News Update :
Home » » பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு

பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு

Penulis : karthik on Monday 17 September 2012 | 03:52

பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு
பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு

திருவான்மியூர், செப்.17-

பெசன்ட்நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி வைஜெயந்தி (57).அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சென்னை வந்த வைஜெயந்தி இன்று காலை 9 மணி அளவில் பெசன்ட் நகர் 6-வது குறுக்கு தெருவில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் இருந்த ஹெல்மெட் அணிந்த 2 ஆசாமிகள் வைஜெயந்தி கழுத்தில் இருந்த 9 பவுன் தாலி செயினை பறித்தனர். தாலிசெயினை கையில் பிடித்தபடி அவர், "திருடன்... திருடன்..." என்று கத்தினார்.

இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், செயினின் பெரும்பகுதியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அவரது கையில் மிஞ்சிய பகுதி சுமார் 2 பவுன் இருக்கும். 7 பவுன் தாலி செயினுடன மர்மநபர்கள் சென்று விட்டதாக சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வைஜெயந்தி புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger