News Update :
Powered by Blogger.

இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்! Very worst goverment

Penulis : Tamil on Saturday 5 October 2013 | 23:30

Saturday 5 October 2013

இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்!

by veni
is Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

கூட்டு மின் திட்டங்கள் பற்றி மன்மோகன்-ஹசீனா நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

சமீபத்தில் ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளிடையே எரிசக்தி திட்டங்களை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி நட்புறவு நாடான வங்காளதேசத்துடன் மின் திட்டங்களை தொடங்க இந்தியா முடிவு செய்தது. மேற்கு வங்கத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் வங்காளதேசத்துக்கு வழங்குவது மற்றும் 1300 மெகாவாட் அனல் மின் திட்டத்தை வங்காளதேசத்தில் தொடங்குவது என இரு கூட்டு திட்டங்களை இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

நமது இரு நாடுகளுடைய வளர்ச்சிக்காக இன்று புதிய கூட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதன் மூலம் இரு நாடுகளின் விதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகிறது.

இன்று எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் இந்தியா-வங்காளதேசம் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும். இரு நாட்டு உறவுகளில் ஒரு புதிய பரிமாணத்தை இது கொண்டுவரும். நாடுகளின் நட்புறவிற்கு இது ஒரு மைல் கல்லாக விளங்கும்.

தெற்கு ஆசியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள், பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சியின் மேம்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும். வங்காளதேச மேம்பாட்டிற்காக இந்தியா தொடர்ந்து உதவும்.

தனக்கு போகத்தான் தானம் என்று ஒரு முதுமொழி  உண்டு. ஆனால் இந்த விடயத்தில் மொத்தமாக இந்தியாவிற்குத் திண்டாட்டம… பங்களாதேஷ்க்கு கொண்டாட்டம்!!

The post இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

comments | | Read More...

நிர்வாண பெண்ணுடன் டண்டணக்கா டான்ஸ் ஆடிய கர்நாடக பாஜக தலைவர்கள்

நிர்வாண பெண்ணுடன் டண்டணக்கா டான்ஸ் ஆடிய கர்நாடக பாஜக தலைவர்கள்

by abtamil

பாஜகவின் பிதார் மாவட்ட செயலாளர் பாபுவல்லி மற்றும் ஷிவராஜ் குடேரே ஆகிய இருவர்களும் நிர்வாணமான ஒரு பெண்ணுடன் டண்டணக்க டான்ஸ் ஆடிய காட்சிகள் இன்று கன்னட தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பானது.
ஆனால் அதை இருவருமே மறுத்துள்ளார்கள், இது மார்ஃபிங் செய்யப்பட்ட காட்சி என்று தெரிவித்துள்ளார்கள் மேலும் இது அவர்கள் அரசியல் இமேஜை ஒழிக்க செய்யப்பட்ட சதி என்றும் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் இது பாக்கிஸ்தானி முஜ்ரா வீடியோக்களில் Pakistani Mujra video என்று தெரிய வந்துள்ளது, அந்த வீடியோவில் இருந்த இருவர்களையும் பார்க்க கர்நாடக பாஜக மாவட்ட தலைவர்கள் போல இருந்ததால் கன்னட சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பின. உண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க abtamil செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் லைக் போட்டு இணைந்து கொள்ளுங்கள்.

டிவி9 கன்னடா உட்பட பல சேனல்களும் ரவுண்டு கட்டி ஒளிபரப்பிய இதன் வீடியோக்களை தற்போது நீக்கியுள்ளார்கள்.

ஏற்கனவே கர்நாடக சட்டமன்றத்தில் பாஜக அமைச்சரும், எம்.எல்.ஏ க்களும் தங்கள் ஸ்மார் போன்களில் சபை நடந்து கொண்டிருந்த போது "சீன்" படம் பார்த்தது படம் பிடிக்கப்பட்டு டிவியில் ஒளிபரப்பப்பட்டு பாஜக எம்.எல்.ஏக்களின் மானம் காற்றில் பறந்தது. abtamil ஃபேஸ்புக் பக்கத்தில் லைக் போட்டு இணைந்து கொள்ளுங்கள்.

கர்நாடக பாஜகவுக்கு இந்த கிளுகிளுப்பு சமாச்சாரங்கள் புதிது அல்ல என்பதால் இப்படி ஒரு வீடியோ கிடைத்த உடனே அதன் உண்மை தன்மைகளை முழுவதும் ஆராயாமல் டிவி சேனல்களில் ஒன்று ஒளிபரப்ப எங்கே தங்களுக்கும் டி ஆர் பி ரேட்டிங் போய்விடுமோ மற்ற சேனல்களும் வீடியோவை போட்டு நாறடித்துவிட்டனர்.

Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger