News Update :
Home » » ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தை சேர்ந்தவருக்கு 38-வது இடம்

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தை சேர்ந்தவருக்கு 38-வது இடம்

Penulis : karthik on Friday 4 May 2012 | 09:10



மத்திய அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ். மற்றும் இதர தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகள் மூன்று நிலைகளாக நடத்தப்படும். சிவில ் சர்வீசஸ் தேர்வு முதல்நிலைத் தேர்வு (பிரிலிம்ஸ்), முதன்மைத் தேர்வு (மெயின்), ஆளுமைத் திறன் எனும் நேர்முகத் தேர்வு (இன்டர்வியூ) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது.  

கடந்த ஆண்டு நடந்த இந்த தேர்வின் கடைசி நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலத்தை சேர்ந ்த சினேகா அகர்வால் என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த சுந்தரேஷ் என்பவர் இந்த தேர்வில் 38-வது இடத்தை பிடித்துள்ளார். முதல்நிலை தேர்வில் 4 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் இரண்டாம் நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்கு 13, 984 பேர் தகுதிபெற்றனர். இதிலிருந்து நேர் முகத்தேர்வுக்கு 2,414 பேர் தகுதிபெற்றார்கள். இறுதி கட்ட தேர்வு முடிவில் இந்தியா முழுவதும் 910 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேர்வாணைய முடிவுகள் தெரிவிக்கின்றன.





Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger