News Update :
Powered by Blogger.

2012-05-12

Penulis : karthik on Saturday 12 May 2012 | 23:00

Saturday 12 May 2012



ஊறிக் கிடக்கும் முத்தங்களின் எடைஅவள் அதரங்களுக்கு சுமை என்பதால்,என் இதழ்களுக்கு இடம் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.  
ஹொலிவூட் திரைப்பட உலகில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையும் வடிவமைப்பாளருமான கிம் கர்டாஷியனின் முன்னாள் காதலரான நடிகர் ரேய் ஜே அவுஸ்திரேலிய பிரபல நடிகை சோ� ��ிக் மொங் (sophie mong ) குடன், சுகந்த� 
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய அடுத்த இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 10ல், புதிய இடை முகம் (Interface) ஒன்ற� �� வழங்கு கிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும்பாலும், விண்டோஸ் 8 மெட்ரோ இ 
கங்குலியின் சாதனைகள் தொடர்பான "வீட� ��யோவை' இன்டர்நெட்டில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதன் "ஹிட் ரேட்' கொல வெறிப் பாடலை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியின் வெற்றிக் கேப்� 
கலகலப்பு – சினிமா விமர்சனம் -எஸ் ஷங்கர் நடிகர்கள்: விமல், அஞ்சலி, சிவா, ஓவியா, சந்தானம், ஜான் விஜய் ஒளிப்பதிவு: யுகே செந்தில்குமார் இசை: விஜய் எபினேசர் மக்கள் தொடர்பு: ஜான்ஸன் தயாரிப்பு: யுடிவ� 
இனி எல்லா போட்டிகளிலும் சென்னை ஜெயித்தே ஆக வேண்டும்! சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்டிங் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அணியின் கேப்டன் டோனி கூறியிருந்த� 


http://tamil-cininews.blogspot.com<>


<><><><>























<><>
comments | | Read More...

2012-05-12



நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது உங� ��களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!பணம் ம 


More than a Blog Aggregator

by வே.நடனசபாபதி
மதிய உணவுக்குப் பின், வட்டார மேலாளர் திரு மோகன் அவர்களது அறைக்கு சென்றதும்,அவர் என்னை உட்காரச் சொல்லிவிட்டு, 'எப்போது நீங்கள் பணிபுர� ��யும் இடத்திற்கு (அதாவது 'கதக்' கிற்கு) திரும்புகிறீர்க 
கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு – சூப்பர் ஸ்டார் ஹாங்காங் பயணம்!! கோச்ச� �ையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நாளை ஹாங்காங்கில் தொடங்குகிறது. இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க இன்ற� 
இரு இறகுகளுடன் பறவையாக சிறகட ித்து பறந்து திரிந்தாலும் வெளவால்  ஒரு மிருகம் என்றே சொல்கிறார்கள்.மிருகம் பாதி பறவை பாதி கலந்து செய்த உருவம். எனக் கூறலாமா?அதிலும் இது ஒரு பாலூட்டி மிருகம் எ� 


More than a Blog Aggregator

by செந்தழல் ரவி
World of Warcraft is a very complicated game. Since it was released in 2004, three separate expansion packs have been released containing hundreds of quests, dozens of instances, and plenty to do when you reach the level cap. So understandably there have been a lot of guides released to show players how to do all the things available in this game. Most of the guides focus on one of three things – gold making, leveling, or PVP. Many of them do it very well, but they don't seem to cover everything with th 
comments | | Read More...

2012-05-12



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 6 வருடங்கள ாக சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பிரஜையான இலங்கையர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடு� 
ஜெயலலிதா , நவீன் பட்நாயக் சந்திப்பு ! தேசிய அரசியல் வியுகம் !  
தமிழ் தேசிய கூட்டமைப்பில் முரண்பாடு ??மேலும் விவரங்களுக்கு ' காலைக்க� ��ிர் ' 11-மே-2012 இதழை படிக்கவும் Click to launch the full edition in a new windowPublisher Software from YUDU--------- 
ராமேஸ� �வரம் அருகே மீன்பிடி படகு மீது கடலோர காவல்படை கப்பல் மோதியதில் கால்வி என்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பனைச் சேர்ந்த கால்வின் என்ற மீனவர் நடு 


http://tamil-cininews.blogspot.com<>


<><><><>























<><>
comments | | Read More...

ஐபிஎல் போட்டி:நம்பர் 1 அணிக்கு தண்ணி காட்டி சென்னை எளிதில் வெற்றி




ஐபிஎல் 5 தொடரில் இன்றைய போட்டியில் 115 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 15.2 ஓவர்களில் வெற்றிப் பெற்றது. துவக்க வீரர்களான மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய் ஜோடியின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு எளிய வெற்றியை பெற்று தந்தது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கம் முதலே அடுத்தடுத்து விக்க� ��ட்களை இழந்து ரன்களை சேர்க்க தடுமாறியது.

அதிரடி துவக்க வீரர் கேப்டன் ஷேவாக் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரியை அடித்து விட்டு அடுத்த பந்திலேயே போல்டானார். அதன்பிறகு டேவிட் வார்னர்(8), ஓஜா(4), ஜெயவர்த்தனே(8) என்று அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய வேணுகோபால் ராவ் 27 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின� �ன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி வரை தட்டு தடுமாறி ரன்களை சேர்த்த யோகேஷ் நகர் 44 ரன்களை சேர்த்தார். அவருக்கு இர்பான் பதான்(13) ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 114 ரன்களில் சுருண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பென் ஹின்பென்ஹஸ் 3 விக்கெட்களை வீழ்த்தின ார்.

115 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய் ஜோடி மூலம் சிறப்பான துவக்கம் கிடைத்தது. துவக்க வீரர் மைக்கேல் ஹஸ்ஸி 1 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 38 ரன்கள் எடுத்த நிலையில் இர்பான் பதானின் ப� ��்தில் அவுட்டானார். அதன்பிறகு வந்த சுரேஷ் ரெய்னாவுடன் பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த முரளி விஜய் 1 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 48 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். சுரேஷ் ரெய்னா 2 சிக்ஸ் 1 பவுண்டரி அடித்து 28 ரன்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 15.2 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.



comments | | Read More...

நாடாளுமன்றத்தில் நாளை 60-ம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள்




இந்திய நாடாளுமன்றத்தின் அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை நடைபெறுகிறது.< /span>

மக்களவை, மாநிலங்களவை இரண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குக் கேள்வி நேரமின்றி தொடங்குகின்றன. மக்களவையில் அவை முன்னவரான மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "இந்திய நாடாளுமன்றத்தின் அறுபது ஆண்டு பயணம்' என்ற தலைப்பில் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசுவார். அவரைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் தலா ஒரு உறுப்பினர் நாடாளுமன்றத்தின் சிறப்பு குறித்து உரையாற்றுவர்.

மாலை 5.30 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் சிறப்புரையாற்றுகிறார். அவரைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவரும் குடியரச� �த் தலைவருமான ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோரும் உரையாற்றுவர்.

மூத்த உறுப்பினர்களுக்கு சிறப்பு

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ரிஷாங் கெய்சிங் (91), பாஜகவைச் சேர்ந்த ரேஷம் லால் ஜாங்டே ஆகியோர் சிறப்பிக்கப்படுவர். இவர்களில் கெய்சிங் மு� �லாவது மக்களவையிலும் மூன்றாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தவர். தற்போது மாநிலங்களவையின் உறுப்பினர் ஆவார். ஜாங்டே முதலாவது, இரண்டாவது மற்றும் ஒன்பதாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தவர்.

சிறப்பு நாணயங்கள்

நாடாளுமன்றத்தின் அறுபதாம் ஆண்டு விழாவை நினைவு கூரும் வகையில் ரூ. 5, ரூ. 10 நாணயங்களையும் சிறப்பு அஞ்சல் தலையையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வெளியிடுகிறார். இதை� �் தொடர்ந்து, "முதல் மக்களவை', "மக்களவைத் தலைவர்கள்', "60 ஆண்டுகால மக்களவை: ஓர் ஆய்வு' என்ற தலைப்புகளில் எழுதப்பட்ட மூன்று புத்தகங்களைக் குடியரசுத் தலைவர் வெளியிடுகிறார். இதே போல், "பெண் உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க பேச்சு', "மாண்புமிகு மாநிலங்களவைத் தலைவரை வரவேற்கிறோம்', "அறுபது ஆண்டுகால மாநிலங்களவை', "கணினிமயமான மாநிலங்களவை' ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட புத்தகங்களும் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.

மாலையில் சந்தூர் இசை மேதை பண்டிட் சிவசங்கர் சர்மா, சித்தார் கலைஞர் தேவு சௌத்ரி, கர்நாடக இசைப் பாடகர் மகராஜபுரம் ராமச்சந்திரன், பாடகி சுபா முத்கல், இக்பால் ஆகியோரின் கச்சேரி நடைபெறவுள்ளது.



comments | | Read More...

ஜனாதிபதிக்கான வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்: பாரதிய ஜனதா




அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் மே 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
 
தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் வரும் ஜூலை 24 -ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதம் மூன்றாம் வாரத்திலேயே ஜனாதிபதி பதவிக்கான த� ��ர்தல் நடைபெற இருக்கிறது.
 
இதற்காக தேசிய கட்சிகள் அனைத்தும் தங்கள் சார்பில் ஜனாதிபதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளன.
 
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கடைசி செயற்குழுக் கூட்டம் இதுதான். இக்கூட்டத்தின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் ஜனா திபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பு தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் மகாராஷ்டிர பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் மாதவ் பண்டாரி இன்று கூறினார்.
 
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ம� �ன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

மங்காத்தாவை தாண்டிட்டோம் - உதயநிதி உற்சாகம்




மிகப்பெரிய உற்சாகத்தில் இருக்கிறார் ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ உதயநிதி.

இந்தப் படத்தை தியேட்டரில் போய்ப் பார்த்தவர்கள் எண்ணிக்கை மங்காத்தாவைத் தாண்டி விட்டதாம். இதுதான் அவரது உற்சாகத்துக்குக் காரணம்.

உலகம் முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இன்னும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். கிராமப் பகுதிகளில் மட்டும் 5வது வாரத்தில் கொஞ்சம் கூட்டம் குறைந்திருக்கிறது. காரணம், கலகலப்பு வெளியாகியிருப்பதுதான்.

ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருக்கும் உதயநிதி, " ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு வந்து பார்த்தவர்கள் எண்ணிக்கை 'மங்காத்தா' படத்தினை தாண்டி, 'ஏழாம் அறிவு' படத்தினை நெருங்கி கொண்டிருக்கிறது.

படத்தில் எத்தனை பேர் காமெடி செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை.. எத்தனை பேர் பார்த்தார்கள், எவ்வளவு வசூல் ஆனது என்பதே முக்கியம், " என்று கமெண்ட் அடித்துள்ளார்.



comments | | Read More...

ரோகித் சர்மாவின் சரவெடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்




ஐ.பி.எல் போட்டித் தொடரின் 58-வது லீக் ஆட்டம் கொல் கத்தாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
 
கொல்கத்தா அணி இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 8 வெற்றிகளையும், 3 தோல்வி என்ற நிலையில் 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் விளைய� ��டி 7 வெற்றி, 5 தோல்வி என்ற நிலையில் 14 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது.
 
கொல்கத்தா அணியில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய பிரெண்டன் மெக்கல்லம் நீக்கப்பட்டு, சகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் ஹெர்சல் கிப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.  
 
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ஹெர்சல் கிப்ஸ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் களமிறங்கினர். எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் 2  ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இவரையடுத்து கிப்ஸ் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்துள்ளார்.
 
இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 29 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.
இவரையடுத்து கிப்ஸும் அரைசதம் அடித்து அசத்தினார்.
 
கொல்கத்தா வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த ரோகித் சர்மா 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரின் முடிவில் � �ும்பை அணி  ஒரு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 60 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் உள்பட 109 ரன்களும், கிப்ஸ் 58 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் த� �வக்க வீரர்களாக மன்வீந்தர் பிஸ்லாவும் கௌதம் காம்பீரும் களமிறங்கினர். காம்பீர் ரன் ஏதும் எடுக்காமலும், மன்வீந்தர் பிஸ்லா 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களையடுத்து ஜாக் காலீஸும் மனோஜ் திவாரியும் களமிறங்கினர்.
 
திவாரி 27 ரன்களில் ஆட்டமிழக்க, யூசுப் பதான் காலிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செ� �்ல முயன்றனர். ஆனால் மும்பை அணியினரின் பந்து வீச்சால் அது முடியாமல் போனது. சிறப்பாக ஆடிய காலிஸ் 79 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்
 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 155  மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
யூசுப் பதான்  40 ரன்களும் தாஸ் 4 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
அதிரடியாக ஆடி சதமடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.




comments | | Read More...

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு; இந்த ஆண்டு வித்தியாசமான அணுகுமுறை




பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த& nbsp;ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 44 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடந்த முதல் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,033 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன . தேர்வில் கணக்கு பாட தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலையில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே பிட் வழங்கிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் மே 22- ம் த� �தி வெளியாகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை இன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.
 
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 க்கு மேல் வெளியிடப்படும். ஆனால் இந்தாண்டு மதியம் 1.30 மணிக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிட த்தக்கது.
 



comments | | Read More...

கோச்சடையான் படப்பிடிப்பு - ஹாங்காங் பயணமானார் ரஜினி!!




கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்க இன்று காலை விமானத்தில் புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜ� �னிகாந்த்.

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பின் முதல் கட்ட ஷூட்டிங் லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. ரஜினி, தீபிகா படுகோனே, ஆதி நடித்த காட்சிகளை அங்கு படமாக்கப்பட்டன. ஒரு டூயட் பாடலுக்கு ரஜினியும், தீபிகா படுகோனேவும் பரத நாட்டியம் கலந்த புதிய வகை நடனத்தை ஆடினர்.

இப்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு. இந்த முறை ஹாங்காங்கில் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்தப் படப்பிடிப்புக்காக ரஜினி இன்று காலை விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். கதாநாயகி தீபிகா படுகோனேயும் ஹாங்காங் செல்கிறார்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா படப்பிடிப்பை நடத்துகிறார்.



comments | | Read More...

ஐ.பி.எல். ஆர்வத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்கள்




ஐ.பி.எல். கிரிக்கெட் ஜூரம் நாடு முழுவதும் தொற்றி உள்ளது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஐ.பி.எல். போட்டியை டெலிவிசனிலும், மைதானத்திலும் பார்த்து ரசித்து வருகிறார்கள். தம� �ழக எம்.எல்.ஏ.க்களும் ஐ.பி.எல். கிரிக்கெட் ஆர்வத்தில் உள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டத்தை சேப்பாக்கம் மைதானத்தில் நேரிலும் காணும் ஆர்வத்தில் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் எல்லா எம்.எல்.ஏ.க்களும் போட்டியை நேரில் பார்ப்பதற்கான இலவச டிக்கெட் கிடைப்பது இல்லை. 

டிக்கெட் கிடைக்காததால் சில எம் .எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. கூறும் போது, நான் கடந்த ஒரு வாரமாக ஐ.பி.எல். டிக்கெட் கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கு எந்தவித டிக்கெட்டும் தரவில்லை என்றார். 

மற்றொரு எம்.எல்.ஏ. கூறும்போது, எனது மகன் என்னிடம் டிக்கெட் கேட்டு நெருக்கடி கொடுக்கிறான். நான் அவனுக்கு சென்னை அணியின் டி ஷர்ட் மட்டுமே வாங்கி கொடுக்க முட� ��ந்தது. ஆனால் என்னால் டிக்கெட் வாங்க முடியவில்லை என்றார். 

டிக்கெட் கிடைத்த ஒரு எம்.எல்.ஏ. கூறும்போது, நான் அதிர்ஷ்டசாலி. நண்பர்கள் மூலம் எனக்கு டிக்கெட் கிடைத்தது. எனது குடும்பத்தினருடன் போட்டியை ரசித்தேன். சில எம்.எல்.ஏ.க்கள் டிக்கெட்டுக்காக பணம் செலவழிக்கவும் தயராக உள்ளனர்.




comments | | Read More...

பிலிப்பைன்ஸூடன் போரா? - சீனா மறுப்பு




தென்சீனக் கடலில் ஹூவாங்யன் தீவுக்கு யாருக்கு உரிமையானது என்ற பிரச்சனையில் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் போருக்கு த யாராகிவருவதாக வெளியான செய்திகளை சீனா மறுத்துள்ளது.

தென்சீனக் கடலில் பல நூறு சிறு சிறு தீவுகள் உள்ளன. எண்ணெய்வளமிக்க பகுதி என்பதால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. ஆனால் சீனாவோ ஒட்டுமொத்த தென்சீனக் கடலுமே தங்களுக்கு மட்டுமே சொந்தம் என அடம்பிடித்து வருகிறது.

அண்மையில் இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையேயான மோதல் விஸ்வரூபமெடுத்தது. ஹூவாங்யன் தீவு அருகே சீனாவின் படகுகளை பிலிப்பைன்ஸ் தடுப்பதும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் படகில் சீனா சோதனையிடுவதும் என விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருந்தது.

மேலும் பிலிப்பைன்ஸின் சீனாவுக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. இருநாட்டு போர்க் கப்பல்களும் கடந்த மாதம் ஏப்ரல் 8-ந் தேதி முதல் ஹூவாங்யன் தீவுப் பகுதியில் முகாமிட்டிருக்கின்றன. சீனாவோ பிலிப்பைன்ஸுக்கு எதிராக முழுமையான பொருளாதாரத் தடையை விதித்திருக்கி றது. அந்நாட்டுக்கு சுற்றுலாவுக்கு எவரும் செல்லக் கூடாது. அந்நாட்டில்லிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யக் கூடாது என்றும் சீனா தடை விதித்திருக்கிறது. பிலிப்பைன்ஸைப் பொருத்தவரையில் சீனா 3-வது முக்கிய வர்த்தக உறவில் உள்ள நாடு. இதனால் பிலிப்பைன்ஸ் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்த பிரச்சனையை எடுத்துச் செல்லப் போவதாகவும் தமக் கு ஆதரவாக சர்வதேச நாடுகளை திரட்டப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளித்து வருகிறது. பிலிப்பைன்ஸ்- சீனா இடையே மோதல் நிலை இருந்தபோது அமெரிக்க கடற்படை அதே கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியை பிலிப்பைன்ஸூடன் நடத்தியிருந்தது. இந்தியாவும் பிலிப்பைன்ஸின் நிலைப்பாட்ட� � ஆதரிக்கும் வகையில் தென்சீனக் கடல் உலகின் பொதுச்சொத்து என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸூடன் ஒரு முழுமையான போருக்கு சீனா தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் சீன பாதுகாப்பு அமைச்சகம் இதனை முற்றாக மறுத்துள்ளது.



comments | | Read More...

ஓமன் அருகே 11 இந்தியர்களுடன் எண்ணை கப்பல் கடத்தல்




லைபீரியா நாட்டின் எண்ணைக் கப்பலான ஸ்மிர்னி, 1.35,000 டன் எண்ணையோடு சோமாலியா சென்று கொண்டிருந்தது. தனது இரண்டாவது பயணத்தை தொடங்கி சென்று கொண்டிருந்த இந்த கப்பலில் இந்தியர்களும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களுமாக மொத்தம் 15 பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள் ஆவர்.

இந்த கப்பல் ஓமன் நாட்டுக்கு அருகே வந்த போது சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன. அங்குள்ள நேரப்படி பகல் 11.50 மணியளவில் கப்பலில் இருந்து வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கப்பலின் நிறுவனம் கூறியுள்ளது.

அந்த பகுதியில் வரும் கப்பல்களை அங்குள்ள கடல் கொள்ளைக்காரர்கள் கப்பலை கடத்தி பல மில்லியன் டாலர்கள் பெறுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனை‌ ‌தொடர்ந்து கடத்தப்பட்டவர்களையும் கப்பலையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.< /div>

இந்நிலையில், சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை அடக்குவதற்கு இந்தியா, இ ங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து கூட்டுப்பாதுகாப்பு ரோந்துப் படையை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger