News Update :
Home » » மூன்றெழுத்து மந்திரம் MBA

மூன்றெழுத்து மந்திரம் MBA

Penulis : karthik on Monday 17 September 2012 | 23:23

மூன்றெழுத்து மந்திரம் MBA

இளைஞர்களுக்கான புத்தம் புதிய பிராக்டிகல் தொடர்
பிஸினஸ் பிறக்கிறது!
height=262
ம் வீடுகளில் பெண்கள் எப்படிச் சமையல் செய்கிறார்கள்? மிகச் சில வீடுகளில் விறகடுப்பு, இன்னும் சில வீடுகளில் கேஸ் அடுப்பு, நகர்ப்புறங்களில்  மைக்ரோ வேவ் அவன் (Oven), இன்டெக்ஷன் ஸ்டவ் என பல வகை அடுப்புகள். ஏன்? இவை பெண்களின் வேலை சுமையைக் குறைக்கின்றன; உற்பத்தித்திறனை மேம்படுத்துகின்றன; நேரத்தை மிச்சப்படுத்துவதோடு  வாழ்க்கையை எளிதாக்குகின்றன.
கடையில் பன்னிரண்டு சோப் வாங்குகிறீர்கள். ஒரு சோப் விலை 18 ரூபாய். மொத்தமாக எவ்வளவு பணம் தரவேண்டும் என்பதற்கு ஐம்பது வயது தாண்டிய மனிதர் எனில் மனக்கணக்குப் போட்டு பார்ப்பார். முப்பதுக்குக் கீழே என்றால் கால்குலேட்டர் தேடுவார். இருபதுக்குக் கீழ் என்றால் செல்போனில் இருக்கும் கால்குலேட்டர்.

அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்திலேயே இத்தனை மாற்றம் எனில், பிஸினஸ் உலகத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? போட்டிகள் நிறைந்தது பிஸினஸ் உலகம். அது ஒரு நிரந்தர ஓட்டப் பந்தயம். நாம் ஒரு நிமிடம் கண்ணயர்ந்தால், போட்டி கம்பெனி நம்மை தள்ள�® �விட்டு முன்னால் போய்விடும். நம் கண் முன்னாலேயே இதற்குப் பல உதாரணங்கள். மர்ஃபி ரேடியோ, டயனோரா டி.வி, ராஜா ஸ்நோ ஒரு காலத்தில் வெற்றிக் கொடி கட்டிய இந்த பிராண்டுகள் இன்று காணாமலே போய்விட்டன. கால்குலேட்டர்கள், கேமிராக்களை தயார் செய்த கம்பெனிகள் செல்போன்களின் வருகைக்குப் பிறகு திண்டாடத் தொடங்கிவிட்டன.
குழந்தைகளின் பொம்மைகளை எடுத்துக்கொள்ளுங்கள். சின்னச் சின்ன கிரà ��மக் கடைகளில்கூட சீனநாட்டுப் பொம்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. நீங்கள் கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் பொம்மைகள் தயாரிப்பவரா? உங்கள் போட்டிக்காரர் அடுத்த தெரு பழனிச்சாமி, மும்பை சவான், நாசிக் தேஷ்முக், பரோடா மேத்தா மட்டுமில்லை, சீனாவின் ஹூவா, லிங் ஆகியோரும்தான். சீனப் பொம்மைகள் அடிமாட்டு விலைக்குக் கிடைக்கிறதா? நீங்களும் குறைந்த விலையில் உங்கள் பொம்மையை எப்படி விற்ப�® �ு என்று வியூகம் வகுக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பிஸினஸ் காணாமல் போய்விடும்.
height=78வரலாற்றைப் புரட்டினால் ஆயிரமாயிரம்  ஆண்டுகளாக இந்த மாதிரியான மாற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்கள்தாம் நம் வாழ்க்கையே; பொருளாதார, நாகரிக வளர்ச்சியே. வாழ்க்கை இப்படி மாறும்போது பிஸினஸும் மாறுகிறது. பிஸிà ��ஸை நிர்வகிக்கும் மேனேஜ்மென்ட் கொள்கைகளும் தடாலடியாக மாறியிருக்கின்றன. எப்படி?
கற்காலம் முதல் இன்றைய கம்ப்யூட்டர் காலம் வரை வரலாற்றை வேகமாக ஒரு ஓட்டு ஓட்டிவிடுவோம்.
வரலாற்றின் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தேவைக்குத்தானே விவசாயம் செய்தான். தன் ஆயுதங்களைத் தானே வடிவமைத்தான். தன் குடிசைகளை, வீடுகளை அவனே கட்டினான். காலப்போக்கில் அவன் தேவை விரிவடைà ��்தன. எல்லாத் தேவைகளையும் தானே பூர்த்தி செய்யமுடியாது. பக்கத்து வீட்டுக்காரனுடைய சில அவசியங்களை நிறைவேற்றினால், தன் சில தேவைகளை அவன் பூர்த்தி  செய்வான் என உணர்கிறான்.
height=308
அடுத்தவர்களின் உழைப்பை தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் புதிய வாழ்க்கைமுறை தொடங்குகிறது. வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் இந�¯ �த மாற்றத்துக்கு மேனேஜ்மென்ட் அறிஞர்கள் வைத்திருக்கும் பெயர் உழைப்புப் பங்கீடு (Division of Labour).
விவசாயிகள், கொத்தனார்கள், தச்சர்கள், கொல்லர்கள், ஆசிரியர்கள், போர்வீரர்கள் எனத் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்ட வல்லுநர்கள் உருவாகிறார்கள். கொத்தனார் விவசாயிக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார். விவசாயி, தான் பயிரிடும் அரிசியை, காய்கறியை அவருக்குக் கூலியாகத் தருகிறார். வியாபாரமà � பண்டமாற்று முறையாகத் தொடங்குகிறது.  
மனிதனின் முயற்சியால் விவசாயத்தில் உற்பத்தித்திறன் பெருகுகிறது. மாடுகள், ஏர் ஆகியவை பயன்பட ஆரம்பிக்கின்றன. பத்து பேர் வேலை பார்த்த வயல்களில் ஐந்து பேரை வைத்து வேலையை வாங்குகிறான். முதலாளி, தொழிலாளி என்ற இரு மாறுபட்ட இனங்கள் உருவாகின்றன. நிலச் சொந்தக்காரன், தன் கீழ் வேலை பார்ப்பவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியைப�¯ பெறுகிறான். தொழிலாளிகளிடம் குறைந்த சம்பளத்தில் அதிக உழைப்பை எப்படிப் பெறுவது என்னும் ஊழியர் நிர்வாக மேனேஜ்மென்ட் தொடக்கம் இதுதான்.
height=78விவசாயத்தால் எல்லோருக்கும் படியளக்க முடியவில்லை. கொத்தனார்கள், தச்சர்கள், கொல்லர்கள், ஆசிரியர்கள், போர்வீரர்கள் மற்றத் தொழில்களிலும் பலர் நுழைகிறார்கள். தொழில் தெரிந்தவர்க�® �ிடம் பயிற்சிக்கும், வேலைக்கும் சேருகிறார்கள். விவசாயம் தாண்டிப் பிற தொழில்களிலும் முதலாளி - தொழிலாளி என்னும் இரண்டு வர்க்கங்கள் ஆரம்பமாகின்றன.
மக்கள் தொகை பெருகுகிறது. பொருட்களுக்கான தேவை அதிகரிக்கிறது. தனி மனிதர்களால் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த பற்றாக்குறைகளைச் சமாளிக்க, தனிமனித அல்லது குடும்ப முயற்சிகளாக மட்டுமே இருந்த நெசவு, பண்டபாத் திரங்கள் தயாரிப்பு ஆகியவை குடிசைத் தொழில்களாகப் பரிணாம வளர்ச்சி கண்டன. விவசாயத்தையும் தாண்டித் தொழில்கள் தொடங்கியது இப்போதுதான்.
குடிசைத் தொழில்கள் சிறுசிறு தொழில்களாக வளர்கின்றன. பதினேழாம் நூற்றாண்டு முடிவில் ஒரு மாபெரும் மாற்றம்... அது மனிதகுலத்தின் வருங்காலத்தையே நிரந்தரமாக மாற்றியது. வரலாற்றின் ஆரம்ப காலங்களில், மனிதன் உடல்சக்தியை மட்டுமே பயன்படுத்தி�® �ான். அடுத்ததாக, மாடுகளும், குதிரைகளும் புழக்கத்துக்கு வந்தன. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போக எப்போதும் நடக்க முடியுமா? மாடுகளும் குதிரைகளும் இழுக்கும் வண்டிகள் வந்தன. 1755-ல் ஜேம்ஸ் வாட் நீராவி எந்திரம் கண்டுபிடித்தார். மனித சக்தியையோ, மற்ற மிருக சக்திகளையோ நம்பியிருக்காமல் இயந்திரங்களால் உற்பத்தி செய்யமுடியும்; உற்பத்தியை ஏராளமான மடங்கு அதிகமாக்க மு டியும் என்று உலகம் உணர்ந்தது.
height=337
நீராவி இயந்திரத்தால் ரயில் போக்குவரத்து தொடங்கியது. உற்பத்தி செய்கிற இடத்தில் மட்டுமே தயாரிப்புப் பொருட்களை விற்கமுடியும் என்ற நிலை மாறி, வெகு தூரத்தில் வாழும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிந்தது. பூகோள வரம்புகள் தளரத் தளர, பொருட்களுக்கான தேவை அமோக�® �ாகப் பெருகியது. உற்பத்தியைப் பெருக்க, லாபத்தை அதிகரிக்க, முதலாளிகள் முயற்சிகள் எடுக்கத் தொடங்கினார்கள். குறைந்த மனிதர்கள், நிறைந்த இயந்திரங்கள் என புதிய தயாரிப்பு சித்தாந்தம் உருவாகத் தொடங்கியது. நெசவுத் தொழில் வேகமாக வளர ஆரம்பித்தது.
நீராவி தயாரிக்க கரி தேவைப்பட்டது. இது சுரங்கத் தொழிலின் வளர்ச்சியில் வேகத்தைக் கொண்டுவந்தது. நிலக்கரி உற்பத்தி அதிகமானது. இத�¯ �வரை இரும்பு உற்பத்திக்குச் சாதாரண கரிதான் பயன்பட்டது. நிலக்கரி சாதாரண கரியைவிட வீரியம் கூடியது. தாராளமாகக் கிடைத்த நிலக்கரி இரும்புத் தொழிலின் உற்பத்தித்திறனை அதிகமாக்கியது. இரும்புத் தொழில் ஓஹோ என்று வளர்ந்தது.
நெசவு, கரி, இரும்பு ஆகிய தொழில்களில் அசுர வேக வளர்ச்சி தொடங்கியது. இது மாபெரும் புரட்சி. இந்த வளர்ச்சிக்குத் தொழில் புரட்சி என்று பெயரிட்டார்கள்.
இà ��ும்பால் செய்யப்பட்ட புதிய புதிய இயந்திரங்கள் 18, 19-ம் நூற்றாண்டுகளில் களத்துக்கு வர ஆரம்பித்தன. முதலாளிகள் தொழிலாளிகளைக் கசக்கிப் பிழியத் தொடங்கினார்கள். இயந்திரங்கள் பல தொழிலாளிகளின் வேலைகளைச் செய்யும் சக்தி கொண்டவையாக இருந்தன. முதலாளிகள் இயந்திரங்களை அதிகரித்து, தொழிலாளர்களை வேலைகளிலிருந்து நீக்கினார்கள். தனிப்பட்ட தொழிலாளியின் முக்கியத்துவம் குறையத் தொட ங்கியது. தொழிலாளிகளின் மனக்குறைகள் வெளிப்பட்டு, வெடிக்க ஆரம்பித்தன.
1901-ல் அமெரிக்க நேஷனல் கேஷ் ரிஜிஸ்டர் கம்பெனியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர்களை அடக்கி ஆளலாம் என்ற சில முதலாளித்துவ சிந்தனைகள் இதனால் ஆட்டம் காண ஆரம்பித்தன. தொழிலாளிகளின் நலம் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள். உலகில் முதன் முதலாக ஊழியர் நிர்வாகத் துறை   (Personnel Department) நேஷனல�¯ கேஷ் ரிஜிஸ்டர் கம்பெனியில் பிறந்தது.
1903. இன்னொரு அதிரடி மாற்றம். இதைக் கொண்டுவந்தவர் ஹென்றி ஃபோர்ட். ஜேம்ஸ் வாட்டுக்குப் பிறகு வந்த புரட்சித் தலைவர் இவர் என்று சொல்லலாம். எப்படி?
(கற்போம்)
படம்: ஜெ.வேங்கடராஜ்.
/

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger