News Update :
Powered by Blogger.

ஜாதிக்கட்சி தலைவர் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்தது ஏன்?: விஜயகாந்த் கேள்வி

Penulis : karthik on Friday 30 September 2011 | 20:32

Friday 30 September 2011

 
 
 
இந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவை நம்பி ஒரு வாய்ப்பு கொடுங்கள். மக்களே...மக்களே.... உங்களை நாங்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்து பேசுகையில், எனது சொந்தப் பணத்தில் இருந்த் மக்க்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். இனிமேலும் அதை தொடர்ந்து செய்வேன்.
 
எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் இந்த பணியை தொடர்ந்து செய்வார்கள்.
 
தேமுதிக சார்பில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் உங்களுக்கு உண்மையாக இருந்து செயல்படுவார்கள். யாரிடமும் லஞ்சம் வாங்கமாட்டார்கள். நேர்மையான நிர்வாகத்தை கொடுப்பார்கள். அவர்கள் தவறு செய்தால் நானே தட்டிக்கேட்பேன்.
 
மக்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். இப்போது மக்கள் மீது உள்ள நம்பிக்கையால் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறோம்.
 
நான் மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எங்கள் கூட்டணி எப்போதும் தெய்வத்தோடும் மக்களோடும்தான். இந்த உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவை நம்பி ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
 
ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மக்களே...மக்களே.... உங்களை நாங்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவோம் என்றார்.
 
பின்னர் பெரம்பலூரில் அவர் பேசுகையில், சேலம் மாநாட்டில் கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தேன். இப்போதும் மக்களோடுதான் கூட்டணி அமைத்து உள்ளேன். இப்போது தேமுதிகவை நம்பி 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் வந்துள்ளன.
 
மக்களுக்காக போராடும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமையாகும். தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத இடத்தில்தான் புரட்சி உருவாகும்.
 
ஜாதிக் கட்சிகள் இன்று திராவிடக் கட்சிகளோடு இணைந்து பணம் சம்பாதித்து விட்டு, தேசிய கட்சிகள் தேவை இல்லை என்று கூறுகின்றன.
 
அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கூறும் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் தனது கட்சியிலேயே டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை என்றார்.
 
இதையடுத்து அரியலூரில் அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். இதில் சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டால் அதை நான் பார்த்து கொள்கிறேன்.
 
மக்கள் மாறி மாறி குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களித்தது போதும். மாற்றத்தை ஏற்படுத்த தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.
 
ஒரு பைசா கூட எடுக்கமாட்டோம்-பிரேமலதா:
 
இந் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திறந்தவேனில் நின்று பேசுகையில்,
 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஊழலை ஒழிப்போம் என்று முழக்கமிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு மக்களாகிய நீங்கள் அமோக ஆதரவு அளித்தீர்கள். இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
 
தேர்தலில் தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பளித்தால் ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை தருவோம், மக்களுக்கு சிறப்பான சேவை செய்வோம். அனைத்துப் பகுதிகளிலும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம்.
 
உள்ளாட்சித் தேர்தல் என்பது சாதாரண தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்தால்தான் ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை தர முடியும். உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை கொண்டு செயல்படுகின்றன. இதில் ஒரு பைசா கூட வீணாக செலவழிக்கப்படக் கூடாது. தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசாவை கூட அவர்கள் எடுக்க மாட்டார்கள் என்றார்.
 
பரமக்குடி துப்பாக்கிச் சூடு-சிபிஐ விசாரணையை தேமுதிக ஏற்கும்:
 
இந் நிலையில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்ற கோரிக்கையை முழு மனதுடன் தேமுதிக ஏற்கும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது சம்பந்தமாக நான் சட்டமன்றத்தில் பேசியதை ஒரு சில எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றன.
 
இன்று நீதி விசாரணை வேண்டாம், சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று வைக்கப்படும் கோரிக்கை அவர்களுக்கு மன நிறைவு அளிக்குமானால் அந்த கோரிக்கையையும் முழு மனதுடன் தேமுதிக ஏற்று கொள்கிறது என்று கூறியுள்ளார்.



comments | | Read More...

காதலியை,உறவுகளை புரிந்துகொள்ள கஷ்டமா இருக்கா?

 
 
காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும்பிளவுகள் இல்லாதஉறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமானகுழப்பம் இல்லாத உறவுகளுக்குமற்றவரை புரிந்து கொள்வதுதான்தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாகஉணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்குஉற்றதுணையாக இருப்பார்.
 
காதலர்கள்,தம்பதிகள் ஒருவரைஒருவர் புரிந்துகொண்டால்குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாகபணி செய்வார்.மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள்கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றிமற்றவருக்கு உணர்த்தவார்த்தைகளையும்,அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே,அவரைஉற்றுநோக்கவேண்டும்,சொல்வதை கவனமாக கேட்கவேண்டும்,அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாகபார்க்கலாம்.
 
உண்மையை உணர்த்தும் உடல்மொழி !
 
படிப்பெதுவும் தேவையில்லை.கண்களைஉற்று கவனியுங்கள்.உங்களுக்குஎல்லாவற்றையும் சொல்லிவிடும்.அவரதுகைகள்,கால்கள்,முகபாவம்என்னசொல்கிறது என்பதை பொறுமையாககவனியுங்கள்.ஒருவரை பார்த்தவுடன் சோகமாகஇருப்பதை,கோபமாக இருப்பதைநம்மால் சொல்லமுடியும்தானே!அசட்டுச்சிரிப்பா?சந்தோஷ சிரிப்பா?சோக சிரிப்பா?என்பதை உணர உங்களால்முடியும்.சில நேரங்களில்யாரையோஏன் டென்ஷனாகஇருக்கிறீர்கள்?என்றுகேட்டிருக்கிறீர்கள்.அது எப்படிஉங்களுக்கு தெரிந்தது?இன்னும் இன்னும்கவனம் செலுத்துங்கள்.ஒருவரதுஉணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.சரியான எதிர்வினையும் உங்களிடம் உருவாகும்.
 
கவனமாக கேளுங்கள் :
 
உடல் மொழிகளுக்கு அடுத்து ஒருவரதுவார்த்தைகள்தான் அவரை நமக்கு உணர்த்துகிறது. வார்த்தைகளில் உள்ள உணர்ச்சியைஅடையாளம் காணுங்கள்.அதற்குஏற்றவாறு சரியான வார்த்தைகளை நீங்கள்வெளிப்படுத்துங்கள்.ஒருவர் துக்ககரமான வார்த்தைகளை பேசும்போதுநீங்கள் சிரிக்கமாட்டீர்கள் இல்லையா?
 
ஒருவர் எப்படி உணர்கிறார்?
 
ஒரே சம்பவம்உங்களிடத்திலும்,உங்கள்நண்பரிடத்திலும் ஒரே உணச்சியைத்தான்தோற்றுவிக்கும் என்பதுநிச்சயமல்ல!இருவருக்கும் வேறுவேறுநம்பிக்கைகள்,கொள்கைகள் உள்ளன.எனவே,அவரது உணர்வுகளைகவனியுங்கள்,அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்களுக்குசாதாரணமாக தோன்றும் ஒரு விஷயம் அவரிடம் கொந்தளிப்பைஏற்படுத்தலாம்.நீங்கள் புரிந்து கொண்ட அந்த உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.ஆங்கிலத்தில்Empathy என்றொருசொல் இருக்கிறது.நீங்கள்உணர்வதையே நானும் உணர்வது.கொஞ்சம்அக்கறையும்,மனிதநேயமும்இருந்தால் சாத்தியம்தான்.இருவரும் ஒரே மாதிரி உணர்ந்தால்குழப்பத்துக்கும்,பிளவுக்கும்அங்கே என்ன வேலை?
 
மேலும் சில துளிகள் ..............
  • ஆம்.கண்களை கவனிக்கவும்.
  • கவனமாக கேட்கவும்
  • அவரும் உங்களைப்போல மனிதர்தான்.
  • ஒவ்வொருவருக்கும் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன.
  • உணர்வுகளை கண்டறியுங்கள்
  • ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.முயற்சி செய்யுங்கள்.மதிப்பு மிக்க உறவுகள் உங்களுக்குகிடைக்கும்.அமைதியும்,சந்தோஷமும்உங்கள் வாழ்வில் நிலை பெறும்.(தலைப்பு மாற்றப்பட்ட மீள்பதிவு)
comments | | Read More...

Kungumam 03-10-2011 (Download Tamil Magazine)


Kungumam 03-10-2011 (Download Tamil Magazine)

Kungumam 03-10-11

comments | | Read More...

கிருஷ்ணகிரிய எதுக்கு கிழிக்கணும் பதிவர்களே?

 
கிருஷ்ணகிரியைஆளாளுக்கு கிழித்து தள்ளுகிறார்கள்.கிழிந்துபோய் மழை பெய்தால் வீடு,ரோடு என்றுஎல்லா இட்த்திலும் விழுகிறது.இங்கே சிறு பையனைக்கூட ஏமாற்ற முடியாது.ஸ்கூட்டர்எப்படி ஓடுகிறது என்று கேட்டுப்பாருங்கள்''டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்''என்று தெளிவாக பதில்வரும்.

உலகமறிந்தரஜினிகாந்த்,ராஜாஜி எல்லாம் இந்த மாவட்ட்த்தில் பிறந்தவர்கள்.ரஜினிகாந்தின் அண்ணனைஅடிக்கடி இங்கே பார்த்திருக்கிறேன்.இங்கே விளையும் மாம்பழத்தை சுவைக்காத உலகநாடுகள் குறைவு.கிரானைட் கற்களையும் நாடுகள் பார்த்திருக்கின்றன.பெரும்பாலானநாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி ஆகிறது.

மற்ற மாவட்டங்களைஒப்பிடும்போது இங்கே சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கும்.பெங்களூருக்கு அருகில்இருக்கிறது.ஓசூர் நிறைய பேருக்கு தெரியும்.தொழில் நகரம்.எல்லா மாவட்ட்த்துஆட்களையும்,மாநிலத்து ஆட்களையும்,வெளிநாட்டினரையும் இங்கே பார்க்க முடியும்.

ஓசூருக்கு அருகில்தளி என்ற ஊர் இருக்கிறது.தொகுதியும் கூட!"லிட்டில் இங்கிலாந்து" என்று சொல்வார்கள்.பெரும்பாலான வீடுகளில் மின்விசிறியை பார்க்க முடியாது.இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப நிலைதான்இங்கும்.காய்கறி,கீரைகள் அதிகம் பயிரிடுவார்கள்.விலையும் மிக குறைவு.ஃப்ரெஷ்ஷாகஇருக்கும்.

பணிபுரிபவர்கள்யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை.பெரும்பான்மையானவர்கள் தெலுங்கு,கன்னடம் பேசும்மக்கள்.அதனால் தேசியக் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம்.இப்போது இருப்பவர்கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.இங்கே தோழர்கள் அதிகம்.தமிழ் ஓரளவு பேசுவார்கள்.உங்களுக்குஎன்ன வேண்டும் என்று கேட்டால்" என் பேர் சிக்கம்மா! என்பார்கள்.

யானைகள் அடிக்கடிகிராமத்திற்கு வந்து பீதியூட்டுவது இம்மாவட்ட்த்தில் அதிகம்.பாம்புகளும்அதிகம்.சென்ற மாதம் மியூஸியத்தில் பாம்பு படக் கண்காட்சி வைத்திருந்தார்கள்.போய்பார்த்தேன்.இத்தனை வகை பாம்புகளா? மலைப்பாம்பு கூட கிராமப்புறத்திற்குவருவதுண்டு.கறி சமைத்து சாப்பிடுவதை நாளிதழில் செய்தியாக போட்டார்கள்.

5 தேசியநெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரியை தொட்டுச்செல்கின்றன.விபத்துகளும் அதிகம் நடக்கின்றன.இன்றையமுதல்வர் போட்டியிட்டு வெற்றியும் தோல்வியும் பெற்ற பர்கூர் தொகுதிகிருஷ்ணகிரியில் இருக்கிறது.வாழப்பாடி ராம்மூர்த்தி,இ.வி.கே.எஸ் இளங்கோவன் எல்லாம்இங்கே போட்டியிட்டவர்கள்.

டி.ராஜேந்தர்எதிர்த்து போட்டியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.சைக்கிள் சின்னம் கேட்டுகொடுக்காமல் ரயில் எஞ்சின் சின்னம் கொடுத்தார்கள்.அப்போது கிருஷ்ணகிரி மாவட்டமாகபிரிக்கப்படவில்லை.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமளிதுமளிப் பட்ட்து.சிங்கத்தின்கர்ஜனையை அப்போது நேரில் பார்த்தேன்.

கிருஷ்ணகிரிஅணை இருக்கிறது.நான் ஃப்ரெஷ் மீன் சாப்பிட செல்வது வழக்கம்.விஜய்,அவரது தந்தைக்கு காவேரிப்பட்டிணம்அருகில் உள்ள கோயில் விருப்பமானது.எஸ்.ஏ.சந்திரசேகர் அடிக்கடி வருவதுண்டு.அழகிபடம் எடுத்த உதயகுமார் இந்த ஊரைச்சேர்ந்தவர்.மிக இளைய மாவட்டம்.ஆனால் பதிவுலகில்கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.அவ்வ்வ்வ்வ்வ்வ்......
comments | | Read More...

காங்கிரஸ் அரசியல் ரொம்பப் புதுசா இருக்கே!

 
 
எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இப்படி 'குப்பாங்கோ கும்மாங்கோ' வேலைகள் நடந்ததாக நமக்கு நினைவில்லை. உள்ளாட்சித் தேர்தலி்ல தனியாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, வேட்பு மனு தாக்கல் முடியும் வரை தனது வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடாமல் ஊத்தி மூடி, தொண்டர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தி விட்டது.
 
உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கட்சிகள் அனைத்துமே கிட்டத்தட்ட தனியாக போட்டியிடுகின்றன. தேமுதிக ஒரு கூட்டணியை அமைத்து களம் காண்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்டவை தனியாக போட்டியிடுகின்றன. தனித்துப் போட்டியிடும் கட்சிகளில் ஒன்று காங்கிரஸ்.
 
இந்தக் கட்சி சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 13 பேரைக் கொண்ட பிரமாண்டக் குழுவை அமைத்தனர். அவர்களும் 2 முறை கூடி தீவிரமாக ஆலோசித்தனர். பின்னர் தங்கபாலு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். ஆனால் முழுமையான வேட்பாளர் பட்டியலை தங்கபாலு வெளியிடவில்லை என்று காங்கிரஸார் குற்றம் சாட்டுகின்றனர். ஒப்புக்குச் சில பதவிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்து விட்டு காங்கிரஸ் மேலிடம் கப்சிப் ஆகி விட்டதாம்.
 
இதனால் நாம் எங்கு போட்டியிடுகிறோம் என்பது தெரியாமல் காங்கிரஸார் பெரும் குழப்பமாகி விட்டனர்.
 
கோவை, திருப்பூர், சேலம் மாநகராட்சிகளின் மேயர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கான வேட்பாளர்கள் புதன்கிழமை இரவு வரை வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.
 
இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் காங்கிரஸாரும், நிர்வாகிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த நிலையில், சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஆர். விஜயவர்மன், திருப்பூர் மேயர் வேட்பாளராக டி.டி.கே. சித்திக் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
 
அதேபோல நேற்று மத்தியானம்தான் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதன் பிறகு அவர்கள் அரக்கப் பறக்க அடித்துப் பிடித்துக் கொண்டு போய் மனுத் தாக்கல் செய்தனர்.
 
ஆனால் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு கடைசிவரையிலும் யாரையும் அறிவிக்கவில்லை காங்கிரஸ். இதனால் சின்னையன் மற்றும் பச்சமுத்து ஆகிய இருவரும் காங்கிரஸ் வேட்பாளர்கள் என்று கூறி மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
இதில் யார் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. கட்சியினருக்கும் புரியவில்லை.
 
இதுகுறித்து மாநில நிர்வாகிகளிடம் சிலர் கேட்டபோது அதெல்லாம் மாவட்டத் தலைவர்களுக்கு அனுப்பியாச்சே என்று பதில் வந்ததாம்.
 
ஆனால் தற்போதைய நிலவரப்படி பல முக்கிய இடங்களில் யார் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்றே தெரியாத நிலைதான் காணப்படுகிறது.
 
காங்கிரஸ் நிலைமையைப் பார்க்கும்போது, 'போன் வயர் அந்து போய் நாலு நாளாச்சு' என்ற கவுண்டமணி பட காமெடிதான் நினைவுக்கு வருகிறது.



comments | | Read More...

என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- சிபிஐக்கு ராசா கேள்வி

 
 
என் மீதான விசாரணை முடிந்து விட்டதா, இல்லையா என்பதை சிபிஐ தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஐக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய புகார்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
 
மேலும் அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக தன் மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள புதிய குற்றச்சாட்டை தனியாக விசாரிக்குமாறும் ராசா கோரியுள்ளார்.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராசா. அவர் மீது கடந்த வாரம் திடீரென புதிய புகார்களை சுமத்தியது சிபிஐ. அமைச்சர் பதவி வகித்த ராசா அரசு ஊழியர் என்ற வகையில் வருவதால் அவர் மீது நம்பி்க்கை மோசடி குற்றத்தை சாட்டியுள்ளது சிபிஐ.
 
இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) பிரிவு 409-ன் கீழ் இந்த புதிய குற்றச்சாடடை சிபிஐ சுமத்தியுள்ளது. இதற்கு முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமே 7 ஆண்டுகள் வரைதான் சிறை தண்டனை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந் நிலையில் இப்போது கூறப்பட்டுள்ள இந்த புதிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராசாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராசாவின் ஆட்சேபனை குறித்து அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ கூறும்போது ராசா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி முடித்து விட்டதாக கூறியது. ஆனால் தற்போது ராசா மீது புதிய புகார்களைக் கூறியுள்ளது சிபிஐ. நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்து விட்டன. அடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில் சிபிஐ புதிய புகார்களை கூறியிருப்பது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என்றுதான் கருதப்பட வேண்டியுள்ளது.
 
பழைய குற்றச்சாட்டுகளுடன் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டையும் இணைத்தால், பழைய வழக்குகளில் ஜாமீன் பெறுவதில் கூட காலதாமதம் ஆகும். இதனால் இந்த புதிய குற்றச்சாட்டை தனியாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
 
மேலும் தனது விசாரணையை முடித்து விட்டதாக சிபிஐ கூறும் வரை யாருக்கும் ஜாமீன் கிடைக்க வழியில்லை. எனவே சிபிஐ தனது விசாரணை முடிந்து விட்டதா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் தனது தரப்பு வாதத்தை கோர்ட்டில் தெரிவிக்கப் போவதாக ராசா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் நானும் விசாரணை முடிந்த பின்னரே இந்த வழக்கில் ஆஜராகப் போகிறேன் என்றார் சுஷில் குமார்.



comments | | Read More...

மதுரை மேயர் தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போன' பாமக!

 
 
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த பாமக திடீரென பின்வாங்கிவிட்டது.
 
இந்தப் பதவிக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
 
அத் போல பாமக சார்பில் மதுரை மேயர் பதவிக்கு ரமேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருந்தார்.
 
ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம் மதுரை மேயர் போட்டியிலிருந்து பாமக சொல்லாமல் கொள்ளாமல் விலகியுள்ளது.
 
ஊ....... சங்கு ஊதியபடி வந்து மனு செய்த அதிமுக பிரமுகர்:
 
இந் நிலையில் மதுரை மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் அதிமுகவில் சீட் கேட்டிருந்தார் அக் கட்சியைச் சேர்ந்த கைலாசம் (58). ஆனால், அவருக்கு சீட் தராமல் இப்போதைய கவுன்சிலரான முத்துசாமியின் மனைவி அங்காயிக்கு கட்சி சீட் தந்துவிட்டது.
 
இதனால் கடுப்பான கைலாசம் நேற்று வெள்ளை கொடியுடன், சங்கு ஊதி, துடும்பு அடித்துக் கொண்டு மனு தாக்கல் செய்ய வந்தார்.
 
சிறையில் இருக்கும் பாரப்பட்டி சுரேசுக்காக மனைவி வேட்பு மனு தாக்கல்:
 
இந் நிலையில் சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், 17வது வார்டு கவுன்சிலராக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் சுரேஷ்குமார் உள்ளார். இவர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார். தற்போது நிலஅபகரிப்பு வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் உள்ளார்.
 
இந் நிலையில் அவருக்கே திமுக மீண்டும் சீட் வழங்கியுள்ளது. இதையடுத்து சுரேஷ்குமார் சார்பில், அவரது மனைவி டாக்டர் ஷாலினி வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
அமைச்சர்களை முற்றுகையிட்ட அதிமுகவினர்:
 
இந் நிலையில் திருச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோரை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதிமுக மாவட்டச் செயலாளர் மனோகரன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கியுள்ளதாகவும் அதை அதிமுக தலைமை ஏற்று சீட் ஒதுக்கிவிட்டு, உண்மையான தொண்டர்களை புறக்கணித்துவிட்டதாகவும் ஆவேசமாகக் கூறினர்.



comments | | Read More...

2ஜி கடித விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் சமரசம்!

 
 
2ஜி விவகாரம் தொடர்பான நிதியமைச்சக கடிதத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் என்னுடைய கருத்தல்ல. அது பல்வேறு அமைச்சகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்தாகும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இதை ஏற்பதாகவும், பிரச்சினை முடிந்ததாகவும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம் சாட்டுவது போல ஒரு கடிதம் மத்திய நிதியமைச்சகத்திலிருந்து பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றது. இதையடுத்து மத்திய அமைச்சர்களுக்குள் மோதல் மூண்டது. நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்று சோனியாவிடம் போனார் ப.சிதம்பரம். கடிதத்துடன் தனக்குச் சம்பந்தம் இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி. இறுதியில் சோனியா காந்தி, இருவரையும் அழைத்துப் பேசினார். நேற்றும் சுமார் 2 மணி நேரம் பிரணாப் முகர்ஜியுடன் பேசினார்.
 
இதையடுத்து நேற்று மாலை ப.சிதம்பரத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரணாப். அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.அப்போது பிரணாப் முகர்ஜி ஒரு அறிக்கையை வாசித்தார்.
 
அதில், 2011, ஜனவரி மாதத்தில் மீடியாக்களில் 2ஜி விவகாரம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சகம் தயாரித்த அறிக்கை என்பது பல்வேறு அமைச்சகங்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பாகும் என்று விளக்க விரும்புகிறேன். அதில் உள்ள கருத்துக்கள் என்னுடைய கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்றார் பிரணாப்.
 
இதையடுத்து அருகில் இருந்த ப.சிதம்பரம் பேசுகையில், அமைச்சரவையில் மதிப்பு வாய்ந்த, மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜியின் அறிக்கையை நான் ஏற்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரம் இத்துடன் முடிந்தது என்றார்.
 
நேற்று பிற்பகல் பிரணாபை அழைத்துப் பேசிய சோனியா காந்தி, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களது தரப்பிலிருந்து பகிரங்க விளக்கம் வெளியானால்தான் ப.சிதம்பரம் சமாதானமாவார். இந்த விவகாரத்தை விட முக்கியமானதாக, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. எனவே இந்தக் கடித விவகாரத்தை இன்றைக்குள் மூடி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம். இதையடுத்தே ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசிய பிரணாப் பின்னர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.



comments | | Read More...

அத்வானி யாத்திரை குறித்து பாஜக ஆலோசனை- மோடி வர மாட்டார் பாஜகவி

 
 
 
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்குகிறது. இதில் அத்வானி மேற்கொள்ளவுள்ள ஊழலுக்கு எதிரான யாத்திரை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார்.
 
இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெறும் இக்கூ்டடத்தில், அத்வானியின் ரத யாத்திரைதான் முக்கியப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஊழலுக்கு எதிராக தான் தேசிய யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அத்வானி அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
 
மேலும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வங்கதேசத்துடன் இந்தியா செய்து கொண்ட எல்லைப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தமும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
 
இந்த முக்கியமான கூட்டத்தில் அத்வானியின் கடும் போட்டியாளராக பார்க்கப்படும் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார். நவராத்திரி விழாவையொட்டி அவர் 9 நாட்களுக்கு விரதம் இருப்பதால் அவர் குஜராத்தை விட்டு வெளியேற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் பாஜக வட்டாரத்தில் குழப்பம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில், நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் நவராத்திரி உள்ளிட்டவை தொடர்பாக அவரால் வர முடியாத நிலை காணப்படுகிறது என்றார்.
 
உண்மையில் அத்வானி ரத யாத்திரை தொடர்பான விவாதத்தில் பங்கேற்க மோடி விரும்பவில்லை என்று கூறப்பபடுகிறது. அத்வானி ரத யாத்திரை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே 3 நாள் அதிரடி உண்ணாவிரதத்தை அறிவித்து நாட்டின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விட்டார் மோடி என்பது நினைவிருக்கலாம். அத்வானியின் யாத்திரை அறிவிபப்பை மோடியின் உண்ணாவிரதம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. இதனால் அத்வானிக்கே கூட அதிருப்திதான் என்று பாஜக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.
 
இந்த உண்ணாவிரத வெற்றியால் கவரப்பட்ட மோடி, குஜராத் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு வருகிறார்.
 
குஜராத்தில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். 9 நாள் நவராத்திரி விழாவை அகமதாபாத்தில் 17 நாடுகளின் துணைத் தூதர்கள் முன்னிலையில் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழா, குஜராத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறச் செய்யும் முக்கிய விழா என்றும் அப்போது அவர் கூறினார். எனவே பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிச்சயம் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
 
 


comments | | Read More...

பதிவுலகமும் ஆபாசமும்

Penulis : karthik on Thursday 29 September 2011 | 20:09

Thursday 29 September 2011

 
 
யாரோ புதியபதிவராம்.ஐடியா மணி என்று பெயர்.அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால்என்னை ''நீங்க நல்லா இருக்கணும் சண்முகவேல் சார்" என்று சொல்வாரா? நிரூபன் என்னை தன் பதிவில்அறிமுகப்படுத்திய பதிவில் அவர் சொன்னது.ஆண்டாள் பாசுரங்களையெல்லாம் விமர்சித்துஒரு பதிவு எழுதி விட்டார்.வழக்கமாக பதிவுகளில் இம்மாதிரி பார்க்கும்போது நான்விமர்சிப்பதில்லை.இவர் நல்ல ஆளாச்சே! ஏதோ சகவாசதோஷம் என்று எதிர்பதிவு எழுதுவதாகசொல்லிவிட்டேன்.
 
கவர்ச்சி,ஆபாசம் என்று பதிவுலகில் காரசாரமாக தனக்குத் தெரிந்த்தைஎழுதி வருகிறார்கள்.ஆபாசம் என்றால் என்ன என்பது பற்றி முன்பே பதிவில் குறிப்பிட்டுவிட்டேன். வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வைஏற்படுத்தினால் அது ஆபாசம்.
 
சினிமாக்களில் கற்பழிப்புகாட்சி இடம்பெறுவதுண்டு.பல திரைப்படங்களிலும் அதன் நோக்கம் ஆபாசம்தான்.சினிமாவைசிறந்த கலையாக கையாளும் இயக்குனர்கள் படங்களில் கற்பழிப்பு காட்சி இருக்கும்.ஆனால்அக்காட்சி பரிதாபத்தையும்,பாதிக்கப்படும் பெண்ணின் மீது பரிவையும் தூண்டுமே தவிரகிளர்ச்சியைத்தருவதில்லை.
 
ஆண்டாளின் பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியைதூண்டாது,ஆண்டாள் பாசுரம் பக்தி இலக்கியம்.இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம்வேறு.முன்பேகுறிப்பிட்ட்து போல இலக்கியம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன்தகுதி தீர்மானிக்கப்படுகிறது.உலகின் சில திரைப்படங்களும்,நாவல்களும் ஆபாசம் என்று தடை செய்யப்பட்டு கலை,இலக்கியத்தகுதி காரணமாக தடை நீக்கப்பட்ட்துண்டு.
 
மணி எதற்காக ஆண்டாளைப் பற்றி விமர்சிக்கிறார்? ஏன் கில்மா பதிவுகளைபெண்களிடம் எதிர்பார்க்கிறார்? இந்த பதிவின் நோக்கமென்ன? இன்று கலாச்சார காவலர்களைவிமர்சிப்பவர்கள் யார்? அவர்களின் நோக்கமென்ன? பெண்களுக்கு சப்போர்ட் செய்து ஹீரோஆகலாம் என்று பார்க்கிறீர்களா என்பது ஏன்?
 
பெண்களுக்கு சப்போர்ட் செய்து எழுதி விட்டால் ஹீரோ ஆகிவிடலாம் என்பதுஉண்மையா? அப்படி யாராவது மணிரத்னம் பட்த்துக்கோ,தங்கர் பச்சான் பட்த்துக்கோ ஹீரோஆகி இருக்கிறார்களா? நான் பல பதிவுகளை அப்படி எழுதியதுண்டு.அடுத்த சிலபதிவுகளுக்கு ஹிட்ஸ் குறையுமே தவிர ஹீரோ மட்டும் ஆகவில்லை.ஆனாலும் எழுதுவதைதவிர்க்க முடியாது.அது பாரதியிடமிருந்து பெற்ற மதிப்பீடு!
 
கில்மா என்பது கவர்ச்சிப்பட்த்தை குறிக்கிறதா? அரைநிர்வாண பட்த்தைகுறிக்கிறதா? எனக்கு தெரியாது.கவர்ச்சி உணர்வுகளைத் தூண்டும் என்று பிரபல பதிவர் நிரூபன்சொல்கிறார்.அப்படியானால் ஆபாசம்தானே! ஆபாச பதிவுகள் என்ன நோக்கத்திற்காகபதிவுலகில் எழுதப்படுகிறது.ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் கலாச்சார காவலர்கள் என்றால்அதை தூக்கிப்பிடிப்பவர்கள் கலாச்சாரம் இல்லாத ஆட்களா?
 
ஆபாச சொற்களை எழுதுவதில்,வரைவதில்ஆர்வம் உள்ளவர்களை கோப்ரோலாலியா(Corprolalia) என்று சொல்வார்கள்.சில முற்றியமனநோய்களிலும்,முதிர்ச்சி அடையாதவர்களிடமும் இந்நிலை இருக்கும்.இவர்கள்ஆலோசனையும்,சிகிச்சையும் பெறவேண்டியவர்கள்.
 
பெண்கள் சிக்ஸ்பேக்கைவிரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? விரும்பினால்தானே அதைப்பற்றி எழுதமுடியும்?ஆண்களைப்போல பெண்கள் உடலைப்பார்ப்பதில்லை என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.தாமரைபட்த்தின் காட்சிக்குத் தகுந்தவாறு பாடல் எழுதலாம்.பதிவர்கள் அதை செய்யுங்கள்,இதை எழுதுங்கள் என்ற ஐடியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா? அவரவர்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள்.
comments | | Read More...

சமையல்னா சாதாரண விஷயமா?

 
சமையலை விடவும் அதி உன்னதமான ஒரு கலை உலகில் இருப்பதாகதெரியவில்லை.மனிதன் உயிர்வாழ அத்தியாவசிய தேவைகளில் முதலிட்த்தில் இருப்பதுஉணவு.மனிதன் உணவால் உருவாக்கப்பட்டவன் தான்.பாரம்பர்யத்தை விட்டுவிலகி விதம்விதமானசமையல் பழக்கத்துக்கு வந்துவிட்டாலும் இன்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள்குறைந்து போய் விட்டார்கள் என்று தோன்றுகிறது.
 
எனக்கு தெரிந்தவர் ஒருவர் கடை வைத்திருக்கிறார்.தினமும் வீட்டுக்குசெல்லும் முன்பு மெஸ்ஸில் சாப்பிட்டு விடுவார்.வீட்டுக்குப்போய் கொஞ்சம் போதும்தொப்பை பெரிதாகிக் கொண்டே வருகிறது என்பார்.கிட்ட்த்தட்ட தினமும் இதுவேதான்.ஒருநாள் கேட்டுவிட்டேன்.''அம்மா போனப்புறம்இப்படித்தான் சார்,அவங்க(மனைவி) சமைக்கறது எனக்கு பிடிக்கிறதில்ல!"
 
சமையல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வித்தியாசமான ஒன்று.சில குடும்பங்களில் காரம்குறைவாக சாப்பிடுவார்கள்,சில இட்த்தில் நமக்கு நாக்கு சுட்டுவிடும்.உப்பும்அப்படித்தான்.சில வீடுகளில் சப்பென்று இருக்கும்.உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில்சாப்பிட நேரும்போது உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்வதும்,அதிகமாகஇருந்தால் தண்ணீர் விட்டுக்கொள்வதும் எனக்கு வழக்கம்.
 
அடிக்கடி நோய்வாய்ப்படும் குடும்பங்களில் சமையலும் ஒரு பிரச்சனையாக இருக்கவாய்ப்புண்டு.ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகள் சேர்ப்பது குறைவாக இருக்கும்.சிலகுறிப்பிட்ட உணவு வகைகளுக்கு பழகிப் போய்விடுவதும் காரணம்.சிலருக்கு கொழுப்புநிறைந்தவை,சிலருக்கு காரம் நிறைந்தவை.
 
ஒவ்வொரு பகுதிக்கும்உணவு வகைகளில் மாற்றம் இருப்பது தெரிந்த்தே! வட நாட்டிலிருந்து வரும்லாரிக்கார்ர்கள் எங்காவது சாலையோரங்களில் நிறுத்திவிட்டு அவர்களேசமைத்துக்கொள்வார்கள்.ஆந்திராவில் பச்சை மிளகாய் கடிப்பதை பார்த்தால் நமக்குகண்ணில் நீர் வரும்.
 
என் தாத்தாவுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் அரை ஆழாக்கு நெய் வேண்டும்என்று பாட்டி சொன்னதுண்டு.இப்போது அப்படி சாப்பிட்டால் கதை வேறு.அவர்கள் நாள்முழுக்க உடல் உழைப்பில் வாழ்ந்தவர்கள்.சமையலில் இருக்கும் பெரும்பாலான சேர்க்கைகளும்நிலத்தில் விளைந்த்தாக இருக்கும்.
 
சிறப்பாக சமையல் செய்யும் நண்பர்களை பார்த்திருக்கிறேன்.ஆண்கள் சிலருக்கும்அந்த கலை கைவந்து விடுகிறது.நிலத்தில் விளைந்து,அம்மா சமைத்த அந்த எளிய உணவு தந்ததிருப்தியை இனி எப்போதும் அடைந்துவிட முடியாது என்று தோன்றுகிறது.எல்லாவற்றிலும்சுட்டியாக இருந்தால் அந்த குழந்தைக்கு நல்ல உணவு கிடைக்கிறது என்பது பொருள்.
 
மனம் நிறையும் உணவு வகைகளை தயாரிக்கும் குடும்பத்தில் பிரச்சினைகளும்குறைவாக இருக்கும்.உடைந்து போகும் வாய்ப்புகள் குறைவு.ஆரோக்கியத்தையும் அமைதியையும்தருவது இதமான உணவுதான்.
comments | | Read More...

உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?

 
 
உணர்ச்சிகள் எண்பது கூரான கத்தி.முறையாக பயன்படுத்தினால் நன்மையைத் தரும்.இல்லாவிட்டால் வாழ்வில் நாசத்தை ஏற்படுத்தும்.உணர்ச்சிகள் தூண்டப்படும்போது நம் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? நகைச்சுவை உணர்ச்சி மிகுந்திருக்கும்போது மனம் லேசாகி பார்ப்பவைஎல்லாம் அழகாகத் தெரியும்.உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.அன்பு,கருணை போன்ற உணர்ச்சிகளிலும் நன்மைதான்.கோபம் ,பொறாமை போன்ற உணர்ச்சிகளின் நிலையை சிந்தித்துப்பாருங்கள்.அப்போது நடப்பது எதுவும் நல்ல விளைவுகளை தருவதில்லை.


கோபம் தற்காலிக பைத்தியம் என்று சொன்னார்கள்.உண்மையில் பைத்தியத்தில் மற்றவர்கள் பரிதாபமாவது கிடைக்கும்.கோபத்தில் ஒட்டுமொத்த வாழ்வும் நாசமாகி விடும் வாய்ப்புகள் உண்டு.அதைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.பொறாமை பற்றி ஒரு பதிவும் தந்திருக்கிறேன்.பதிவரை பற்றி இ மெயில் அனுப்பியவரிடம் நான் கேட்டேன்"என்ன உணர்ச்சியை தூண்டுவதற்காக மெயில் அனுப்பப்பட்டது?'' உண்மையில் என்னிடம் வெறுப்பு தூண்டப்பட வேண்டும்.

பயம்,கோபம் ,பொறாமை,வெறுப்பு ,குற்ற உணர்வு,கலக்கம் போன்றவை பசியின்மையிலிருந்து தூக்கத்தை கெடுப்பது வரை மோசமான மனநிலைக்கும் உடல்நிலைக்கும் இட்டுச்செல்லும்.நாடித்துடிப்பு,(pulse rate) ரத்த அழுத்தம் (blood pressure) அதிகரிக்கும்.உணர்ச்சிகள் மேலாண்மை (Emotional intelligence)பற்றி இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.வாழ்க்கையை நல்லவண்ணம் வாழ்வதற்காக மட்டுமல்லாது நல்ல வேலையைப் பெறவும் முக்கியம்.வேலைக்கான நேர்முகத்தேர்வுகளில் அதிகம் கவனிக்கப்படும் விஷயம்,ஒருவர் உணர்ச்சிகளை கையாளும் திறன் தான்.




பாரதியார் உணர்ச்சிகளைப்பற்றி குறிப்பிடும்போது கோபம்,தாபம்,கவலை,அச்சம் போன்றவற்றை வென்று விட்டால் சாவையும் வெல்லலாம் என்கிறார்.
நாடியிலே அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் ஏற்படுவதாக ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதை மேற்கோள் காட்டி ,கோபம் முதலான உணர்ச்சிகள் நாடியில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ,அதனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் சாவை வெல்வது சாத்தியமாகும் என்கிறார்.உணர்ச்சிகளின் விளைவுகளை உணர்வதும் ,சிந்திப்பதும்தான் முதல் படி.பாரதியாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு ஒரு சில வரிகள் உங்கள் சிந்தனைக்காக கீழே !


ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான்
 
(ஞானானு பவத்திலிது முடிவாம் கண்டீர்!)
 
"நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்" என்றான்
 
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
 
கொடுங்கோபம் பேரதிர்ச்சி;சிறியகோபம்
 
ஆபத்தாம் அதிர்ச்சியிலேசிறியதாகும்;
 
அச்சத்தால் நாடியெலாம் அவிந்துபோகும்;
 
தாபத்தால் நாடியெலாம் சிதைந்துபோகும்;
 
கவலையினால் நாடியெலாம் தழலாய்வேகும்;
 
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
 
கொல்வதற்கு வழியென நான்குறித்திட்டேனே.
 
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger