News Update :
Powered by Blogger.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: மின் வெட்டு நேரம் 1 மணியாக குறைப்பு

Penulis : karthik on Thursday 3 May 2012 | 23:57

Thursday 3 May 2012




தமிழ்நாட்டுக்கு கிடைத்து வந்த மின்சாரத்தை விட, 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் 2 மணி நேரமும், மற்ற ஊர்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது.

கிராமங்களில் பல மணி நேரம் மின்வெட்டு இருந்து வந்தது. மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ் நாட்டுக ்கே தர வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் மொத்த நிறுவு திறன் 6 ஆயிரத்து 696 மெகாவாட். இதில் இருந்து அதிகபட்ச சராசரியாக 3 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் பெறலாம். காற்று வீசும் சீச� ��ில் இந்த மின்சாரம் கிடைக்கும். தற்போது காற்று சீசன் தொடங்கி விட்டது. சில தினங்களுக்கு முன்பு சராசரியாக 800 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி ஆனது. தற்போது இந்த மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. கடந்த 1-ந்தேதி காற்றாலை மின் உற்பத்தி சராசரி 1400 ஆக அதிகரித்தது.

தென் மாவட்டங்களில் ஓரளவு மழையும் பெய்தது. எனவே மின்சார தேவை குறைந்து மின் உற்பத்தி அதிகமாக இருந்ததால் அன்று தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு இல்லை. தொடர்ந்து 2 நாட்களுக்கு இந்த நிலை நீடித்தது. நேற்று காற்றாலை மூலமாக 2500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்தது. என்றால ும், சராசரியாக 1800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி ஆனது. எனவே, தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு குறைக்கப்பட்டது.

நேற்று தமிழ்நாட்டில் மழை இல்லை. வெப்பத்தின் அளவும் அதிகரித்தது. இதனால் மின்சார தேவை அதிகமானது. இதை கருத்தில் கொண்டு நேற்று சென்னை மற்றும் அனைத்து நகரங்களிலும் மின்வெட்டு 1 மணி நேரமாக குறைக்கப்பட்டது. இன்றும் காற்றின் வேகம் நன்றாக உள்ளது. எனவே காற்றாலை மின்� ��ாரம் சராசரியாக 1800 மெகாவாட் அளவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றும் 1 மணி நேரமே மின்வெட்டு இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிராமங்களில் பல மணி நேரம் இருந்த மின்வெட்டையும் இப்போது சராசரியாக ஒரு மணி நேரமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேர மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்றாலை அமைத்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. காற்றின் வே� �மும், வீசும் நேரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காற்றாலை மின்சார உற்பத்தி விரைவில் 3 ஆயிரம் மெகாவாட்டை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது. எனவே மின் தேவை மேலும் அதிகரிக்கும். இதை ஈடு செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகமாகும். தற்போது மின் தேவை மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு ஏற்ப மின் வெட்டு குறைக்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழ ்நாடு முழுவதும் மின் வெட்டு குறைப்பு பற்றிய முறையான அரசு அறிவிப்பு வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



comments | | Read More...

பில்லா-2 VS விஸ்வரூபம் VS துப்பாக்கி




  2012-ம் ஆண்டின் கோடைகாலத்தில் எந்த முக்கிய ஹீரோக்களின் படமும் வெளிவரவில்லை என்றாலும் அவர்கள் படங்களின் போஸ� ��டர்களும், டிரெய்லர்களும் வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றன.

சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் டிரெய்லரும், போஸ்டரும் ஒரு கலக்கு கலக்கினாலும், பில்லா-2 படத்தின் பாடல்கள் வெளியானதும் பல ரசிகர்கள் ஒரே நேரத்தில் அவற்றை டவுன்லோடு செய்ய முற்பட்டதால் இணையதளங்கள் ஸ்தம்பித்துவிட்டன.


இதே போல் 100 கோடி ரூபாய் பட்ஜட்டில் உருவான கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் போஸ்டரும் 30 நொடி முன்னோட்டமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போஸ்டரும் இதே சமயத்தில் வெளியா� �ி பல ரசிகர்களின் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் வால்பேப்பராகவும் மாறிவிட்டன.

இதில் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட துப்பாக்கி, விஸ்வரூபம் படங்களின் போஸ்டர்கள் ஏப்ரல் 30-ம் தேதியே வெளியாகின. இவை உண்மையானவை தானா என ரசிகர்கள் குழப்பமடைந்த� �ர். கமல்ஹாஸனை தொடர்புகொள்ள முடியாமல் போனாலும், ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டர் இணையதளத்தில் இருப்பதால் முருகதாஸிடம் இந்த போஸ்டர் உண்மையானது தானா என கேள்விகள் பறந்தன.

முருகதாஸ் அது உண்மையான துப்பாக்கி போஸ்டர் தான் என்று உறுதிபடுத்திய பின்னர் தான் ரசிகர்கள் மனம் அமைதியானது. கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியான எதிர்பார்ப்பு நிறைந்த மூன்று படங்களையும் பார்த்தால் அதில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படம் தனியாக இருக்கிறது. அஜ� ��த் நடித்துள்ள பில்லா-2, கமல் நடித்துள்ள விஸ்வரூபம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் நவீன முறையில்(மோஷன் போஸ்டர் டெக்னாலஜி) உருவாக்கப்பட்டுள்ளன.

மோஷன் போஸ்டர் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை எடிட் செய்வதும், வீடியோவில் பயன்படுத்துவதும் கடினமானதாம். அவ்வாறு பயன்படுத்தும் போது அவற்றின் தரம் குறைந� �து விடும் என்கிறார்கள் கிராஃபிக்ஸ் டிஸைனர்கள்.

துப்பாக்கி படத்தின் போஸ்டர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்ட சாதாரண முறையிலேயே உருவாக்கப்பட்டிருப்பதால் அவற்றை எடிட் செய்வது எளிது என்கிறார்கள்.

 மோஷன் போஸ்டர் டெக்னாலஜி முறை இதுவரை பிரபல ஹாலிவுட் படங்களிலும், ஒரே ஒரு இந்தி படத்திலும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.



comments | | Read More...

நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இல்லை- மதுரை ஆதீனம்




நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இல்லை. அதேபோல வெளிநாட்டுக்குப் போகப் போவதும் இல்லை. ஆதீன மடத்தில்தான் நான� �� இருக்கிறேன் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளராக உள்ள குருசாமி தேசிகர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,

தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல� �வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி நடந்து கொண்டுள்ளார்.

தற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எ டுத்த முடிவு அல்ல. அந்த முடிவை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர்.

இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின ்பற்றப்படவில்லை.

இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத ்துள்ளார்.

அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக த� �ரிகிறது. எனவே மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹரிபரந்தாமன் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,

மதுரை ஆதீனமான நான் நித்தியானந்தா உள்பட யாருடைய கட்டுப்பாட்டிலோ, சட்டவிரோத காவலிலோ இல்லை. என் தொடர்பாக இதுபோன்ற ஒரு மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இ� ��்லை. விளம்பரம் பெறும் நோக்கத்தில்தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான் தினந்தோறும் ஆதீன மடத்தில் பக்தர்களுடனும், சீடர்களுடனும் கலந்துரையாடி வருகிறேன். நேற்று கூட பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினேன். ஆனால் மனுதாரர் நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். அதில் இருந்தே அவரது உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது.

அடுத்த ஆதீனம் யார் என்பதை அறிவிக்க எனக்கு அதிகாரமும், தகுதியும் உண்டு. ஆதீனம் இதுபோலத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு மனுதாரருக்கு அதிகாரம் இல்லை.

அதேபோல என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறுவதும் உண்மையல்ல. அதுபோன்ற எந்த முடிவும் இல்லை. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



comments | | Read More...

தி.மு.க. புறக்கணிப்பால் புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிட காங். விருப்பம்




புதுக்கோட்டை தொகுதியில ் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.  முத்துக்குமரன் கார்  விபத்தில்  மரணம் அடைந்ததையொட்டி அங்கு வருகிற ஜுன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க.   கூட்டணியில் அங்கம் வகித்து இருந்ததால் தங்களுக்கு மீண்டும்  போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்  எதிர்பார்த்து இருந்தனர்.
 
ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயலலிதா அறிவித்ததால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் மற்ற கட்சிகளின்  ஆதரவோடு  இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேர்தலை சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள்   கருதினர். இதற்கு ஏற்றார்போல் இந்திய  கம்யூனிஸ்டு  கட்சி போட்டியிட்டால்   மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கும் என்று அறிவித்தது.
 
ஆனால் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து விட்டது. எனினும் இந்த  தேர்தலில்  தி.மு.க. உறுதியாக  போட்டியிடும் என்று நம்பகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலை புறக்ககணிக்க  போவதாக தி.மு.க.  தலைவர்  நேற்று  அறிவித்தார். இந்த  அறிவிப்பால் அ.தி.மு.க.வினர் வரலாறு காணாத வெற்றி பெறல� �ம் என்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளரை  விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் உள்ளனர். இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சி அறிவித்து உள்ளது. கடந்த தேர்தலின் போது பாரதீய ஜனதா வேட்பாளர் பழ.செல்வம் வெறும்  1748  வாக்குகள் மட்டும்  பெற்றிருந்த� ��ர். எனவே  அந்த  கட்சியால் பெரிய அளவில் போட்டியை ஏற்படுத்த முடியாது.
 
திருச்சி வந்த மத்திய மந்திரி ஜி.கே. வாசன் புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின்  நிலைப்பாட்டுக்கு பின்னர் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது தி.மு.க. இந்த தேர்தலின் இருந்து விலகி கொண்டது. ஏற்கனவே இந்த தொகுதியில் 1967, 71, 77, 80, 84, 91 என 6 தேர்தல்க� �ில் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது.
 
இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலை தி.மு.க. புறக்கணித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.  ஆனால்  கட்சி தலைமை  அறிவிக்கும் முடிவை   எதிர்பார்த்து காத்திருக்கிறோம்   என்று மாவட்ட  நிர்வாகி  ஒருவ ர் தெரிவித்தார்.




comments | | Read More...

தேசிய விருதுகள் வழங்கும் விழா: ’சிறந்த நடிகை’ விருது பெற்றார் வித்யாபாலன்




59-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கின� �ர். விழாவில் வங்காள சினிமா பிரபலம் சௌமித்ரா சாட்டர்ஜிக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்துக்கான விருது 'தியோல்', 'பையாரி' ஆகிய இரண்டு மராத்திய படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான விருது 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு வழங்கப்பட்டது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைக ் கூறும் இப்படத்தில் வித்யாபாலன் சில்க் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். விருது விழாவில் வித்யாபாலன் தனது பெற்றோருடன் கலந்துகொண்டு விருது வாங்கினார்.

'தியோல்' படத்தை இயக்கி, அதில் நாயகனாக நடித்த கிரிஷ் குல்கர்னி சிறந்த நடிகர், சிறந்த வசன எழு� ��்தாளர் ஆகிய விருதுகளைப் பெற்றார்.  குர்விந்தர் சிங் இயக்கிய பஞ்சாபி மொழிப் படமான 'அன்கி கோரே ட டான்' படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான 'தங்கத்தாமரை' விருது வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த பஞ்சாபி மொழிப் படம் ஆகியவற்றுக்கான விருதுகளும் 'அன்கி கோரே ட டான்' படத்துக்கு வழங்கப்பட்டது.



comments | | Read More...

இந்திய சினிமாவிற்கு இன்று 100-வது பிறந்தநாள்




இந்தியர்களையும் சினிமா வையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியர்களின் பொழுது போக்கில் முக்கிய பங்காற்றுவது சினிமாவே. சினிமா உபகரணங்கள் போன்றவை எல்லாம் ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்பாக இருந்தாலும், உலகளவில் ஆண்டுக்கு அதிக சினிமா படங்களை வெளியிடுவதில் இந்தியர்களே முன்னணியில் உள்ளனர். 
சினிமா டிக்கெட்டுகளின் விற்பனை, மற்றும் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில், இந்திய சினிமாத்துறை உலகிலேயே மிகப்பெரியது ஆகும்.  ஆசியா-பசிபிக் பகுதியில் சினிமா பார்ப்பவர்களில் 73 சதவீதம் அளவு இந்தியர்களே ஆவர்.
 
சினிமாவிற்கான இந்திய சென்சார் போர்டு கொடுத்துள்ள அறிக்கையின் படி ஒவ்வொரு காலாண்டுக்கும் இந்தியாவின் மக்கள் தொகைக்குச் சமமான அளவினர் சினிமாவிற்க்குச் செல்கின்றனர்.
 
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, வங்காள மொழி ஆகிய மொழிகளில் பெரும் திரைப்படத்துறைகள் செயல்படுகின்றன. இந்திய சினிமாத்த� ��றை உலகிலேயே அதிகளவில் சினிமா படங்களை வெளியிடும் சினிமாத் துறைகளில் முதல் இடத்தில் உள்ளது.
 
இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி சினிமா அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமாட்டோகிரபி என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது.
 
1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.
 
இவற்றிற்குப் பிறகு முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா இதே மாதம், இதே தேதி, கடந்த 1913-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் இந்திய சினிமாத்துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே ஆவார்.
 
வங்கமொழியில் உருவான இப்படம் ஊமைப்படமாக வெளியானது. இப்படத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்திருந்தனர். இப்படத்தின் முதல் காட்சி அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 7.30 வரை திரையிடப்பட்டிருக்கிறது. அப்போதே இப்படத்தை தினசரி 4 காட்சிகள் ஓ� ��்டியிருக்கிறார்கள்.
 
இன்றைய முழுநீளப்படங்களின் முன்னோடிப் படமான 'ராஜா ஹரிச்சந்திரா' வெளியாகி இன்றோடு 100 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.



comments | | Read More...

அடுத்த படம் குறித்து அஜீத் !




பில்லா 2 படத்துக்குப் பிறகு தான் அடுத்து நடிப்பது, ஏஎம் ரத்னம் � ��யாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கும் படம்தான் என்பதை உறுதி செய்தார் நடிகர் அஜீத்.

அஜீத்தின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படம் பில்லா. இந்தப் படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இப்போது தயாரிப்பில் உள்ள பில்லா 2 படத்தை இயக்கவிருந்தவர் விஷ்ணுவர்தன்தான். ஆனால் சில காரணங்களால் படம் சக்ரி டோலெட்டி கைக்குப் போனது.

இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படம் குறித்த யூகங்கள் பல வெளிவரத் தொடங்கிவிட்டன.

இதுகுறித்து சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அஜீத் கூறுகையில், "ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன்.

இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் ஆர்யாவும் நடிக்க உள்ளார். இது மங்காத்தா படம் போல அமையும். எனது வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார் அஜீத்.

விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு, விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளேன்," என்றார்.



comments | | Read More...

பெங்களூர் அடுக்குமாடி வீட்டில் விபச்சாரம்- நடிகை சனா கான் கைது!!




பெங்களூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மும்பையைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான சனா கான், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் கோரமங்களா 6-வது பிளாக்கில் விவி நகரில் உள்ள அனிஷா மெடோஸ் அபார்ட்மெண்ட்டில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் வாடிக்கையாளர் போல சென்று விபசார புரோக்கர்களை அணுகினர். அவர்கள் மூலம் சில போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றனர். அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.

அதில் நடிகை ஒருவர் இருப்பதையும் தெரிந்து கொண்ட போலீசார், வெளியில் காத்திருந்த தனிப் படைக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் அதிரடியாக அந்த வீட்டுக்குள் புகுந்து விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்தனர்.

அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட நடிகை சனா கானும் சிக்கினார். சனா கானுடன் விபசாரத்தில் ஈடுபட்ட உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த காலிதா (28), நிகிதா ஜோசப் (21), இவர்களது மேன� �ஜரான ராஷ்மி, புரோக்கர்களான சமீர், கவிராஜ், வினய்குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இரு புரோக்கர்களான சிவப்பிரகாஷ், உஸ்மத் ஆகியோர் தப்பிவிட்டனர்.

இந்த வீட்டில் இருந்து ரூ. 40,000 பணம், 2 லேப்டாப்கள், ஆபாசபட சி.டி.க்கள், கேமராக்கள், 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சில பணக்கார வாடிக்கையாளர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை படம் பிடித்தும் வீடியோ எடுத்தும் வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியும் இவர்கள் பணம் பறித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சனா கானுக்கும் தமிழ் நடிகை சனா கானுக்கும் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம்; ஜெனிவாவில் சுவிஸ் பிரதம சங்கநாயக்கருடன் BRN அமைப்பு சந்திப்பு! சுமூக தீர்வுக்கு முயற்சிப்பதாக உத்தரவாதம்!!



Thursday ,May, 03, 2012
ஜெனிவா::இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜெனிவா நகரில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த விகாரையின் பிரதம வி காராதிபதியும் சுவிற்சலாந்தின் பிரதம சங்கநாயக்கருமான மதிப்பிற்குரிய தவலம தம்பிக்க தேரர், ஜெனிவாவில் இயங்கும் Brotherhood Rights Network எனும் அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
ஜெனிவா பௌத்த நிலையத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதம சங்கநாயக்கர் மதிப்பிற்குரிய தவலம தம்பிக்க தேரர் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

Brotherhood Rights Network அமைப்பின் தலைவர் முயீஸ் � ��ஹாப்தீன் மற்றும் அதன் பிரதித் தலைவரான அஹ்சன் ஜுனைதீன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்டு அதன் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இந்நிலையில் அதனைப் பாதுகாப்பதற்கும் அதன் மூலம் இன ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜெனிவா சர்வதேச பௌத்த வ� ��காரையின் பிரதம விகாராதிபதி தவலம தம்பிக்க தேரரிடம் வலியுறுத்திய இவர்கள் அதற்கு அவரது ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த தம்பிக்க தேரர் துரதிருஷ்டவசமாக இடம்பெற்ற மஸ்ஜித் தாக்குதல் சம்பவத்திற்கு கவலை வெளியிட்டதோடு இந்த விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தம்புள்ளை ரங்கிரி விகாராதிபதி மற்றும் அரச உயர் மட்டத்தினரு டன் இது தொடர்பாக தான் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்ததோடு அதன் மூலம் நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

இந்த நல்லெண்ண சந்திப்பும் கலந்துரையாடலும் மிகவும் திருப்திகரமாக இடம்பெற்றதாக Brotherhood Rights Network அமைப்பின் தலைவர் முயீஸ் வஹாப்தீன் ஜெனிவாவில் இருந்து தெரிவித்தார்.


http://worldtamilnews7.blogspot.com





comments | | Read More...

மதுரை ஆதீனம் மடத்தில் தங்கியிருந்த இளம் பெண் வைஷ்ணவி மாயம்?




மதுரை ஆதீன மடத்தில் தங்கியிருந்த வைஷ்ணவி என்ற இளம் பெண்ணைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர் கடத்தப்பட்டாரா அல்லது எங்காவது போய் விட்டாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இதுவரை எந்தவிதமான மெகா சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்த மதுரை ஆதீனம் இன்று அல்லோகல்லப்பட்டுக் கிடக்கிறது. நடக்கக் கூடாது நடந்து விட்டதாக பக்தர்கள் கருதுகின்றனர். பெரும் சர்ச்சையில் மாட்டியுள்ள மதுரை ஆதீனத்தில் தற்போது புதிததாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்த ஆதீனத்தில் தங்கியிருந்த வைஷ்ணவி என்ற இளம் பெண்ணைக் காண வில்லை என்று புதுப் பரபரப்பு கிளம்பியுள்ளது. இவரை யாரேனும் சிறை வைத்துள்ளனரா என்ற கேள்வியும் பரபரப்பாக பரவி வருகிறது.

ஆதீன மடத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கீர்த்திகா, செல்வி என இரண்டு பேர் சில மாதங்களுக்கு முன்பு சமையலுக்காக வந்தனர். இவர்களை ஆளுக்கு ஒரு ஊரில் மதுரை ஆதீனம் தங்க வைத்துக் கவனித்து வந்தாராம்.

இதேபோல ஆதீனத்திற்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் வைஷ்ணவி. இவர் தஞ்சை மாவட்டம் கச்சனத்தைச் சேர்ந்த இளம் பெண். இவருடன் இவருடைய தங்கை கஸ்தூரியும் இங்கு வந்து சேர்ந்தார். வைஷ்ணவியின் வருகைக்குப் பின்னர் அவரது கைதான் மடத்தில் ஓங்கியிருந்ததாம்.

இவர்களுக்காக பெருமளவில் மதுரை ஆதீனம் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தவரான வைஷ்ணவியை இப்போது மடத்தி்ல காணவில்லையாம். சமீபத்தில்தான் இவர்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதீனத்தின் உதவியாளராக செயல்பட்டு வந்தார் வைஷ்ணவி. இவர் எங்கு போனார் என்பது தெரியவில்லை என்கிறார்கள். போலீஸிலும் இதுதொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் போகவில்லையாம். ரகசியமாக அவரை மடத்தினரே தேடி வருவதாக கூறப்படுகிறது.

அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது சிலரால் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவரே உயிருக்கோ அல்லது வேறு எதற்கோ பயந்து தலைமறைவாகியிருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

வைஷ்ணவி தங்களது வீட்டுக்கு வரவில்லை என்றும் அவர் மடத்தில்தான் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் மடத்தில் அவர் இல்லை என்று கூறுகிறார்கள். வைஷ்ணவியிடம் சில ரகசியங்கள் இருக்கலாம் என்றும் அதை தெரிந்து கொண்டவர்களால் ஆபத்து ஏற்படும் என்று பயந்து அவர் தலைமறைவாகியிருக்கலாம் அல்லது அந்த ரகசியத்தை வைஷ்ண� �ி வெளிப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்டவர்கள் அவரை சிறை வைத்திருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மடத்தில் இப்படியா அடுக்கடுக்கான சோதனைகள்...



comments | | Read More...

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை!




மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு கடந்த 13 நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த சட்டிஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அலெக்ஸ் பால் மேனன் இன்று பிற்பகலுக்கு மேல் விடுவிக்கப்பட்டார். அவர் தற்போது வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் சுக்மா நகருக்குச் செல்லவுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் ராய்ப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை பிபிசிக்கு மாவோயிஸ்டுகள் அளித்த அறிக்கையில், மே 3ம் தேதி கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை, தங்களுடன் சட்டிஸ்கர் மாநில அரசு சார்ப� �ல் பேச்சு நடத்திய இரண்டு தூதுவர்களிடமும் ஒப்படைக்கவிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இன்று காலை அரசுத் தரப்புக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தூதர்களாக செயல்பட்ட பி.டி.சர்மா மற்றும் பேராசிரியர் ஹர்கோபால் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிச் சென்றனர்.சிந்தால்னார் என்ற இடத்திற்கு அவர ்கள் முதலில் சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் டட்மெத்லா என்ற இடத்திற்குச் சென்றனர். இது மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியாகும்.

இங்குதான் கலெக்டரை அவர்கள் சிறை பிடித்து வைத்திருந்தனர். அங்கு சென்ற பின்னர் இரு தரப்பும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் பிற்பகலுக்கு மேல் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை தூதர்களிடம் மாவோயிஸ்ட் தலைவர்கள் ஒப்படைத்தனர். அப்போது கிராமப் பழங்குடியின மக்கள் பெருமளவில் திரண்டிருந்தத ாக கூறப்படுகிறது.

இதையடுத்து கலெக்டருடன், அரசுத் தூதர்கள் வனப்பகுதியிலிருந்து வெளியேறினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் சிஆர்பிஎப் முகாமுக்குச் செல்லவுள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சுக்மா மாவட்டத் தலைநகர் சுக்மாவுக்கு� �் செல்கின்றனர். பின்னர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு அலெக்ஸ் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு முதல்வர் ரமன் சிங்குடன் இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் அலெக்ஸ் பங்கேற்பார் என்று தெரிகிறது.

ஏப்ரல் 21ம் தேதி அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார். 13 நாள் வனவாசத்திற்குப் பி்ன்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger