காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு Mettur dam water open for Cauvery Delta Irrigation
மேட்டூர், அக். 24–
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தற்போது மழை இல்லாததால் அங்கு பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது.
இதனால் மீண்டும் இன்று காலை 9 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 350 கன அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 84.41 அடியாக உள்ளது.
...
shared via
Post a Comment