Wednesday, 29 February 2012

விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
வீட்டுப் பணிப் பெண்ணாக தான் வேலை செய்த வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் கைகளை இரண்டையும் உயர்த்தி அந்தப் பொலிஸ் நிலையத்தின் மேல் கூரைக் கம்பில் (பராலையில்) கட்டி வைத்து குறித்த சிறுமி மீது வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரிகள் இருவர் கடுமையாகத் தாக்கிய மனதை உருக்கும் சம்பவம் ஒன்று அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஒன்றினைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர், கொழும்பு மேலதிக நீதிவான் மஹி விஜயவீர முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி தான் பணி செய்த வீட்டிலிருந்து 190,000 ரூபா பெறுமதியான நகைகளையும் வேறு சில பொருட்களையும் களவாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கு வைத்தே சிறுமி இவ்வாறான கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 18 வயதைக் கூட அடையா இவர் மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமியாவார்.
புலத்தில் வாழும் தமிழ் உறவுகளின் பேராதரவுடன் ஜெனீவாவை நோக்கி இன்று 24ஆவது நாளாகவும் நீதிக்கான நடை பயணம் நகர்கின்றது.இன்று Neuchetel மாநிலம் வரை 32 கிலோமீற்றர் தூரம் நடை பயணம் தொடர்ந்தது. இவர்களது வருகையை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் எழுச்சியுடன் எதிர்பார்த்து வரவேற்கின்றனர்.
இன்று சுவிஸ் நாட்டின் பிரதான தொலைக்காட்சிகளில் ஒன்றான Canalalpha இவர்களை சந்தித்து நடை பயணத்திற்கான காரணத்தை கேட்டறிந்ததுடன் இவர்கள் கைகளில் ஏந்தி வந்த தேசியக்கொடி பற்றி அதனுடைய தார்ப்பரியம் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
இதுபற்றி நடை பயணத்தை தொடர்கின்ற பரமேஸ்வரன் அதற்கான விளக்கத்தினை தெளிவாக எடுத்துக் கூறும் போது, பிரித்தானிய நாட்டில் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது இது தமிழ் மக்களை ஒருங்கிணைங்கின்ற தமிழ் தேசிய இனத்தின் அடையாளக்கொடி என்றும் வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.
ஒரு கொலை செய்தவனுக்கு சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை என்றால் ஆயிரம் ஆயிரமாய் தமிழர்களை கொன்றொழித்து தமிழர் தாயகத்தை சுடுகாடாக்கிய சிங்கள அரசுக்கு சர்வதேசமே நீ என்ன தண்டனை வழங்கப்போகின்றாய்.
மார்ச் 5ம் திகதி ஐ.நா முன்றலில் உலகத் தமிழினமே குழுமி நின்று கேள்வியெழுப்புவோம் திரண்டுவாருங்கள்.
2 மைனர் பெண்கள் உள்பட 5 பெண்கள், கடந்த 3 நாட்களில், டில்லியில் கற்பழிக்கப்பட்ட சம்பவம், அங்கு பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, டில்லி போலீசார் தெரிவித்துள்ளதாவது, டில்லியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 2 மைனர் பெண்கள் (அதில் ஒருவர் 1ம் வகுப்பு படித்து வரும் சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது), கல்லூரி மாணவி, மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 5 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்வங்கள் தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும், இதுகுறித்த விசாரணையை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய மகிளிர் ஆணைய கருத்தரங்கில் பேசிய அந்த ஆணையத்தின் தலைவி மமதா சர்மா, ஒரு பெண்ணை செக்ஸியாக இருக்கிறார் என்று மற்றவர்கள் வர்ணிப்பது தவறு இல்லை. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சில இளைஞர்கள் பெண்களை பார்த்து செக்ஸியாக இருக்கிறாய் என்று சொல்கின்றனர். இதில் எதுவும் தவறு இல்லையே, இதனை நாம் எதிர்மறையாக எடுத்து கொள்ள கூடாது. அழகானது, கவர்ச்சியானது என்றுதானே அர்த்தம், ஆனால் நாம் இதனை நாம் எதிர்மறையாக எடுத்து கொண்டால் தேவையற்ற பிரச்னைகள் வரும். பாசிட்டிவாக எடுத்து கொண்டால் இதனை தவிர்ப்பது முடியும். செக்ஸி என்பது கொச்சையான வார்த்தை அல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா, அதே இவ்வாறு கூறியுள்ள நிலையில், அங்கு நிகழ்ந்துள்ள கற்பழிப்பு சம்பவங்கள் அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தெரிவித்துள்ளார். கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஆமீர் கானின் மருமகன் இம்ரான் கான் நடித்த லக் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானார். இந்தியாஸ் கிளாம் திவா என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதி தான் நடிக்க வரும் முன்பு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும் அதை மறைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தானாக ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ருதி. மூச்சு விட சிரமமாக இருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கே மூக்கில் அறுவை சிகிச்சை செய்தால் பாடகியான தனது குரல் வளம் பாதிக்கப்படுமோ என்று பயந்துள்ளார். தற்போது சிகிச்சைக்குப் பிறகு நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும், பிரச்சனையின்றி பாட முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் லக் கைகொடுக்காவிட்டாலும் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஸ்ருதிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தற்பொழுது ஸ்ருதி நடித்து வரும் 3 படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது கூடுதல் தகவலாகும்