News Update :
Home » » மருத்துவமனையில் மனோரமா- கமல்ஹாசன் நேரில் நலம் விசாரித்தார்

மருத்துவமனையில் மனோரமா- கமல்ஹாசன் நேரில் நலம் விசாரித்தார்

Penulis : karthik on Monday 31 October 2011 | 04:58

 
 
 
 
பிரபல நடிகை மனோரமா தலையில் அடிபட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரி்த்தார். இதேபோல திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.
 
பழம்பெரும் நடிகையான மனோரமா, சமீபத்தில் தனது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார். இதனால் அவரது தலையில் அடிபட்டு விட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
 
அப்போது தலையில் ரத்தக் கசிவும், உறைவும் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதை அகற்ற நாளை அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் அவர் கோமாவில் இல்லை என்றும் நல்ல நினைவுடன் நலமுடன் உள்ளதாக அவரது மகன் பூபதி கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் வந்து மனோரமாவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அதேபோல நடிகை அனுஷ்காவும் நேரில் வந்து நலம் விசாரித்தார். திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்துள்ளனர்.
 
மனோரமாவின் உடல் நலம் குறித்து மகன் பூபதி கூறுகையில், அறுவை சிகிச்சை முடிந்தவுடன் இரண்டு நாள்களில் வீடு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger