News Update :
Home » » பின்லேடனை கொல்லச் சென்ற அமெரிக்க படைக்கு ஒபாமா பிறப்பித்த உத்தரவு என்ன?: புதிய தகவல்

பின்லேடனை கொல்லச் சென்ற அமெரிக்க படைக்கு ஒபாமா பிறப்பித்த உத்தரவு என்ன?: புதிய தகவல்

Penulis : karthik on Friday 4 May 2012 | 23:01




பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதியான அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே மாத� �் 2-ந் தேதி அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வேட்டையை அமெரிக்கா மிகவும் ரகசியமாக திட்டம் தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தியது. இந்த வேட்டை முடிந்து அமெரிக்கா அறிவித்த பிறகே இத்தகவல் பாகிஸ்தானுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தது.

பின்லேடன் கொல்லப்பட்டு ஓராண்டாகி விட்டது. இதன் பிறகும் பின்லேடனை கொல்ல நடந்த வேட்டை குறித்தும், பின்லேடன் தனது கடைசி கால கட்டத்தில் என்னென்ன திட்டங்களை தீட்டினார் எ� �்ற விவரங்களும் பரபரப்பாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

பின்லேடன் தங்கிய வீட்டில் கிடைத்த சில முக்கிய ஆவணங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வணிக மைய இரட்டை கோபுரம் கட்டிடம் மீது நடந்த தாக்குதல் முதல் பின்லேடன் கொல்லப்பட்டது வரையில் நடந்த 10 ஆண்டு தேடுதல் வேட்டை குறித்து பீட்டர் எல். பெர்கென் என்பவர் 'மேன்ஹெண்ட்' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

பின்லேடனின் வேட்டையின் போது அமெரிக்க படைகள் என்ன செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ஒபாமா பிறப்பித்த உத்தரவு பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பின்லேடனின் வேட்டையில் ஈடுபட்ட அமெரிக்க சிறப்பு படைக்கு கமாண்டராக வில்லியம் மெராவென் இருந்தார். அவருக்கு ஜனாதிபதி ஒபாமா தெளிவான உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.

அதில் ஏதாவது எதிர்ப்பு கிளம்பினால் அமெரிக்க படையினர் தங்களின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை கொடுத்த செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் அபோதாபாத்துக்கு சென்று சேர்ந்ததும் அல்லது பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தான் எத� �ர்த்தால் என்னென்ன செய்ய வேண்டும் என சிறப்பு படையினர் தீவிரமாக ஆலோசனை நடத்தி முடித்து விட்டுதான் புறப்பட்டு சென்றனர்.

மேலும் பின்லேடனை கொல்ல எடுக்கும் நடவடிக்கை குறித்த திட்டத்தை உயர் அதிகாரிகள் மிகவும் ரகசியமாக தீட்டி அது வெளியே கசிந்து விடாமல் பாதுகாத்து வந்தார்கள். அதனாலேயே பாகிஸ்தானுக்கோ, அந்த பங்களா பகுதியில் வசித்த பொதுமக்களுக்கோ தெரிய வரவில்லை.

இந்த நடவடிக்கை மேற்கொண்ட போது சண்டையிடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளுடன் தான் அமெரிக்க படை சென்றது. ஒருவேளை பாகிஸ்தான் ராணுவம் எதிர்த்தால் கூட சண்டையிடும் தயார் நிலையிலேயே அமெரிக்கப்படை இருந்தது. ஆனால் அதற்கு அங்கு அவசியம் ஏற்பட� �ில்லை.

இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger