News Update :
Home » » அடுத்த படத்திலும் அஞ்சலிதான்... முருகதாஸ்

அடுத்த படத்திலும் அஞ்சலிதான்... முருகதாஸ்

Penulis : karthik on Monday 31 October 2011 | 06:48

 
 
 
எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததிலிருந்தே அஞ்சலி மீது அத்தனை அன்பாக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி சொன்னவுடன் கண், காது, மூக்கு, என்று ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் போட்டு யோசித்தால் ஏமாந்து போவீர்கள் மக்களே... இது அந்த மாதிரி விஷயமல்ல. நவீன சாவித்திரி என்று கொண்டாடாத குறையாக அவரை தலைமேல் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் முருகதாஸ் மீண்டும் அவரையே தனது அடுத்த படத்திலும் கதாநாயகியாக்கியிருக்கிறார் என்பதுதான் விஷயம்.
 
ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக இருக்கும் முருகதாஸ் 7 ஆம் அறிவு படத்தில் அதை கோட்டை விட்டு விட்டார் என்று விமர்சகர்கள் பொறிந்தாலும், அவர் மேற்பார்வையில் வெளிவந்த எங்கேயும் எப்போதும், எப்போதும் பேசப்படுகிற அளவுக்கு சிறந்த திரைக்கதையை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றி முருகதாசுக்கு மேலும் மேலும் நம்பிக்கையை கொடுக்க, ஏகபோக சந்தோஷத்தோடு தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் அவர்.
 
இப்படத்தில் முருகதாசிடம் 7 ஆம் அறிவு படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய திரு என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த அறிமுகம் இதோடு நிற்கவில்லை. இப்படத்தின் ஹீரோ முருகதாசின் தம்பிதான்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger