News Update :
Home » » சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்

சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்

Penulis : karthik on Tuesday 11 September 2012 | 21:43



சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள் சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்

போலீசில் சரணைடைய வந்த போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை அவரது ஆதரவாளர்கள் திருப்பி அனுப்பினர்.

முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இடிந்தகரை, கூடங்குள�® �்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார், போராட்டக்காரர்கள் என பலர் காயமைடந்தனர். இதையடுத்து இந்த போராட்டம் தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கும் பரவியது. இது தொடர்பாக இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவி்த்துள்ளனர்.

போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமறைவானார். மக்களின் நலன் கருதி தான் கூடங்குளம் போலீசில் சரணடையப் போவதாக அவர் நேற்று அறிவித்தார். இதையà ��ுத்து நேற்று மாலை இடிந்தகரை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.

இதற்கிடையே ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு இடிந்தகரை வந்தார். இந்நிலையில் தான் அறிவித்தவாறு சரணடைய உதயகுமார் கிளம்பியதாகவும், போராட்டக்காரர்கள் அவரை சரணடையவிடாமல் படகில் ஏற்றி திருப்பி அனுப்பியதகாகவும் தகவல் கிடைத்துள்ளது.


/

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger