News Update :
Home » » கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை! Srilanka train news

கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை! Srilanka train news

Penulis : Tamil on Wednesday 2 October 2013 | 02:48

கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை!
by abtamil
Tamil newsToday,

கொழும்பு – கிளிநொச்சி இரு வழிப் போக்குவரத்தில் கடந்த மாதம் முதல் ஈடுபட்டு வருகின்ற இரவு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை நேற்று இடம்பெற்று உள்ளது.

கிளிநொச்சி ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி ரயில் பயணித்துக் கொண்டிருந்தபோது 150000 ரூபாய் ரொக்கப் பணம், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.

பொகவந்தலாவையை சேர்ந்த நால்வரே பாதிக்கப்பட்டவர்கள். ரயிலில் இவர்களுடன் கதைத்து வேறு இருவர் நெருக்கமாயினர். நால்வருக்கும் குடிக்க மென்பானம் கொடுத்து இருக்கின்றனர். இதை குடித்த பிற்பாடு நால்வரும் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு தூங்கிப் போனார்கள்.

இவர்களின் உடைமையில் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

பொலிஸார் கொள்ளையர்கள் இருவரையும் கண்டு பிடிக்க புலனாய்வுகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.

Show commentsOpen link

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger