News Update :
Powered by Blogger.

மாணவருக்கு வயாக்ரா கொடுத்து செக்ஸுக்கு வற்புறுத்திய மெக்கானிக் மனைவி!

Penulis : karthik on Sunday 2 October 2011 | 07:09

Sunday 2 October 2011

 
 
மதுரை மெக்கானிக் மனைவியை கொலை வழக்கில் கைதான, பக்கத்து வீட்டு கல்லூரி மாணவர், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
மதுரை மாவட்டம் விரகனூர் அடுத்த கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு எட்டயபுரத்தில் தனியே வசித்து மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.
 
முத்துலட்சுமி, தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முத்துலட்சுமி வசித்து வந்த களஞ்சியம் நகர் வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிலைமான் போலீசார் உடலை கைப்பற்றி, விசாரித்து வந்தனர்.
 
விசாரணையில் முத்துலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் முனீஸ்வரன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிந்தது. மேலும் முனீஸ்வரனுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரித்தனர். இதில் முத்துலட்சுமியை கொலை செய்ததாக முனீஸ்வரன் ஒப்புக் கொண்டார்.
 
இதுகுறித்து முனீஸ்வரன் போலீஸ் வாக்குமூலத்தில், "நான் அழகர்கோவில் சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய எங்களிடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு, பின் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.
 
முத்துலட்சுமியின் மகனும், மகளும் பள்ளிக்கு சென்றவுடன் என்னை அவரது வீட்டின் பின்புற கதவின் வழியாக தினமும் அழைப்பார். மாலையில் குழந்தைகள் பள்ளியில் வீடு திரும்பும் வரை உல்லாசமாக இருப்போம். இதனால் எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
ஒருகட்டத்தில் என்னால் அவருடன் செக்ஸ் உறவு கொள்ள முடியவில்லை. அதையடுத்து அவர் எனக்கு வாயக்ரா மாத்திரைகளை வாங்கி தந்து, அவருடன் தினமும் உறவு கொள்ள வற்புறுத்தினார். தினமும் அவருடன் உறவு கொண்டதில் எனக்கு நரம்பு தளர்ச்சியும், கல்லூரிக்கு செல்லும் ஆர்வமும் குறைந்தது.
 
ஒரு கட்டத்தில் கல்லூரிக்கு செல்வதை அடியோடு விட்டுவிட்டு முத்துலட்சுமியுடன் உறவு கொள்வதே கதி என இருந்துவிட்டேன். 2 பேரும் உல்லாசமாக இருக்க தேவையான பணத்திற்காக, கேபிள் டிவி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கும் வேலைக்கு சென்றேன். அதில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் முத்துலட்சுமியிடமே கொடுத்தேன்.
 
இந்நிலையில் மொத்த வசூல் தொகையாக கிடைத்த 20,000 ரூபாயை அவரிடம் கொடுத்திருந்தேன். அதை திரும்ப கேட்ட போது, என்னிடம் தர மறுத்துவிட்டார். மேலும் அவரிடம் இத்தனை நாட்களாக உல்லாசமாக இருந்ததற்காக அது கழித்து கொள்வதாக கூறினார். 20,000 ரூபாய் பணபாக்கியை குறித்து கேபிள் டிவி உரிமையாளர் எனது பெற்றோரிடம் வந்து கூறிவிட்டனர்.
 
இதனால் எனது பெற்றோருக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சில நாட்கள் பேசாமல் இருந்தோம். அப்போது தரவேண்டிய பணத்தில் 12,500 ரூபாய் மட்டும் திரும்ப தந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் என்னை முத்துலட்சுமி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்தார்.
 
அங்கு சென்றபோது என்னை உறவு கொள்ளுமாறு வற்புறுத்தினார். அப்போது பணம் கேட்டேன். அதற்கு என்னை அவர் தாக்கினார். நான் அவரை திரும்ப தாக்கி கொலை செய்தேன்", என்றார்.
 
இளம் வயதில் தவறான உறவுகளில் சிக்கி வாழ்க்கையை இழந்த கல்லூரி மாணவன் முனீஸ்வரனை போலீசார் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.



comments | | Read More...

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய அமைச்சர் பதவி விலக வேண்டும்: காங்கிரசார் போராட்டம்

 
 
 
அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலகக்கோரி காலாப்பட்டில் சாலைமறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் 60 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவை கல்வி அமைச்சரான கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் ஆள்மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியதாக தகவல் பரவியது.
 
ஆனால் இதனை அமைச்சர் கல்யாணசுந்தரம் மறுத்திருந்தார். இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலகக்கோரி காலாப்பட்டு காங்கிரஸ் கமிட்டியினர் அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் போராட்டம் நடத்த காலாப்பட்டு மெயின் ரோட்டில் இன்று காலை திரண்டு இருந்தனர்.
 
இதனை அறிந்த லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்த திரண்டிருந்த காங்கிரசாரிடம் தற்போது வடக்கு பகுதியில் போராட்டம் நடத்த தடை உள்ளதால் போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
 
இதனால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரசார் அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைமறியலிலும் ஈடுபட முயன்றனர்.
 
இதைத்தொடர்ந்து தடையை மீறி சாலை மறியல் செய்ய முயன்ற காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளான சந்திரசேகர், சிவா, முருகன், மூர்த்தி, ஆடியபாதம் புருஷோத்தமன், வெங்கடேசன் உள்ளிட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.




comments | | Read More...

`ராணா' படம் கைவிடப்பட்டதா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

 
 
 
ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்க, கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில், `ராணா' என்ற பிரமாண்டமான படத்தை தயாரிக்க ஈராஸ் நிறுவனம் திட்டமிட்டது. இதில், ரஜினிகாந்தின் ஒரு ஜோடியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு தொடக்க விழா, கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி, ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது.
 
அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மைலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள்.
 
அவருக்கு, `டயாலிசிஸ்' செய்யப்பட்டது. மேலும் அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டதால், சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு மாத காலம் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், ரஜினிகாந்த் உடல் நிலை தேறியது. அதன்பிறகு அவர் சென்னை திரும்பினார்.
 
இந்த நிலையில், ரஜினிகாந்த் `ராணா' படத்தில் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், ``ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். அந்த படத்தில் ரஜினிகாந்த் நிச்சயமாக நடிப்பார்'' என்று பதில் அளித்தார். ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
 
நேற்று, `ராணா' படம் கைவிடப்பட்டு விட்டதாக மீண்டும் ஒரு தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. `ராணா,' ஒரு வரலாற்று படம். ராஜாக்கள் சம்பந்தப்பட்ட கதை. அதில், ரஜினிகாந்த் குதிரை சவாரி செய்வது போல் பல காட்சிகள் வருகின்றன. ரஜினிகாந்தின் இப்போதைய உடல்நிலை குதிரை சவாரிக்கு இடம் கொடுக்காது என்பதால், `ராணா' கைவிடப்பட்டு விட்டதாகவும், அதற்கு பதில் வேறு ஒரு படம் தொடங்கப்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவியது.
 
ஆனால், இந்த தகவலை `ராணா' படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் மறுத்தது. ``ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, `ராணா' படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது உண்மை. ரஜினிகாந்த் இப்போது நன்றாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது.
 
தினமும் நடைபயிற்சி செய்கிறார். எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலை இன்னும் வலுவான பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் `ராணா' படத்தை கைவிட மாட்டோம்'' என்று ஈராஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 


comments | | Read More...

நடிகர் வடிவேலு பற்றி அவதூறு பேசக்கூடாது: அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு

 
 
 
தாம்பரம் முடிச்சூர் சாலையில் 34 சென்ட் நில விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பழனியப்பனின் மகன் சொக்கலிங்கம் கிரயம் பெற்ற நிலத்தை நடிகர் வடிவேலு அபகரித்துவிட்டார் என்று நில மோசடி புகார் கொடுத்ததாகவும், அதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நடிகர் வடிவேலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பழனியப்பன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்தார். நீதிபதி பெரிய கருப்பையா இந்த வழக்கை விசாரித்து, வங்கி அதிகாரி பழனியப்பனும், அவரது மகன் சொக்கலிங்கம் ஆகிய இருவரும், நடிகர் வடிவேலுவின் பெயரையும், புகழையும் களங்கப்படுத்தும் விதமாக எந்த விதமான பொய்யான தகவலோ, அவதூறான செய்திகளையோ, பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ, வேறு எந்த விதமான எலக்ட்ரானிக் மீடியாக்களுக்கோ கொடுக்கக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.



comments | | Read More...

அண்ணே தெருவுக்கு எப்ப வருவீங்க?-நக்கலடிக்கும் தொண்டர்கள்!

 
 
 
தங்களுக்கு பிடிக்காத தலைவர்களை இரட்டை அர்தத்திதல் தொண்டர்கள் போட்டு தாக்கும் ரவுசு கரூரில் பிரபலமாகி வருகிறது.
 
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தனித்தனியே களம் காண்கின்றனர். இதனால் கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு மவுசு கூடியுள்ளது.
 
தாங்கள் விரும்பிய வேட்பாளர்கள் அமையாததால் கோபமடைந்துள்ள தொண்டர்கள், தங்களது கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, தங்களுக்குப் பிடிக்காத வேட்பாளர்களுக்குப் போன் போட்டு அண்ணே தெருவுக்கு எப்ப வருவீங்க என டபுள் மீனிங்கில் கேட்கின்றனராம். ஏதோ பிரசாரத்திற்கு எப்ப வருவீங்க என்றுதான் தொண்டர்கள் கேட்பதாக நினைத்து ஏமாறும் வேட்பாளர்கள், ரெண்டு நாள்ல வந்துருவோம்ல என்று கூறுகின்றனராம்.
 
இந்தப் பதிலை சக தொண்டர்களிடம் பகிர்ந்து கொண்டு, அண்ணன் இப்ப தான் வேட்பு மனு தாக்கல் செய்தாரு .. ஆனால் நாளைக்கே தெருவுக்கு வந்துருவேனு சொல்றாரு... சரி அவரு வராட்டி நாம கொண்டாந்துவோம் ( ! ) என நக்கல் நையாண்டியாக போட்டு தாக்குகின்றார்களாம்.
 
எப்படியெல்லாம் உக்காந்து யோசிக்காறாங்க பாருங்கப்பா!



comments | | Read More...

சச்சினுக்கு 'பில்டிங்கும் ஸ்டிராங், பேஸ்மென்ட்டும் ஸ்டிராங்'

 
 
சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையிலோ அல்லது அவரது திறமையை குறைத்தோ நான் எந்தக் கருத்தையும் கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட போட்டியில் நடந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டுமே நான் குறிப்பிட்டுக் கூறினேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி.
 
கிரிக்கெட் உலகில் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு வீரர் சோயப் அக்தர். அவர் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் தனது பந்துகளைச் சந்திக்க சச்சின் பயந்தார். அவர் ஒரு முழுமையான வீரர் இல்லை. ஆட்டத்தை எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படி முடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் எரியும் கொள்ளியில் பெட்ரோலை ஊற்றுவது போல இன்னொரு அதிகம் வெறுக்கப்பட்ட வீரரான ஷாஹித் அப்ரிதி பேசியுள்ளார். அவர் கூறுகையில், அக்தர் கூறியது சரிதான். 1999 ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, அக்தரின் பந்தை சந்திக்க பயந்தார் சச்சின். அவருக்கு கால்கள் நடுங்கின. அவர் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தார் என்று கூறியிருந்தார்.
 
இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல முன்னாள், இன்னாள் வீரர்கள் அப்ரிதியின் பேச்சைக் கடுமையாக கண்டித்துள்ளனர். பாகிஸ்தான் வீரரும், சானியா மிர்ஸாவின் கணவருமான சோயப் மாலிக்கும், அப்ரிதியின் பேச்சு மோசமானது என்று வர்ணித்துள்ளார். அக்தரின் கருத்தையும் அவர் கண்டித்துள்ளார்.
 
இதையடுத்து தற்போது அப்ரிதி பல்டி அடித்துள்ளார். தான் சச்சினின் திறமை மற்றும் சாதனைகளை குறைத்துப் பேசவில்லை, மதிப்பிடவில்லை, நடந்ததைத்தான் சொன்னேன் என்று கூறியுள்ளார் அப்ரிதி.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் திறமை மற்றும் அவரது சாதனைகளைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பேசவில்லை. நடந்த ஒன்றைத்தான் சொன்னேன்.
 
1999 டெஸ்ட் போட்டியில், அக்தருக்கு எதிராக மிகவும் அசவுகரியமாக இருந்தார் சச்சின். அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பே அளிக்காமல் அவரை விரைவாக அவுட் செய்தார் அக்தர். அப்போது அவரது கால் நடுங்குவதை நான் பார்த்தேன். இதைத்தான் நான் சொன்னேன். இதை நான் மறுக்கவில்லை.
 
ஆனால் இது அன்று நடந்த சம்பவம்தான். மற்றபடி சோயப் அக்தரை பின்னர் சச்சின் சிறப்பாக சந்தித்து ரன்கள் குவித்ததை உலகமே பார்த்துள்ளது. 2003 உலகக் கோப்பைப் போட்டியின்போது நடந்ததை உலகமேப் பார்த்து வியந்ததை நாம் மறுக்க முடியாது. அந்த ஒரு போட்டியில் மட்டுமே சச்சின் அசவுகரியமாக இருந்தார். இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.மற்றபடி நான் சச்சினை குறைத்து மதிப்பிடவில்லை.
 
சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன். அதை உலகமே அறியும். என்னுடைய அல்லது வேறு எவருடைய நற்சான்றிதழும் அவருக்குத் தேவையில்லை. அவரது சாதனைகளே அவரது திறமையை பறை சாற்றும் என்று கூறியுள்ளார் அப்ரிதி.



comments | | Read More...

அமைச்சரை செருப்பால் அடித்த பாஜக தொண்டர்

 
 
கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான வி.சோமண்ணாவை பாஜக தொண்டர் ஒருவர் தடுத்து நிறுத்தி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு்ததியுள்ளது.
 
நூற்றுக்கணக்கானோர் மத்தியில் நடந்த இந்த சம்பவத்தால் சோமண்ணா பெரும் அதிர்ச்சி அடைந்தார். மாநில தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த தாக்குதலால் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
 
அமைச்சர் சோமண்ணாவைத் தாக்கியவரது பெயர் பி.எஸ்.பிரசாத். இவர் சிவில் காண்டிராக்டர் ஆவார், பாஜகவில் இருக்கிறார். விதான செளதாவில் உள்ள தனது அறையிலிருந்து வெளியே வந்த அமைச்சர் சோமண்ணாவை திடீரென தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பிரசாத். பின்னர் தனது செருப்பை எடுத்து பளாரென சோமண்ணாவை அடித்து விட்டார்.
 
அப்போது அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ந்து போய் விட்டனர். சோமண்ணாவும் அதிர்ச்சி அடைந்து, உனக்கு நான் என்ன செய்தேன், ஏன் என்னை அடித்தாய் என்று கோபமாக கேட்டார்.
 
மேலும் அருகில் இருந்த சோமண்ணாவின் ஆதரவாளர்கள், பிரசாத்தை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து போலீஸார் குறுக்கிட்டு பிரசாத்தைப் பிடித்து அப்புறப்படுத்தி கொண்டு சென்றனர்.
 
இந்த சம்பவத்தால் கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான செளதாவில் பாதுகாப்பு குளறுபடி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இதை பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி மறுத்துள்ளார். பாதுகாப்பில் எந்தக் குளறுபடியும் இல்லை. முதல்வரை சந்திப்பதற்கான அனுமதிக் கடிதத்துடன் பிரசாத் வந்துள்ளார். இதனால்தான் அவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அனுமதித்துள்ளனர். அவரும் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் எழவில்லை என்றார் அவர். பின்னர் அமைச்சர் சோமண்ணாவை சந்தித்தார் மிர்ஜி.
 
இந்த சம்பவம் குறித்து சோமண்ணா கூறுகையில், நான் அந்த நபரை 2 முறை மட்டுமே இதுவரை சந்தித்துள்ளேன். இது எனது அலுவலகத்திற்கு அவர் 2வது முறையாக வந்துள்ளார் என்று நினைக்கிறேன். முன்பு ஒரு முறை அவர் பரிந்துரைக் கடிதம் கேட்டிருந்தார். நானும் கொடுத்தேன். ஆனால் ஏன் என்னை அடித்தார் என்பதுதான் தெரியவில்லை.
 
விதான செளதாவில் போலீஸார் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என நான் கருதுகிறேன் என்றார் அவர்.
 
மூத்த அரசியல்வாதியும், அமைச்சருமான சோமண்ணாவை பாஜகவைச் சேர்ந்தவரே செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



comments | | Read More...

பத்திரிகைகளின் அவதூறு செய்திகளுக்கு குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை- கருணாநிதி

 
 
வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திமுக சார்பில் ரூ. 15,000 நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர்கள் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி எம்.பி தாமரைச் செல்வன் தலைமையில் நிதியுதவி அளிக்க திமுக குழுவினர் சென்றனர். ஆனால் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள வாச்சாத்தி கிராமத்தினர் மறுத்து விட்டனர்.
 
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
 
வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட ஏழைப்பெண்கள் 18 பேருக்கு திமுக அறக்கட்டளை சார்பில் வழங்கிய ரூ.2.70 லட்சம் பற்றிய செய்தியை பத்திரிகைகள் வெளியிடாவிட்டாலும், அவர்கள் அந்த தொகையை வாங்க மறுத்துவிட்டார்கள் என்ற செய்தியை சில பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் இதுவரை திமுக உதவி செய்யாமல் இப்போது உதவி செய்வதற்காக அந்த பெண்கள் அதை வாங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
 
வாச்சாத்தி மக்களுக்கு ஏற்கனெவே திமுக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு 34 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்போது வாங்க மறுக்கிறார்கள் என்ற ஒரு செய்தியை வெளியிடுவது அந்தப் பத்திரிகைகளுக்கு மனத் திருப்தி என்றால், அதிலே நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை.
 
இதேபோல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டோருக்கு அக்டோபர் 2006ல் ரூ.20 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 2007ல் ரூ.1.80 கோடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சிவபுண்ணியம் சட்டப்பேரவையிலேயே வரவேற்றுப் பேசி இருக்கிறார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.



comments | | Read More...

ராஜீவ் செய்த கொடுமைகளை மக்களிடம் சொல்வோம்-வைகோ

 
 
மூன்று பேரையும் தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அப்படி நடந்தால், நாங்கள் தெருத் தெருவாக சென்று ராஜீவ் அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம் என்பதை மத்திய அரசுக்கு எச்சரிக்கிறோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி காந்தி பிறந்த நாளான இன்று 3 தமிழர் உயிர் காப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.
 
காயிதேமில்லத் கல்லூரி அருகே நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வைகோ தொடங்கி வைத்துப் பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:
 
தமிழகத்தில் மரண தண்டனையை முற்றாக ஒழிக்கவும், மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தவும், இன்று அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில் உண்ணாவிரத அறப்போராட்டம் அண்ணன் நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதத்தை துவக்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
 
137 நாடுகளில் தூக்கு தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. ''தூக்கு தண்டனை என்பது திட்டமிட்டு கொலை செய்வதற்கு சமம்'' என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யரே தெரிவித்துள்ளார். ''பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் கூடாது'' என்று அண்ணால் காந்தியடிகள் சொல்லியுள்ளார். ஆகவே, தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும்.
 
ஆகஸ்ட் 30 அன்று தூக்கு தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த நாளில் கட்சி பாகுபாடின்றி தமிழக மக்கள் அனைவரும் பெரும் திரளாக வந்திருந்தனர். எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்டிருக்கும். அவ்வளவு அமைதியாக காந்திருந்தனர். ஆனால், இந்த வழக்கை சென்னையில் நடத்தாமல், வேறு மாநிலத்தில் நடத்த மனு செய்துள்ளார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.
 
நரேந்திர மோடிக்கு தீர்ப்பு வந்தபோது கூட, பட்டாசு வெடித்து கோஷம் எழுப்பி கொண்டாடினர். இது தவறு இல்லையா. ஒரு உயிருக்காக பல்லாயிரம் உயிர்களை கொன்று குவித்தீர்களே. அதற்கு என்ன பதில். இந்த மூன்று தமிழர்களுக்கு அந்த சம்பவத்தில் சம்பந்தமே கிடையாது என்று நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.
 
ஆனால் இந்த மூன்று பேரையும் தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அப்படி நடந்தால், நாங்கள் தெருத் தெருவாக சென்று ராஜீவ் அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம் என்பதை மத்திய அரசுக்கு எச்சரிக்கிறோம். தூக்கு கயிறை அறுத்தெறிவோம் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. தூக்கு தண்டனையை ரத்து செய்தே தீர வேண்டும்.
 
குடியரசுத் தலைவர் தனியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசு என்ன சொல்லுகிறதோ, அதைத்தான் குடியரசுத் தலைவர் செய்வார். இதற்கு பின்னால், சோனியா இருந்து இயக்குகிறார். அவருக்கு தெரியாமல் ஒரு இம்மியளவும் நகராது. மத்திய அரசு அவர்களை தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று சொன்னால், தமிழக அரசு அதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தமிழக அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் போட்டு அதை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதை அவர் குடியரசுத் தலைவர் அனுப்புவார். நிராகரித்த மனுவை திரும்ப ஏற்பதில் குடியரசுத் தலைவருக்கு எந்த தடையும் கிடையாது. அதனால் தமிழக அரசு இந்த மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ய முன்வர வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.





comments | | Read More...

'ஷாக்' அடிக்கும் மின்வெட்டு- கவலையில் அதிமுக வேட்பாளர்கள்!

 
 
தொடரும் அதிகநேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் மக்களின் ஓட்டு அரசுக்கு எதிராக திரும்பும் என அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்
 
முந்தைய திமுக அரசின் தோல்விக்கு மிகவும் முக்கிய காரணமாக மின்வெட்டு அமைந்தது. தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும்முன் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என கூறி ஓட்டு வாங்கி வெற்றி பெற்றது. ஆனால் தற்போது அதிமுக அரசு பதவியேற்று 4 மாதங்களாகியும் மின்வெட்டை சீர் செய்வதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எண்ணும் அளவிற்கு தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
 
கடந்த திமுக ஆட்சியிலாவது சொல்லி விட்டு மின்சாரத்தை ரத்து செய்தனர். ஆனால் அதிமுக ஆட்சியில் சொல்லாமல் கொள்ளாமல் அவ்வப்போது மின்வெட்டு அமலாவதால் மக்கள் குமுறலுடன் உள்ளனர்.
 
மேலும் தற்போது அக்னி நட்சத்திர வெயிலையும் மிஞ்சும் அளவிற்கு வரலாறு காணாத வெயில் கடந்த பல தினங்களாக காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே தலைகாட்டவே மக்கள் பயப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
 
உள்ளாட்சித்தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் இரவு, பகலாக ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதால் அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மின்தடை மக்களை பாடாய்படுத்தியது. ஒரு நாளுக்கு 2 மணி நேரம், 3 மணி நேரம் மின்வெட்டு சர்வ சாதாரணமாக அமல்படுத்தப்பட்டது. மின்வெட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அப்போதைய அரசால் முடியவில்லை.
 
சட்டசபைத் தேர்தலில் அரசுக்கு எதிரான வலுவான பிரசாரமாக மின்வெட்டு பிரச்னை இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டு பிரச்னை ஓரளவுக்கு தணிந்தது. எனினும் ஒரு நாளுக்கு இரு மணி நேர மின்தடை மட்டும் தொடர்ந்து அமலில் இருந்தது.
 
உள்ளாட்சித்தேர்தல் நெருங்கி வரும் தற்போதைய சூழ்நிலையில் நகரங்கள், இதர பகுதிகளில் ஒரு நாளைக்கு பகலில் 3 மணி நேரம், இரவு இடைவெளி விட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் என 5 மணி நேரத்துக்கு குறையாமல் மின்வெட்டு செய்யப்படுகிறது. கிராமங்களில் மும்முனை மின்சப்ளை இன்றி விவசாயப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
மழை இல்லாமல் மின் உற்பத்தி குறைந்துவிட்டது. வழக்கமாக ஆனி துவங்கி புரட்டாசி மாதம் வரை காற்றாலைகள் மூலம் மின்உற்பத்தி இருக்கும். இந்த ஆண்டு காற்றாலைகள் மூலம் போதுமான மின் உற்பத்தி இல்லை. தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துவதால் மின்நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. .
 
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு நாளுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது மக்களை அவதிக்குள்ளாக்கும் வகையில் இரவிலும் மின்தடை செய்யப்படுவதால் உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பாதிக்குமோ, ஷாக் அடிக்குமோ என அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 
பழைய ஆட்சிக்கு வந்துவிட்டோமோ என்று எண்ணும் அளவிற்கு மின்வெட்டு அமலில் இருப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் கஷ்டப்படுகின்றனர். உடனடியாக 3 மணிநேர மின்வெட்டை மாற்றி அமைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மின்வெட்டை முன்னறிவிப்புடன் நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger