ஊழலுக்கு எதிராக போராடும் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, ரவிசங்கர் பிரசாத் போன்றவர்கள் மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் அடுத்தடுத்து மலிவான புகார்களை கூறி வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த பாபா ராம்தேவ், "இது போன்ற பேய்களின் மகன்கள் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. பழங்கால இந்திய முனிவர்கள் பற்றி அறியாத ராட்சன் மகன். அவர் ஒரு முட்டாள்'' என கூறினார்.
இதற்கு திக்விஜய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் கூறுகையில்,
"இது, அதிகப்பட்ச அவதூறு. என் மீது அவர் எந்த குற்றச்சாட்டுகளை வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால், எனது தந்தை பற்றி அவர் கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது. அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது'' என்றார்.
home
Home
Post a Comment