News Update :
Home » » இசையமைப்பாளராகும் எஸ் ஜே சூர்யா!

இசையமைப்பாளராகும் எஸ் ஜே சூர்யா!

Penulis : karthik on Wednesday 16 November 2011 | 02:46

 
 
 
இசையமைப்பாளர் அவதாரமெடுக்கும் இயக்குநர் பட்டியலில் இப்போதைய வரவு எஸ் ஜே சூர்யா.
 
தான் அடுத்து தயாரித்து, நடித்து இயக்கும் படத்துக்கு இவரே இசையமைக்கவும் செய்கிறார்.
 
ஆரம்பத்திலிருந்தே எஸ்ஜே சூர்யா படங்களின் வெற்றியில் இசைக்கு பிரதான பங்கிருக்கும். ஆரம்ப இரு படங்களுக்கு தேவாவும், அடுத்தடுத்த படங்களுக்கு ஏ ஆர் ரஹ்மானும் இசையமைத்தனர். கடைசியாக அவர் இயக்கிய புலி படத்துக்கும் ரஹ்மான்தான் இசை.
 
ஆனால் எஸ்ஜே சூர்யா தயாரித்து இயக்கி நடிக்கும் 'இசை'க்கு அவரே இசையமைக்கவும் செய்கிறார். இதுகுறித்து எஸ்ஜே சூர்யாவிடம் கேட்டபோது, "உண்மைதான். அந்தப் படத்துக்கு நானே இசையமைக்க முடிவு செய்துவிட்டேன். இசையில் எனக்கு உள்ள ஈடுபாட்டைப் பார்த்து, ஏற்கெனவே என்னை இசைமைக்கச் சொன்னார்கள். நான்தான் அப்போதெல்லாம் மறுத்து வந்தேன்," என்றார்.
 
'இசை' படத்துக்கு முதலில் ரஹ்மான்தான் இசையமைக்கவிருந்தாராம். ஆனால் அவருக்கு வேறு புராஜெக்டுகள் வரிசையாக வரவே, இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைக்கலாமே என எஸ்ஜே சூர்யாவிடம் சொன்னாராம்.


Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger