News Update :
Home » » சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்

சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்

Penulis : karthik on Monday 1 October 2012 | 02:46



சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர் சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்

'எங்கேயும் காதல்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. விஜய்யுடன் 'வேலாயுதம்', உதயநிதியுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது 'சேட்டை', 'வாலு', 'வேட்டை மன்னன்', 'சிங்கம்-2' படங்களில் நடித்து வருகிறார். 'சேட்டை' படத்துக்காக ஆர்யா ஹன்சிகா ஆடிப்பாடும் டூயட் பாடல் காட்சியோன்று சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.

இதில் நடித்துக்கொண்டிருந்த போது ஹன்சிகாவின் கைப்பை திருட்டு போனது. மர்ம நபர் அந்த பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். பைக்குள் விலை உயர்ந்த ஐ-போன், ஐ-பாட், உயர் ரக மேக்கப் பொருட்கள் சுவிட்சர்லாந்து நாட்டு பிராங்க் (பணம்), அமெரிக்க டாலர் போன்றவை இருந்தன. ஷாப்பிங் செலவுக்காக அவற்றை வைத்து இருந்தார். எல்லாம் பறிபோய்விட்டது.

இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகி கண்கலங்கினார். இந்த திருட்டு குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார். படிப்பிடிப்பு முடிந்து விமானத்தில் இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இந்த திருட்டு நடந்தது.

இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, திருட்டு போன பையில் எனது கம்ப்யூட்டர் சாதன பொருட்கள் இருந்தன. அவற்றில் எனது தனிப்பட்ட படங்கள், சினிமா தொடர்பான ஸ்கிரிப்ட் போன்றவை இருந்தன. அவை தொலைந்ததால் பெரும் அதிர்ச்சியாகியுள்ளேன் என்றார்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger