News Update :
Home » » அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும்: உ.பி. தேர்தல் அறிக்கையில் பா.ஜ வாக்குறுதி

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும்: உ.பி. தேர்தல் அறிக்கையில் பா.ஜ வாக்குறுதி

Penulis : karthik on Friday 27 January 2012 | 20:42

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி , பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை
இன்று (27.01.2012) வெளியிடப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையில் , பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில்
பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் என்று , வாக்குறுதி அளிக்கப்பட்டு
உள்ளது.
அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவது இந்த நாட்டின் கோடானு கோடி மக்களின்
நம்பிக்கையுடன் இணைந்ததாகும். கண்ணியம் கவுரவத்தின் அடையாளமாக ராமர்
விளங்குகிறார். துரதிர்ஷ்டவசமாக , ஓட்டுவங்கி அரசியல் மற்றும் போலியான
மதச்சார்பின்மை காரணமாக இதற்குஎதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக அறிக்கையில்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger