
நல்லபடங்கள் வருவதில்லை, அப்படியே வந்தாலும் தமிழர் அவலத்தைச் சித்தரிப்பதில்லை - என்பது நமது நீண்டநாள் ஆதங்கம். அந்த ஆதங்கத்தைத் தீர்க்கும் வகையில் வெளியாகிறது, உச்சிதனை முகர்ந்தால்.
முதல் ஐந்தாறு நாட்களுக்குள் இந்தப் படத்துக்கு நாம் கொடுக்கும் வரவேற்பு தான் இது போன்ற முயற்சிகள் தொடர வழிவகுக்கும். திரையரங்குகளுக்குக் குடும்பத்துடன் சென்று முதல் வாரத்திலேயே இந்தப் படத்தைப் பார்த்தாக வேண்டும் என்று உறுதியேற்பது நமது கடமை.
தணிக்கைக் குழு இந்தத் திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்களுடன் மோதும் உச்சிதனை முகர்ந்தால் படத்தை உச்சி முகர்ந்து உவகையுடன் வரவேற்கவேண்டியது மிக மிக அவசியம்.
home
Home
Post a Comment