நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish
பாட்னா, அக். 27-
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக பீகார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் குறித்து மோடி கூறியதாவது:-
உனது நண்பர் பாரதீய ஜனதாவை விட்டு ஏன் சென்றார் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். குரு ஜெயப்பிரகாஷ் நாராயணன், சமூக சீர்திருத்தவாதி ராம் மனோகர் லோஹியாவை யார் முதுகில் குத்துகிறார்களோ, அவர்கள்தான் நீண்ட கால நண்பர்களாகிய பாரதீய ஜனதாவை விட்டு எளிதில் செல்ல முடியும்.
முதல் மந்திரி நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பீகார் மக்களை காட்டிக்கொடுத்து விட்டார். இவர்கள் காங்கிரசுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
1999-ம் ஆண்டு அதிகப்படியான எம்.எல்.ஏ.-க்கள் எங்களுக்கு இருந்தும் நிதிஷ்குமார் தலைமையை ஏற்க எங்களது கட்சி முதலமைச்சர் பதவியையே தியாகம் செய்தது. அப்போது நிதிஷ் குமாரின் தலைமையை பாரதீய ஜனதா ஏற்றது.
பீகார் மக்களின் நலனுக்காவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்து ஐக்கிய ஜனதா தளத்துடன் பாரதீய ஜனதா இணைந்தே செயல்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
...
shared via
Post a Comment