News Update :
Home » » இலங்கை தமிழர் இன்னல்களை பிரதமரிடம் தெரிவிப்பேன்: டி.கே.ரெங்கராஜன் எம்.பி. பேட்டி!

இலங்கை தமிழர் இன்னல்களை பிரதமரிடம் தெரிவிப்பேன்: டி.கே.ரெங்கராஜன் எம்.பி. பேட்டி!

Penulis : karthik on Sunday 22 April 2012 | 12:04



Sunday, April, 22, 2012
சென்னை::தமிழர் பகுதியில் 40 ஆயிரம் தமிழ் பெண் விதவைகள் உள்ளனர். இதில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்கள். அதில் 800 பேரை சேவா அமைப்பினர் சுயவேலை பயிற்சிக்காக குஜராத் அழைத்து வந� �துள்ளனர்.

விதவைகளைப் பார்த்து கண்ணீர் விட்டோம் என்று இலங்கை சென்று வந்த மார்க்சிஸ்ட் எம்.பி. டிகே ரங்கராஜன் கூறினார். சென்னையில் இன்று அளித்த பேட்டி: கடந்த 16ம்தேதி முதல் 21ம்தேதி மதியம் வரை இலங்கையில் இந்திய எம்.பி.க்கள் குழு தமிழ் மக்களை தனித்தனியாகவும் குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. எந்த இடத்திலும் தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. தமி� ��் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களோடும் வேறு சில தமிழர் அமைப்புகளோடும் விவாதித்தோம். அவர்கள் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாணிக்கம் தோட்டம், செட்டிக்குளம் பகுதியில் தமிழ் மக்களோடு கலந்து உரையாடினோம். மட்டக்களப்பு பகுதியில் 45 ஆயிரம் தமிழ் போர் விதவைகளை பார்த்தோம்.
< br />அவர்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள். இவர்களை பார்த்து நான் மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜ் உள்பட எம்.பி.க்கள் அனைவரும் கண்ணீர் விட்டோம். யாழ்ப்பாணம் பகுதியில் கோவில்களில் ராணுவங்கள் முகாமிட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும் என்று மக்களும் வலியுறுத்தினார்கள். நாங்களும் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினோம். தமிழர்கள் பகுதியில் ராணுவத்தினரை வாபஸ் பெற்று விட்டு ஆட்ச� ��யாளர்கள் மூலம் அன்றாட பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கடந்த முறை இந்திய எம்.பி.க்கள் குழு சென்று வந்த பிறகு தற்போது தமிழர் வாழும் பகுதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு இன்னும் ஏராளமான குறைகள் உள்ளன. கல்வி, குடியிருப்பு, சமூக பொருளாதார முன்னேற்றம் என்று குறைகள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


http://naamnanbargal.blogspot.com




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger