News Update :
Powered by Blogger.

நடிகர் நடிகை காதல் சண்டை -பகிரங்கமாக டிவியில் ஒளிபரப்பு ! (காணொளி இணைப்பு)

Penulis : karthik on Wednesday 29 February 2012 | 23:00

Wednesday 29 February 2012

 
 
நடிகர் நடிகை இருவர் காதல் முறிந்த நிலையில் இருவரும் நேரெதிர் மோதல். திடிரென காதல் நடிகன் மீது கன்னத்தில் அறைந்த காதல் நடிகை.
 
நடிகர் காதலனை நடிகை காதலியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லும் திடிரே ரவுடி இருவர்.
 
இவர்களை நடிகர் நடிகைகள் என ஏற்று கொள்ளும் முட்டாள் மக்கள் கூட்டம் கட்டாயம் பாருங்கோ இந்த கூத்துக்களை !




comments | | Read More...

பாலாவின் படத்தில் நடிக்கிறார் பூஜா

 

நான் கடவுள் படத்தில் கண்ணில்லாத பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் கண்ணீரை விருதாகப் பெற்ற பூஜா, பாலாவின் எரியும் தணல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

திடீரென பாலாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று நமக்கு ஆச்சரியம் மேலிட்டது. அதனை எவ்வாறு தீர்ப்பது... ஒரே வழிதான் நேரடியாக பூஜாவைக் கேட்டுவிடலாமே என்று அவரை தொலைபேசியில் அழைத்தோம்.

அப்போது,

நான் தற்போது சென்னையில்தான் தங்கியுள்ளேன். பாலா சாரைப் பார்த்து இந்தப் படம் குறித்து பேசினோம், கதை சொன்னார், மிகவும் மிடித்துப்போய்விட்டது. தற்போது ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்திருக்கிறோம்.

பாலா சாருடன் இன்னொரு படம் நடிக்கப் போகிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறியுள்ள பூஜா, படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி கூறுங்களேன் என்று கேட்டதற்கு மௌனத்தையே பதிலாக அளித்தார்.

இந்த நீண்ட இடைவெளி ஏன் என்று கேட்டதற்கு, நான் கடவுள் படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். அதில் நடித்ததைப் பார்த்து என் தந்தை, உன் திரையுலகில் ஒரு லட்சியத்தை நீ அடைந்துவிட்டாய். இனி வாழ்க்கையில் செட்டிலாக வேண்டிய வேலையை பார்க்கலாம் என்று கூறி இலங்கைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவரது வார்த்தையை தட்ட முடியாமல், பல நல்ல வாய்ப்புகளை நான் மறுக்க வேண்டியதாகிவிட்டது.

ஆனால், பாலா சாருக்கு என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. அவரது அழைப்பு வந்ததுமே ஓகே சொல்லிவிட்டேன் என்கிறார் கண்களில் மகிழ்ச்சியுடன்.
comments | | Read More...

இவங்க பொண்ணுங்களிட்ட அடிவாங்குறது உறுதி!! (வீடியோ இணைப்பு)

 
இவங்களுக்கு வேற வேலை இல்ல, ஒருத்தன் பாடுறான் அதப்பாத்து இதுகளும் தொடங்கீற்றுதுகள்.
 
பொண்ணுங்கதான் வாழ்க்கையாம், அவங்கள மோட்டசைக்கில்ல போய் செட்டாக்கினமாம் அப்ப பாருங்கோவன்.
 
பிகருக்கு பாட்டாம், காதலிலையும் வெறியாம், தாடி வச்ச பசங்களுக்கு அறிவுரையாம்
 
என்னதான் இருந்தாலும் யாழ்ப்பாணத்து இளசுகள் கொஞ்சம் வித்தியசாம் தான்.
comments | | Read More...

விடுதலைப்புலிகளின் கதையை மையமாக கொண்டு இந்தியில் தயாராகிறது ‘ஜப்னா’ படம்!

 

விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

இதுபோல் இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன.
இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர்.
போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத்துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து 'யாஹன்' என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். விடுதலைப்புலிகள் பற்றிய 'ஜப்னா' படம் அரசியல் திரில்லர் கதையாக உருவாகிறது என்றார் அவர்.
comments | | Read More...

11 மீனவர்கள் கைது: இலங்கையை தொடர்ந்து தனிழக மீனவர்களை குறிவைக்கும் மாலைதீவு

 
 


நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரிக்கு தெற்கே, இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களும் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.



comments | | Read More...

தமிழ்ச் சிறுமி மீது வெள்ளவத்தை பொலிஸாரின் கொடூரம்

 

வீட்டுப் பணிப் பெண்ணாக தான் வேலை செய்த வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் கைகளை இரண்டையும் உயர்த்தி அந்தப் பொலிஸ் நிலையத்தின் மேல் கூரைக் கம்பில் (பராலையில்) கட்டி வைத்து குறித்த சிறுமி மீது வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரிகள் இருவர் கடுமையாகத் தாக்கிய மனதை உருக்கும் சம்பவம் ஒன்று அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஒன்றினைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர், கொழும்பு மேலதிக நீதிவான் மஹி விஜயவீர முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி தான் பணி செய்த வீட்டிலிருந்து 190,000 ரூபா பெறுமதியான நகைகளையும் வேறு சில பொருட்களையும் களவாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கு வைத்தே சிறுமி இவ்வாறான கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 18 வயதைக் கூட அடையா இவர் மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமியாவார்.

comments | | Read More...

பில்லா 2ல் நயனா?? நயன்தாரா தரப்பு மறுப்பு

Penulis : karthik on Tuesday 28 February 2012 | 21:39

Tuesday 28 February 2012



அது என்னவோ தெ‌ரியவில்லை நயன்தாரா என்றாலே நோ, நாட் பாஸிபிள், அப்படி ஒண்ணும் இல்லையே, பிறகு பார்ப்போம், பிளாஸ்டிக் சர்ஜ‌ரி என்று நெகடிவாகவே வருகிறது. ஸாரி… இதுவும் அப்படியொரு எதிர்மறை செய்திதான்.
பில்லா படம் எல்லா வகையிலும் நயன்தாராவுக்கு திருப்புமுனை தந்த படம். அந்தப் படத்திற்குப் பிறகுதான் அகராதியில் கிளாமர் என்பதை நயன்தாரா என்று மாற்றி எழுதினார்கள். டூ பீஸ் என்பதும் நயன் அதனை போட்டு வந்த பிறகே பிரபலமானது (ஹி..ஹி… கொஞ்சம் ஓவர்தான்).

பில்லா 2 படத்தை இப்போது எடுத்து வருகிறார்கள். நயன்தாராவும் இதில் ஒரு சின்ன வேடத்தில் தோன்றுகிறார் என யாரோ புண்ணியவான் கொளுத்திப் போட்டிருக்கிறார். அ‌‌ஜீத் படம், நயன்தாரா நடிக்கிறார்… மொட்டை வெயிலில் பாஸ்பரஸாக பற்றிக் கொண்டது விஷயம்.

ஆனால் நயன்தாராவின் ராசிப்படி இந்த செய்தியை நயன்தாரா தரப்பு மறுத்திருக்கிறது. பில்லா 2-வில் நடிக்க நயன்தாராவை கேட்கவேயில்லையாம்.

பந்தி கடைசியில் பாயாசம் மாதி‌ரி ஒரு பாஸிடிவ் செய்தி. தமிழ், தெலுங்கு மொழிகளில் தலா ஒரு படம் விரைவில் நடிக்கவுள்ளார் நயன்தாரா.
comments | | Read More...

சினேகா பூமிகா இணைந்து மிரட்ட இருக்கும் “யார்”



தமிழ் சினிமாவுக்கு இப்போது த்ரில்லர் காலம் போலும். காஞ்சனா, அம்புலி போன்ற படங்களை தொடர்ந்து அடுத்து மிரட்ட வரும் த்ரில்லர் படம் யார். கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கில், ரவி இயக்கத்தில், பூமிகா, சினேகா நடிப்பில் வெளிவந்த படம் அமரவாதி. த்ரில்லர் படமான, இந்தப்படம் இப்போது டப்பிங் செய்யப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்து 10நாட்கள் ரீ-சூட்டிங் நடத்தி விரைவில் வெளியிட உள்ளனர். தமிழில் இப்படத்தை வெளியிடப்போகும் தயாரிப்பாளர் சதீஷ் கூறுகையில், யார் படம் வெளிவந்த பிறகு, தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய டிரெண்ட் செட்டாகும்
comments | | Read More...

தமிழ் மக்களின் பேராதரவுடன் தொடரும் நீதிக்கான நடை பயணம்!

 

புலத்தில் வாழும் தமிழ் உறவுகளின் பேராதரவுடன் ஜெனீவாவை நோக்கி இன்று 24ஆவது நாளாகவும் நீதிக்கான நடை பயணம் நகர்கின்றது.இன்று Neuchetel மாநிலம் வரை 32 கிலோமீற்றர் தூரம் நடை பயணம் தொடர்ந்தது. இவர்களது வருகையை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் எழுச்சியுடன் எதிர்பார்த்து வரவேற்கின்றனர்.

இன்று சுவிஸ் நாட்டின் பிரதான தொலைக்காட்சிகளில் ஒன்றான Canalalpha இவர்களை சந்தித்து நடை பயணத்திற்கான காரணத்தை கேட்டறிந்ததுடன் இவர்கள் கைகளில் ஏந்தி வந்த தேசியக்கொடி பற்றி அதனுடைய தார்ப்பரியம் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

இதுபற்றி நடை பயணத்தை தொடர்கின்ற பரமேஸ்வரன் அதற்கான விளக்கத்தினை தெளிவாக எடுத்துக் கூறும் போது, பிரித்தானிய நாட்டில் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது இது தமிழ் மக்களை ஒருங்கிணைங்கின்ற தமிழ் தேசிய இனத்தின் அடையாளக்கொடி என்றும் வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.

ஒரு கொலை செய்தவனுக்கு சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை என்றால் ஆயிரம் ஆயிரமாய் தமிழர்களை கொன்றொழித்து தமிழர் தாயகத்தை சுடுகாடாக்கிய சிங்கள அரசுக்கு சர்வதேசமே நீ என்ன தண்டனை வழங்கப்போகின்றாய்.

மார்ச் 5ம் திகதி ஐ.நா முன்றலில் உலகத் தமிழினமே குழுமி நின்று கேள்வியெழுப்புவோம் திரண்டுவாருங்கள்.

comments | | Read More...

மாணவி, ராணுவ வீரரின் மனைவி என 3 நாளில் 5 பேர் கற்பழிப்பு

 

2 மைனர் பெண்கள் உள்பட 5 பெண்கள், கடந்த 3 நாட்களில், டில்லியில் கற்பழிக்கப்பட்ட சம்பவம், அங்கு பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, டில்லி போலீசார் தெரிவித்துள்ளதாவது, டில்லியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 2 மைனர் பெண்கள் (அதில் ஒருவர் 1ம் வகுப்பு படித்து வரும் சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது), கல்லூரி மாணவி, மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 5 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்வங்கள் தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும், இதுகுறித்த விசாரணையை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய மகிளிர் ஆணைய கருத்தரங்கில் பேசிய அந்த ஆணையத்தின் தலைவி மமதா சர்மா, ஒரு பெண்ணை செக்ஸியாக இருக்கிறார் என்று மற்றவர்கள் வர்ணிப்பது தவறு இல்லை. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சில இளைஞர்கள் பெண்களை பார்த்து செக்ஸியாக இருக்கிறாய் என்று சொல்கின்றனர். இதில் எதுவும் தவறு இல்லையே, இதனை நாம் எதிர்மறையாக எடுத்து கொள்ள கூடாது. அழகானது, கவர்ச்சியானது என்றுதானே அர்த்தம், ஆனால் நாம் இதனை நாம் எதிர்மறையாக எடுத்து கொண்டால் தேவையற்ற பிரச்னைகள் வரும். பாசிட்டிவாக எடுத்து கொண்டால் இதனை தவிர்ப்பது முடியும். செக்ஸி என்பது கொச்சையான வார்த்தை அல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா, அதே இவ்வாறு கூறியுள்ள நிலையில், அங்கு நிகழ்ந்துள்ள கற்பழிப்பு சம்பவங்கள் அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

comments | | Read More...

பிரபுசாலமனின் அடுத்த படத்தில் ஆர்யா

 


`மைனா' படம் மூலம் பிரபலமான பிரபு சாலமன் தற்போது `கும்கி' படத்தை இயக்கி வருகிறார். இது முடிந்ததும் ஆர்யாவை வைத்து படம் எடுக்கிறார். இது ஆக்ஷன் கதையாம். இதர நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
comments | | Read More...

தமிழிற்கு வரும் ஒஸ்கார் நாயகி

 


ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் உள்ள கோலிவுட்டில் நடிப்பதில் பெருமையாக உள்ளது என்று ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த தன்வி கணேஷ் லோன்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்டூடண்ட் ஸ்டூடியோ காம் தயாரிக்கும் காதல் தீவு படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சிறுவயது நாயகியாக நடித்த தன்வி லோன்கர் இதில் நாயகியாக நடிக்கிறார். அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக வந்த ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தின் இயக்குனர் வெற்றி வீரன் இயக்குகிறார்.

இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி விருகம்பாக்கத்தில் உள்ள நேஷனல் தியேட்டரில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட தன்வி லோன்கருக்கு நடிகர்கள் சத்யராஜ், பிரசன்னா, நடிகை தன்ஷிகா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினர்.

பின்னர் தன்வி லோன்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவள். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். அந்த படத்தின் நாயகி ப்ரீடா பின்டோ ஆஸ்கர் விருது விழாவுக்கு என்னை அழைத்துச் சென்றார். அப்போது உலகின் பெரிய நடிகர்-நடிகைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தை அடுத்து டீன் ஏஜ் என்ற கன்னட படத்தில் நடித்தேன். அந்த படத்தை பார்த்து தான் தற்போது எனக்கு காதல் தீவு என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் மாணவியாக நடிக்கிறேன். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

நான் வடநாட்டு பெண் என்றாலும் எனக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அங்கு வாரிசு நடிகர்-நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் நாயகி வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல.

சினிமா பின்னணி இருந்தால் தான் பாலிவுட்டில் நுழைய முடியும். ஆனால் கோலிவுட்டில் அப்படியல்ல. நான் தமிழ் பட உலகம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உலகப் புகழ் பெற்ற ரஜினிகாந்தும், தமிழில் இருந்து இந்திக்கு வந்து புகழ் கொடி நாட்டிய கமல் ஹாசனும் இங்கே தான் இருக்கின்றனர். அப்பேர்பட்ட கோலிவுட்டில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.

இங்கு திறமையை மதிக்கிறார்கள். அசின், ஜெனிலியா போன்ற நடிகைகள் இங்கிருந்து பாலிவுட்டுக்கு வந்து பிரபலமாகியுள்ளனர். நான் விரைவில் தமிழில் நம்பர் 1 இடத்தை பிடிப்பேன். அதற்காக தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறேன் என்றார்.
comments | | Read More...

மீண்டும் சேலத்தில் தலைதூக்யுள்ள அழகிகளின் குத்தாட்டம்!

 
சில வருடங்களுக்கு முன்பு கோவில் திருவிழா காலங்களில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், புராண நடகம் என்று பொழுதுபோக்குடன் அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது. சமீபகாலமாக அறிவியல் முன்னேற்றம், நவநாகரீகம் என்ற போலியான முகமூடி அணிந்து நமது இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்தி செல்லும் அம்சங்கள் பெருகி வருகின்றன.
குறிப்பாக செல்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் பெரும்பாலானோர் வலைத்தளங்களில் உலாவரும் ஆபாச படங்களுக்கும், மனதை திசைத்திருப்பும் குருந்தகவல்களுக்கும் பலியாகி வருவது வருந்தத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சேலம் மாவட்ட கலெக்டரால் தடை செய்திருந்த அழகளிகளின் குத்தாட்டம் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கி இருப்பது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழாக் காலங்களில் இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி அதிர வைக்கும் ஒளி, ஒலி அமைப்புடன் இரவு 10 மணிக்கு மேல் தொடங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தலைநகர் சென்னையிலிருந்தும் வர வழைக்கப்பட்ட நடன அழகிகளுடன் உள்ளூர் மற்றும் நடன குழுவை சேர்ந்த இளைஞர்கள் ஆடத் தொடங்குவார்கள் முதலில் பக்தி பரவசத்துடன் தொடங்கும் நடன நிகழ்ச்சி நேரம் செல்லச் செல்ல இளைஞர்களை சூடேற்றும் வகையில் இருக்கும்
நடு இரவு நேரத்தில் அதற்காகவே தனித்துவமாக தேர்வு செய்யப்பட்ட முக்கல் முனகல் பாடல்கள் இசைக்கத்தொடங்கும். பின்னர் மேடையில் அரை குறை ஆடையுடன் "தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா" என்றும்" மே மாதம் 98-ல் மேஜரானே" என்று அங்கங்களை குலுக்கி நடனமாடும் அழகிகளின் குத்தாட்டம் களைகட்டும்.
இதன் உச்சக்கட்டமாக "நிலா காயுது" என்ற பாடலுக்கு அழகிகள் மேடையிலேயே அங்கங்கள் தெரிய சோப்பு போட்டு குளிப்பதுதான் நிகழ்ச்சியின் `ஹைலைட்'. இதை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் கூட்டம் ஆரவாரத்தில் கைத் தட்டி மகிழ்ச்சியை வெளிபடுத்துவார்கள்.
சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது பிரபலமாக நடைபெறும் இந்த குத்தாட்ட நிகழ்ச்சியை காண்பதற்காக சுற்றுப்புற பகுதி கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ஏராளமாக திரளுகிறார்கள். இது போன்ற பல நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதலும், கைகலப்பும் ஏற்பட்டு காவல் நிலையம் சென்ற சம்பவங்கள் ஏராளம்.
வெளிமாநில அழகிகளுடன் ஒரு பாடல்களுக்கு சேர்ந்து நடனம் ஆட உள்ளூர் இளைஞர்களிடம் குறிப்பிட்ட தொகை வாங்கப்படுவதாகவும் இவ்வாறு நடன நிகழ்ச்சி என்ற போர்வையில் அடையாளம் தெரியாத பல ஆண்கள் உள்ளூரில் வலம் வருவது பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு சவால் விடும் சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பாக அமைந்து உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது போன்ற நடன நிகழ்ச்சிகளை தடை செய்வது தங்கள் வாழ் வாதாரத்தை பாதிக்கிறது என்று கூறினாலும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தையும், கலாச்சார சீரழிவையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதை சீர்செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
comments | | Read More...

பாக்யராஜ் அ.தி.மு.க.வில் சேருகிறார்

Penulis : karthik on Monday 27 February 2012 | 23:52

Monday 27 February 2012

 
 
தமிழ் திரையுலகில் 1970, 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் பாக்யராஜ். ஏராளமான படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்தார். 1989-ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் குதித்தார். பின்னர் அக்கட்சியை கலைத்தார். 2006 ஏப்ரல் 5-ந் தேதி தி.மு.க.வில் இணைந்தார்.
 
தற்போது அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். சமீப காலமாக பாக்யராஜுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அ.தி.மு.க.வில் சேர அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 24-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பாக்யராஜ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள். அ.தி.மு.க.வில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் அவ்விழா நடைபெறவில்லை. விரைவில் பாக்யராஜும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் சேர உள்ளனர். இது குறித்து பாக்யராஜ் குடும்பத்தினரிடம் கேட்ட போது அ.தி.மு.க.வில் இணைவதை மறுக்கவும் இல்லை. உறுதிபடுத்தவும் இல்லை.
 
பாக்யராஜ் புதுவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளதாக தெரிவித்தனர். அ.தி.மு.க.வில் இணைய பாக்யராஜ் விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க. தலைமைக்கு தகவல் அனுப்பி விட்டதாகவும் ஜெயலலிதா அழைப்புக்காக காத்து இருப்பதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.



comments | | Read More...

அடுத்த படம் ! : ஷங்கர்

 
 
ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.
 
ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.
 
இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்திருக்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறின.
 
ஆனால் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் ஷங்கர். இதுகுறித்து ஷங்கர் தனது இணையத்தில் " நண்பன் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த எல்லா ஊடகங்களுக்கும் நன்றி.
 
இப்போது எனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வருகிறேன். இப்படத்திற்காக இதுவரை நான் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. " என்று தெரிவித்து இருக்கிறார்.



comments | | Read More...

காதலை மறுக்கும் பாவனா!

 
மலையாள நடிகருக்கும் நடிகை பாவனாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாவனா தமிழில் "சித்திரம் பேசுதடி" படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தீபாவளி, ஆர்யா, அசல், ஜெயம் கொண்டான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளைக்கும் காதல் என்று தகவல்கள் வந்துள்ளன. ராஜீவ்பிள்ளை கேரளாவில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா
மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது, ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எங்களுக்குள் காதல் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார். ராஜீவ்பிள்ளையும் பாவனாவை காதலிக்கவில்லை என மறுத்துள்ளார். ஆனால் இருவரும் ரகசியமாக
comments | | Read More...

மூச்சு விட சிரமப்பட்டதால் நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாராம் ஸ்ருதி…

Penulis : karthik on Sunday 26 February 2012 | 23:58

Sunday 26 February 2012

 

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தெரிவித்துள்ளார். கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஆமீர் கானின் மருமகன் இம்ரான் கான் நடித்த லக் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானார். இந்தியாஸ் கிளாம் திவா என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதி தான் நடிக்க வரும் முன்பு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும் அதை மறைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தானாக ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ருதி. மூச்சு விட சிரமமாக இருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கே மூக்கில் அறுவை சிகிச்சை செய்தால் பாடகியான தனது குரல் வளம் பாதிக்கப்படுமோ என்று பயந்துள்ளார். தற்போது சிகிச்சைக்குப் பிறகு நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும், பிரச்சனையின்றி பாட முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் லக் கைகொடுக்காவிட்டாலும் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஸ்ருதிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தற்பொழுது ஸ்ருதி நடித்து வரும் 3 படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது கூடுதல் தகவலாகும்

comments | | Read More...

ஷாருக்கானுடன் இணையும் விக்ரம் -

 


சைத்தான் என்ற படத்தைப் பார்த்த ஷாருக்கான் அப்படத்தை வெகுவாக புகழ்ந்தார். சைத்தானை புகழ்ந்தால் சைத்தான் நம்மைவிடாது என்பது புராணம். ஷாருக்கான் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

சைத்தானை இயக்கிய பிஜாய் நம்பியார் விக்ரமை வைத்து டேவிட் என்ற படத்தை இயக்கி வருகிறார். பெயர் சிங்கிளாக இருந்தாலும் கதைப்படி 3 டேவிட்கள் வருகிறார்கள். அதில் முக்கியமான டேவிட் விக்ரம். இன்னொருவர் தமிழின் பிரபல நடிகராக இருப்பார் என்கிறார்கள். நம்பியா‌ரின் மூன்றாவது சாய்ஸ் ஷாருக்கான்.

டேவிட் படத்தை இந்தி, தமிழ் என இரு மொழிகளில் இயக்கி வருவதால் ஷாருக்கின் பெயர் இந்திப் படத்துக்கு பெரும் மார்க்கெட்டாக அமையும். மேலும் ஷாருக் நடித்தால் மட்டுமே அந்த கதாபாத்திரம் பேசப்படும் என நினைக்கிறார் பிஜாய் நம்பியார். இந்தப் படத்துக்கு ஷாருக்கின் 10 நாள் கால்ஷீட் போதும். சைத்தானை ரொம்பப் புகழ்ந்தவர் என்பதால் டேவிட்டில் நடிக்க ஒப்புக்கொள்வார் என நினைக்கிறார் பிஜாய்.

ஒரே படத்தில் விக்ரம், ஷாருக்கான். கேட்கவே நல்லாயிக்கே.
comments | | Read More...

இந்தியில் ரீமேக் ஆகும் வேட்டை



தமிழில் மாதவன், ஆர்யா, சமீராரெட்டி, அமலாபால் நடித்த வேட்டை படம் இந்தியிலும் ரீமேக் ஆகவிருக்கிறது. இந்த தகவலை டைரக்டர் லிங்குசாமியே வெளியிட்டுள்ளார்.

லிங்குசாமி அளித்துள்ள பேட்டியில், வேட்டை திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதனை நான்தான் இயக்குகிறேன். இதுவரை மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற விஷயங்கள் குறித்த பேசி முடிவெடுக்க இன்னும் ஓரிரு நாட்களில் நான் மும்பை செல்லவிருக்கிறேன். அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள் தெரிய வரும், என்று கூறியுள்ளார்.

தற்போது தமிழில் விஷாலுக்கு இரண்டு கதைகளை தயாராக வைத்திருப்பதாக கூறியிருக்கும் லிங்குசாமி, தங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள வழக்கு எண் 18/9 படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் பேட்டியில் கூறியிருக்கிறார்.
comments | | Read More...

டெக்னிக்கல் புலி திரை விமர்சனம்

 

ஹாலிவுட் 3டி படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக முழுக்க முழுக்க கோலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களால், காட்சிக்கு காட்சி மிரளவைக்கும் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி தரமானதாக வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் "அம்புலி 3 டி".


ஒரு கல்லூரி காதல் ஜோடி, கல்லூரியின் கோடை விடுமுறையிலும் காதலை வளர்க்க விரும்புகிறது. அதற்காக கல்லூரி விடுதியில், விடுமுறையிலும் தங்குகிறார் ஹீரோ. அவருக்கு உதவுகிறார் அவரது வகுப்பு மாணவனும், அந்த கல்லூரி வாட்ச்மேனின் வாரிசுமான மற்றொரு ஹீரோ. இரவில் நண்பனுக்கும் தெரியாமல் கல்லூரியை அடுத்த கிராமத்தில் இருக்கும் கதாநாயகியைத் தேடி காதலை வளர்க்க, திகில் அடர்ந்த சோளக்காட்டின் வழியாக போகிறார் ஹீரோ! ஹீரோவை மனித உயிர்களை குடிக்கும் அம்புலி துரத்துகிறது. அம்புலியிடமிருந்து தப்பி பிழைக்கும் ஹீரோ, அதன்பின் வரும் இரவுகளில் நண்பனுடன் சேர்ந்து கொண்டு அம்புலி பேயா...? பிசாசா..? மனித மிருகமா...? விநோத மிருகமா...? என்பதை கண்டுபிடிக்க களம் இறங்குவதுடன், காதலையும் வளர்ப்பதும், உயிருக்கு பயந்து வாழும் கதாநாயகியின் ஊரை காப்பாற்றுவதும் தான் அம்புலி படத்தின் அட்டகாசமான மீதிக்கதை!



அஜெய்-சனம், ஸ்ரீஜித்-ஜோதிஷா காதல் காட்சிகள் நச்! கல்லூரி விடுதி காவலாளி தம்பி ராமய்யாவின் எச்சரிக்கையையும் மீறி ஹீரோ ‌அஜெய், அந்த சோளக்காட்டை சைக்களில் கடந்து போவதில் ஆரம்பமாகும் திகில், படம் முழுக்க பரவிக்கிடப்பது அம்புலி படத்தின் பெரிய பலம்! மொட்டை ராஜேந்திரன் குடித்துவிட்டு போதையில் ஊரைச் சுற்றிக்கொண்டு கிராமத்திற்கு போக விரும்பாமல், தன் பெண் குழந்தையை அம்புலியிடம் பலி கொடுத்துவிட்டு அலறியடித்து ஓடுவதிலாகட்டும், இடையில் காட்டுவாசி போல் பார்த்திபனைக் காட்டி அம்புலி அவர்தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை கூட்டுவதிலாகட்டும் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஹரிசங்கர் - ஹரீஷ் நாராயணன் இருவரும்!


மனித மிருகமாக அம்புலி உருவான விதத்தை ப்ளாஷ்பேக்கில் சொன்ன விதத்திலாகட்டும், அம்புலியின் அண்ணன் பார்த்திபன், கல்லூரி முதல்வரை கொன்றதற்கான காரணத்தை விளக்கியதிலாகட்டும், அதேகாட்டில் தன்னை கொல்ல வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழும் பார்த்திபனை, சகோதர பாசத்துடன் அம்புலி விட்டு வைத்திருப்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதிலாகட்டும், இப்படி ஒவ்வொரு காட்சியையும் கவனமாக கையாண்டிருக்கின்ற இரட்டை இயக்குநர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! செங்கோடனாக பார்த்திபனும், அம்புலியாக கோகுலும் வாழ்ந்தே இருக்கிறார்கள் பலே! பலே!!


திகில் படத்திற்கு ஏற்ற மிரட்டல் பின்னணி இசையை தந்திருக்கும் வெங்கட்பிரபு சங்கர், சாம்ஸ், சதிஷ், மெர்வின் சாலமன் நால்வர் கூட்டணியும், சதிஷ், ஜியின் பயமுறுத்தும் இருட்டிலும் பளீரிடும் ஒளிப்பதிவும் பிரமாதம்! ரெமியனின் கலை இயக்கமும் பிரமாண்டம், பிரமாதம்!!


கண் எதிரே படமெடுத்தாடும் பாம்பு, முகத்திற்கும் மூக்கிற்கும் அருகில் நீளும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மையும் காட்டிற்குள் அழைத்துப்போகும் 3டி எஃபெக்ட் சோளக்காடு, நம்மீது பறந்து வந்து விழும் பாவனையை ஏற்படுத்தும் இலை, தழைகள், பாய்ந்து வந்து தாக்கும் பயத்தை ஏற்படுத்தும் ராட்சஸ அம்புலி இத்யாதி இத்யாதி, 3டி தொழில் நுட்பங்களுக்காகவே லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் படத்தை கண்டு களிக்கலாம்!


ஆக மொத்தத்தில் "அம்புலி", தமிழ் சினிமாவின் "டெக்னிக்கல் புலி" என்றால் மிகையல்ல!!
comments | | Read More...

”3” படத்தில் ரஜினியா? - படக்குழுவின் பிஸினெஸ் டெக்னிக்

 


தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள '3′ என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என்ற 'ஆராய்ச்சி' ஆரம்பமாகிவிட்டது.

கொலைவெறி என்ற பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்படும் படமாகிவிட்ட, 3-ல் தனுஷ் – ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ளனர்.

படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவே அதை மறுத்திருந்தார்.

இப்போது படம் முடிந்து வெளியீட்டு உரிமை பேரங்கள் நடக்கும் நிலையில் மீண்டும் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்ற செய்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன.

இந்த முறை செய்தியை யாரும் மறுக்கவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா, படத்தில் இடம்பெற்றுள்ள 3வது முக்கிய நடிகர் குறித்து எதுவும் சொல்ல மாட்டோம். அது சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார்.

நல்ல பிஸினெஸ் டெக்னிக் சாரே… ரஜினியே உங்ககிட்ட ட்யூஷன் கத்துக்கணும் போங்க!
comments | | Read More...

எல்லா தப்பும் என்மேல தான் சாமியோவ்...ஜெயலலிதா உத்தமிங்கோ...நீதிபதி கேள்விகளும் சசிகலா பதில்களும்

 
 
 
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று 4வது நாளாக நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் முழு விவரம் வருமாறு:

நீதிபதி: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, விலகபுரா கிராமத்தில் ரத்தினவேலு உட்பட 14 பேருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதற்காக நீங்கள், சுதாகரன் ஆகியோர் போயஸ்கார்டனில் இருந்து காரில் சம்மந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று நிலத்தை பார்த்து, பின் அதை வாங்குவது தொடர்பாக ஜவகர்பாபு மற்றும் முத்தையா ஆகியோர் மூலம் நில உரிமையாளர்களிடம் பேசியது உண்மையா?

சசிகலா: அந்த நிலம் வாங்கியது உண்மை. இது தொடர்பாக ஜவகர்பாபு, முத்தையா ஆகியோரை நான் சந்தித்து பேசவில்லை.
நீதிபதி: ஈஞ்சம்பாக்கம் அடுத்த வெட்டுவாங்கேணி என்ற இடத்தில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ரூ1.10 லட்சத்துக்கு கிரின் பார்ம் ஹவுஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்தது உண்மையா?
சசிகலா: உண்மை.
நீதிபதி: இந்திராணி ரங்கராஜுக்கு சொந்தமான நிலத்தை ரூ5.07 லட்சம் கொடுத்து வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மைதான். சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்காக இந்த நிலம் வாங்கப்பட்டது.

நீதிபதி: லலிதா குமார் பண்டாரிக்கு சொந்தமான 1.9 ஏக்கர் நிலம் ரூ5.57 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டதா?

சசிகலா: நிலம் வாங்கியது உண்மை தான். அந்த நிலம் ஜெ கிரின் பார்ம் ஹவுஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
நீதிபதி: சென்னையில் ரூ13.05 லட்சம் மதிப்பிலான வணிக கடையை ரூ8.25 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், இதற்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் குறைவாக செலுத்திய குற்றம் தொடர்பாக?

சசிகலா: அந்த சொத்து ஜெ ஹவுசிங் நிறுவனத்திற்காக 9.8.1994ல் வாங்கப்பட்டது. இதில் கட்டண குறைப்பு எதுவும் செய்யவில்லை.

நீதிபதி: அமானுல்லா என்பவரின் மனைவி அனிபா பெயரில் கடந்த 1989ம் ஆண்டு சென்னை நீலாங்கரை, ஸ்ரீரங்கவேலன் தெருவில் 4 கிரவுண்ட் நிலம் நீங்கள் வாங்கியதாக கூறப்படுவது குறித்து?

சசிகலா: எனக்கு தெரியாது.

நீதிபதி: ஊத்துக்கோட்டையில் சிவ,விஷ்ணு பில்டர்ஸ் உரிமையாளர் ராஜராம் மூலம் 10.10 ஏக்கர் நிலம், மணவாளன் என்பவருக்கு சொந்தமான 12.8 ஏக்கர் நிலம், பேரூர் ராஜாராமுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் (சிறிது சிறிதாக) ஊத்துகுடியில் 9.65 ஏக்கர் நிலம், பாலசுப்ரமணியம், பொன்னுசாமி, சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான 10,.29 ஏக்கர் நிலம் ரூ1.02.090க்கும், பாப்பம்மா, வெங்கடேஷ் ஆகியோருக்கு சொந்தமான 8.23 ஏக்கர் நிலம் ரூ. 83,200க்கும், கங்கா, பால, நாராயணசாமி ஆகியோருக்கு சொந்தமான 8.65 ஏக்கர் நிலம் ரூ86,500க்கும், கண்ணியப்பன், சத்தியமூர்த்தி உள்பட பலருக்கு சொந்தமான 6.40 ஏக்கர் நிலம் ரூ.64,050க்கும், துரைசாமி, முனிசாமி உள்பட பலருக்கு சொந்தமான 7.11 ஏக்கர் நிலம் ஸி99,159க்கும், கோவிந்தன், எல்லப்பன் உள்பட சிலருக்கு சொந்தமான 15.71 ஏக்கர் நிலம் ஸி1,57,100க்கும், அண்ணாமலை, கோவிந்தசாமி உள்பட பலருக்கு சொந்தமான 9.50 ஏக்கர் நிலம் ரூ95 ஆயிரத்திற்கும், ஆகிய நிலங்களை மெடோ ஆக்ரே பாரேம் மற்றும் மெட்டல் கிங் நிறுவனங்களுக்கு வாங்கினீர்களா?

சசிகலா: எனக்கு தெரியாது. அப்படி எந்த நிலமும் வாங்கவில்லை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு ரூ2,81,160 கொடுத்து கார் வாங்கியது உண்மையா?

சசிகலா: வாங்கியது உண்மை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக 18.7.1992 அன்று ரூ4.06,205 கொடுத்து வாகனம் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: கடந்த 18.7.1992ல் உங்கள் பெயரில் கார் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை. எனது வங்கி கணக்கில் இருந்து ரூ3,88,376 கொடுக்கப்பட்டது.

நீதிபதி: 30.3.1996ல் 2 கார் நீங்கள் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை. எனது வங்கி கணக்கில் ரூ10,60,790 கொடுக்கப்பட்டது.

நீதிபதி: 6.12.1994ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கார் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை. சசி என்டர்பிரைசஸ் நிறுவன வங்கி கணக்கில் இருந்து ரூ3,16,537 கொடுக்கப்பட்டது.

நீதிபதி: 25.12.1994ல் மெட் டல் கிங் நிறுவனத்திற்கு வாகனம் வாங்கப்பட்டதா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: 19.1.1995ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மாருதி கார் வாங்கப்பட்டதா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: 18.11.1993ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத் துக்கு டெம்போ டிராவலர் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்காக சுராஜ் மஸ்தா வாகனம் வாங்கப்பட்டதா?

சசிகலா: இந்த வாகனம் ஏற்கனவே வாங்கி, ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது.

நீதிபதி: ஆஞ்சநேய பிரின்டிங் பிரஸ் நிறுவனத்திற்காக 3 சுராஜ் மஸ்தா வாக னம் வாங்கப்பட்டது உண்மையா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக வாகனம் வாங்கப்பட்டது உண்மையா?

சசிகலா: உண்மை. அதற்காக தொகை ரூ3,30,250 அதன் வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது.

நீதிபதி: ஜெயா ப்பளிகேஷன் நிறுவனத்திற்காக அசோக் லேலாண்ட் நிறுவனத்திடம் இருந்து பஸ் வாங்கப்பட்டதா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: நமது எம்.ஜி.ஆர். நிறுவனத்திற்காக வாகனம் வாங்கப்பட்டதா?

சசிகலா: ஆம்.

நீதிபதி: சென்னையில் உள்ள ஜெயலலிதா வீட்டு முகவரியில் அசோக் லேலாண்ட் நிறுவன பஸ் பதிவு செய்துள்ளது குறித்து?

சசிகலா: அசோக் லேலாண்ட் பஸ் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்காக வாங்கப்பட்டது. அந்த பஸ்சை எப்படி ஜெயலலிதா வீட்டு முகவரியில் பதிவு செய்ய முடியும். இது தவறான கருத்து. ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் பெயரில் பதிவு செய்து நான் கையெழுத்து போட்டுள்ளேன்.
நீதிபதி: டெல்லியில் பதிவு செய்யப்பட்ட, குடியரசு தலைவர் பயன்படுத்திய பென்ஸ் காரை ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு வாங்கியது உண்மையா?

சசிகலா: 1991ம் ஆண்டு ஜனாதிபதி பயன்படுத்திய பென்ஸ் காரை, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஸி9.15 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார். அந்த காரை கடந்த 1993ம் ஆண்டு ரூ6.76 லட்சம் கொடுத்து ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்காக வாங்கினோம். இவ்வாறு நீதிபதியின் கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்தார்.



comments | | Read More...

ஹஸ்ஸிக்கு சாதகம், தெண்டுல்கருக்கு பாதகம்: நடுவர்கள் அளித்த பாரபட்சமான முடிவுகள்

 
 
சிட்னி என்றாலே இந்திய அணியை பொறுத்தவரை சர்ச்சை என்றாகி விட்டது. 2008-ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்டின் போது ஹர்பஜன்சிங், சைமண்ட்சை குரங்கு என்று திட்டியதாக பூதாகரமாக வெடித்த பிரச்சினையை யாரும் மறந்து விட முடியாது.
 
அதே சிட்னி மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டியின் போது இரு சர்ச்சைக்குரிய விஷயங்கள் அரங்கேறின. 24-வது ஓவரின் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் ஷார்ட் கவர் திசையில் பந்தை அடித்து விட்டு, டேவிட் ஹஸ்ஸியை ஒரு ரன்னுக்கு அழைத்தார். இதற்குள் பீல்டிங் செய்த சுரேஷ் ரெய்னா, பந்தை ஸ்டெம்பை நோக்கி மின்னல் வேகத்தில் எறிந்தார்.
 
அப்போது வேகமாக ஓடி வந்த டேவிட் ஹஸ்ஸி பந்தை வலது கையால் தடுத்து விட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் பந்து ஸ்டம்பை பதம் பார்த்து ரன்-அவுட் ஆகியிருக்கலாம். பீல்டிங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேட்ஸ்மேன்கள் செயல்படும் போது அவுட் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) விதியில் இடம் உள்ளது.
 
இதையடுத்து இந்திய கேப்டன் டோனி மற்றும் சக வீரர்கள், நடுவர்கள் பில்லி பவுட்டன் (நியூசிலாந்து), சைமன் டபெல் (ஆஸ்திரேலியா) இருவரிடமும் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் கேட்டு முறையிட்டு, வாக்குவாதம் செய்தனர். பின்னர் முடிவு 3-வது நடுவர் சிமோன் பிரை (ஆஸ்திரேலியா) வசம் விடப்பட்டது. அவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக நாட்-அவுட் வழங்கியதால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 
அப்போது 17 ரன்களில் இருந்த டேவிட் ஹஸ்ஸி, அதன் பிறகு இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை அடித்தார். அவர் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கில் பந்தை தடுக்கவில்லை. காயமடைந்து விடக்கூடாது என்பதற்காகவே பந்தை தடுத்தார் என்பது நடுவர்கள் தரப்பு விளக்கமாகும்.
 
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், இயான் சேப்பல் மற்றும் டோனி கிரேக் ஆகியோர் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் வழங்கியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
 
இப்படி நடுவரின் முடிவு சரியா-தவறா? என்று விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில், இந்தியா பேட் செய்த போது மீண்டும் இதே போன்ற சம்பவம் நடந்தது. தெண்டுல்கர் 14 ரன்களில் எதிர்முனையில் நின்ற போது, கவுதம் கம்பீர், பாயிண்ட் திசையில் பந்தை அடித்து விட்டு ஒரு ரன்னுக்கு ஓடினார். துரிதமாக கிரீசை நோக்கி தெண்டுல்கர் ஓடிய போது, ஸ்டம்பில் இருந்து சில அடி தூரத்தில் பந்து வீசிய பிரெட்லீ குறுக்கீடுவது போல் வழியில் நின்றார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க தெண்டுல்கர் சற்று விலகி ஓட நேர்ந்தது. இதற்குள் டேவிட் வார்னர் அவரை ரன்-அவுட் செய்து விட்டார்.
 
பிரெட்லீயின் குறுக்கீடு இல்லாமல் தெண்டுல்கர் ஓடியிருந்தால் ரன்-அவுட்டில் இருந்து தப்பியிப்பார். ஆட்டத்தின் முடிவும் மாறியிருக்கலாம். லெக் அம்பயர் சைமன் டபெல் விரலை உயர்த்தியதும் அதிர்ச்சி அடைந்த தெண்டுல்கர், ஏதோ சொல்லி கொண்டே பெவிலியன் திரும்பினார்.
 
நடுவர்களின் பாதகமான தீர்ப்புகள் குறித்து இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:-
 
தெண்டுல்கரின் ரன்-அவுட் விவகாரத்தில், பிரிஸ்பேன் ஆட்டத்தில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பிப்.19-ந்தேதி) நடந்த விஷயத்தை உதாரணமாக சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அந்த ஆட்டத்தில் வினய்குமார் பந்து வீசிய போது, ஸ்லிப்பில் பீல்டர்களை நிறுத்தியிருந்தோம். மிட் விக்கெட் திசையில் பீல்டர் இல்லை. அவர் வீசிய பந்து பாயிண்ட் திசைக்கு அடிக்கப்பட்டது. உடனே அவர், பிட்ச்சை கடந்து மிட்விக்கெட் நோக்கி ஓடி வந்தார். அப்போது நடுவர், விதிப்படி இதை செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை என்று வினய்குமாரிடம் கூறினார்.
 
எனவே பந்து வீசிய பிரெட்லீ பாயிண்ட் திசை பீல்டர் நோக்கி சென்றார் என்று சொல்லி நியாயப்படுத்த முடியாது. உண்மையிலேயே தெண்டுல்கர் செல்லும் வழியில் அவருக்கு எந்த வேலையும் இல்லை. தெண்டுல்கர் சில அடி தூரம் கூடுதலாக ஓட வேண்டும் என்பது அவரது நோக்கம். அப்படி பார்க்கையில் ரன்-அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் அவர் வழியில் நின்றிருக்கிறார் என்பது எனது கணிப்பாகும்.
 
இதனால் தெண்டுல்கர் உண்மையிலேயே ஏமாற்றத்திற்குள்ளானார். இந்த விஷயத்தில் லெக் அம்பயர் (டபெல்) அவுட் கொடுத்தது தவறானதாகும். ஏனெனில் அவுட் ஆகிய விதத்தில் சரியாக கணிக்க கூடிய இடத்தில் மற்றொரு நடுவர் பில்லி பவுட்டன் தான் இருந்தார். லெக் அம்பயர் டபெல் நின்ற கோணத்தில் இருந்தபடி இந்த அவுட்டை கணிப்பது கடினமாகும்.
 
எனவே பவுட்டன், லெக் அம்பயரிடம் இது பற்றி சொல்லியிருக்க வேண்டும். இதே போல் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் வழங்கியிருக்க வேண்டும். அவுட் கொடுக்கப்படாதது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். அவர் முகத்தில் பந்து படாமல் இருக்க தடுத்ததாக நினைக்கலாம். ஆனால் பந்தை முகத்தின் அருகில் வைத்து தடுக்கவில்லை. இரண்டுக்கும் நிறைய இடைவெளி இருந்தது. அப்படி இருந்தும் அவருக்கு ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.
 
நாங்கள் 2006-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த போது, இன்ஜமாம் உல்-ஹக் இதே போன்று அவரை நோக்கி பந்து எறியப்பட்ட போது, முகத்தில் படாமல் இருக்க பேட்டை வைத்து தடுத்ததாக கூறிய போதும், அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. மொத்தத்தில் இரு நடுவர்களின் முடிவால் எங்களுக்கு தான் பாதிப்பு.
 
இவ்வாறு டோனி கூறினார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger