News Update :
Home » » உ.பி.யில் புதையல் தோண்டும் பணியை கோர்ட் கண்காணிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு A sadhu dream of buried gold now reaches the Supreme Court

உ.பி.யில் புதையல் தோண்டும் பணியை கோர்ட் கண்காணிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு A sadhu dream of buried gold now reaches the Supreme Court

Penulis : Tamil on Friday 18 October 2013 | 07:58

உ.பி.யில் புதையல் தோண்டும் பணியை கோர்ட் கண்காணிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு A sadhu dream of buried gold now reaches the Supreme Court

உன்னாவ், அக். 18-

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் தாண்டியா கிராமத்தில் உள்ள 19-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராம் பக்ஸ் சிங்கின் அரண்மனை உள்ளது. அந்த அரண்மனையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்திருப்பதாக மன்னர் ராம் பக்ஸ் சிங் தன் கனவில் வந்து கூறினார் என்று அப்பகுதி சாது சோபன் சர்க்கார் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த இடத்தில் புதையல் இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்காக தொல்பொருள் துறை ஆய்வுக்குழுவை மத்திய அரசு அனுப்பியது. அந்தக் குழுவினர் இன்று அரண்மனை வளாகத்தை தோண்ட ஆரம்பித்தனர்.

இந்த பணி முடிவடைய சுமார் ஒரு மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரண்மனை வளாகத்திற்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே, தங்கப்புதையலுக்கான தோண்டும் பணி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அரண்மனை வளாகத்தில் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றில் சில தங்கம் காணாமல் போகலாம். எனவே, புதையல் தோண்டும் பணியை கோர்ட் மேற்பார்வையிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

...

shared via

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger