News Update :
Home » » சீமான் படம்: கிணற்றில் விழுந்த ஹீரோ

சீமான் படம்: கிணற்றில் விழுந்த ஹீரோ

Penulis : karthik on Friday 7 October 2011 | 06:45

 
 
 
சீமான் நடிக்கும் கண்டுபிடி கண்டுபிடி படத்தின் ஷூட்டிங்கில் தருண் சத்ரியா என்ற புது நடிகர் கதவறி கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவா என்ற இருபத்தியொரு வயது இளைஞர் தயாரிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி. மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜ் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார்.
 
முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் இந்தப் படத்தின் கதை நாயகன் இயக்குநர் சீமான். பிரபு சாலமனின் உதவியாளரான ராம் சுப்பாராமன் இயக்குகிறார்.
 
போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார்.
 
காட்சிப்படி தருண் நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி படிக்கட்டில் உக்கார்ந்திருப்பதுபோல ஒரு காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆழமான கிணறுகளை தேடி இறுதியாக கொஞ்சம் பழய கிணற்றைக் கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.
 
நடிகர் தருண் சத்ரியா படிக்கட்டு வழியாக இறங்கியபோது அங்கிருந்த பாசி வழுக்கி பிடிமானம் இல்லாமல் கிணறில் தவறி விழுந்தார். தலையில் அடிபட்டு மயக்கமான தருணை, அந்த ஊரைச் சேர்ந்த இருவர் கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றினர்.
 
அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர். இயல்புக்கு திரும்பிய தருண் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி நடித்துமுடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவே அவருக்கு கைத்தட்டி உற்சாகமளித்தது!



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger