ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காட்டுத்தீ: ஒருவர் பலி 1000 வீடுகள் எரிந்து நாசம் Forest wildfires in Australia man dead 1000 house fire
மெல்போர்ன், அக். 18–
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வனப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 15 இடங்களில் காட்டுத்தீ பிடித்துள்ளது. காற்று வேகமாக வீசுவதால் தீ 'மளமள' வென பரவி கொளுந்துவிட்டு எரிகிறது.
இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள லேக் முன்மோர்க், சிட்னி, புளுமவுன்டெய்ன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீயணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன. அவை வானில் பறந்து தண்ணீரை பீய்ச்சி வருகின்றன. இருந்தும் முற்றிலும் தீயை அணைக்க முடியவில்லை.
இந்த காட்டு தீயில் சிக்கி 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தனது வீட்டை பாதுகாக்க முயன்ற போது தீயில் சிக்கி உடல் கருகினார்.
இந்த தீ விபத்தில் வனப் பகுதிக்கு அருகேயுள்ள 1000–க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. காட்டு தீயினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் அதன் அருகேயுள்ள சிட்னி நகர மேகங்களில் படிந்துள்ளது. இதனால் அந்த நகரம் மேக மூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
...
shared via
Post a Comment