News Update :
Home » » மழை வெயில் பலத்த காற்றை தாங்கும் புதிய குடை விரைவில் அறிமுகம்!!

மழை வெயில் பலத்த காற்றை தாங்கும் புதிய குடை விரைவில் அறிமுகம்!!

Penulis : karthik on Sunday 22 April 2012 | 12:04



Sunday, April, 22, 2012
வாஷிங்டன்::மழை, வெயில், பலத்த காற்று எல்லாவற்றையும் சமாளிக்கும் வகையில் புதிய ஹேன்ட்ஸ் ஃப்ரீ குடை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை அணிந்து கொண்டு சைக்கிள் மற்றும் 2 சக்கர வாகனங்கள ில் ஜாலியாக பயணிக்கலாம். மழை மற்றும் வெயில் காலங்களில் அத்தியாவசிய தேவை குடை. ஆனால், குடையை கையில் பிடித்து செல்ல வேண்டும். இது பெரும் அவஸ்தை. இந்நிலையில் கைகளின் உதவி தேவைப்படாத ஹான்ட்ஸ் ஃப்ரீ குடை தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாண விஞ்ஞானி ஆலன் கவ்ஃப்மன்னின் சாதனை இது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
புதிய ஹேன்ட்ஸ் ஃப்ரீ குடைக்கு நுப்ரெல்லா என்று பெயரிடப்பட்டுள்ளது. தலை கவசம் போன்ற இது தோள்பட்டையில் அழுத்தமாக பிடித்து கொள்ளும். பார்ப்பவர்களுக்கு தலையை சுற்றி பெரிய பபுள் இருப்பது போன்ற தோற்றம் இருக்கும்.

சைக்கிள் மற்றும் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களும் இதனை அணிந்து கொள்ளலாம். 50 மீட்டர் வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தலைக்கு மகுடம் சூட்டியது போல் இருக்கும் இ� �்த குடையை, தேவையற்ற போது மடித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு கிலோ எடை கொண்டது. எந்த இடத்துக்கும் எடுத்து செல்வது எளிது. கருப்பு மற்றும் சீத்ரூ எனப்படும் கண்ணாடி போன்ற 2 நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. மழை வெயில் மட்டுமின்றி தூசி மற்றும் பூச்சி தாக்குதல்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். தலைக்கும் கழுத்துக்கும் இடையில் முக்காடு போட்டது போன்று காட்சியளிக்கும். � �ொட்டும் மழையிலும் இதை அணிந்து கொண்டு வேலையில் ஈடுபடலாம்.


http://naamnanbargal.blogspot.com




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger