News Update :
Home » » கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது

கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது

Penulis : karthik on Saturday 29 September 2012 | 04:38



கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது

மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் பழைய நாயகன் கார்த்திக் மகன் கவுதமும் பழைய நடிகை ராதாவின் மகள் துளசியும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது.

படத்தின் கதை மற்றும் கேரக்டர் விவரங்களை மணிரத்னம் ரகசியமாக வைத்துள்ளார். படப்பிடிப்புக்குள் அன்னியர் பிரவேசிப்பதை தடுக்க தனியார் செக்யூரிட்டிகளும�¯ நிறுத்தப்பட்டு உள்ளனர். இருவர் படங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு விளம்பரபடுத்த கார்த்திக், ராதா விரும்புகின்றனர். ஆனால் மணிரத்னம் இதற்கு சம்மதிக்கவில்லை.

கடல் படம் ரிலீஸ்வரை கவுதம், துளசி படங்களை வெளியிடக் கூடாது என்று தடை விதித்துள்ளார். இதனால் இருவரையும் பொது நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்கள் வீடுகளுக்கும் அனுப்பாமல் கவனித்து வருகிறார்கள். அவ�® �்களின் போட்டோ ஆல்பங்களையும் பெட்டியில் வைத்து பூட்டி விட்டனர்.

சமீபத்தில் துளசி பத்திரிகையொன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னை போட்டோ எடுக்க கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார். இருவரையும் அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். படப்பிடிப்புகளில் செல்போனில் படம் எடுக்கவும் முயற்சிக்கின்றனர். ஆனால் இதுவரை முயற்சி பலிக்கவில்லை.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger