News Update :
Home » » பயிற்சிக்கு இந்திய வீரர்கள் NO

பயிற்சிக்கு இந்திய வீரர்கள் NO

Penulis : karthik on Friday 17 February 2012 | 20:43

 

இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடாமல் தங்களது ஓட்டல் அறையில் "ரெஸ்ட்' எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், 2 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றனர்.
 
இப்போது முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் துவங்கி 64 நாட்கள் ஆனநிலையில், 22 நாட்கள் போட்டியில் பங்கேற்றனர்.
 
போக்குவரத்துக்கு 10, பயிற்சியில் 16 நாட்கள் செலவிட்டனர். 15 நாட்கள் ஓய்வில் இருந்தனர். நேற்று 16வது நாளாக முழு ஓய்வில் இருந்தனர்.
 
பெரும்பாலான வீரர்கள் தங்கள் அறைகளில், "வீடியோ கேம்ஸ்' விளையாடி பொழுது போக்கினர். வேறு சிலர் தங்கள் வீடுகளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டு இருந்தனர்.
 
 
எதுவும் தெரியாது:
 
இதுகுறித்து விராத் கோஹ்லி கூறுகையில்,""நான் "டிவி' பார்ப்பதில்லை. செய்திகள் கேட்பதில்லை. தோனி சொன்னதுக்கு ஏற்ப, கடந்த ஒரு மாதமாக எந்த பத்திரிகையும் தொடவில்லை. இந்தியாவில் இருந்து என்ன செய்திகள் வருகின்றன என்றும் தெரிந்து கொள்வதில்லை. இதனால் தற்போது என்ன நடக்கிறது என்றே தெரியாது,'' என்றார்.
 
 
தோனி ஆதரவு:
 
வீரர்கள் ஓய்வு குறித்து அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,"" எங்களது பயிற்சிகள் நீண்ட நேரம் நடக்கும். குறைந்தது நான்கு மணிநேரங்கள் செலவிடுவோம். இதனால் தான் இன்று பயிற்சி செய்யவில்லை,'' என்றார்.
 
வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாததால், இவர்களை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 
 
அதிக வித்தியாசம்:
 
அதேநேரம் இன்று போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் ஹசி, பீட்டர் பாரஸ்ட், வார்னர், மெக்கே ஆகியோர், நேற்று முன்தினம் சிறுவர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பாண்டிங் உள்ளிட்ட சிலர் ரசிர்களுக்காக சமையலில் ஈடுபட்டனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வீரர்கள், ரசிகர்கள் இடையே மோதல் வராது.
 
பொதுவாக இந்திய அணியினர் "டாஸ்' போடுவதற்கு அரைமணி நேரம் முன்னதாகத்தான் மைதானத்துக்கு வருவர். நமது வீரர்கள் வரும் போது, ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger