 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை முதல் தவணையாகவும்; வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்க மாநில அரசின் பங்களிப்பில் 68 லட்சம் ரூபாயை முதல் தவணையாகவும்; திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் உ ள்ள அரிசி ஆலை குழுமத்திற்கு பொது வசதி மையம் அமைக்க மாநில அரசின் பங்களிப்பில் 48 லட்சம் ரூபாயை முதல் தவணையாகவும், ஆக மொத்தம் மூன்று குழுமங்களுக்கும் சேர்த்து 1 கோடியே 65 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை விடுவித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 10 கோடியே 96 லட்சம் ரூபாய்  திட்ட மதிப்பீடு கொண்ட விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அச்சுக் குழுமத்திற்கு பொது வசதி மையம் அமைக்க, மாநில அரசின் பங்களிப்பான 90.66 லட்சம் ரூபாயில், 70 விழுக்காடு தொகையான 63.46 லட்சம் ரூபாயினை முதல் தவணையாக விடுவித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் உருவாக வழிவகுக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

comments | | Read More...

காரைக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் குத்திக்கொலை




காரைக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் குத்திக்கொலை காரைக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் குத்திக்கொலை

காரைக்குடி, செப். 18-
 காரைக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37), என்ஜினீயர். இவர் சாக்கோட்டை ஒன்றிய தி.மு.க. முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். நேற்று இரவு பாலசுப்பிரமணியன் காரில் காரைக்குடி சென்றார். பின்னர் இரவு 11 மணி அளவில் à ��ாரில் வேலங்குடி திரும்பினார். அங்குள்ள சாலையில் சென்றபோது ரோட்டில் படுத்து இருந்த நாய் மீது கார் மோதியது. இதில் நாய் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது. நாய் இறந்ததை பார்த்து அதன் உரிமையாளர் பெரியண்ணன் ஓடிவந்தார். அவர் பாலசுப்பிரமணியனிடம் எப்படி காரை ஏற்றி நாயை கொல்லலாம் என்று கூறி வாக்குவாதம் செய்தார். இதில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது à ��ெரியண்ணன் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பாலசுப்பிரமணியன் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார். பாலசுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பாலசுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பாலசுப்பி ரமணியன் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து பள்ளத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து வேலங்குடி அருகே பதுங்கி இருந்த தொழிலாளி பெரியண்ணனை கைது செய்தார். கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு உஷா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாலசுப்பிரமணியன் உடல் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பர�® �சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் குவிந்துள்ளனர். தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

comments | | Read More...

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: உத்தரபிரதேசத்தில் 20 ந்தேதி பந்த் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு



டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: உத்தரபிரதேசத்தில் 20 ந்தேதி பந்த் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: உத்தரபிரதேசத்தில் 20 ந்தேதி பந்த் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

லக்னோ, செப்.18- மத்திய அரசு சமீபத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்துக்கு கட்டுப்பாடு விதித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளும் கூட்டணி அà ��சில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வருகிற 20-ந்தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்த பாரதீய ஜனதா, இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வேலை நிறுத்த போராட்டத்திற்கு சமாஜ்வாடி கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கையை கண்டித்து வருகிற 20-ந்தேதி உத்தரபிரதேசத்தி�® �் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்- மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவரு மான அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார். இதனை கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்திரி நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறும்போது, டீசல் விலையை உயர்த்தியது, மானிய விலையான சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கையை குறைத்தது போன்ற மத்திய அரசின் முடிவு சாதாரண மக்களின் வாழ்�® �்கை பரிதாபத்துக்குரியதாகிவிட்டது என்றார்.

comments | | Read More...

பாகிஸ்தானில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி

பாகிஸ்தானில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி பாகிஸ்தானில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி பாகிஸ்தானில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி

இஸ்லாமாபாத், செப். 18 -
 முகமது நபி குறித்து தவறாக சித்தரித்து அமெரிக்காவில் வெளியிட்ட திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவது போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜமாத் ஈ இஸ்லாமி அமைப்பை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.  அமெரிக்க தூதரகம் நோக்கி வந்தவர்கள் பிரஸ் கிளப் மற்றும் காவல் நிலையங்க�® �ை அடித்து நொறுக்கினர். அதை கட்டுப்படுத்த முயன்ற போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இஸ்லாமுக்கு எதிராக வெளியிடபட்ட இந்த திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்ட யூடியூப் நிறுவனத்தை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

comments | | Read More...

பர்மா பொதுமன்னிப்பாக 500 கைதிகளை விடுதலை செய்தது



பர்மா பொதுமன்னிப்பாக 500 கைதிகளை விடுதலை செய்தது பர்மா பொதுமன்னிப்பாக 500 கைதிகளை விடுதலை செய்தது பர்மா பொதுமன்னிப்பாக 500 கைதிகளை விடுதலை செய்தது

ரங்கூன், செப். 18 -
 பர்மாவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ராணுவ அரசு நல்ல என்ன அடிப்படையில் நேற்று 500க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர்.  இது பர்மா அதிபர் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.சபை செல்லவுள்ளதை அடுத்து இது நடந்துள்ளதாக கூறப்படுகிறது. �® �ங்கு பல்வேறு சீர் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த வருடம் 600 கைதிகளை விடுதலை செய்யப்பட்டனர்.  அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் குறிப்பிட்டோரை காணவில்லை என்று மனித உரிமை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை வரவேற்றுள்ள மக்கள் அங்கு விரைவில் குடியாட்சி மலர எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.

comments | | Read More...

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 18-09-2012



 தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 8 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்
டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் நேற்று முதல் லாரி உரிமையாளர் காலவரையற்ற
 சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்ட திருப்பதி
 தொடர் முற்றுகை காரணமாக அமெரிக்க தூதரகத்துக்கு 2 நாள் விடுமுறை
அமெரிக்க துணை தூதரகத்தில் தொடரும் முற்றுகை போராட்டத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அமெரிக்க
 20-ந் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு தே.மு.தி.க. ஆதரவு - விஜயகாந்த் அறிவிப்பு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்திய அரசு கடந்த 13-ந் தேதி
 குளியல் அறையில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கல்லூரி மாணவி கொலை
கல்லூரி மாணவி தனியார் நிறுவன குளியலறையில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி
 அரசின் முடிவில் மாற்றமில்லை: ப. சிதம்பரம்
டீசல் விலை உயர்வு, நேரடி அன்னிய முதலீடு ஆகிய திட்டங்களை வாபஸ் பெற
 ராஜபக்சேவுக்கு கறுப்பு கொடி காட்ட மத்திய பிரதேசத்திற்கு 15 பஸ்களில் தொண்டர்களுடன் வைகோ பயணம்
இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து, அவருக்கு கறுப்பு கொடி காட்ட, சென்னையில்
 இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்குக் கடத்த முயன்றவர் கைது
இந்திய ராணுவ ரகசியங்களை போட்டோ, வீடியோ எடுத்து அவற்றை சி.டி.யாக தயாரித்து பாகிஸ்தானுக்கு
 ஆருஷி கொலை வழக்கு: நுபுல் தல்வாருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்
டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த டாக்டர் தம்பதிகளான ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார்
 சமையல் எண்ணெய் நிறுவன குடோனில் தீ விபத்து
விருதுநகர் அருகே பிரபல எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாலை பயங்கர
 தொழிலதிபரை கடத்தி அழகியுடன் நிர்வாண வீடியோ எடுத்த கும்பல் கைது
தொழிலதிபரை கடத்தி, நிர்வாண அழகியுடன் நிற்க வைத்து ஆபாச படமெடுத்து மிரட்டிய கும்பல்
 காவிரி ஆணையக் கூட்டம்: டெல்லி செல்கிறார் ஜெ.
காவிரி நதி நீர் ஆணையக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வருகிற 19
 20 ஓவர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: பாக்.கிடம் தோற்றது இந்தியா!
கொழும்பில் இன்று நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பைக்கான பயிற்சி  ஆட்டத்தில் இந்திய
 சவூதியில் பஸ்- டேங்கர் லாரி மோதி தீப்பிடித்தது: இந்தியர்கள் உள்பட 35 பேர் பலி
துபாயின் ஜூபைல் மாகாணத்தில் இன்று பேருந்தும், ஆயில் டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதி
 முத்தக் காட்சியில் நடிக்க மறுக்கும் திரிஷா
திரிஷாவுக்கு முத்தக் காட்சிகளுடன் நிறைய இந்திப்பட வாய்ப்புகள் வருகின்றன. ஏற்கனவே 2010-ல் காட்டா
 ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு: ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு!
ராஜபக்சே இந்தியா வர எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர்  தீக்குளித்த
 பேஸ்புக் மூலம் காதலித்து, இளம் பெண்களிடம் செக்ஸ் மோசடி; டிராவல்ஸ் அதிபர் கைது
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் வாணி. வயது 24. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது
 மினி பஸ் கவிழ்ந்ததில் பைக்கில் வந்தவர் பலி
சென்னை போரூர் அருகே உள்ள காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது 48). இவர்
 மத்திய அரசிலிருந்து விலக மம்தா முடிவு?
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தமது அமைச்சர்களை
 20-ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்
டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் வருகிற 20-ந்தேதி முதல்
 சீனாவில் தொடர்கிறது ஜப்பானுக்கு எதிராக மக்கள் போராட்டம்
சீனாவில் ஜப்பானுக்கு எதிரான மக்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. ஜப்பானியர் நடத்தும்
 நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்
பிரபல காமெடி நடிகர் லூஸ் மோகன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது
 இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற செக்யூரிட்டி நிறுவன அதிகாரி கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னாபுரத்தை சேர்ந்தவர் கீதா (வயது 24). பெயர் மாற்றப்பட்டுள்ளது.
 எஜமானாரின் சமாதியில் 6 ஆண்டு தவம் இருக்கும் செல்ல நாய்
எஜமானருக்கு நாய் நன்றியுள்ள செல்லப்பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை நிரூபிக்கும்
 ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் மாரடைப்பால் மரணம்
ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் மாரடைப்பால் ராய்ப்பூரில் நேற்று மரணம் அடைந்தார்.  ஆர்.எஸ்.எஸ்
 டயர் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் கருகி பலி
மதுரை அருகே டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர்
 பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
பெண்ணுடன் உல்லாசமாக இருந்த தொழிலதிபரை, வீடியோ கேமராவில் படம் பிடித்து, 5 லட்சம்
 டீசல் விலை உயர்வு எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் ரூ.50 வரை உயர்வு
டீசல் விலை உயர்வு எதிரொலியால் ஆம்னி பஸ் கட்டணம் ரூ.30 முதல் ரூ.50
 13 அடி நீள ராஜநாகத்தை அடித்துக்கொன்ற விவசாயி கைது
உலகிலேயே அரிய வகையை சேர்ந்த 13 அடி நீள ராஜநாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே
 டீசல் டேங்கர் லாரி மீது ரயில் இன்ஜின் மோதல்
கொருக்குப்பேட்டையில் ரயில்வே கேட்டை கடந்த டேங்கர் லாரி மீது ரயில் இன்ஜின் மோதியது.

 Lack of sleep can slow you down
If you sleep only for five to six hours, it
 Rebels' Bhupathi, Bopanna get the boot
The All India Tennis Association (AITA) has 'banned' Mahesh Bhupathi
 Now, you can buy gold, silver on mobiles
After enabling purchase of books and clothes among items, as
 CBI to file fresh FIRs in coal scam, grill 'potential witnesses'
The Central Bureau of Investigation (CBI) is preparing to file
 Sensex, Nifty hit 2012 high; aviation, retail rally
After a stunning 4 per cent rally last week on
 Actor 'Power Star' Srinivasan held for fraud
He was arrested on a complaint from G U Balasubramanian,
 Farmer arrested for killing king cobra
A farmer has been arrested for allegedly killing a 13-feet
 Police grill woman for conning elderly
A 35-year-old woman conned an elderly woman and escaped with
 Tamil comedian 'Loose' Mohan passes away
 Tamil comedian 'Loose' Mohan died on Sunday at his residence
 Kudankulam protests: 200 anti-nuclear activists in Tuticorin released
Around 200 anti-nuclear activists in Tuticorin have been released after
  Irish newspaper publishes topless Kate photos
An Irish tabloid has published topless photos of Prince William's
 10-year-old girl chokes on tablet given by school
 In a tragic incident, a 10-year-old student died after a
 Fisherman injured in fall during Idinthakarai 'jal satyagraha' dies
A fisherman from Tsunami Colony in Idinthakarai, who sustained head
 Sundara Pandian' clears hurdles for release
Sasikumar's 'Sundara Pandian' is releasing today in a big way,
 Priya Anand in love with Siddarth
 There is news now that Priya Anand is in love
 Exercise for 30 mins daily, lose weight
Thirty minutes of daily exercise provide an equally effective loss
 Priyanka Chopra, the new rockstar in town
Priyanka Chopra is on the verge of becoming the next
 Hero and Honda slug it out in R&D
A little more than a year after their joint venture
 Deccan Chronicle Holdings rejects PVP Ventures' bid
Deccan Chronicle Holdings has rejected the lone bid, from Potluri
 Five injured in fire after gas cylinder leak in Anna Nagar
 Five people including a six-year-old boy were injured in a
 30-year-old woman murdered by lover-Bangalore
A 30-year-old woman was found murdered, apparently stabbed to death,
 Police arrest six pimps, rescue six women
 Anti-vice squad (AVS) sleuths of city police arrested six pimps
 Sensex surges to 7-month high on diesel price hike, global cues
The Sensex rose more than 2 percent to new seven-month
 Miss World Yukta Mookhey lodges police complaint against her husband
Former Miss World and actress Yukta Mookhey has lodged a
 Students hurt after headmaster thrashes them with cable wire
 Two students sustained injuries when they were thrashed with a
  Student dies after allegedly forced to do 100 sit-ups-Hyderabad
In yet another case of corporal punishment, a class X
 Serving people, Jayalalithaa style
The special scheme ensures supply of free food from 8
 2 women murder their sister-in-law in Punjab
Police today booked two women for alleged murder of their
 Kudankulam protesters begin water protest
Hundreds of protesters, including women and children, waded into the
 Rajinikanth & Ajith to be seen together in Chandramukhi 2?
As we all know, Thala Ajith is busy with his

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger