News Update :
Home » » ஐ.பி.எல். ஆர்வத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்கள்

ஐ.பி.எல். ஆர்வத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்கள்

Penulis : karthik on Saturday 12 May 2012 | 06:00




ஐ.பி.எல். கிரிக்கெட் ஜூரம் நாடு முழுவதும் தொற்றி உள்ளது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஐ.பி.எல். போட்டியை டெலிவிசனிலும், மைதானத்திலும் பார்த்து ரசித்து வருகிறார்கள். தம� �ழக எம்.எல்.ஏ.க்களும் ஐ.பி.எல். கிரிக்கெட் ஆர்வத்தில் உள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டத்தை சேப்பாக்கம் மைதானத்தில் நேரிலும் காணும் ஆர்வத்தில் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் எல்லா எம்.எல்.ஏ.க்களும் போட்டியை நேரில் பார்ப்பதற்கான இலவச டிக்கெட் கிடைப்பது இல்லை. 

டிக்கெட் கிடைக்காததால் சில எம் .எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. கூறும் போது, நான் கடந்த ஒரு வாரமாக ஐ.பி.எல். டிக்கெட் கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கு எந்தவித டிக்கெட்டும் தரவில்லை என்றார். 

மற்றொரு எம்.எல்.ஏ. கூறும்போது, எனது மகன் என்னிடம் டிக்கெட் கேட்டு நெருக்கடி கொடுக்கிறான். நான் அவனுக்கு சென்னை அணியின் டி ஷர்ட் மட்டுமே வாங்கி கொடுக்க முட� ��ந்தது. ஆனால் என்னால் டிக்கெட் வாங்க முடியவில்லை என்றார். 

டிக்கெட் கிடைத்த ஒரு எம்.எல்.ஏ. கூறும்போது, நான் அதிர்ஷ்டசாலி. நண்பர்கள் மூலம் எனக்கு டிக்கெட் கிடைத்தது. எனது குடும்பத்தினருடன் போட்டியை ரசித்தேன். சில எம்.எல்.ஏ.க்கள் டிக்கெட்டுக்காக பணம் செலவழிக்கவும் தயராக உள்ளனர்.




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger