News Update :
Home » » மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

Penulis : karthik on Monday 10 October 2011 | 02:26

 
 
 
திண்டுக்கல் மாவட்டம், ராமையன் பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 38). இவரது மனைவி செல்வி சந்தோசம். இவர்களுக்கு மணிமேகலை (வயது 15) என்ற பெண் குழந்தையும், 11 வயதில் ஒரு ஆன் குழந்தையும் உள்ளது.
 
வழக்கமாக கூலித் தொழிலாளிகளிடம் இருக்கும் குடிப்பழக்கம் சசிக்குமாரிடமும் உண்டு. சம்பாதிக்கும் பணம் முழுவதையும் டாஸ்மாக் கடையில் காலி செய்துவிடும் சசிகுமாரிடம் அல்லாட முடியாமல் செல்வி சந்தோசம் வேறு ஒருவனுடன் கூடாநட்புக்கொண்டு கம்பியை நீட்டிவிட்டிடார்.
 
 
பாட்டியின் ஆதரவுடன், தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி மணிமேகலை 9ம் வகுப்பு படித்து வருகிறார். மணிமேகலையின் தம்பி புகையிலைப்பட்டியில் உள்ள தாய் வயிற்று பாட்டியான சகுந்தலாவின் வீட்டில் தங்கி நான்காம் வகுப்பு படிக்கிரான்.
 
 
பள்ளி விடுமுறை நாட்களில், மணிமேகலை பாட்டி வீட்டுக்கும், சசிகுமாரின் வீட்டுக்கும் வந்து செல்லுவது வழக்கம்.
 
கடந்த வருடம் பள்ளி விடுமுறையில் தன் தந்தை சசிகுமாரின் வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டு சென்றுள்ளார் மணிமேகலை. இப்போது பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பாட்டி சகுந்தலாவின் வீட்டுக்கு சென்றுள்ள மணிமேகலையின் வயிறு சற்று கனமாக இருப்பதை பார்த்து சந்தேகப்பட்ட பாட்டி சகுந்தலா, மனிமேகையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் காட்டியுள்ளார்.
 
 
மணிமேகலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னர் என்ன நடந்தது...? என்று மணிமேகலையிடம் விசாரித்ததில், கடந்த முழுஆண்டு பள்ளி விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த போது ஒருநாள், குடிபோதையில் இருந்த தந்தை சசிகுமார் மணிமேகலையை பலாத்காரமாக பாலியல் உறவுகொண்டுள்ளார் என்பதை மணிமேகலை தெரிவித்துள்ளார்.
 
 
தனது பேத்தியை பலாத்காரம் செய்த அந்த மிருகத்தின் மீது திண்டுக்கல் மகளிர் காவல் நிலைத்தில் புகார் கொடுத்துள்ளார் சகுந்தலா, 09.10.2011 அன்று சசிகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger